flipkart discount sale search here.

Thursday 29 March 2018

கி ஙி சி Ki ngi si in tamil | உயிர்மெய் எழுத்துக்கள் | Uyirmei eluthukka...

#226 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 57 சிறைகாக்கும் காப்பெவன் | Daily o...

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!

கண்டிப்பாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டும்!
கால் கிலோ காஃபித்தூள்!👇🏻👇🏻👇🏻👇🏻
ஒரு உரையாடல்!



சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?

ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?

ஒரு மீட்டிங்ல இருந்தேன்.

எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்போ எடுக்காதீங்க!

அப்படி ஏதாவது அவசரமான விஷயம்னா வாட்ஸாப் மெசேஜ் அனுப்பியிருக்கலாமே?

ஆமாம், மெசேஜ்லேயே குடும்பம் நடத்திக்கலாம்! பொண்டாட்டிகிட்ட இருந்து வர்ற ஒரு போன் கூட அட்டெண்ட் பண்ணமுடியாத ஆபீஸ்!

விடுடி, அதுதான் கூப்பிட்டுட்டேன்ல, சொல்லு!

இப்போவாவது ஃப்ரீயா, இல்லையா?

ஃப்ரீதான் தாயே, சொல்லு!

என்ன சொல்ல வந்தேன், ஆ! நியாபகம் வந்துருச்சு!

சொல்லு!

டிகாஷன் போடலாம்னு கிச்சனுக்கு போனேன், காஃபித்தூள் டப்பாவை தேடுனா எங்கேயோ தூக்கி வெச்சுட்டீங்க!

அடியே, நான் அதை கண்டிப்பா இங்க எடுத்துக்கிட்டு வரல! தேடிப்பாரு ப்ளீஸ்!

ஐயோ, என்னை பேச விடுங்களேன், இப்போ உங்களை எடுத்துக்கிட்டு போயிட்டீங்கன்னு யாரு சொன்னா!

வேற என்னதான் சொல்ல வர்றே?

ஒரு நிமிஷம் பொண்டாட்டிகிட்ட பேச பொறுமை இருக்கா உங்களுக்கு? இதே மத்தவங்க கிட்ட மணிக்கணக்குல பேசமுடியுது! உங்க தம்பியெல்லாம் பாருங்க எப்படி இருக்காருன்னு!

சரி, கேட்கறேன், சொல்லு, என்ன?

இப்படி குறுக்க குறுக்க பேசுனா சொல்லவர்றதே மறந்துபோகுது!

சரி பேசல, சொல்லு!

என்ன சொல்லிக்கிட்டிருந்தேன்?

ம்ம்ம்.. காஃபித்தூள்!

அதுக்கு ஏன் சலிச்சுக்கறீங்க!

இல்லடி, சொல்லு!

ம், காஃபித்தூள் டப்பாவை தூக்கி மேல வெச்சுட்டீங்க! எட்டி எடுக்கலாம்ன்னு பார்த்தா, இந்த ஆப்ரேஷன் பண்ணுன கால்ல சுரீர்ன்னு வலிக்குது! எதுக்கும் வேற ஒரு நல்ல டாக்டர்கிட்ட ஒப்பீனியன் வாங்கணும்!

அதுக்குதான் ஃபோன் பண்ணுனியா?

இல்லை சாமி, உங்களை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகச் சொல்ல நான் என்ன பைத்தியமா? ஆபரேஷன் அன்னைக்கும் விட்டுட்டு ஆபீஸ கட்டிக்கிட்டு அழப்போன ஆள்தான நீங்க!

அதுக்கு இப்போ எதுக்குடி போன் பண்ணி சண்டை போடறே?

ஆமா, என்னப்பாத்தா  சண்டைக்காரி மாதிரிதான் தெரியும் உங்களுக்கு! உங்கள மாதிரியேதான் உங்க புள்ளைகளும்! அம்மான்னாலே அதுங்களுக்கு எளக்காரம்!

சரி, நம்ம சண்டையெல்லாம் வீட்டுக்கு வந்ததும் வெச்சுக்கலாம்! இப்போ எதுக்கு கால் பண்ணுனே, அதைச் சொல்லு!

என்னை எங்க சொல்ல விடறீங்க! ஒரு வார்த்தை பேசறதுக்குள்ள குறுக்க பேசுனா மனுஷி என்ன பேசறது?

மறுபடியும் ஆரம்பிக்காதே, சொல்லு, என்ன விஷயம்?

ச்சே, இந்த நைட்டி வேற கால்ல சிக்குது! இந்த அழுக்கு கலர்ல வாங்காதீங்கன்னு சொன்னா கேட்டாத்தானே! தொவைச்சுப் போட்டாலும் அழுக்கு மாதிரியே தெரியுது!

எதுக்கு ஃபோன் பண்ணுனே, அதை சொல்லு ப்ளீஸ்! இன்னைக்கு நிறைய வேலை இருக்கு!

சரி நீங்க போய் வேலையைப் பாருங்க, நான் அப்புறமா கூப்பிடுறேன்!

தாயே, வதைக்காதே, எதுக்கு ஃபோன் பண்ணுனே? சொல்லு!

அதென்ன, வீட்டிலிருந்து ஃபோன் வந்தாலே இவ்வளவு சலிச்சுக்கறீங்க?

இல்லம்மா, சொல்லு!

எங்க சொல்லவிடறீங்க? வீட்டுக்கு ஒன்னு வேணும்ன்னாகூட ஃபோன் பண்ணக்கூடாதா?

என்னதான் வேணும் உனக்கு இப்போ!

அதுதான் மறந்தே போச்சு, எத்தனை தடவை குறுக்கே பேசறீங்க! ஞாபகம் வந்ததும் சொல்றேன்!

சரி!

வெச்ச மறுநொடி அடுத்த போன்!

ஏன் கட் பண்ணீங்க?

நீதானடி நியாபகம் வந்ததும் சொல்றேன்னே?

இப்போ நியாபகம் வந்துருச்சு!

சரி சொல்லு!

காஃபித்தூள் டப்பாவை அவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கவேண்டி இருக்கு! ஏன் மேல தூக்கி வெச்சீங்க? இனிமேல் இப்படி எல்லாத்தையும் கலைச்சு வைக்காதீங்க!

சரி, இனிமேல் வைக்கல! சொல்லு!

அவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்துப் பார்த்தா, காஃபித்தூள் கொஞ்சம்தான் இருக்குது! காலைல காஃபி நீங்கதானே போட்டீங்க? சொல்லமாட்டீங்களா?

