flipkart discount sale search here.

Thursday 31 August 2017

Driving license, School/College Certificate and ID Card தொலைந்து போனால் தாங்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து Missing certificate வாங்க வேண்டிய நிலை இனி இல்லை.

நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், தங்களுடைய Passport, Vehicle Registration Certificate, Driving license, School/College Certificate and ID Card தொலைந்து போனால் தாங்கள் காவல் நிலையம் சென்று புகார் கொடுத்து Missing certificate வாங்க வேண்டிய நிலை இனி இல்லை. இணையதளத்தில் தாங்கள் புகார் பதிவு செய்து புகார் பதிவு சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்நாடு காவல் துறை இதற்கான இணைய சேவையை இன்று முதல் (31.08.17) தொடங்கியுள்ளது. இணைய முகவரி eservices.tnpolice.gov.in.

#16 தினம் ஒரு திருக்குறள் | குறள் 1167 காமக் கடும்புனல் | Dhinam Oru Thi...

#120 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best inspirational video in tamil

What is the BLUE WHALE Game of the Death | Blue Whale Death game ஒரு அலசல்.

*BLUE WHALE*

*Game of death*

இது ஒரு 50 day challenging game

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ஒரு task

இந்த game admin-kita இருந்து உங்களுக்கு வரும்

அது என்ன மாதிரியானதுனா

உன் கையில பிளேடு வச்சி 3 தடவ cutபண்ணிக்க
அத என்னக்கு photo எடுத்து அனுப்பு

Morning 4:20-க்குஎழுந்து உன் வீடு மொட்டை மாடிக்கு போய் ஏதாவது ஒரு horror movie பாத்து அத எனக்கு photo எடுத்து அனுப்பு

இந்த மாதிரியான task கொடுக்க படும்

நீங்க கேட்கலாம் நான் ஏன் இதெல்லாம் பண்ணனும்

நா பண்ண மாட்டேன்னு அவன்கிட்ட சொல்லவும் முடியாது

நீங்க  ஒரு தடவை இந்த game-la log in பண்ணிடீங்கனா உங்க மொபைலில் உள்ள அணைத்து details-um அவன் கைல போய்டும்

நீங்க இதுவரை பார்த்த விஷயங்கள் msg பண்ணின விஷயங்கள் மற்றும் உங்கள் contact list மொத்தமும் அவனுக்கு போய்டும்

நா சொல்றத பண்ணலேனா நீ செய்த விஷயங்களை உன் பெற்றோர் அல்லது relatives-ku அனுப்பிடுவேன் அப்டின்னு பயம்புருத்துவான்

நீ பயப்படனும்னு கொஞ்ச தகவலை அனுப்பவும் செஞ்சிடுவான்

உங்க வீட்டுல இருந்து கேப்பாங்க

நீயும் அடுத்த விஷயம் leak ஆக கூடாதுனு அவன் சொல்றத வேறு வழி இல்லாமல் செய்ய தொடங்குவ

*So, automatically you are forced to play this game*

 ஏன் இதை விளையாடனும் ?!

ஏன் இது இவ்ளோ கொடூராமா இருக்குனு தெரிஞ்சும் விளையாடுறாங்க?!

இதற்கு விடை ரொம்ப சின்னது

1) They are all lonely people அதாவது தனிமைல ரொம்ப ஏங்கி போய் இப்டியான game uh பார்தத்தும் அது மேல வர ஒரு விதமான ஈர்ப்பு

 2) ஆர்வக்கோளாறு ..

சரி இதுல என்னதான் இருக்குனு பாத்துருவோம்

அப்புறம் உள்ள போய் உயிர விட்றது !!!

சரி இவங்க எல்லாரும் விரும்பி தான் இதலாம் செஞ்சு suicide பண்ணிக்கிறாங்களானா அதுவும் இல்ல ...

அப்போ என்னதான் நடக்குது இங்க அப்டின்னு பாத்தா

அந்த Blue Whale game online ல கிட்டத்தட்ட 5000 memebers ஆல நடத்தபட்டுட்டு இருக்கு அதுல 85% hackers

 சொன்னா நம்ப மாடீங்க ஆமா இது நடந்துற people எல்லாமே phishing தெரிஞ்சவங்க

அதாவது நல்லா hacking படிச்சு knowledge உள்ளவங்க....

