flipkart discount sale search here.

Thursday 28 June 2018

#317 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 756 உறுபொருளும் உல்கு | Daily one t...

பனையோலை விசிறி எங்கே...?

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*

பனையோலை விசிறி
எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மொரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல்துலக்க ஆலங்குச்சி
எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம்பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள்
எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி
எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

குரங்கு பெடல் எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்கள் எங்கே ?

தாய்ப்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள்பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பை
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீர்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழுஆயுள் நமக்கு
எங்கே?

*"சிந்திக்க நமக்கு"*
*"நேரம்தான்எங்கே?"*
*எங்கே???"*

*"இத்தனையும் தொலைத்துவிட்டு"*
 *"நாம் செல்கின்றஅவசரப்பயணம் தான்"* *எங்கே?"* 25 வருடங்களுக்கு முன்
.
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் 'பொங்கல்' 'தீபாவளி' க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!
"நாகரீகப் போா்வை" போா்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
மீட்க முடியாது...!

படித்ததில் பிடித்தது.

🌞🌞
😭😭😭😭😭

Friday 22 June 2018

நோய்கள் உருவாகும் இடங்கள் !

நோய்கள் உருவாகும் இடங்கள் !
-------------------------------------------
நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.

இதோ

1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்

2 - டீ

3 - காபி

4 - வெள்ளை சர்க்கரை

5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.

6 - பாக்கெட் பால்.

7 - பாக்கெட் தயிர்

8 - பாட்டில் நெய்

9 - சீமை மாட்டு பால்

10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.

11 - பொடி உப்பு

12 - ஐயோடின் உப்பு

13 - அனைத்து ரீபையின்டு ஆயில்

14 - பிராய்லர் கோழி

15 - பிராய்லர் கோழி முட்டை

16 - பட்டை தீட்டிய அரிசி

17 - குக்கர் சோறு

18 - பில்டர் தண்ணீர்

19 - கொதிக்க வைத்த தண்ணீர்

20 - மினரல் வாட்டர்

21 - RO தண்ணீர்

22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்

23 - Non Stick பாத்திரங்கள்

24 - மைக்ரோ ஓவன் அடுப்பு

25 - மின் அடுப்பு

26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்

27 - சோப்பு

28 - ஷாம்பு

29 - பற்பசை

30 - Foam படுக்கை மற்றும் இருக்கை

31 - குளிர்பானங்கள்

32 - ஜஸ் கீரீம்கள்

33 - அனைத்து மைதா பொருட்கள்

34 - பேக்கரி பொருட்கள்

35 - சாக்லேட்

36 - Branded மசாலா பொருட்கள்

37 - இரசாயன கொசு விரட்டி

38 - Ac

39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.

40 - பிஸ்கட்டுகள்

41 - பன்னாட்டு சிப்ஸ்

42 - புகைப்பழக்கம்

43 - மதுப்பழக்கம்

44 - சுடு நீரில் குளிப்பது

45 - தலைக்கு டை

46 - துரித உணவுகள்

47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்

48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.

49 - ஆங்கில மருந்துகள்

50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்

51 - உடல் உழைப்பு இல்லாமை

52 - பசிக்காமல் உண்பது

53 - அவசரமாக உண்பது

54 - மெல்லாமல் உண்பது

55 - இடையில் தண்ணீர் குடிப்பது

56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.

57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்

58 - அறியாமை

59 - சுற்றுச்சூழல் மாசுபாடு

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்

நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது

மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.

உயிர் பிழைக்க ஒரே வழி

இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.

குணமாகும் இடங்கள் !
---------------------------------------------
நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.

இதோ

1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.

2 - மூலிகை தேனீர்

3 - சுக்கு மல்லி காபி

4 - பனங்கருப்பட்டி

5 - பனங்கற்கண்டு

6 - வெல்லம்

7 - கரும்பு சர்க்கரை

8 - இதில் செய்த இனிப்புகள்

9 - நாட்டு பசும் பால்

10 - நாட்டு பசு தயிர்

11 - நாட்டு பசு நெய்

12 - நாட்டு பசும்பால் பொருட்கள்

13 - இந்துப்பு

14 - கல் உப்பு

15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்

16 - நாட்டு கோழி

17 - நாட்டு கோழி முட்டை

18 - பட்டை தீட்டப்படாத அரிசி

19 - வடித்த சோறு

20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்

21 - பச்சை தண்ணீர்

22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்

23 - மழை நீர்

24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்

25 - இரும்பு பாத்திரங்கள்

26 - விறகு அடுப்பு

27 - பயோ கேஸ் அடுப்பு

28 - சத்துமாவு கலவை

29 - குளியல் பொடி

30 - சிகைக்காய் பொடி

31 - இயற்கை பற்பொடி

32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை

33 - கோரைப்பாய்

34 - பழச்சாறுகள்

35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்

36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்

37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்

38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்

39 - இயற்கை கொசு விரட்டி

40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்

41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு

42 - நம் நாட்டு சிப்ஸ்கள்

43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்

44 - குளிர்ந்த நீரில் குளிப்பது

45 - இயற்கை ஹேர் டை

46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்

47 - மண் பானை குளிரூட்டி

48 - பச்சை கொட்டை பாக்கு

49 - மரபு மருத்துவங்கள்

50 - உடல் உழைப்பு

51 - பசித்து உண்பது

52 - மெதுவாக சுவைத்து உண்பது

53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது

54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்

55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது

56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்

57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்

58 - புத்திகூர்மை

59 - சுற்றுச்சூழல் தூய்மை

60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி

நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது

*உங்களின் உணவுமுறைகளும் வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
- மிக்ஸி வந்தது;

ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
- கிரைண்டர் வந்தது;

உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
- குக்கர் வந்தது;

விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
- கேஸ் அடுப்பு வந்தது;

வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
- மசாலா பொடி வந்தது;

பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
- பிரிட்ஜ் வந்தது;

மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
- வீடியோ கேம் வந்தது;

பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
- டி.வி. வந்தது;

இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???