மறந்துட்டேன்! விடு! இப்போ எதுக்கு போன் பண்ணுனே?

ஒரு வார்த்தை பேச விட்றாதீங்க! சரி, மறக்காம சாயங்காலம் வரும்போது கால் கிலோ காஃபித்தூள் வாங்கிக்கிட்டு வந்துடுங்க!

உனக்கே இது நியாயமா இருக்கா? காஃபித்தூள் வாங்கிட்டு வாங்கன்னு ஒரு வார்த்தைல சொல்லமுடியாதா?

ம்க்கும்! தப்புதான் சாமி! ஒரு வார்த்தை எக்ஸ்டரா பேசக்கூடாது!
உங்களுக்கு எதுக்கு தொந்தரவு! நீங்க ஒன்னும் வாங்கிக்கிட்டு வரவேண்டாம், நானே வாங்கிக்கறேன்! நீங்க உங்க ஆபீஸையே பாருங்க!

ஹலோ, ஹல்லோ ........

Wednesday 28 March 2018

#225 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 824 முகத்தின் இனிய | Daily one thir...

IPL 2018 time table

🏆 Super Fast Cricket Line  🏆
           


⚡ INDIAN PREMIER LEAGUE  2018⚡

        🎄🎄  Schedule  🎄🎄

Date                 Team                  Time

07.04.18       MI VS CSK        8.00 PM
08.04.18     DD VS KXIP        4.00 PM
08.04.18     KKR VS RCB       8.00 PM
09.04.18      SRH VS RR        8.00 PM
10.04.18     CSK VS KKR       8.00 PM
11.04.18        RR VS DD         8.00 PM
12.04.18       SRH VS MI        8.00 PM
13.04.18    RCB VS KXIP       8.00 PM
14.04.18        MI VS DD          4.00 PM
14.04.18     KKR VS SRH       8.00 PM
15.04.18      RCB VS RR         4.00 PM
15.04.18    KXIP VS CSK       8.00 PM
16.04.18      KKR VS DD         8.00 PM
17.04.18      MI VS RCB         8.00 PM
18.04.18      RR VS KKR         8.00 PM
19.04.18    KXIP VS SRH      8.00 PM
20.04.18     CSK VS RR         8.00 PM
21.04.18    KKR VS KXIP      4.00 PM
21.04.18      DD VS RCB        8.00 PM
22.04.18     SRH VS CSK      4.00 PM
22.04.18        RR VS MI         8.00 PM
23.04.18     KXIP VS DD        8.00 PM
24.04.18      MI VS SRH        8.00 PM
25.04.18     RCB VS CSK       8.00 PM
26.04.18    SRH VS KXIP      8.00 PM
27.04.18      DD VS KKR        8.00 PM
28.04.18       CSK VS MI        8.00 PM
29.04.18       RR VS SRH       4.00 PM
29.04.18     RCB VS KKR      8.00 PM
30.04.18       CSK VS DD       8.00 PM
01.05.18       RCB VS MI       8.00 PM
02.05.18        DD VS RR        8.00 PM
03.05.18     KKR VS CSK      8.00 PM
04.05.18      KXIP VS MI       8.00 PM
05.05.18     CSK VS RCB      4.00 PM
05.05.18      SRH VS DD       8.00 PM
06.05.18       MI VS KKR       4.00 PM
06.05.18     KXIP VS RR       8.00 PM
07.05.18     SRH VS RCB     8.00 PM
08.05.18      RR VS KXIP      8.00 PM
09.05.18       KKR VS MI       8.00 PM
10.05.18       DD VS SRH      8.00 PM
11.05.18      RR VS CSK       8.00 PM
12.05.18    KXIP VS KKR     4.00 PM
12.05.18      RCB VS DD       8.00 PM
13.05.18     CSK VS SRH      4.00 PM
13.05.18        MI VS RR         8.00 PM
14.05.18    KXIP VS RCB      8.00 PM
15.05.18      KKR VS RR        8.00 PM
16.05.18      MI VS KXIP       8.00 PM
17.05.18     RCB VS SRH      8.00 PM
18.05.18       DD VS CSK       8.00 PM
19.05.18       RR VS RCB       4.00 PM
19.05.18     SRH VS KKR      8.00 PM
20.05.18        DD VS MI         4.00 PM
20.05.18    CSK VS KXIP      8.00 PM
22.05.18       Qualifier 1        8.00 PM
23.05.18       Eliminator        8.00 PM
25.05.18        Qualifier 2       8.00 PM
27.05.18           FINAL           8.00 PM

Tuesday 27 March 2018

Somberi SuruSurupaaga Aavadhu Eppadi? | Lazy vs Active | How to stop laz...

#224 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1123 கருமணியிற் பாவாய்நீ | Daily on...

ஆட்டு மந்தைகளைவிட கேவலமான பழக்கம் நம்மிடம் உள்ளது...

ஆட்டு மந்தைகளைவிட கேவலமான பழக்கம் நம்மிடம் உள்ளது. முதல் ஆடு கிணற்றில் குதித்தால் அத்தனை ஆடும் கிணற்றில் குதிக்கும்.

  எந்த நோயாக இருக்கட்டும்  அதற்கு எந்த மருத்துவம் பார்த்தாலும் சரி, நீ அடிப்படை ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறாய் என்பதை சிந்தனை செய். 

   நேரத்திற்கு உண்ணும் பழக்கத்தை முதலில் நிறுத்து. பசிக்கும் வரை காத்திரு. இல்லை எனில் உன்னால் மட்டுமல்ல அந்த கடவுளே வந்தாலும் உன் நோயை மறைத்து வைக்கலாமே ஒழிய குணப்படுத்த இயலாது.

குறைந்த பட்சம் இந்த உணவுப் பழக்கத்தையாவது கடைபிடி. முடிந்தால் சில யோகா அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.
    அடுத்து உயிரின் செயல்பாடுகளை புரிந்து கொள். உடலில் கழிவுகள் தேங்கும் பட்சத்தில் நோயெதிர்ப்பு சக்தி உருவாகி கழிவுகளை வெளியேற்றும்.

அவற்றை நாம் சளி, காய்ச்சல், வாந்தி, பேதி என்கிறோம். இவைகளை பொருத்துக்கொள்.  ஆரம்பத்தில் சொன்னபடி பசிக்கு உண்டு பழகினால் இக்கழிவுகள் கூட தேங்காமல் தடுக்க முடியும்.