இந்த game uh கண்டுபுடிச்ச அந்த administrator அத அப்டியே இந்த hacking குரூப் கிட்ட குடுத்துட்டான்

so its now been handled by those hackers...

சரி இப்போ இவன் என்ன செய்றான்னா அந்த #BW link உள்ள போய் நீங்க register பண்ணதுமே உங்க account uh hack பண்ணிருவான்

அது உங்க fb id , gmail even உங்க mob num உம் hack பண்ணிருவாங்க...

then உங்க fb accnt ல சம்மந்தனே இல்லாம posts வரும் ...

உங்க accnt uh அசிங்கப்படுத்துவாங்க...

அது மூலமா உங்களுக்கு mental torchure குடுப்பங்க

உங்கள அத செஞ்சே தீரனும் னு pressure பன்வாங்க...and உங்க Num கு calls கூட வரலாம் ...

இவ்ளோ pressure uh நெனச்சி நமக்கே நெனச்சிப்பாக்க பயமா இருக்கும்போது ஒன்னுமே தெரியாத சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க 😞😞

so இப்டிதான் பல உயிர எடுத்துருக்காங்க..

Ok coming to the end இதுக்கு solution ரொம்ப simple ... 1st உங்க வீட்ல or தெரிஞ்ச சின்ன பசங்க யாரா இருந்தாலும் அவங்க அவங்கள அவ்ளோவா net , browsimg லாம் பண்ண விடாதீங்க

அவங்க என்ன net ல பாக்குறங்கன்னு நீங்க check பண்ணிட்டே இருக்குறது நல்லது...

அவங்கள தனியா விட்றது நல்லது இல்ல...

and most important one எக்காரணத்த கொண்டும் எவன் கேட்டாலும் Blue Whale- link-யை தயவு செஞ்சி share பண்ணாதீங்க

இது என்னோட humble reqst 🙏🏼🙏🏼

Share immediately.... 

Tuesday 29 August 2017

#Drawing_for_kids #6 | Animals drawing for kids step by step | Animals d...

#14 தினம் ஒரு திருக்குறள் | குறள் 946 இழிவறிந்து | Dhinam Oru Thirukural...

#14 தினம் ஒரு திருக்குறள் | குறள் 946 இழிவறிந்து | Dhinam Oru Thirukural...

#118 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best inspirational video in tamil

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு ! தமிழ் போல மொழி ஏதோ...

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.

அவற்றைத் தெரிந்து கொள்வோம், இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ __எட்டு

ஆ -----> பசு

ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி

உ -----> சிவன்

ஊ -----> தசை, இறைச்சி

ஏ -----> அம்பு

ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு

ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை

கா -----> சோலை, காத்தல்

கூ -----> பூமி, கூவுதல்

கை -----> கரம், உறுப்பு

கோ -----> அரசன், தலைவன், இறைவன்

சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்

சீ -----> இகழ்ச்சி, திருமகள்

சே -----> எருது, அழிஞ்சில் மரம்

சோ -----> மதில்

தா -----> கொடு, கேட்பது

தீ -----> நெருப்பு

து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு

தூ -----> வெண்மை, தூய்மை

தே -----> நாயகன், தெய்வம்

தை -----> மாதம்

நா -----> நாக்கு

நீ -----> நின்னை

நே -----> அன்பு, நேயம்

நை -----> வருந்து, நைதல்

நொ -----> நொண்டி, துன்பம்

நோ -----> நோவு, வருத்தம்

நௌ -----> மரக்கலம்

பா -----> பாட்டு, நிழல், அழகு

பூ -----> மலர்

பே -----> மேகம், நுரை, அழகு

பை -----> பாம்புப் படம், பசுமை, உறை

போ -----> செல்

மா -----> மாமரம், பெரிய, விலங்கு

மீ -----> ஆகாயம், மேலே, உயரம்

மு -----> மூப்பு

மூ -----> மூன்று

மே -----> மேன்மை, மேல்

மை -----> அஞ்சனம், கண்மை, இருள்

மோ -----> முகர்தல், மோதல்

யா -----> அகலம், மரம்

வா -----> அழைத்தல்

வீ -----> பறவை, பூ, அழகு

வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்

வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த

 இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன . அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்..