படித்து பகிர வேண்டிய தகவல்.....

அனைவருக்கும் பகிருங்கள்!

Thursday 21 June 2018

#310 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 345 மற்றும் தொடர்ப்பாடு | Daily one...

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!

🐐 🐐 🐐 🐐 🐐 🐐

கடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்
நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ
50 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு கழுதை சொன்னது*

நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...!

கடவுள்
கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐕 🐕 🐕 🐕 🐕 🐕

அடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு நாய் கூறியது :*

கடவுளே ! 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு
15 வருஷம் போதும்...!

கடவுள்
நாயின் ஆசையை நிறைவேற்றினார்...!

🐒 🐒 🐒 🐒 🐒 🐒

அடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...!

நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.
நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...!

*இதற்கு குரங்கு கூறியது :*

20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...!

கடவுளும்
குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்...!

👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼 👴🏼

கடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...!

*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*
*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*
*20 வருடங்களுக்கு வாழ்வாய்...!*

*இதற்கு மனிதன் கூறினான் :*

20 வருஷம் ரொம்ப குறைவு...!
*கழுதை* வேண்டாம் என்ற
30 வருடங்களையும்
*நாய்* வேண்டாம் என்ற
15 வருடங்களையும்
*குரங்கு* வேண்டாம் என்ற
10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...!

கடவுள்
மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்...!

அன்று முதல்
மனிதன் முதல்
*20 வருடங்களை*
ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக...!

கல்யாணம் செய்து கொண்டு அடுத்த
*30 வருடங்களை*
*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...!

குழந்தைகள்
வளர்ந்தபிறகு அடுத்த
*15 வருடங்களுக்கு*
அவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.
மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...!

வயதாகி, Retire ஆன
பிறகு *குரங்கு* போல்
*10 வருடங்களுக்கு*
மகன் வீட்டிலிருந்து
மகள் வீட்டிற்கும்,
மகள் வீட்டிலிருந்து
மகன் வீட்டிற்கும் தாவி
பேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...!

*மனித வாழ்க்கையின் உண்மை...!*

🤠 🤠 🤠 🤠 🤠 🤠

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம்,

சென்னை சென்னை சென்னை

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின்  இணைவு தான். அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்ளுங்கள்

Ø  108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர் ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

Ø  Armed Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி (AVADI)

Ø  1912ம் ஆண்டில் 25 ஏக்கர் பரப்பளவில் ஒரு ஆங்கிலேயரால்  Chrome Leather Factory என்ற ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையை தொடங்கியதால் அப்பகுதிக்கு குரோம்பேட்டை என்ற பெயர் உருவானது

Ø   17,18 ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் கட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக
இது விளங்கியதால், கோடா பக் (பொருள் - Garden of horses) என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கம் ஆக மாறியது.

Ø  தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டை ஆக மாறிப்போனது.

Ø  சையத்ஷா என்ற இஸ்லாமிய முக்கிய  பிரமுகர் வைத்திருந்த நிலப்பகுதியின் அடிப்படையில், சையத்ஷாபேட்டை என்றிருந்த பெயர், சைதாப்பேட்டை என்றாகியது.


Ø  உருது வார்த்தையான சே பேக் (பொருள்- Six gardens) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்

Ø  சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்

Ø  கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

Ø  சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலம் ஆகி விட்டது.

Ø  பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

Ø  சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

Ø  நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தி.நகர் (தியாகராய நகர்) என அழைக்கபடுகிறது

Ø  கடற்கரைப்பகுதியான இங்கு புரசை மரங்கள் அதிகமாக இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

Ø  அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று
காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டுவந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும்
அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லி யாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

Ø   17 ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

Ø  முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

Ø  மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

Ø  பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

Ø  சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

Ø  திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

Ø  பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் (கேணி) நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணி யாகி, தற்போது Triplicane என மாற்றம் கண்டுள்ளது

