flipkart discount sale search here.

Sunday 29 July 2018

#348 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 625 அடுக்கி வரினும் | Daily one thi...

நாகரீக கோமாளி...

நாகரீக கோமாளி..

1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.

நாங்களும் மாறினோம்.

இன்று அதையே

BARBECUE என்று BC,
KFC ,
MACDONALD இல் விக்கிறான்.

2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.
பற்பசையை அறிமுகப் படுத்தினான்.

இப்போது உங்கள் TOOTHPASTE இல்
SALT + CHARCOAL இருக்கா ?
என்று கேட்கிறான்.

3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.

உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.

இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேட விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .
4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.

ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.

இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின்  SPERM ஏற்றுமதி செய்கிறான்.

5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.

COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.

இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.

6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொண்மைகளைத் தொலைத்த

                             " முட்டாள் "

இனம் நாமாகத்தானிருப்போம்.

7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.

8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,

அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,

ஆடு போட்ட புலுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,

காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியை விட்டோம்,

வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமா நகருக்குள் நடக்கிறது.

நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி

           " நாகரிக கோமாளி "

ஆகி விட்டோம்.

Tuesday 24 July 2018

#343 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1008 நச்சப் படாதவன் | Daily one thi...

குடிகாரர்களின் ராசி பலன்...

*மேஷம்* - பீர் சாப்பிடுவதை தவிர்க்கவும்.ஒரே ஒரு
 கட்டிங் சாப்பிட்டால் போதுமானது.

 *ரிசபம்* - குடிகார ரிசப ராசி நேயர்களே இன்று
மாலை 6 மணி முதல் 10 மணி வரை உங்கள்
ராசியில் சனி சஞ்சரிப்பதால் இன்று ஒரே ஒரு
குவாட்டர் மட்டும் சாப்பிடுவது நல்லது.

 *மிதுனம்* - ராவா அடிக்கும் மிதுன ராசி
அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு நீங்கள்
கன்னி ராசி நண்பருடன் டாஸ்மாக்கில் சண்டை
போட நேரிடலாம் எனவே இன்று ஒருநாள்
மட்டும் டாஸ்மாக் போவதை தவிர்க்கவும்.

 *கடகம்* -கட்டிங்கை கரெக்ட்டாகா சாப்பிடும்
கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் கட்டிங்
சாப்பிடும் போது சைடிஷ்க்கு ஊறுகாய்
மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

 *சிம்மம்* - மொடா குடியகார சிம்ம ராசி
நண்பர்கள் இன்று கூலிங் பீரை 2 பாட்டில்
சாப்பிடுவது உகந்தது. மேலும் பீரில்
ஏலக்காய் அல்லது சிறிதளவு பெப்பரை(மிளகு)
கலந்து கொள்ளலாம்.

*கன்னி* - கன்னி ராசி நேயர்கள் குடித்துவிட்டு
மனைவியின் அருகில் செல்லாமல் இருப்பது
நல்லது.இன்று உங்கள் ராசிக்கு உங்கள்
மனைவியிடம் வெளக்கமாறு பிய்யும் வரை
அடி வாங்க நேரிடலாம்.

 *துலாம்* - அளவோடு குடிக்கும் துலாம் ராசி
நேயர்களே உங்கள் ராசிக்கு இன்று நீங்கள்
வோட்கா அல்லது ஒயின் அல்லது இது
இரண்டையும் மிக்ஸ் பன்னி சாப்பிடுவது
நல்லது.

 *விருச்சிகம்* - சைடிஷ்க்கு மிச்சர் சாப்பிடும்
விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள்
சரக்கடிக்கும் போது 7Upஅல்லது Sprite
பயன்படுத்தினானால் வாந்தி வரலாம் எனவே
மிக்சிங் செய்ய அக்வாபீனா அல்லது அம்மா
வாட்டரை கோட்டரில் கலந்து குடிக்கவும்.

 *தனுசு* - தாறுமாறாக குடிக்கும் தனுசு ராசி
நேயர்களே குடித்துவிட்டு ரோட்டில் செல்லும்
பொதுமக்களை கெட்ட கெட்ட வார்த்தைகளால்
திட்டுவதை தவிர்ப்பது நல்லது. யாரிடமாவது
வாயில் உதை வாங்க நேரிடலாம்.

*மகரம்* -இன்று குடிக்காமல் இருப்பது
நல்லது. டாஸ்மாக் இருக்கும் திசை நோக்கி
செல்வதை தவிர்க்கவும்.