  பின் காய்ச்சலும் வராது ஒன்றும் வராது. அப்படி வந்தாலும் மகிழ்ச்சி. ஏனெனில் கழிவுகள் வெளியேறுகிறது.

   காய்ச்சலை நிறுத்தினா அது எந்த மருத்துவம் ஆனாலும் சரி அது நோயை வளர்க்கும்.

 சளியை நிறுத்தினால்  அது எந்த மருத்துவம் ஆனாலும் சரி அது நோயை வளர்க்கும்.

 வாந்தி பேதியை நிறுத்த மருந்துகள் கொடுக்கும் மருத்துவத்தை நம்பாதே. அது நோயை வளர்க்கும்.

உன் நோயை வளர்த்து வருமானம் சம்பாதிக்க பார்க்கும்.

 நீ மருத்துவரிடம் போவதை விட நீயே மருத்துவராகு.

 உன்னை விட உனக்காக வேலை செய்பவர்கள் யாரும் இல்லை.

#223 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 422 சென்ற இடத்தால் | Daily one thir...

சாதிக்க நினைப்பவர்களுக்கு...

சாதிக்க நினைப்பவர்களுக்கு
எழுத்தாளர் சுஜாதா வழங்கிய  அறிவுரைகள் 

1. புத்தகங்களைத் துணை கொள் ....அதை  விட   சிறந்த   நண்பனில்லை  ....

2. உடலுழைப்பை  அதிகரி .... அது   மட்டுமே   உன்னை   உயர்த்தும்  ,  ஆனந்தமும்   ஆரோக்கியமும்   அதில்   மட்டுமே   கிடைக்கும்  ..

3. குளிர்ந்த   நீரில்   குளி . உடல்  சுறுசுறுப்பாகும்  ...

4. தியானம்  கைக்கொள்.... உன்னை   நீ   உணர்ந்து  கொள்ள   அது  மட்டுமே   வழி காட்டும்  ....

5. இரவு உறங்கும்  முன் நெடுந்தொலைவு   நட .... உன்   தூக்கம்   இன்பமாக  இருக்கும்  ...

6. தாய்  தந்தையைப்   போற்றி   வணங்கு  ..... அது   உன்   கடமை.     

7. உணவில்  கீரை   சேர்த்துக் கொள் ....

8. எத்தனை  வலித்தாலும்  அழாதே  . சிரி  . வலிமைக்குக்  மேல்   வலிமை   பெற்று   வானம்   தொடுவாய்  ....

9. ஆத்திரம்   அகற்று .
எதற்கும்  கோபப்படாதே ....
கோபம்   உன்னை   ஒரேயடியாக   அழித்து விடும் ....

10. கேலிக்கு   புன்னகையை    பரிசாக்கு  ...

11. கோபத்திற்கு   மௌனத்தைக்   கொடு  . திருப்பித்  தாக்கி விடாதே  ....

12. நட்புக்கு   நட்பு   செய் .
 பகைவனைக்  கூட   நேசிக்கப்  பழகு  .....

13. வேலை   சொல்லித்  தருபவரிடம்  மிகப் பணிவாக  இரு  ....
மேலும்   மேலும்   உயர்வாய்  ...

14. அலட்சியப்படுத்தினால்   விலகி   நில் .  ஆத்திரப்பட்டுவிடாதே  ....

15.. அன்பு   செய்தால்   நன்றி  சொல் .... நன்றியுணர்வு    உன்னைப்  பெரியவனாக்கும்  ...

16. இதமாகப்  பேசு .
  இனிமைகள்   உன்னை   அரவணைத்துக்  கொள்ளும்  ....

17 . நீயும்   நானும்   எதைச்   செய்தாலும்   இறைவன்   மௌனமாகப்   பார்த்துக் கொண்டே   இருக்கிறார்  .....அவருக்கு   நாம்   பதில்   சொல்லியே   ஆக வேண்டும் .... ஆகவே    நல்லதைச்   செய்  .....

நீ ஜெயிப்பாய்....    நிச்சயமாக  ஜெயிப்பாய் ..

வாழ்க்கையில்   உன்னத   நிலைக்கு   வருவாய்.

Saturday 24 March 2018

#221 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 522 விருப்பறாச் சுற்றம் | Daily one...

பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும்...

🐀எலி ஒன்று வைர  வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..

மிகவும் விலை உயர்ந்த *வைரம்* அது. வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து எப்படியாவது அந்த 🐀எலியை "ஷூட்"🔫 செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

🐀எலி பிடிப்பவனும் தன் *துப்பாக்கி’யுடன்*🔫 வந்துவிட்டான்.. அதை ஷூட் செய்ய..

எலி அங்கே இங்கே என்று 🐀போக்கு காட்டி ஓடியதில் திடீரென்று ஆயிரக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன..

ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் *ஒதுங்கி தனித்தே* நின்றிருந்தது .

எலி பிடிப்பவனுக்கு அது வசதியாக போய்விட்டது..

சரியாக குறி பார்த்து அந்த எலியை டுமீல்.. என சுட்டான்..எலி *spot out..*🐁

வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான்..

ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி கேட்டான்..
ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்.. என்ன காரணம்? என்றான்.

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்...

இப்படித்தான்...

'பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம்  கொண்டு  மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,  தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்" அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது. என்றான்.

உறவுகளும் அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்து விட்டுவிடுகிறார்கள்.

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும் சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்....

உலகத்திலேயே சிறந்த ஜோடி...

🔵உலகத்திலேயே சிறந்த ஜோடி
செருப்புதான்
ஒன்றை பிரிந்தால் மற்றொன்று
வாழவே வாழாது👡👞
🔴மாமா பொண்ணும், உப்புமாவும் ஒன்னு!! வேற எதுவுமே கிடைக்காத பட்சத்துல நம்மளோட தலையில கட்டப்படும்!!👳
🔵எல்லா பெண்களையும் விசிலடித்து திரும்பி பார்க்க வைத்தாலும் செருப்படி வாங்காத ஒரே ஜீவன் குக்கர் தான்..!!🎪
🔴இந்த உலகத்தில் என்னையும் ஒரு மனிதனாக மதித்து பொன்னாடை போர்த்தும் ஒரே நபர்.. சலூன் கடைக்காரர் மட்டுமே.. "நீங்க வெட்டுங்க பாஸ்.."✂
🔵நிம்மதியாக இருக்கும் வயதில் மனைவியைத் தேடுவதும், மனைவி வந்தப்பின் நிம்மதியைத் தேடுவதுமே..  ஆண்களின் வாழ்க்கை தேடல்..🚶🏻
♻படித்தேன்
        பகிர்ந்தேன்👍🏼

Wednesday 21 March 2018

How to face tongue | How to control tongue in tamil By Shankar S V

#218 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 222 நல்லாறு எனினும் | Daily one thi...