☘☘☘☘☘☘☘☘☘☘

Useful information

*Useful information* 1. *PAN* Permanent Account Number. 2. *PDF* Portable Document format. 3. *SIM* Subscriber Identity Module. 4. *ATM* Automated Teller Machine. 5. *IFSC* Indian Financial System Code. 6. *FSSAI(Fssai)* Food Safety & Standards Authority of India. 7. *Wi-Fi* Wireless Fidelity. 8. *GOOGLE* Global Organization Of Oriented Group Language Of Earth. 9. *YAHOO* Yet Another Hierarchical Officious Oracle. 10. *WINDOW* Wide Interactive Network Development for Office work Solution. 11. *COMPUTER* Common Oriented Machine. Particularly United and used under Technical and Educational Research. 12. *VIRUS* Vital Information Resources Under Siege. 13. *UMTS* Universal Mobile Telecommunicati ons System. 14. *AMOLED* Active-Matrix Organic Light- Emitting diode. 15. *OLED* Organic Light-Emitting diode. 16. *IMEI* International Mobile Equipment Identity. 17. *ESN* Electronic Serial Number. 18. *UPS* Uninterruptible Power Supply. 19. *HDMI* High-Definition Multimedia Interface. 20. *VPN* Virtual Private Network. 21. *APN* Access Point Name. 22. *LED* Light Emitting Diode. 23. *DLNA* Digital Living Network Alliance. 24. *RAM* Random Access Memory. 25. *ROM* Read only memory. 26. *VGA* Video Graphics Array. 27. *QVGA* Quarter Video Graphics Array. 28. *WVGA* Wide video Graphics Array. 29. *WXGA* Widescreen Extended Graphics Array. 30. *USB* Universal Serial Bus. 31. *WLAN* Wireless Local Area Network. 32. *PPI* Pixels Per Inch. 33. *LCD* Liquid Crystal Display. 34. *HSDPA* High Speed Down link Aacket Access. 35. *HSUPA* High-Speed Uplink Packet Access. 36. *HSPA* High Speed Packet Access. 37. *GPRS* General Packet Radio Service. 38. *EDGE* Enhanced Data Rates for Globa Evolution. 39. *NFC* Near Field Communication. 40. *OTG* On-The-Go. 41. *S-LCD* Super Liquid Crystal Display. 42. *O.S* Operating System. 43. *SNS* Social Network Service. 44. *H.S* HOTSPOT. 45. *P.O.I* Point Of Interest. 46. *GPS* Global Positioning System. 47. *DVD* Digital Video Disk. 48. *DTP* Desk Top Publishing. 49. *DNSE* Digital Natural Sound Engine. 50. *OVI* Ohio Video Intranet. 51. *CDMA* Code Division Multiple Access. 52. *WCDMA* Wide-band Code Division Multiple Access. 53. *GSM* Global System for Mobile Communications. 54. *DIVX* Digital Internet Video Access. 55. *APK* Authenticated Public Key. 56. *J2ME* Java 2 Micro Edition. 57. *SIS* Installation Source. 58. *DELL* Digital Electronic Link Library. 59. *ACER* Acquisition Collaboration Experimentation Reflection. 60. *RSS* Really Simple Syndication. 61. *TFT* Thin Film Transistor. 62. *AMR* Adaptive Multi-Rate. 63. *MPEG* Moving Pictures Experts Group. 64. *IVRS* Interactive Voice Response System. 65. *HP* Hewlett Packard. *Do we know actual full form* *of some words???* 66. *NEWS PAPER =* North East West South Past and Present Events Report. 67. *CHESS =* Chariot, Horse, Elephant, Soldiers. 68. *COLD =* Chronic, Obstructive, Lung, Disease. 69. *JOKE =* Joy of Kids Entertainment. 70. *AIM =* Ambition in Mind 71. *DATE =* Day and Time Evolution. 72. *EAT =* Energy and Taste. 73. *TEA =* Taste and Energy Admitted. 74. *PEN =* Power Enriched in Nib. 75. *SMILE =* Sweet Memories in Lips Expression. 76. *ETC. =* End of Thinking Capacity. 77. *OK =* Objection Killed. 78. *Or =* Orl Korec (Greek Word) 79. *Bye =* Be with You Everytime. *share* *These meanings* *as majority of us don't know*

Saturday 16 June 2018

#305 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 74 அன்புஈனும் ஆர்வம் | Daily one th...

ஆசிரியர் : பசங்களா..! இன்னைகி கணக்கு பாடம்..1 2 3 சொல்லிதரபோறேன்.

ஆசிரியர் : பசங்களா..! இன்னைகி கணக்கு பாடம்..1 2 3 சொல்லிதரபோறேன்.

சிறுவன் : எனக்கு தெரியும் சார்.. எங்கப்பா சொல்லி குடுத்திருக்காரு...!

 அப்படியா..! வெரிகுட். 3 க்கு அப்பறம் என்ன வரும் சொல்லு..!?

4 வரும் சார்.

8 க்கு முன்ன என்ன வரும்...?
7 சார்.. எங்கப்பா சொல்லியிருக்கார்..

அடேங்கப்பா ..! எல்லா அப்பாவும் இப்படி இருந்துட்டா எங்களுக்கு ஈசியா இருக்கும்.. எங்க..பத்துக்கு மேல சொல்லு பார்ப்போம்..!?😱😃😃😃

ஜாக்.. குயின்.. கிங்.. ஜோக்கர்.. 😊😊😊😊

ஆசிரியர்: 😨😰😰😠😠

Friday 8 June 2018

தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி?

*தொலைந்து போன டிரைவிங் லைசென்ஸ் போலிஸ் ஸ்டேஷன் போகாமல் பெறுவது எப்படி?*

ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், அதன் நகலைப் பெற தமிழக அரசு புதிய வசதியை தொடங்கியுள்ளது. இதற்கான உத்தரவை போக்குவரத்து ஆணையர் பிறப்பித்துள்ளார். இதன்படி ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால், அதை மீண்டும் பெற எப்ஐஆர் பெறத் தேவையில்லை.

வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கையில் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் கவனக் குறைவால் ஓட்டுநர் உரிமம் தொலைந்து போனால் என்ன செய்வது என்ற அச்சம் வாகன ஓட்டிகளிடையே உள்ளது.

பொதுவாக ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால், சம்பந்தப்பட்ட நபர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அந்தப் புகார் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவருக்கு புகார் மனு ஏற்பு சான்றிதழ் அளிக்கப்படும். இதற்கே 15 முதல் 20 நாட்கள் வரை காலதாமதம் ஏற்படும். அதன்பிறகே, அவர் சம்பந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மீண்டும் புதியதாக பதிவு செய்ய முடியும்.

இதன்பிறகு ஆர்டிஓ அந்த ஆவணத்தை சரிபார்த்து ஓட்டுநர் உரிமத்தை வழங்குவார். இதுபோன்ற பணிகளை மேற்கொள்ள இடைத்தரகர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், தொலைந்து போன ஓட்டுநர் உரிமத்தை பெறும் முறையை எளிமைப்படுத்தி போக்குவரத்து ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தொலைந்துபோன ஓட்டுநர் உரிமத்துக்கு பதிலாக டூப்ளிகெட் உரிமம் பெற www.eservices.tnpolice.gov.in என்ற இணையதளத்தில் தொலைந்துபோன ஆவண அறிக்கை (Lost Document Report) என்ற பிரிவில் சென்று பதிவு செய்து, தாங்களே பிரிண்ட் எடுத்துக் கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

இதனால் வீண் அலைச்சலைத் தடுக்க முடியும். இடைத்தரகர்கள் பணம் பெறுவதையும் தடுக்க முடியும். வாகனப் பதிவு சான்று தொலைந்து போனாலும் இதே முறையை பின்பற்றி வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையை அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் பின்பற்ற வேண்டுமென போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

கணவன் மனைவி உறவு மேம்பட....

😕🙁☹

கணவன் மனைவி உறவு மேம்பட....

மனைவி பேசும்போது முழுக்கவனம் கொடுங்கள்!
செல்போனைப் பார்த்துக் கொண்டே பேசாதீர்கள்.
செல்போனைத் தூர வையுங்கள்.
தொலைக்காட்சியை அணைத்து விடுங்கள்.
கண்களைக் கவனியுங்கள்.
குறுக்கே பேசாதீர்கள்.
நீங்கள் கவனிக்கிறீர்கள்
 என்பதற்கு அடையாளமாகத்
 தலையை ஆட்டுங்கள்.
ம்ம் கொட்டலாம்.
வேறு எங்கோ பராக்கு பார்ப்பது,
அலட்சியமாக இருப்பது போன்றவற்றைத் தவிர்க்கவும்.
நீ பேசுவது முக்கியம் எனப்புரிய வைக்கவும்.

*மனைவி சென்றவுடன் காதிலிருந்து பஞ்சை வெளியே எடுக்கவும்*.
😀😆🤣😜

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

நாகரிகமாக இருப்பதாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை முழுமையாக.. படியுங்கள்..!!

மகள் தான் புதியதாக வாங்கிய..
I phone-ஐ..தனது தந்தையிடம் காட்டுவதற்காக.. வருகிறாள்..!!

அவள் அந்த phone-ற்கு.. வெளியுறையும் (cover) Screen Cord-ம்
கூட வங்கி போட்டுள்ளார்..!!

தந்தை:- இந்த போன் எவ்ளோ மா..??

மகள்-: Rs-40,000 அப்பா..!!

தந்தை-: இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை..??

மகள்:- Rs-4,000 தான் அப்பா..!!

தந்தை:- என்னது நாலாயிரமா..??

மகள்:- ஆமாம் அப்பா 40,000 க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4,000 செலவு பண்றதுல.. என்ன இருக்கு..? இதெல்லாம் ஒரு பிரச்சனையா..??

தந்தை:- ஏம்மா 40,000 போன் வாங்கியிருக்க.. அதை பத்திரமா இருக்க.. அதை தயாரித்தவர்கள்.. எந்த பாதுகாப்பும் செய்யாமலேயேவா.. வித்தார்கள்..??

மகள்:- என்னப்பா.. அவங்க போன் தயாரித்து தான் கொடுப்பாங்க.. அதை நாம தான் பத்திரமா வச்சிக்கனும்.. அது மட்டும் இல்லை.. பாருங்க இந்த கவர் போட்டதும்.. போன் இன்னும் எவ்ளோ அழகா இருக்கு..?? இந்த ஸ்கிரீன் கார்டு.. போன்'ல.. கீரல் விழாம பாதுகாக்கும் அப்பா..!!