வாழ்க தமிழ்.. அனைவர்க்கும் பகிருங்கள் ...

Monday 28 August 2017

#தொப்புளில்_எண்ணை_போடுங்கள்...

#தொப்புளில்_எண்ணை_போடுங்கள்
நமது தொப்புள் (நாபி) தாய் மூலம் நமக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான பரிசு.
ஒரு 62 வயது மனிதன் தனது இடது கண் பார்வையை சற்று இழந்தார். அவரால் இரவு நேரத்தில் மிகவும் சிரமப்பட்டு தான் பார்க்க முடியும். அவரது கண்கள் நல்ல நிலையில் இருந்தன. ஆனால் ஒரே ஒரு பிரச்சனை அவரது கண்களுக்கு இரத்தம் வழங்கும் நரம்புகளில் இரத்தம் வற்றிப்போயிற்று. அவர் மீண்டும் பார்க்க முடியாது என்று என்று கண் நிபுணர்கள் மூலம் அறிவிக்கப்பட்டது.
அறிவியல் படி,
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி உருவாக்கப்படுகிறது. பிறகு, அது தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியுடன் இணைகிறது.
நமது தொப்புள் நிச்சயமாக ஒரு அற்புதமான விஷயம்!
அறிவியல் படி, ஒரு நபர் காலமான பிறகு, தொப்புள் 3 மணி நேரம் சூடாக இருக்கும்.
காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. முழுவதும் வளர்ந்த குழந்தை 270 நாட்கள் = 9 மாதங்களில் உருவாகிறது. இதனால் அங்கு எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.
நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக, நம் தொப்புள் அமைக்கப்பட்டுள்ளது.
நம் வயிற்றில் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்று ஒன்று தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம்ப முடியவில்லையா? நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொ‌த்த அளவு பூமியின் இருமுறை சுற்றளவுக்கு சமமாகும்.
தொப்புளில் எண்ணெய் வைப்பது கண்கள் வறட்சி, கண்பார்வை குறைபாடு, பித்த வெடிப்பு, கணையம் பிரச்சினைகள் குணமாகி பளபளப்பான முடி, ஒளிரும் உதடுகள் கிடைப்பதுடன், முழங்கால் வலி, உடல் நடுக்கம், சோம்பல், மூட்டு வலிகளை எதிர்கொள்ளவும் உதவுகிறது.

கண்கள் வறட்சி, பார்வை குறைபாடு, நகம், தலைமுடி மற்றும் உதடுகள் பொலிவிற்கு

தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

முழங்கால் வலி
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

மூட்டு வலி, நடுக்கம் மற்றும் சோம்பல் நிவாரணம், உலர்ந்த சருமத்திற்கு
தூங்குவதற்கு முன், இரவில் தொப்புளில் கடுகு எண்ணெய் 3 சொட்டு வைத்து தொப்புளை சுற்றி ஒன்றரை அங்குல அளவிற்கு மசாஜ் செய்யவும்.

ஏன் தொப்புளில் எண்ணை வைக்கிறோம்?
நம் தொப்புள் ஏதாவது நரம்புகள் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெயை அந்த நரம்புகள் வழியாக செலுத்தி அவற்றை திறக்கும் .
ஒரு குழந்தைக்கு வயிற்றுவலியின் போது, சாதாரணமாக பெருங்காயம் மற்றும் தண்ணீர் அல்லது எண்ணெய் கலந்து தொப்புளை சுற்றி தடவி விடுவார்கள். நிமிடங்களில் வலி குணமாகும். அதே வழியில் தான் இந்த எண்ணெய் மசாஜ் வேலை செய்யும்.