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......

படிச்சேன் விழுந்து விழுந்து சிரிச்சேன் உடனே ஷேர் பண்ணிட்டேன் 😂😂😂

ஒரு புலி கல்யாணம் பண்ணிட்டு ரிஷப்ஷன் வச்சுது.......

எல்லா விலங்குகளும் விருந்து சாப்டுட்டு , புலி ஜோடியை நாலு அடி தள்ளி நின்னே வாழ்த்திட்டு போச்சு.

மாப்ள புலிக்கோ கர்வம் தாங்கல.

திடீர்னு ஒரு பூனை மட்டும் சரசரன்னு புலிக்கிட்ட போய்ட்டு கைக்கொடுத்து வாழ்த்து சொல்லிடுச்சு.

புலிக்கு ஆத்திரம் வந்துடுச்சு. பூனையப் பார்த்து கர்ஜனையோட,

"டேய் இத்தனைப் பேரு என்னய தூரம நின்னு வாழ்த்திட்டு போறானுங்க.....

ஒனக்கு மட்டும் எவ்வளவு தைரியம் இருந்தா என்கிட்ட வந்து வாழ்த்து சொல்லுவ ! நான் புலிடா" ன்னு சொன்னுச்சு.

அந்த பூனையோ கெக்க பிக்கன்னு சிரிச்சுட்டே "அடேய் கிறுக்கு பயலே !

நானும் கல்யாணத்துக்கு முன்ன "புலிதாண்டா " ன்னு சொல்லிட்டு ஓடிப் போச்சு ! 😂😂😂

கதையின் நீதி:
புலியை கூட பூனையாக மாற்றும் வல்லமை படைத்தவர்கள் பெண்கள் 😜😝😜

Sunday 18 March 2018

#215 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 318 தன்னுயிர்ககு ஏன்னாமை | Daily on...

இன்று ஆண்கள் தினமாமே.??!!

இன்று ஆண்கள் தினமாமே.??!!

யாரும் நமக்கு வாழ்த்து சொல்றமாறி தெரியல.....so நம்மள நாமே வாழ்த்திப்போம்.! 😀 😜

உண்மையில் ஆண்கள் நாங்க ரொம்ப நல்லவர்கள்
ஏனென்றால்....

யார் லவ் சொன்னாலும் சட்டுனு கோபப்படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!
🍓
பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!
🍓
மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!
🍓
சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!
🍓
லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!
🍓
எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.." என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!
🍓
படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!
🍓
சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!
🍓
தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!
🍓
முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!
🍓
பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!
🍓
பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..
🍓
அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!
🍓
அட ஆம்பள பசங்கனா'லே ....!!!! கெத்து தான பா.........
"பசங்கள ஏது நல்ல பசங்க கெட்ட பசங்க .???
பசங்க'னாலே நல்லவன் தான் ,""

இப்படி பசங்கள பத்தி சொல்லிட்டே இருக்கலாம்...
《----Dedicated to all men...

Friday 16 March 2018

#213 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1207 மறப்பின் எவனாவன் | Daily one t...

மனைவி🙋 ஏங்க இன்னைக்கு ​தேதி என்னங்க ⁉​

Wife calling🎸🎶 உயிரே 🎶🎶🎶 உயிரே🎸🎻🎶)

கணவன் : சொல்லுடா தங்கம், என்ன🙋‍♂

மனைவி🙋 ஏங்க இன்னைக்கு ​தேதி என்னங்க ⁉​

கணவன்💁‍♂ இன்னைக்கு தேதி 12. ஏன்மா⁉🙆‍♂

மனைவி💁 ​ஒன்னும் இல்ல,​ வைய்ங்க.☎

கணவன்🙆‍♂ பதற்றம் அடைந்தவனாக🙅‍♂  *அய்யய்யோ தேதி கேட்டு வைச்சிட்டாளே👈 என்ன ஆச்சோ, என்ன தேதியோ தெரியலயே,🤔😳🤔🙄

Eb பில் கட்டியாச்சு✅
பால் பணமும் கொடுத்தாச்சு✅
மளிகை கடைக்கும் பணம் கொடுத்தாச்சு✅
கேபிள் பணமும் கொடுத்தாச்சு✅✅✅✅

தன்🙍அம்மாவுக்கு☎போன் பண்றான்🙎‍♂
அம்மா எங்க கல்யாண நாள் எப்போ‼⁉

அடுத்த மாசம் டா. ஏன்⁉

ஒன்னும் இல்ல. வை☎

🙎மாமியாருக்கு☎போன் பண்றான்🤵

அத்தை.. மாலாவுக்கு  பிறந்தநாள் எப்போ⁉

12வது மாசம்தான் மாப்ள. ஏன்.‼⁉❓

சும்மாதான் கேட்டேன். நான் அப்புறம் பேசுரேன் அத்தை.

தன்👱மகனுக்கு☎போன் பண்றான்🙎‍♂

_*அம்மா ஏதும் பாத்திரத்த🍽🍶 ஒடைச்சாளா⁉

இல்லப்பா👨

கோபமா இருக்காளா😡❓

இல்லப்பா👨👨👨

என்ன பண்றாள்⁉❓

👩👩👩👩‍💻டீவீ பாக்குறாங்கப்பா.

சரி வை☎

மனைவிக்கு☎போன் பண்றான்🙋‍♂💁‍♂

தங்க புள்ள... ஏன்டா தேதி கேட்ட⁉

ஒன்னும் இல்லங்க காலண்டர்ல ரெண்டு நாளா தேதி கிழிக்கல அதான் கேட்டேன்💁

சரிடா வைச்சிட்றேன்☎

......பயபுள்ள . கொஞ்ச நேரத்ல பதறவெச்சிட்டாளே....  🤦‍♂சே. . . 🙆‍♂

Aircel instant UPC code new link | By Say Me Selfish

Saturday 10 March 2018

கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

இயற்கையா ? - கார்ப்பரேட்டா ?...

👌👌பசித்து உண்ண வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎நேரத்திற்கு  சாப்பிட வேண்டும் என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 தாகத்திற்கு  நீர் அருந்த வேண்டும் என்பது இயற்கையின் விதி!

👎தினம் 7 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்பது கார்ப்ரேட் சதி!