 *கும்பம்* - கும்பலாக குடிக்கும் கும்ப ராசி
நேயர்களே இன்று நண்பர் ஒருவர் சரக்கை
வாங்கி கொடுக்க நேரிடலாம் எனவே
அவசரப்பட்டு உங்கள் பணத்தை செலவு
செய்யாதீர்கள்.

*மீனம்*- மானங்கெட்ட மீன ராசி நண்பர்களே
ஒசியில் சரக்கடிப்பதை இன்றுடன் மறந்து
விடுங்கள். சொந்த காசில் குடிக்க கற்றுக
கொள்ளுங்கள்.

 *நீரின்றி அமையாது உலகு*

Saturday 14 July 2018

#333 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 37 அறத்தாறு இதுவென | Daily one thir...

காப்பீடு விற்கணுமா?
வாங்க வைக்கணுமா?
----------------------------------
இருக்கும் பொருளை காண்பித்து விற்பது மற்ற விற்பனை;

இல்லாத பொருளின்
பொருளை புரிய வைத்து விற்பது
காப்பீட்டு விற்பனை.

அது கண்ணை கவருவது;
இது மனதை
கவருவது.

அது பிடித்து வாங்குவது;
இது படித்து வாங்குவது.

அது விருப்பம்;
இது தேவை.

அது நாளாக மதிப்பு குறையும்;
இது நாளாக மதிப்பு
கூடும்.

அது நமக்காக;
இது நம்மவர்க்காக!

அது ஆசையால் வாங்குவது;
இது அன்பினால்
வாங்குவது.

அது உடனே அனுபவிக்க;
இது உடனுள்ளவர்
அனுபவிக்க.

சேமிப்பை கரைப்பது
அது;
சேமிப்பை உரைப்பது
இது.

அதை ஓடிப்போய்
வாங்குவர்;
இதை தேடிப்போய்
விற்கனும்.

அது செலவு;
இது முதலீடு

அது பொருள் சேர்ப்பது;
இது சொத்து சேர்ப்பது.

அது உணரச்சியில்;
இது உணர்வில்.

இதை விற்க முயன்றால்
குறைவாக விற்கும்;
இதை வாங்கவைத்தால்
கூடுதலாக விற்கும்.

இதில் வேண்டியது
பொறுமை;
அதில்தான்
பெருமை.

இல்லத்தில்
உள்ளதெல்லாம்
வெள்ளத்தில்
போனாலும்
உள்ளத்தில் ஊக்கம்
தருவது காப்பீடு
மட்டுமே!

அமைதிகாலத்தில்
வாமனன் ஆகத்
தெரியும்;

ஆபத்து காலத்தில்
விசுவரூபம் எடுக்கும்
 - காப்பாற்ற.

பட்டது போதும்.

முகவர் கேட்டால்தான்
என்றில்லாமல்,
முகவரை கேளுங்கள்.

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள்
திறக்கப்படும்.

காப்பீடுக்கு
ஈடில்லை...

உடனடியாக LIC POLICY வேண்டுமா அழைக்கவும் 9789087267.