#Drawing_for_kids #5 | Easy unicorn drawing for kids | Horse drawing ide...

சொல்ல வேண்டாமுண்ணு நினச்சன்...

ஆசிரியர் வகுப்பில் ஒரு கேள்வியை கேட்டார்

எண்களில் உங்களுக்கு பிடித்த எண் எது ?

இக்கேள்விக்கு ஒரு மாணவன் கூறிய பதில் #சிந்திக்கும்படி இருந்தது

அந்த மாணவனின் பதில்

எண்களில் சிறந்த எண் ஏழு தான் ஏனென்றால்


1) #ஏழு நிறங்கள் சேர்ந்தால் தான் அழகான "வானவில்"🌈 பிறக்கிறது

2) #ஏழு ஸ்வரங்கள் சேர்ந்தால் தான் ஒரு "இசை" 🎼🎵🎶🎹 உருவாகிறது

3) #அதே பாேல் ஏழு நாட்கள் சேர்ந்தால் தான் ஒரு "வாரம்" கிடைக்கிறது

4) #எல்லாவற்றிற்கும் மேலாக ஏழு ஆங்கில எழுத்துக்கள் சேர்ந்தால் தான் உயிரினும் மேலான நட்"#பூ" ,👭👫👬 (FRIENDS) என்னும் வார்த்தை உருவாகிறது.
இவ்வாறு அந்த மாணவனின் பதில் இருந்தது.

ஆசிரியர் அந்த மாணவனை பாராட்டினார். .  .



அந்த மாணவன் வேறு யாரும் இல்லை



   "நான் தான்"