👌👌 தரமான   இயற்கை உணவுகள்  இயற்கையின் விதி!

👎உணவில் ரசாயன கலப்பு கார்ப்பரேட் சதி!

👌👌தாய்ப் பால் மட்டும் தான் மனிதனுக்கு என்பது இயற்கையின் விதி!

👎மாட்டுப் பாலும் மனுசனுக்கு என்பது கார்ப்பரேட் சதி!

👌👌 சுகப் பிரசவம்  என்பது இயற்கையின் விதி!

👎சிசேரியன் என்பதே கார்ப்பரேட் சதி!

👌👌யாரும்  இனிப்பும், பழங்களும் சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎சர்க்கரை நோயாளிகள் இனிப்பும்  பழமும் தொடக் கூடாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌 யாரும் கொழுப்பு உணவுகள்  சாப்பிடலாம் என்பது இயற்கையின் விதி!

👎இருதய நோயாளிகள் கொழுப்பு சாப்பிடக் கூடாது  என்பது கார்ப்பரேட் சதி!

👌👊 பசி வந்தால் எந்த நோயும்   குணமாகும் என்பது இயற்கையின் விதி!

👎எந்த நோய்க்கும் மருந்து சாப்பிட வேண்டும் என்பது  கார்ப்பரேட்  சதி!

👌👌ஆரோக்கிய வாழ்வுக்கு இரவு தூக்கம் என்பது இயற்கையின் விதி!

👎அதை மறைத்து வைத்தது கார்ப்பரேட் சதி!

👌👌நம் ஆரோக்கியத்தை  சொல்லும் உடலின் மொழி இயற்கையின்  விதி!

👎நோயைக் காட்டும் மருத்துவ பரிசோதனை கார்ப்பரேட் சதி!

👌👌 எந்த நோயும் முழுதும் குணமாகும் என்பது  இயற்கையின் விதி!

👎எந்த நோயும் குணமாகாது என்பது  கார்ப்பரேட் சதி!

👌👌ஒவ்வொரு  மனிதருக்குள்ளும் ஓராயிரம் மருத்துவர் என்பது இயற்கையின்  விதி.

👎ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு மருத்துவர் என்பது கார்பரேட் சதி.

👌👌தண்ணீரை மண் வடி கட்டும் என்பது இயற்கையின் விதி.

👎தண்ணீரை வடி கட்ட R.O மிஷின் தண்ணீரை குடியுங்கள் என்பது கார்பரேட் சதி.

👌👌 நாட்டுச் சோளம் சாப்பிடுவது இயற்கையின் விதி.

👎மரபியல் மாற்ற அமெரிக்க சோளத்தை தின்று மரணிக்க வைப்பது கார்பரேட் சதி.

👌👌மருத்துவம் என்பது எளிதானது, இயற்கையானது என்பது விதி!

👎அதை வணிகமாக்கியது  கார்ப்பரேட் சதி!

👌👌 மற்றவருக்கு இதனை படித்தும், பகிர்ந்தும்,  இதன்படி நடக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி !

👎 படித்து மற்றவர்க்கு அனுப்பி மட்டும் விட்டு மீண்டும் கார்ப்பரேட் வாழ்க்கை வாழ வேண்டும் என்பது சதி!

இப்படிக்கு.,
இயற்க்கை காவலன்👍.

#207 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 907 பெண்ணேவல் செய்தொழுகும் | Daily ...

மொட்டை போடுவதன் காரணம்...?

*🔱🚩மொட்டை போடுவதன் காரணம்-*
                                                               *உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*

*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*

*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.*

*ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.*

*இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?'  என்றும் ,*

*'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.*

*முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?'  என்று கிண்டலடிப்பார்கள்.*

*யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.*

*மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.*

*இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.*

*மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .*

*அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான்  அஸ்வத்தாமன்.*

*குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.*

*அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.*

*அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.*

*ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,*

*நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.*

*ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.*

*ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.* *எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.*
*வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.*

*ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.*

*யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.*
*தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது,*
*இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!*

*வளமோடு வாழுங்கள், வாழும் நாளெல்லாம்...🔥*

🙏

எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்...

*இறைவன் தந்த வாழ்க்கையில் !!!*

1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.
2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.
3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.
4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.
5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.
6. நிறைய புத்தகம் படியுங்கள்.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.
8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.
9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.
11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.
12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.
15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.
16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.
17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.
18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.
19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.
21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.
22. மன்னிக்கப் பழகுங்கள்.
23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.
24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.
25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.
26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.         
30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

*மறக்காமல் இதை பகிருங்கள்..*

Friday 9 March 2018

Two minutes aircel to bsnl portability | No need UPC code | By Say Me Se...

#206 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 407 நுண்மாண் நுழைபுலம் | Daily one ...

Unga Name 1st letter vachi unga character pakkalam...

Unga Name 1st letter vachi unga character pakkalam
Ithu 100% true..

1. A,B,C,D 👉 kadavul nambikkai irukum, confusion irukum, kovam pada theriyathu, u don't know own suggestion in ur life, konja brilliant, soft character, love, pidichavangala konja miss panniduvinga, konja unlucky, life hate pannuvinga, konja act pannuvinga...

2.E,F,G,H,I 👉 romba nallavangala irupinga, cute ta iruppinga, athigama kovam varum, konja siripu, rmba thimuru, yaraa irundhaalum tappu panunaa thatti kepinga, konja lucky person...

3.J,K,L,M 👉 kadavul nambikkai athigama irukkum, romba silent ta irunthu kariyaththa sathichuduvanga, sirikku pothu alagu, ivangaluku santhosam vantha vudane sogam varum, athigama yaru kittaium pesa mattanga, nalla pasamana life partner kidaipanga,ungaluku pudichavungalta sandai pottute irupinga.silent love, lucky person...

4.N,O,P,Q 👉 kadavul nambikkai irukkum, ivanga alaga pesuvanga, aduthavangaluku advice pandrathula expert, ivanga mela pasama irukkuravangala kandukka mattanga, love, konja selfish, konja cute, Lucky person...

5.R,S,T 👉 ivanga romba paesuvangaa konja thimiru, kovama pattalum kunam.. irukkum, sema charactera interesta pesuvanga. ellaraiyuum respect pannuvinga.ana pidichavangala Vida matanga, konja lifela kastta paduvanga, life enjoy pannuvinga, lucky person, love la yekkachakkam, romba nallavanga childish ah  irupanga yellarum unga mela pasama irupanga. Sema cute, lovely, innocent, romba paesuvinga..