Tuesday 10 July 2018

Broadband New Connection in Chennai 9789087267


Broadband New Connection 9789087267 | airtel broadband new connection, airtel broadband new connection in ramapuram, airtel broadband new connection in porur, airtel broadband new connection in manapakkam, airtel broadband new connection in guindy, airtel broadband new connection in kk nagar, airtel broadband new connection in valasaravakkam, airtel broadband new connection chennai, airtel broadband new connection trichy, airtel broadband new connection number, airtel broadband new connection coimbatore, airtel broadband new connection price, airtel broadband new connection plans, airtel broadband new connection charges, airtel broadband new connection apply online, airtel broadband new connection application, airtel broadband new connection application form, airtel broadband connection availability, airtel broadband connection area, airtel broadband connection application form, airtel broadband new connection in chennai contact number, airtel broadband new connection booking, airtel broadband new connection contact number chennai, airtel broadband new connection documents, airtel broadband new connection details, airtel broadband connection details, airtel broadband connection documents required, airtel broadband new connection enquiry, airtel broadband new connection escalation, airtel broadband connection enquiry, airtel broadband new connection feasibility check, airtel broadband new connection form, airtel broadband connection feasibility check, airtel broadband connection for home, airtel broadband for new connection, airtel broadband new connection payment, airtel broadband new connection installation charges, airtel broadband new connection in madurai, airtel broadband connection just dial, airtel broadband connection login, airtel landline broadband new connection, airtel broadband connection leased line, airtel broadband new connection near me, airtel broadband new connection no, airtel broadband new connection contact number, airtel broadband new connection phone number, airtel broadband new connection offer, airtel broadband new connection online, airtel broadband new connection offers chennai, airtel broadband new connection online apply, airtel broadband new connection online payment, airtel broadband connection online payment, airtel broadband new connection cost, airtel broadband internet connection review, airtel broadband new connection salem, airtel broadband new connection time, airtel broadband new connection tambaram, airtel broadband connection toll free number, airtel broadband connection unlimited plan, airtel broadband connection up east, airtel broadband connection velachery, airtel broadband connection without landline phone, airtel broadband connection with landline, airtel wifi broadband new connection, airtel wireless broadband new connection, airtel broadband connection with landline phone, airtel fiber broadband, airtel fiber broadband chennai, airtel fiber broadband plans chennai, airtel fiber broadband plans, airtel fiber broadband connection, airtel fiber broadband chennai plans, airtel broadband fiber connection plans, airtel broadband fiber connection in chennai, airtel broadband fiber connection plans in chennai, airtel fibre broadband coimbatore, airtel broadband fibre connection, airtel fiber broadband in chennai, airtel fiber broadband plans in chennai, is airtel broadband fiber optic, airtel v-fiber broadband service launched, airtel launched the v-fiber broadband, airtel broadband fiber modem, airtel broadband v fiber modem, airtel broadband fibernet, airtel fiber optic broadband plans, airtel broadband fiber optic, airtel fibre optic broadband, airtel fibre broadband plans chennai, airtel fibre broadband review, airtel v fiber broadband review, airtel v-fiber broadband service, airtel v-fiber superfast broadband, airtel fiber 40 mbps high speed broadband, airtel broadband v fiber, airtel v fiber broadband plans, airtel v fiber broadband plans chennai, airtel broadband v fiber chennai, airtel broadband v fiber chennai chennai tamil nadu, airtel v fiber broadband, airtel v fiber broadband chennai, airtel v fibre broadband plans,

#329 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 288 அளவறிந்தார் நெஞ்சத் | Daily one...

Monday 9 July 2018

முயற்சி திருவினையாக்கும்...

*முயற்சி திருவினையாக்கும்*
.
ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது. அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
.
ஒருநாள் திடீரென்று "இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?'' என்று சந்தேகம் வந்தது. பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்துகொண்டது.
.
ஒருநாள் அந்தக் கழுகு "இன்று எனக்கு உணவு கிடைக்குமா? இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று, "இறைவா, இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.
.
உடனே விண்ணிலிருந்து ஒரு குரல். "உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.
மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை, எப்படியும் உணவு கிடைத்துவிடும்'' என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.
.
நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது. ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது. மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.
.
"நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.
.
அப்போது ஒரு குரல் கேட்டது. "என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது. "குழந்தாய் சற்று திரும்பிப் பார். உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது''
.
கழுகு பின்னால் சென்று பார்த்தது. அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் , "இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'
.
இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய், உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது. நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய். திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்."
.
கடுகளவேனும் முயற்சி வேண்டும். ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது. அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.
.
அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும் ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது.

*முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பதில்லை.*

#328 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 671 சூழ்ச்சி முடிவு | Daily one thi...

Tuesday 3 July 2018

#322 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 563 வெருவந்த செய்தொழுகும் | Daily o...

#321 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 102 காலத்தி னாற்செய்த | Daily one t...

எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?

*நாட்டு மருந்து கடைகளில் விற்கப்படும் எந்த மூலிகை பொடி எதற்கு பயன்படும்..?*

*பாதுகாக்க பட வேண்டிய பயனுள்ள குறிப்புகள்..!*

*அருகம்புல் பொடி*
அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும், சிறந்த ரத்தசுத்தி

*நெல்லிக்காய் பொடி*
பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் “சி” உள்ளது

*கடுக்காய் பொடி*
குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும்.

*வில்வம் பொடி*
அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது

*அமுக்கரா பொடி*
தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது.

*சிறுகுறிஞான் பொடி*
சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும்.

*நவால் பொடி*
சர்க்கரை நோய், தலைசுற்றுக்கு சிறந்தது.

*வல்லாரை பொடி*
நினைவாற்றலுக்கும், நரம்பு தளர்ச்சிக்கும் சிறந்தது.

*தூதுவளை பொடி*
நாட்பட்ட சளி, ஆஸ்துமா, வரட்டு இருமலுக்கு சிறந்தது.