அப்பா:- அப்படியா..?? ஏம்மா நீ இந்த போனை விட.. எவ்வளவு அழகா இருக்க.. ? இந்த போனை பாதுகாக்கிறியே.. உன்னை ஏன்மா பாதுகாத்துக்க மாட்ற..?
நான் உன் உடலை மறைக்குமாறு.. உடை அணிய சொல்லிக்கிட்டே இருக்கேன்.. நீ காது கொடுத்து கேக்கவே மாட்ற..
இந்த போனை விட நீ.. மதிப்பு இல்லாதவளா..? இது உனக்கு தெரியவில்லையா..?
நீ முழுமையாக உடை அணிந்தால் இன்னும் எவ்வளவு அழகா இருப்ப..?
அது தீய பார்வைகள் உன்னை தீண்டாமல் பாதுகாக்கும்.. அல்லவா..??
யாரோ ஒருவர் தயாரிப்பிற்கே.. நீ இவ்வளவு பாதுகாப்பு தர நினைக்கும் போது.. எல்லாம் வல்ல இறைவன் படைத்த.. என் மகளான உன்னை நான் பாதுகாக்க வேண்டாமா..??
இந்த i phone-ஐ விட நீ தான் பொக்கிஷம்..!! முதலில் முழுமையாக உடை அணிந்து உன்னை நீ பாதுகாத்து கொள்..!!
என்று கூறினார் அப்பா..!!!

இந்த தந்தையின் அறிவுரை.. அவரது மகள் போன்ற உங்கள் அனைவருக்கும்.. தேவை எனவே.. தான் இதை இங்கு பதிவு செய்கிறேன்..!!
சகோதரர்களே.. உங்கள் சகோதரிகளுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லி புரிய வையுங்கள்..??
நன்றி..!!!
நாகரிகமாகத் திரிபவர்களாக நினைக்கும் பெண்கள் மட்டும் இதை மற்றவர்களுடன் பகிரமாட்டார்கள்.... இதை வாசித்த ஏனையவர்கள் கட்டாயம் பகிர்ந்து கொள்ளுங்கள்

பெட்ரோல் விலை ஏறினாலும் ஏன் விலைவாசி ஏறவில்லை?

பெட்ரோல் விலை ஏறினாலும் ஏன் விலைவாசி ஏறவில்லை? ஏன் பணவீக்கம் எகிறவில்லை? ஏன் மக்கள் பொங்கி எழவில்லை? ஏன் எதிரிகட்சிகள் போராட்டம் நடத்தவில்லை?

பொதுவாகவே பெட்ரோல் விலை ஏறினாலே உடனே விலைவாசி தாறுமாறாக ஏறும், மக்கள் கொந்தளிப்பார்கள், எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தும் என்பது தானே வாடிக்கை.

இப்போது பெட்ரோல், டீசல் விலை ஏறீக்கொண்டு தான் இருக்கிறது. பொதுமக்களூம் பேசவில்லை, எதிர்கட்சிகளும் பேசாமல் இருக்கின்றன, டிவிட்டரிலே ஏதோ முனகுவதோடு சரி.

இதையெல்லாம் விட பணவீக்கம் மிக குறைவாகவே இருக்கிறது. விலைவாசியும் ஏறவில்லை.

அப்படியென்றால் என்ன அர்த்தம்? இதுவரை பெட்ரோல் தான் எல்லாவற்றையும் இயக்கியது என்பது பொய்யா என கேட்டால் ஆமாம். இப்போது இருப்பது போல் தான் இருக்கவேண்டும். வளர்ந்த பணக்கார நாடுகளிலே இப்படித்தான் இருக்கும்.

அப்படீன்னா ஏன் முன்பு விலைவாசி ஏறியது, இப்போது ஏன் ஏறவில்லை இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்ன மாறீயது என கேட்டால் அதுக்கு பல காரணீகள் உண்டு. அது என்ன ஏதுன்னு பார்ப்போம்.

இதுக்கெல்லாம் ஜிஎஸ்டி மட்டுமே எனவும் சொல்லிவிட்டு போய்விடமுடியாது. அதுவும் ஒரு காரணம் என்றாலும் அதைவிட பெரிய காரணங்களும் உண்டு.

முதல் காரணம் ஏன் டீசல், பெட்ரோல் விலை ஏறினா பொருட்கள் விலை ஏறக்கூடாதுன்னு பார்ப்போம்.

ஒரு கிலோமீட்டருக்கு ஒரு டன்னுக்கு சுமாரா 30 ரூபாயிலே இருந்து 50 ரூபாய் ஆகும். சின்ன லாரி, கொஞ்ச தூரம்ன்னா கம்மியாத்தான் ஆகும் இருந்தாலும் குத்து மதிப்பா ஒரு டன்னுக்கு 50 ரூபான்னு வைச்சுக்குவோம். ஒரு லிட்டர் டீசலுக்கு மூனு கிலோ மிட்டர் மைலேஜ் தருதுன்னு வைச்சுக்குவோம்.

அப்போ ஒரு டீசல் விலை ஒரு ரூபா ஏறினா ஒரு கிலோ அரிசியோட விலை எவ்வளவு ஏறும்.

ஒரு கிலோ அரிசி விலை - ரூ 40 (இதுவும் ஒரு உதாரணத்துக்குத்தான்)
ஒரு டன் அரிசி - ரூ 40,000
ஒரு டன் அரிசி 1000 கிமீ கொண்டு வரும் செலவு : 50*1000 = 50,000
அதிலே டீசல் செலவு : (1000/3)*73 = 24333

குத்து மதிப்பா அதிக தூரத்திலே இருந்து கொண்டு வரும் செலவில் பாதி டீசலுக்கு போய்விடுகிறது.

இப்போ டீசல் ஒரு ரூபா ஏறினா என்னாகும்? (1000/3)*74 = 24666
முன்னாடி அரிசிவிலை 40 ரூவான்னா இந்த 333 ரூவா ஏறினது கிலோவுக்கு எவ்வளவு ஏறும்? 33 பைசா ஏறும். அதாவது 40 ரூவா இருந்தது 40.33 ரூவாயா ஆகும்.