6.U,V,W 👉 kadavul nambikkai athigama irukkum, athigama aluvanga, athigama sirippanga, athigama kova paduvanga, yellarum manasulaium easy ya idam pidichuduvanga, sirikkum pothum aduthavangala convenes pandrathalaium alagu, konja unlucky, ungala pidikalanu yarum solla mattanga...

7.X,Y,Z  👉 romba unlucky, life enjoyment mattum venumnu ninaippinga, romba nallavanga, ethirparpu athigama irukkum...

Ithu ungalukku correct iruntha happy,
thappa iruntha don't care.

Yellarukkum frwd pannunga Interesting ❤

abcd small letter and capital letter | small letter capital letter abcd ...

Thursday 8 March 2018

#205 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 210 அருங்கேடன் என்பது | Daily one t...

அவ 'காபி'ன்னுவா... நான் 'சுடு' தண்ணி'ன்னுவேன்...

பேர் வைக்கிறதுல தான் எனக்கும் என் ஒய்ஃப்க்கும் சண்டையே வரும்....
.
அவ 'காபி'ன்னுவா...
நான் 'சுடு' தண்ணி'ன்னுவேன்...
.
அவ 'தோசை'ன்னுவா...
நான் 'ஊத்தாப்பம்' ன்னுவேன்...
.
அவ 'பொங்கல்' ன்னுவா.....
நான் 'சோறு' ன்னுவேன்...
.
அவ 'சாம்பார்' ன்னுவா....
நான் 'ரசம்' ன்னுவேன்....
.
கடைசில கைல கரண்டியோட கிச்சனை விட்டு வெளிய வருவா.....
.
நான் சத்தம் போடாம கம்மு'ன்னு சாப்ட்ருவேன்.....
.
நமக்கு வன்முறையில் ஆர்வமில்ல.....😁பெண்கள் தினவாழ்த்து😁

மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
*மகளிர்தினம் ஓர் இஸ்லாமிய பார்வை.*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿


 👉 *பெண் பிள்ளைகள் பிறந்தால் உயிரோடு புதைத்த காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் ஒரு ஆட்டை அறுத்து விருந்து கொடுக்கச் சொன்ன மார்க்கம்.*


👉 *மூன்று பெண் குழந்தைகளை பெற்று அவர்களை கண்ணியமாக வளர்த்து, நல்ல முறையில் திருமணம் முடித்துத்தரும் பெற்றோர்கள், சொர்க்கத்தில் என்னோடு இருப்பார்கள் என்று நன்மராயம் கூறியவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*


 👉 *வாழும் உரிமையே மறுக்கப்பட்ட காலத்தில் பெண்களுக்கு சொத்தில் உரிமை தந்த மார்க்கம் இஸ்லாம்.*


  👉 *பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடத்தக்கூடாது என்று தடை விதித்த இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*


👉 *திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுத்தப்படும் ஒரு ஒப்பந்தமே அன்றி மனைவி என்பவள் கணவனின் அடிமையல்ல என்று சட்டம் இயற்றிய மார்க்கம் இஸ்லாம்.*


  👉 *வரதட்சணை எனும் பகல் கொள்ளையைத் தடுத்து பெண்ணுக்கு மஹர் எனும் திருமண நன்கொடையை மாப்பிள்ளை தர வேண்டும் என்று கட்டளையிட்ட மார்க்கம் இஸ்லாம்.*


  👉 *தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது என்று தாய்மைக்கு பெருமை சேர்த்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*


   👉 *உங்கள் மனைவியிடத்தில் யார் சிறந்தவரோ அவரே உங்களில் சிறந்தவர் என்று உபதேசித்தவர் இறைத்தூதர் முஹம்மத் ( ஸல் ).*


 👉 *மனைவியின் மீது கணவனுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் கணவன் மீது மனைவிக்கும் உள்ளது என்று பெண்களின் உரிமையை நிலைநாட்டியது இஸ்லாம்.*


👉 *கணவனை இழந்த பெண்கள் சிதைக்கப்படுவதை தடுத்து நிறுத்தி விதவைகளுக்கு மறுதிருமணம் செய்ய வலியுறுத்தியவர் இறைத்தூதர் முஹம்மத் (ஸல் ).*


👉 *வெறும் காட்சி பொருளாக பார்த்து ரசிக்கும் கயவர்களுக்கு மத்தியில், கண்ணியமான ஆடை (பர்தா) அணிய கற்றுத்தந்ந மார்க்கம் இஸ்லாம்.*


🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
*இங்கு மகளிர்க்கு என்று ஒரு நாள் இல்லை.*

🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
  *ஒவ்வொரு நாளிலும் அவர்கள் மதிக்கப்பட வேண்டும்.*

Tuesday 6 March 2018

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...! விளைவு?

ஏ அறிவுள்ள அதிசய சமூகமே !

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? ஓவியாவுக்கு 2 கோடி சம்பள உயர்வு .!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !?  பிரியா வாரியார் க்கு 5 பட வாய்ப்புகள் ..!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? பாகுபலி இமாலய வசூல் ..!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? Big Boss நிகழ்ச்சி நிறுவனத்திற்கு பெரிய லாபம்..!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? விஜய் டிவி யின் இமாலய வளர்ச்சி ..!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? அர்த்தமில்லா பாடலும் ஆச்சர்யமாகின ...!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? நடிகர்களின் நிகழ்ச்சிகளை நாடெங்கும் காண செய்தாய் ..!

நீ உன் பொன்னான நேரத்தை செலவிட்டாய் ...!
விளைவு !? கிரிக்கெட் வீரர்கள் உலக கோடீஸ்வரர் ஆனார்கள்...!

நீ உன் பொன்னான நேரத்தை செல்லாவிட்டாய் ...!
விளைவு !? நடிகனின் சொத்தை  4 தலைமுறைக்கு உயர்தினாய்...!

இவற்றுக்கெல்லாம்  உன் பொன்னான நேரத்தை செல்லாவிட்டாய் ...!
நீ என்ன பலன் கண்டாய் ??
நீ என்ன கிடைக்க பெற்றாய் ..!

அவர்களின் தரம் உயர்ந்தது உன் தரம் உயர்ந்ததா .!

அவர்களின்  பொன்னான நேரத்தை உனக்காக செலவிட்டார்களா  ...!
அதை ஏன் நீ யோசிக்காமல் விட்டாய்..!