*துளசி பொடி* மூக்கடைப்பு, சுவாச கோளாருக்கு சிறந்தது.

*ஆவரம்பூ பொடி*
இதயம் பலப்படும், உடல் பொன்னிறமாகும்.

*கண்டங்கத்திரி பொடி*
மார்பு சளி, இரைப்பு நோய்க்கு சிறந்தது.

*ரோஜாபூ பொடி*
இரத்த கொதிப்புக்கு சிறந்தது, உடல் குளிர்ச்சியாகும்.

*ஓரிதழ் தாமரை பொடி*
ஆண்மை குறைபாடு,
மலட்டுத்தன்மை நீங்கும்.வெள்ளை படுதல் நீங்கும், இது மூலிகை வயாகரா.

*ஜாதிக்காய் பொடி*
நரம்பு தளர்ச்சி நீங்கும், ஆண்மை சக்தி பெருகும்.

*திப்பிலி பொடி*
உடல் வலி, அலுப்பு, சளி, இருமலுக்கு சிறந்தது.

*வெந்தய பொடி*
வாய் புண், வயிற்றுபுண் ஆறும். சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*நிலவாகை பொடி*
மிகச் சிறந்த மலமிளக்கி, குடல்புண் நீக்கும்.

*நாயுருவி பொடி*
உள், வெளி, நவமூலத்திற்க்கும் சிறந்தது.

*கறிவேப்பிலை பொடி*
கூந்தல் கருமையாகும். கண்பார்வைக்கும் சிறந்தது.ரத்தம் முழுவதும் சுத்தமாகும்.இரிம்புச் சத்து உண்டு.

*வேப்பிலை பொடி*
குடல்வால் புழு, அரிப்பு, சர்க்கரை நோய்க்கு சிறந்தது.

*திரிபலா பொடி*
வயிற்று புண் ஆற்றும், அல்சரை கட்டுப்படுத்தும்.

*அதிமதுரம் பொடி*
தொண்டை கமறல், வரட்டு இருமல் நீங்கும், குரல் இனிமையாகும்.

*துத்தி இலை பொடி*
உடல் உஷ்ணம், உள், வெளி மூல நோய்க்கு சிறந்த்து.

*செம்பருத்திபூ பொடி*
அனைத்து இருதய நோய்க்கும் சிறந்தது.

*கரிசலாங்கண்ணி பொடி*
காமாலை, ஈரல் நோய், கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்தது.

*சிறியா நங்கை பொடி*
அனைத்து விஷக்கடிக்கும், சர்க்கரை நோய்க்கும் சிறந்தது.

*கீழாநெல்லி பொடி,*
மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது.

*முடக்கத்தான் பொடி*
மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது

*கோரைகிழங்கு பொடி*
தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

*குப்பைமேனி பொடி*
சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

*பொன்னாங்கண்ணி பொடி*
உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

*முருஙகைவிதை பொடி*
ஆண்மை சக்தி கூடும்.

*லவங்கபட்டை பொடி* கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

*வாதநாராயணன் பொடி*
பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

*பாகற்காய் பவுட்ர்* குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

*வாழைத்தண்டு பொடி*
சிறுநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

*மணத்தக்காளி பொடி*
குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

*சித்தரத்தை பொடி*
சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

*பொடுதலை பொடி* பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

*சுக்கு பொடி*
ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

*ஆடாதொடை பொடி* சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

*கருஞ்சீரகப்பொடி* சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

*வெட்டி வேர் பொடி*
நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

*வெள்ளருக்கு பொடி* இரத்த சுத்தி, வெள்ளைப்படுதல், அடிவயிறு வலி நீங்கும்.

*நன்னாரி பொடி*
உடல் குளிர்ச்சி தரும், சிறுநீர் பெறுக்கி, நா வறட்சிக்கு சிறந்தது.

*நெருஞ்சில் பொடி* சிறுநீரக கோளாறு, காந்தல் ஆகியவற்றை நீக்கும்.

*பிரசவ சாமான் பொடி*
பிரசவத்தினால் ஏற்படும் அதிகப்படியான இழப்பை சரி செய்யும், உடல் வலிமை பெறும். தாய்பாலுக்கு சிறந்தது.

*கஸ்தூரி மஞ்சள் பொடி*
தினசரி பூசி வர முகம் பொலிவு பெறும்.

*பூலாங்கிழங்கு பொடி*
குளித்து வர நாள் முழுவதும் நறுமணம் கமழும்.