40 பைசான்னு வைச்சுக்கிட்டா ஒரு ரூவா ஏறினா மொத்த விலையிலே ஒரு சதம் ஏறும் அப்படீன்னு கணிக்கலாம். நான் போட்ட கணக்குக்கு மட்டுமல்ல மத்தவிங்க போட்ட கணக்குக்கும் அப்படீத்தான் வருது. குறைந்த தூரங்களுக்கு இது பெரிய வித்தியாசத்தை கொண்டு வராது.

சரி அப்படீன்னா டீசல் விலை பத்து ரூவா ஏறினா வேண்ணா பொருட்கள் விலை ஏறலாம். அதுவும் கொஞ்சம் தான் ஏறும். இல்லையா?

முன்னாடி ஏறினதுக்கான காரணங்கள் என்னன்னா முதல் காரணம் பெட்ரோல், டீசலை வண்டி ஓட்ட பயன்படுத்தாம மிச்ச எல்லாத்துக்கும் பயன்படுத்தினது.

மின்சாரம் தடைபட்டதாலும் அப்படியே இருந்தாலும் தொழிற்சாலைகளுக்கான மின்சாரமாக இல்லாததாலும் கடைகள், வியாபார நிறுவனங்கள், சிறு குறு தொழிற்சாலைகள் எல்லாம் டீசலை கொண்டு ஜெனரேட்டர் ஓட்டியே தொழிலை நடத்த வேண்டியிருந்தது.

டீசலை வச்சு ஓட்டினா 4 மடங்கு செலவாகும். சதவீதத்திலே சொன்னா 400 சதவீதம். அதாவது ஒரு ரூபாய்க்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருள் டீசலை வைச்சு செஞ்சா 4 ரூபாய் ஆகும். ஏன்னா ஜெனரடேட்டர் அப்படி ஒன்னு உற்பத்தி திறன் மிக்கது அல்லது.

மின்சாரம் தயாரிக்க நிலக்கரி இல்லாட்டி அணு மின்சாரம் போறது தான் சிறந்தது. அதுவும் நிலக்கரியிலே அதிகளவு மின்சாரத்தை தயாரிக்க சூப்பர் கிரிட்டிகல், அல்ட்ரா கிரிட்டிகல் என உற்பத்தி திறன் மிக்க மின்நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரிச்சத்தான் காசு மிச்சமாகும். அதை விட்டுட்டு டீசலை ஊத்தி கடை நடத்தினா விலை ஏறத்தான் செய்யும்.

உணவகங்களிலெ இருந்து வீடு வரை மின்சாரம் இருந்தால் உணவுபொருட்களூம் வீணாகாது.

டீசல் ஜெனரேட்டர் வைச்சிருந்தா டீசல் செலவு மட்டுமில்லாம அதை வாங்கின செலவு, பராமரிக்கும் செலவுன்னு எத்தனை இருக்கு.

இதிலே தான் மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடனே நிலக்கரி தோண்டி எடுப்பதை அதிகரித்தது, மின்சாரத்தை கொண்டு போக அதிக அளவு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியது கூடவே புதிய திட்டங்களை உடனடியாக செயல்படுத்தியது.

விளைவு நாடெங்கும் தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. இந்தியா உலகின் மூன்றாவது மின்சார உற்பத்தி நாடாக வளர்ந்திருக்கிறது. மோடி ஆட்சிக்கு முன்பு பத்தாவது இடத்திற்கும் கீழே இருந்த நம் நாடு இப்போது சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தாக இருக்கிறது.

குறைவான உற்பத்தி செலவாகுவதும் நம் நாட்டிலேயே கிடைப்பதுமான நிலக்கரியிலே மின்சாரம் எடுத்துபயன்படுத்தினால் விலை குறையுமா? வெளிநாட்டிலே இருந்து இறக்குமதியாகும் டீசலிலே மின்சாரம் தயாரித்தால் விலைகுறையுமா?

பாக்கிஸ்தான் செஞ்சது, பர்னஸ் ஆயில் என்படும் பெட்ரோலிய பொருளிலே மின்சாரம் உற்பத்தி செஞ்சு திவால் ஆகும் நிலையிலே இருக்கிறது.

அடுத்தது தரமான சாலைவசதிகள். நல்ல சாலைகள் இருந்தால் சரக்கு வண்டி செலவிலே பத்து சதவீதம் மிச்சமாகும் என்பது நீருபிக்கப்பட்டது. அதுவும் நகர நெரிசலிலே சிக்காமல் போனால் நேரமும் மிச்சமாகும் டீசல் செலவும் குறையும். ஒரு லிட்டருக்கு ஒரு சதம் ஏறுவது எங்கே சாலைவசதிகள் மூலம் பத்து சதவீதம் குறைவது எங்கே?

நல்ல சாலைகள் இருப்பின் டீசல் விலை பத்து ரூபாய் ஏறினால் கூட மக்களை எந்த விகிதத்திலும் பாதிக்காது. இதனால் தான் உள்கட்டமைப்பு செய்யவேண்டும் என சொல்வது.