நீ உன் பொன்னான நேரத்தை உனக்கு எப்படி செலவிட்டாய் ..!

உன் பொன்னான நேரத்தை உன் உரிமைக்காக ஏன் செலவிடாமல் விட்டாய் ..????

உன்னால் உயர்ந்தவர்களால் உன்னை உயர்த்த முடியுமா ??

உன்னை யோசிக்கத்தான் அவர்களுக்கு நேரம் உண்டா !!??

ஒரு உண்மையை வெளிக்கொண்டுவர ஏன் நீ உன் பொன்னான நேரத்தை செலவிட மறுத்தாய் ?? மறந்தாய் ??

உரிமைக்காக ஒன்று சேர நீ உன் பொன்னான நேரத்தை செலவிட மறுத்தாய் ?? மறந்தாய் .??

உன் அடுத்த தலைமுறையை மறந்தாய் ??

வேறென்ன நீ உன்னையே மறந்தாய் ....

ஒரு சிறுமியின் கதறலை நாடெங்கும் காதில் விழ ஏன் உன் நேரத்தை செலவிட மறந்தாய் ..?

பொய்களை தகர்க்க குரல் கொடுக்க ஏன் உன் நேரத்தை செலவிட மறந்தாய் ..?

கொலைகளை தடுக்க ஏன் உன் நேரத்தை செலவிட மறந்தாய் .??

நாளை உனக்கு நடந்தால் என்ன செய்வாய் ?

இவண்,
அற்புத சமூகத்தின் அறிவற்ற பிறவி.

கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில்...

இதுவல்லவோ தாம்பத்தியம் !!

கணவன் - மனைவியாக அறுபது ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில், அவர்களினிடையே ஒரு ஒளிவு, மறைவு இருந்தது கிடையாது. ஆனாலும், மனைவி, கணவனிடம் ஒரே ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தாள். அதாவது, அவள் பரண் மீது வைத்திருந்த ஒரு அட்டைப் பெட்டியில் அவள் என்ன வைத்திருக்கிறாள் என்பதைக் கணவன் பார்க்கவும் கூடாது, அதைப் பற்றி ஏதும் கேட்கவும் கூடாது. கணவனும் அதை மதித்து ஒன்றும் கேட்டிலன்.

மரணப் படுக்கையில் மனைவி கிடக்கும்போது, கணவனிடம் சொல்லுகிறாள்: "உங்களிடம் அனைத்தையும் சொல்லிவிட விரும்புகிறேன். அந்தப் பரண் மீது நான் வைத்திருக்கும் அட்டைப் பெட்டியை தயவுசெய்து எடுத்து வாருங்கள்".

அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்குமாறு கணவனிடம் சொல்லுகிறாள். கணவன் திறந்து பார்க்கிறான். உள்ளே, அவள் கையால் உல்லன் நூலால் பின்னிய இரண்டு பொம்மைகளும், ஒரு லட்ச ரூபாயும் இருக்கின்றன. அதன் விவரம் என்னவென்று கணவன் கேட்கிறான்.

மனைவி விளக்கினாள்: "நான் உங்களைத் திருமணம் செய்துகொண்டு வரும்போது, என்னுடைய பாட்டி எனக்கு ஒரு அறிவுரை சொன்னாள். நல்ல மகிழ்வான திருமண வாழ்க்கை வாழ்வதற்கு, நான் எதற்காகவும் உங்களிடம் எந்த ஒரு விவாதத்தையும் தவிர்க்க வேண்டும் என்றாள். அந்தத் தருணங்களில் எனக்குக் கோபம் வந்தால், அதனை அடக்க, உல்லன் நூலையெடுத்து பொம்மை வடிக்கச் சொன்னாள். அதையே நான் கடைப்பிடித்து வந்தேன்".

மகிழ்ந்து போனான் கணவன். 'இரண்டே இரண்டு பொம்மைகள் மட்டுமே! அப்படியானால், அறுபது ஆண்டு மண வாழ்வில், மனைவி இரண்டு முறைகள் மட்டுமே கோபப்படும்படி நான் நடந்திருக்கிறேன்!'

"அது சரி, இந்த ஒரு லட்ச ரூபாயைப் பற்றியும் கொஞ்சம் விளக்கிச் சொல்லுவாயா?" கணவன் கேட்டான்.

மனைவி சொன்னாள்: "ஓ, அதுவா? அது, நான் செய்த மற்ற பொம்மைகள் அனைத்தையும் விற்று வந்தப் பணம்

(y)
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்...
.

Unhappy womens day | Mamiyar marumagal sandai? | Mother in law daughter ...

#203 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1009 அன்பொரீஇத் தற்செற்று | Daily o...

நிலவில் முதன் முதலில்கால் எடுத்து வைக்கிறோம்...

ஒரு குட்டிக்கதை.

 விலகி நிற்பவர்கள்
         வெல்லுவதில்லை
              வெல்ல நினைப்பவர்கள்     
                      விலகுவதில்லை:
நீல் ஆம்ஸ்ட்ராங்...

இவர் தான் நிலவில்
         முதன் முதலில் கால் வைத்தவர்...
ஆனால்,
     முதன் முதலில் வைத்திருக்க
              வேண்டியவர் யார் தெரியுமா?...
பல பேருக்கு தெரியாது...

அவர், எட்வின் சி ஆல்ட்ரின்...

இவர் தான்
    நிலவுக்கு சென்ற
       அப்பல்லோ விண்கலத்தின் பைலட்... அதாவது விமானி...

ஆல்ட்ரின் அமெரிக்காவின் விமானப் படையில் பணிபுரிந்தவர்.
மேலும் விண் நடை அனுபவம் உள்ளவர்.
அதனால் அவர் பைலட்டாக
நியமிக்கப்பட்டார்...

நீல் ஆம்ஸ்ட்ராங்க்
    அமெரிக்காவின் கப்பல் படையில் வேலைபார்த்தவர்.
     மிகுந்த தைரியசாலி என்பதால்தான் இந்த பயணத்திற்கு தேர்ந்தெடுக்கப்
பட்டார்...
அவர் கோ-பைலட் அதாவது
                         இணை விமானி...
இவர்கள் சென்ற
     அப்பல்லோ விண்கலம் நிலவை அடைந்ததும் நாசாவிலிருந்து,
     "பைலட் பர்ஸ்ட்"... என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஆனால்,
   ஆல்ட்ரினுக்கோ மனதில் சின்ன தயக்கம்.
இடது காலை எடுத்து வைப்பதா?... வலது காலை எடுத்து வைப்பதா?
என்றல்ல...