*வசம்பு பொடி*
பால் வாடை நீங்கும், வாந்தி, குமட்டல் நீங்கும்.

*சோற்று கற்றாலை பொடி*
உடல் குளிர்ச்சி, முகப்பொலிவிற்கு பயன்படும்.

*மருதாணி பொடி*
கை , கால்களில் பூசி வர பித்தம், கபம் குணமாகும்.

*கருவேலம்பட்டை பொடி*
பல்கறை, பல்சொத்தை, பூச்சிபல், பல்வலி குணமாகும்.

ஒரு ஸ்பூன் போட்டு தண்ணீரில் கலக்கி காலை,இரவு சாப்பாட்டுக்கு பின் சாப்பிடவும்.

இஞ்சி எதனுடன் எப்படி சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்..?

1. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.

2. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

3. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும்.

4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

5. இஞ்சியை புதினாவோடு ச

ேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும்.

7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

Sunday 1 July 2018

#320 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 902 பேணாது பெண்விழைவான் | Daily one...

#319 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1199 நசைஇயார் நல்கார் | Daily one t...

கர்மா என்பது இதுதான்...

கர்மா என்பது இதுதான்...
ஸ்டாலின் 30 வருஷமா முதல்வர் கனவிலும்... சசிகலா 30 வருசமா முதல்வர் கனவிலும் இருந்தார்கள்... ஆனால்...

ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமாகி விட்டார்கள்...

எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...

ராஜீவும், பிரபாகரனும் தங்கள் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள் இன்னொருவரால்...

ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்...

ஆனால்... சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் சிறுநீர் கழிக்க கூட சிரமப்பட்டு சிறுநீரை சுமக்க வாளியோடு சுற்றினார்...

ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்.... கருணாநிதி சாகணும்னு ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...

ஆனால் கண்ணுக்கு எட்டிய வரை எதிரியே இல்லை என்ற ஜெயலலிதா இறந்து விட்டார். பிறகு குற்றவாளி என அறிவிக்கவும் பட்டார்.
கருணாநிதி சாகவில்லை.. ஆனால்..

கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டதற்கு எந்தவொரு கருத்தும் சொல்ல இயலவில்லை கருணாநிதியால்...

93 வயதிலேயே நூறாண்டு கொண்டாட்ட ஆசை கருணாநிதிக்கு...

அது நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது... ஆனால் அதை உணரும் நிலையில் கருணாநிதி இருப்பாரா என உறுதியாக சொல்ல முடியாது....

மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆட ... . ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு தெற்கு ஆசியாவே ஆடுகிறது...

உலகமே தங்களுக்கு கட்டுப்படணும்னு நினைக்கும் வெளிநாட்டு முஸ்லிம்கள் நாளுக்கு நாள் தங்களுக்குள்ளேயே சிதறுகிறார்கள்.

உயிர் வாழ மட்டுமே சிதறி ஓடிய யூதர்கள் ஒருங்கிணைகிறார்கள்.

விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்...

ஆனால் பூமி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது.

கர்மா...

உங்களுக்கு எதிராக வினையாற்றுவதில்லை... உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்ற தவறுவதும் இல்லை.

உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடம் சேர்த்து விடும் மிகச் சிறந்த நிர்வாகிதான் கர்மா.

யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது.

பாலமும்... சுவரும்
கட்டிடத் தொழிலாளர்களால்தான் கட்டப்படுகிறது..
சுவர் பிரிக்கிறது... பாலம் இணைக்கிறது.

கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது.
கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் தீமையை அகற்றுவோம்.
நன்மையை விதைப்போம்.
நல்லவர்களே!...

நல்ல சிந்தனையோடு நாலு பேருக்கு உதவுங்கள்.

அதுதான் தர்மம் காக்கும் நல் அரசியல்.
கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்வான்.

அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டு பார்க்காதீர்கள்.

(படித்ததில் பிடித்தது )

பாவ மன்னிப்பு' என்ற மதச் சடங்கு, இந்து மதத்தில் இல்லாதது ஏன்?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.

இந்து மதம் பாவத்தின் அளவுக்கு தண்டனையை விதிக்கிறது; பாவம் உணரப்படும் போது, குறைந்தபட்ச தண்டனை கொடுத்து மன்னிக்கிறது.

ஆனால், அப்படி ஒரு மன்னிப்பை வழங்குவதற்கு குருமார்கள் யாரையும் நியமிக்கவில்லை.

இந்த விஷயங்களை நேரடியாக இறைவனே கவனிக்கிறான்.