10 ம் வகுப்பு படிக்கும் போது தான் இது நடந்தது
சொல்ல வேண்டாமுண்ணு நினச்சன்

ஆனா மறுபடியும் மனசு கேக்கல


🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

1008 Sivalinga | 1008 திருலிங்கேஸ்வரர்கள்

1008 திருலிங்கேஸ்வரர்கள்
====================
1 அகர லிங்கம்
2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம்
5 அகத்திய லிங்கம்
6 அகழ் லிங்கம்
7 அகில லிங்கம்
8 அகிம்சை லிங்கம்
9 அக்னி  லிங்கம்
10 அங்கி  லிங்கம்
11 அங்கு  லிங்கம்
12 அசரிய  லிங்கம்
13 அசுர  லிங்கம்
14 அசை லிங்கம்
15 அசோக  லிங்கம்
16 அச்சு  லிங்கம்
17 அஞ்சா  லிங்கம்
18 அட்ட  லிங்கம்
19 அட்ச லிங்கம்
20 அட்சதை  லிங்கம்
21 அட்டோ லிங்கம்
22 அடிமுடி  லிங்கம்
23 அடி  லிங்கம்
24 அணணா லிங்கம்
25 அண்ட  லிங்கம்
26 அணி  லிங்கம்
27 அணு  லிங்கம்
28 அத்தி  லிங்கம்
29 அதழ்  லிங்கம்
30 அதிபதி  லிங்கம்
31 அதிர்ஷ்ட  லிங்கம்
32 அதிய லிங்கம்
33 அதிசய  லிங்கம்
34 அதீத  லிங்கம்
35 அந்தார  லிங்கம்
36 அந்தி  லிங்கம்
37 அநந்தசாயி  லிங்கம்
38 அநலி லிங்கம்
39 அநேக  லிங்கம்
40 அப்ப  லிங்கம்
41 அப்பு  லிங்கம்
42 அபய லிங்கம்
43 அபி  லிங்கம்
44 அபிநய  லிங்கம்
45 அபிஷேக  லிங்கம்
46 அம்பல  லிங்கம்
47 அம்பி  லிங்கம்
48 அம்புசி  லிங்கம்
49 அம்ம லிங்கம்
50 அமல லிங்கம்
51 அமர லிங்கம்
52 அமராவதி லிங்கம்
53 அமிர்த லிங்கம்
54 அர்ச்சனை லிங்கம்
55 அர்ச்சுண லிங்கம்
56 அர்த்த லிங்கம்
57அரச லிங்கம்
58 அரவ லிங்கம்
59 அரங்க லிங்கம்
60 அரம்பை லிங்கம்
61 அரளி லிங்கம்
62 அரி லிங்கம்
63 அரிணி லிங்கம்
64 அரிமா லிங்கம்
65 அருக லிங்கம்
66 அருணை லிங்கம்
67 அருமணி லிங்கம்
68 அரும்பு லிங்கம்
69 அருளி லிங்கம்
70 அரூப லிங்கம்
71 அல்லி லிங்கம்
72 அலை லிங்கம்
73 அவைய லிங்கம்
74 அழகு லிங்கம்
75 அளத்தி லிங்கம்
76 அற லிங்கம்
77 அறிவு லிங்கம்
78 அன்பு லிங்கம்
79 அன்புரு லிங்கம்
80 அன்ன லிங்கம்
81 அனுதாபி லிங்கம்
82 அனுபூதி லிங்கம்
83 அஷ்ட லிங்கம்
84 ஆக்கை லிங்கம்
85 ஆகம லிங்கம்
86ஆகாய லிங்கம்
87 ஆசான லிங்கம்
88 ஆசிரிய லிங்கம்
89 ஆசி லிங்கம்
90 ஆட லிங்கம்
91 ஆடரி லிங்கம்
92 ஆண் லிங்கம்
93 ஆண்டி லிங்கம்
94 ஆணுரு லிங்கம்
95 ஆத்ம லிங்கம்
96 ஆதார லிங்கம்
97 ஆதி லிங்கம்
98 ஆதிரி லிங்கம்
99 ஆதிசேவி லிங்கம்
100 ஆதிரை லிங்கம்
101 ஆதினா லிங்கம்
102 ஆபேரி லிங்கம்
103 ஆமிர லிங்கம்
104 ஆமை லிங்கம்
105 ஆய லிங்கம்
106 ஆயதி லிங்கம்
107 ஆர்த்தி லிங்கம்
108 ஆரண்ய லிங்கம்
109 ஆரண லிங்கம்
110 ஆராதனை லிங்கம்
111 ஆராபி லிங்கம்
112 ஆரூர லிங்கம்
113 ஆரோக்ய லிங்கம்
114 ஆலகால லிங்கம்
115 ஆலவாய் லிங்கம்
116 ஆலால லிங்கம்
117 ஆலி லிங்கம்
118 ஆவார லிங்கம்
119 ஆவி லிங்கம்
120 ஆவே லிங்கம்
121 ஆவுடை லிங்கம்