"‘நிலவில் முதன்
   முதலில்கால் எடுத்து வைக்கிறோம்.
புவியீர்ப்பு விசையற்ற இடத்தில் இருக்கிறோம்.
கால் வைக்கும் இடம் எப்படி இருக்கும் என்று தெரியாது.
புதை மணலாக இருந்து உள்ளே இழுத்துவிட்டால்,
 எரி மணலாக இருந்து காலை சுட்டுவிட்டால்’"...

தயக்கத்தில் மணிக்கணக்காக
    தாமதிக்கவில்லை...
        சில நொடிகள்தான்
                தாமதித்திருப்பார்...
அதற்குள் நாசாவில்
      இருந்து இரண்டாவது கட்டளை பிறப்பிக்கப்பட்டது,
       "கோ-பைலட் நெக்ஸ்ட்..."

நீல் ஆம்ஸ்ட்ராங்
        கட்டளை வந்த அடுத்த நொடி காலடி எடுத்துவைத்தார்...

உலக வரலாறு ஆனார்...
உலக வரலாறு,
     ஒரு நொடி தயக்கத்தில்
            மாற்றி எழுதப்பட்டது...
திறமையும்
      தகுதியும் இருந்தும்கூட தயக்கத்தின்
காரணமாக தாமதித்ததால்
      இன்று ஆல்ட்ரினை
            யாருக்கும் தெரியவில்லை.
முதலாவது வருபவரைத்தான்
     இந்த உலகம் நினைவில்
              வைத்திருக்கும்
என்பது மட்டுமல்ல...
    தயக்கம்,
        பயம் இவை எந்த அளவுக்கு
           நம் வெற்றியை பாதிக்கும்
             என்பதற்கு இதுவே உதாரணம்...
இனி நிலவை
     பார்க்கும்போதெல்லாம்
       இந்தச் சம்பவத்தை நினைவில்
             வைத்துக் கொள்ளுங்கள்...
ஒரு நிமிடத் தயக்கம்
    நம்முடைய மிகப் பெரிய
       வெற்றிகளைத் தடுத்துவிடுகிறது...
நாம் எல்லோருமே
     மிகப்பெரும் சாதனைகளை
         படைக்கிற வல்லமை
               உடையவர்கள்தான். நம்முடைய தயக்கம்,
      பயம்,
          கூச்சம் இவைதான்
                     நம் முதல் எதிரி...
பலருக்கு தன்னுடைய
        தவறுகளை கலைவதில் தயக்கம்...
தவறுகளை
                 தட்டிக் கேட்க தயக்கம்...
அடுத்தவர்களை
                     பாராட்டுவதில் தயக்கம்...
ஏன்,
      சிலருக்கு இந்த தகவலை
           நண்பர்களுக்கு பகிர கூட தயக்கம்...
சரியானதை
        செய்ய தயங்கினால்,
            தவறானதை தான் செய்து
                             கொண்டிருப்போம்...
எனவே,
           நல்ல விஷயங்களில்...
                   தயக்கத்தை தவிர்ப்போம்..

*                 *                   *                   *

Sunday 4 March 2018

#201 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 606 படியுடையார் பற்றமைந்தக் | Daily...

பூண்டை வாயில் வைத்திருந்தால்...

பூண்டை வாயில் வைத்திருந்தால் 30 நிமிடத்தில் கிடைக்கும் பலன்கள்!

பூண்டு மருத்துவ குணம் உள்ளதோடு, உடலை சுத்தப்படுத்த உதவும் முக்கிய பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். சிலருக்கு இந்த பூண்டை சாப்பிடுவது பிடிக்காது. இருப்பினும் ஒரு பல் பூண்டை, வாயில் 30 நிமிடம் வைப்பதனால் உடலில் பல அதிசயம் நடக்கும் என்கிறார்கள். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* பூண்டை சாப்பிடாமலேயே அதன் மருத்துவ குணங்களை பெற முடியும். இதை காலையில் எழுந்ததும், முதல் வேலையாக செய்யுங்கள். ஒரு பல் பூண்டினை வாயில் போட்டுக்கொண்டு, கன்னப்பகுதியில் அடக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கன்னப்பகுதியிலிருந்து மற்றொரு கன்னப்பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்படி பூண்டை 30 நிமிடங்கள் வாயில் வைத்திருப்பது அவசியம். இந்த முறையை 10 – 15 நாட்கள் பின்பற்றினால் பூண்டின் மிகச்சிறந்த மருத்துவ பயனைப் பெறலாம்.
இப்படி செய்வதால் உடலின் நினநீர் மண்டலம், உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சுத்தம் செய்து ஆரோக்கியமானதாக வைக்கிறது. வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவுகிறது. 30 நிமிடங்களுக்கு பின்னர், வாயில் உள்ள பூண்டை துப்பிவிடுங்கள்.
பற்களை நன்றாக கழுவிவிட்டு, சிறிது புதினா இலைகளை வாயில் போட்டுக் கொள்ளலாம். இதனால் வாயில் பூண்டின் வாசனை இல்லாமல் போக்கி விடலாம்.
இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பசியின்மையை போக்குகிறது.
சுவாசப்பிரச்னை தீரும். ரத்த சோகை போக்கும்.
மேலும், சிறுநீரகத்தையும், சிறுநீரக பாதையும் பாதுகாத்து, சிறுநீரக கல் வராமல் பாதுகாக்கின்றது.
வரட்டு இருமலை குணப்படுத்தும்.
மழைக்காலங்களில் வரும் இருமல், பாக்டீரியா காய்ச்சல் வராமல் காக்கிறது என்கிறார்கள். இதனை நாம் வேலைப்பார்த்துக் கொண்டே கூட செய்யலாம

Thursday 1 March 2018

அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்...

அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.

“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”

பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள்.

“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”

எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?

எனக்கு ஒன்றும் புரியவில்லை!

“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.

“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”

“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”

“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”

“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”

“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்தத அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்.

#300 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

#198 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 456 மனந்தூயார்க் கெச்சம்நன் | Daily...

எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்"ன்னு பேங்க்'லருந்து...

"எவரிடமும் ATM PIN கொடுத்து ஏமாறாதீர்கள்"ன்னு பேங்க்'லருந்து SMS அனுப்பிருக்கான்..

அதெல்லாம் நாங்க பார்த்துக்குறோம்..
நீ எவனுக்கும் கடன் குடுத்து ஏமாந்திடாதனு reply பண்ணிடன்பா...