இதற்கப்புறம் மோடி செய்தது முத்ரா லோன் மூலம் கடன்.  கடன் கொடுக்கறதுக்கும் விலைவாசிக்கு என்ன சம்பந்தம் அப்படீன்னு நிறைய பேருக்கு அதுவும் ஹார்டுவேர்டு, கேம்பிரிட்ச் என பெரீய்ய பெரீய்ய படிப்பு படிச்ச வெண்ணை வெட்டிகளுக்கே புரியாது.

குறைவான வட்டி வீதத்திலே கடன் வாங்கி தொழில் செஞ்சா அதிலே வட்டிய பொருட்களின் விலையிலே ஏற்றவேண்டியதில்லை. மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி என கடன் வாங்கினா அந்த வட்டிய பொருளோட விலையிலே ஏற்றித்தான் வியாபாரம் செய்யவேண்டியிருக்கும்.

இதிலே இன்னோன்னும் உண்டு. அது எல்லோருக்கும் அதிக வட்டியிலே பணம் எளிதிலே கிடைத்துவிடாது. விளைவு வேலைவாய்ப்பும் குறையும்.

கடன் எளிதாக கிடைக்கும் போது வேலைவாய்ப்பு அதிகரித்து பணவீக்கம் குறையும். இது யாருக்கு கிடைக்கிறது என்பதையும் பொறுத்து. ஏழை எளியோருக்கு என்றால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். பணக்காரனுக்கு என்றால் அவர்கள் விலையை ஏற்றி லாபம் பார்ப்பார்கள்.

பணவீக்கம் ஏறிடும் ஏறிடும் என வட்டி வீதத்தை ரிசர்வ் பேங்க் அப்படியே வைச்சிருந்ததும் முத்ரா கடன் கொடுக்க கூடாது என ஒரு வெண்ணை வெட்டி குமிறியதும் ஞாபகம் இருக்கா?

ஆனா வேலை வாய்ப்பு அதிகரிச்சு எல்லோரும் வாங்கினா பொருளோட விலை அதிகரிக்கத்தானே செய்யும் என மனப்பாடம் பண்ணீனத ஒப்பிக்கலாம்.

வாங்க ஆள் இல்லை விலை குறையும் என்பது அழுகும் பொருட்களூக்கே சாத்தியமில்லாத போது அழுகாத பொருட்களுக்கு எப்படி? விவசாயிகள் பால் விலை கிடைக்கவில்லை என பாலை கீழே தான் ஊற்றுவார்களே ஒழிய சும்மா கொடுப்பார்களா?

அதுவே அதிகம் பேர் வாங்கினால் உற்பத்தி செலவும் விற்பனைக்கு எடுத்து வரும் செலவும் குறையும். எனவே விலையும் தானாக குறையும்.

முத்ரா லோன் போல செய்தது வெளிநாட்டிலே இருந்து வரும் முதலீடு. முந்திய ஆட்சிக்காலத்தை விட இப்போது 4-5 மடங்கு அதிக முதலீடு வருகிறது. அதனால் வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது.

ஏன்? அதான் தொழிற்சாலைக்கு தேவையான மின்சாரம், சாலைவசதிகள் எல்லாம் எளிதிலே கிடைகிறதே அப்புறம் வேலைவாய்ப்பு பெருகாமல் என்ன?

இந்த முத்ரா லோன் ஒழுங்கா வேலை செய்யுறது எங்கே தெரியுதுன்னா வங்கி ஊழியர் வேலை நிறுத்தத்திலே. ஏன்னா அவிங்க அவிங்க அப்பன் வீட்டு சொத்தை எடுத்து கடன் கொடுத்தது போல அழிச்சாட்டியம் பண்ணிதுக்கும் பெரிய பணக்காரங்களுக்கு கடன் கொடுத்து அதிலே லஞ்சம் வாங்கி கொழிச்சுட்டு இருந்ததும் போயிடுச்சே. அப்புறம் ஏ பாயாச மோடியேன்னு பொங்கித்தானே ஆகனும்?

இறுதியாக வருவது தான் ஜிஎஸ்டியும் கருப்பு பண ஒழிப்பும். ஜிஎஸ்டி என்பது கணக்கு வழக்கு என்பதிலே இருந்தாலும் அது செஞ்ச முதல் விஷயம் அரசு ஊழியர்களுக்கு கொடுத்த லஞ்சம்,செக்போஸ்டிலே கொடுத்த லஞ்சம், செக்போஸ்டிலே காத்திருந்த நேரம் என எல்லாவற்றையும் ஒழித்தது.

லஞ்சம் கொடுத்தா வியாபாரிக அவிங்க கைக்காசிலா கொடுப்பாங்க? பொருளின் விலையிலே தான் ஏற்றுவார்கள். அதிலேயும் அலுவலகத்திற்கு போகும் நேரம், அதுக்கு ஆகும் செலவு என எத்தினி பிரச்சினை?

அது ஒழிஞ்சா தானா விலைவாசி ஒழுங்கிலே இருக்க போகுது.

இன்னும் முழு மின்சாரத்திலே ஓடும் வண்டிகள் வந்தால் பெட்ரொல் விலை என்ன ஏறினாலும் பிரச்சினை என்பது ஆகாது.

சீனா, கொரியா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அதிகளவு அணு மின்சாரம் தயாரிக்கின்றன. மொத்த உற்பத்தியிலே 10 இல் இருந்து 50 சதம் வரை அணு மின்சாரமே பயன்படுத்தும் நாடுகளும் உண்டு. நாமும் அதை நோக்கி முன்னேறும் போது இன்னமும் விலை குறையும்.