122 ஆழி லிங்கம்
123 ஆனந்த லிங்கம்
124 இக்கு லிங்கம்
125 இசை லிங்கம்
126 இடப லிங்கம்
127 இணை லிங்கம்
128 இதய லிங்கம்
129 இந்திர லிங்கம்
130 இமய லிங்கம்
131 இமை லிங்கம்
132 இரட்டை லிங்கம்
133 இராம லிங்கம்
134 இலக்கிய லிங்கம்
135 இலாப லிங்கம்
136 இளைய லிங்கம்
137 இறவா லிங்கம்
138 இறை லிங்கம்
139 இனிமை லிங்கம்
140 ஈகை லிங்கம்
141 ஈசான்ய லிங்கம்
142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
144 ஈடித லிங்கம்
145 ஈடிலி லிங்கம்
146 ஈர்ப்பு லிங்கம்
147 ஈழ லிங்கம்
148 ஈஸ்வர லிங்கம்
149 ஈஸ்வரி லிங்கம்
150 உக்ர லிங்கம்
151 உச்சி லிங்கம்
152 உசித லிங்கம்
153 உடம்பி லிங்கம்
154 உடுக்கை லிங்கம்
155 உணர் லிங்கம்
156 உத்தம லிங்கம்
157 உத்ராட்ச லிங்கம்
158 உதய லிங்கம்
159 உதிர லிங்கம்
160 உப்பிலி லிங்கம்
161 உப்பு லிங்கம்
162 உப லிங்கம்
163 உபதேச லிங்கம்
164 உபய லிங்கம்
165 உமா லிங்கம்
166 உமை லிங்கம்
167 உயிர் லிங்கம்
168 உரி லிங்கம்
169 உரு  லிங்கம்
170 உருணி லிங்கம்
171 உருமணி லிங்கம்
172 உவப்பு லிங்கம்
173 உழவு லிங்கம்
174  உழுவை லிங்கம்
175 உற்சவ லிங்கம்
176 உன்னி லிங்கம்
177 ஊக்க லிங்கம்
178 ஊசி லிங்கம்
179 ஊதா லிங்கம்
180 ஊருணி லிங்கம்
181 ஊழி லிங்கம்
182 ஊற்று லிங்கம்
183 எட்டி லிங்கம்
184 எட்டு லிங்கம்
185 எதனா லிங்கம்
186 எந்தை லிங்கம்
187 எம லிங்கம்
188 எருது லிங்கம்
189 எல்லை லிங்கம்
190 எளிய லிங்கம்
191 எழிலி லிங்கம்
192 எழுத்தறி லிங்கம்
193 என்குரு லிங்கம்
194 ஏக லிங்கம்
195 ஏகம லிங்கம்
196 ஏகா லிங்கம்
197 ஏகாம்பர லிங்கம்
198 ஏகாந்த லிங்கம்
199 ஏடக லிங்கம்
200 ஏந்திழை லிங்கம்
201 ஏம லிங்கம்
202 ஏர் லிங்கம்
203 ஏரி லிங்கம்
204 ஏவச லிங்கம்
205 ஏழிசை லிங்கம்
206 ஏறு லிங்கம்
207 ஏனாதி லிங்கம்
208 ஐங்கர லிங்கம்
209 ஐய லிங்கம்
210 ஐராவத லிங்கம்
211 ஒப்பிலா லிங்கம்
212 ஒப்பிலி லிங்கம்
213 ஒருமை லிங்கம்
214 ஒளி லிங்கம்
215 ஓசை லிங்கம்
216 ஓடேந்தி லிங்கம்
217 ஓம் லிங்கம்
218 ஓம்கார லிங்கம்
219 ஓவிய லிங்கம்
220 ஔடத லிங்கம்
221 ஔவை லிங்கம்
222 கங்கா லிங்கம்
223 கச்ச லிங்கம்
224 கண்ட லிங்கம்
225 கடம்ப லிங்கம்
226 கடார லிங்கம்
227 கடிகை லிங்கம்
228 கடை லிங்கம்
229 கதிர் லிங்கம்
230 கதலி லிங்கம்
231 கந்த லிங்கம்
232 கபால லிங்கம்
233 கபில லிங்கம்
234 கமல லிங்கம்
235 கயா லிங்கம்
236 கயிலை லிங்கம்
237 கர்ண லிங்கம்
238 கர்ப்ப லிங்கம்
239 கரண லிங்கம்
240 கரு லிங்கம்
241 கருட லிங்கம்
242 கருமை லிங்கம்
243 கருணை லிங்கம்
244 கல்ப லிங்கம்
245 கல்வி லிங்கம்
246 கலி லிங்கம்
247கலை லிங்கம்
248 கவி லிங்கம்
249 கற்பக லிங்கம்
250 கற்பூர லிங்கம்
251 கன்னி லிங்கம்
252 கன லிங்கம்
253 கனக லிங்கம்
254 கனி லிங்கம்