சூரிய சக்தி, காற்றாலை என்பதிலே மோடி அரசு பெரும் காரியங்களை சாதித்திருக்கிறது.

இதைவிட இன்னொன்று இந்திய அரசின் கடன் குறைந்திருக்கிறது என்பது தான். கடன் குறையும் போது சர்வதேச சந்தையிலே கடன் வாங்கும் போது வட்டி குறையும்.

இந்திய வங்கிகள் வீட்டுக்கடன் வட்டி இன்ன பிறவற்றை குறைக்க காரணமே சர்வதேச சந்தையிலே கடன் எளிதிலே கிடைக்கிறது. அதுவும் இந்த திவால் சட்டம் வந்த பின்பு ஏகப்பட்ட நிறுவனங்கள் இந்திய கம்பெனிகளுக்கு கடன் கொடுக்க முன்வருகின்றன. சீனா தனியா இந்திய நிதி என ஒன்றை ஆரம்பித்திருக்கிறது.

சரி இதிலே போன முறை சொன்ன ஈரான் பணப்பிரச்சினைக்கும் பதில் சொல்லிவிடுகீறேன்.

ஈரானின் மீது அமெரிக்கா தடை விதித்த போது இந்தியா ஈரானிடமிருந்து பெட்ரோலியம் வாங்கிக்கொண்டு தான் இருந்தது. அமெரிக்க தடை இருப்பதால் அமெரிக்க டாலரிலே பணம் கொடுக்கமுடியவில்லை. எனவே கடன் வைத்தது. மன்மோகன் சிங் ஆட்சி முடிய ஒரு வருசம் இருக்கும் போது கொஞ்சம் பணம் ரூபாயிலே தருகிறோம் மிச்சம் அமெரிக்க தடை நீங்கின பிறகு தருகிறோம் என சொல்லி கடன் வைத்தார்கள். அமெரிக்காவிடம் போய் நாங்கள் சும்மா தான் வாங்குகிறோம் பணம் கொடுக்கவில்லை என பம்மினார்கள்.

மோடி வந்த பிறகு அமெரிக்க தடையை நீக்கிவிட்டதால் முழு பணமும் அமெரிக்க டாலரிலேயே கேட்டது ஈரான். ஆனால் மோடி அரசு முழுவதையும் ரூபாயிலே தருகிறோம் என சொல்ல ஈரானும் ஒப்புக்கொண்டது.

இன்றைக்கு திரும்பவும் ஈரானின் மீது அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. இந்தியா தைரியமாக அமெரிக்க தடையெல்லாம் செயல்படுத்த முடியாது. ஐக்கியநாடுகள் அமைப்பு தடையை மட்டுமே செயல்படுத்துவோம் என சொல்லியிருக்கிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும், சாபார் துறைமுகம் புழக்கத்திற்கு வரும் எனவும் சொல்லியிருக்கிறது.

கான்கிரஸ் களவாணிகள் அம்புட்டு தைரியசாலிகளா இருந்தால் இப்படி சொல்லியிருக்கவேண்டியது தானே? வீரமங்கை சுஷ்மா சுவராஜ் சொன்னது போல் வெட்டு ஒன்னு துண்டு 16 என சொல்லவேண்டியதுதானே?

ஈரான் மந்திரி கைகூப்பி நன்றி தெரிவித்துவிட்டு போயிருக்கிறார். அந்த போட்டோ இருக்கிறது பாருங்கள்.

இப்படி விலைவாசி ஏறியதற்கான வழிகளை குறைபாடுகளை சரி செய்துவிட்டதால் தான் பணவீக்கம் ஏறவில்லை அதனால் தான் எதிர்கட்சிகள் பேசாமல் இருக்கின்றன.

பொதுபோக்குவரத்திற்கு இன்னமும் செய்யலாம். ரயில் போக்குவரத்தை அதிகப்படுத்தலாம். ஆனால் அவை நடைமூறைக்கு வரை இன்னும் ஓரிரு வருடங்களாவது ஆகும்.

சரி இதிலே இந்த்துவ நண்பர்கள் செய்யவேண்டியது என்னவென்றால் இந்த விஷயங்களை எல்லாம் பேசலாம். தமிழ்நாட்டு பிஜேபியை விடுங்கள் மத்திய பிஜேபியே இதெல்லாம் பேசுவதில்லை.

எதிர்கட்சிகள் வழக்கமான பிரச்சாரத்திற்கு பலியாகாதீர்கள். இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலையை கடன் வாங்கி குறைத்தால் நாடு திவால் தான் ஆகும்.

தேர்தல் நேரத்திலே இதெல்லாம் பேசவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேள்வி இருந்தால் கேளுங்கள். முடிந்தவரை பதில் சொல்கிறேன்.

வயதானால் அந்த நோய் வரும்...

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால்  வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.

*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.

 *உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே தாழ்வு மனப்பான்மை வரும்

உனக்கு கீழே உள்ளவனை  ஏளனமாய் பார்க்காதே தலைக்கனம் வரும்.

உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு தன்னம்பிகை வரும்.....

#297 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 24 உரனென்னும் தோட்டியான் | Daily on...

க முதல் னௌ வரை | Ka to naw | உயிரமெய் எழுத்துக்கள் | Uyirmei eluthukkal ...