255 கஸ்தூரி லிங்கம்
256 கஜ லிங்கம்
257 கருணாகர லிங்கம்
258 காசி லிங்கம்
259 காஞ்சி லிங்கம்
260 காடக லிங்கம்
261 காத்த லிங்கம்
262 காதம்பரி லிங்கம்
263 காந்த லிங்கம்
264 காப்பு லிங்கம்
265 காம லிங்கம்
266 கார் லிங்கம்
267கார்த்திகைலிங்கம்
268 காரண லிங்கம்
269 கால லிங்கம்
270 காவி லிங்கம்
271காவிய லிங்கம்
272 காவேரி லிங்கம்
273 காளி லிங்கம்
274 காளத்தி லிங்கம்
275 காளை லிங்கம்
276 கான லிங்கம்
277கிண்கிணி லிங்கம்
278 கிரி லிங்கம்
279 கிரியை லிங்கம்
280 கிரீட லிங்கம்
281 கிருப லிங்கம்
282 கிள்ளை லிங்கம்
283 கீத லிங்கம்
284 கீர்த்தி லிங்கம்
285 கீர்த்தன லிங்கம்
286 குக லிங்கம்
287 குங்கும லிங்கம்
288 குஞ்சு லிங்கம்
289 குட லிங்கம்
290 குடுமி லிங்கம்
291 குண லிங்கம்
292 குணக்ரி லிங்கம்
293 குபேர லிங்கம்
294 குருதி லிங்கம்
295 குமர லிங்கம்
296 குமரி லிங்கம்
297 குமுத லிங்கம்
298 குல லிங்கம்
299 குழலி லிங்கம்
300 குழவி லிங்கம்
301 குழை லிங்கம்
302 குற்றால லிங்கம்
303 குன்று லிங்கம்
304 குண்டலி லிங்கம்
305 குந்த லிங்கம்
306 கும்ப லிங்கம்
307 குரவ லிங்கம்
308 குறிஞ்சி லிங்கம்
309 கூததாடி லிங்கம்
310 கூத்து லிங்கம்
311 கூர்ம லிங்கம்
312 கெஜ லிங்கம்
313 கேச லிங்கம்
314 கேசரி லிங்கம்
315 கேசவ லிங்கம்
316 கேடிலி லிங்கம்
317 கேதார் லிங்கம்
318 கேள்வி லிங்கம்
319 கைலாய லிங்கம்
320 கொங்கு லிங்கம்
321 கொடி லிங்கம்
322 கொடு லிங்கம்
323 கொளஞ்சி லிங்கம்
324 கொற்றை  லிங்கம்
325 கொன்றை லிங்கம்
326 கோ லிங்கம்
327 கோகழி லிங்கம்
328 கோகுல லிங்கம்
329 கோட்டை லிங்கம்
330 கோடி லிங்கம்
331 கோண் லிங்கம்
332 கோண லிங்கம்
333 கோதண்ட லிங்கம்
334 கோதை லிங்கம்
335 கோப லிங்கம்
336 கோபி லிங்கம்
337 கோமதி லிங்கம்
338 கோல லிங்கம்
339 கௌசிக லிங்கம்
340 கௌதம லிங்கம்
341 கௌரி லிங்கம்
342 சக்தி லிங்கம்
343 சக்கர லிங்கம்
344 சகஸ்ர லிங்கம்
345 சகல லிங்கம்
346 சங்க லிங்கம்
347 சங்கம லிங்கம்
348 சங்கர லிங்கம்
349 சங்கு லிங்கம்
350 சஞ்சீவி லிங்கம்
351 சடாட்சர லிங்கம்
352 சடைமுடி லிங்கம்
353 சண்முக லிங்கம்
354 சத்திய லிங்கம்
355 சதங்கை லிங்கம்
356சதய லிங்கம்
357 சதா லிங்கம்
358 சதாசிவ லிங்கம்
359 சதுர் லிங்கம்
360 சதுர்த்தி லிங்கம்
361 சதுரங்க லிங்கம்
362 சதுரகிரி லிங்கம்
363 சந்த லிங்கம்
364 சந்திர லிங்கம்
365 சந்தன லிங்கம்
366 சந்தான லிங்கம்
367 சப்த லிங்கம்
368 சபா லிங்கம்
369 சம்பந்த லிங்கம்
370 சம்பு லிங்கம்
371 சமுத்திர லிங்கம்
372 சயன லிங்கம்
373 சர்வேஸ லிங்கம்
374 சரச லிங்கம்
375 சரீர லிங்கம்
376 சவரி லிங்கம்
377 சற்குண லிங்கம்
378 சஹான லிங்கம்
379 சற்குரு லிங்கம்
380 சாட்சி லிங்கம்
381 சாணக்ய லிங்கம்
382 சாதக லிங்கம்
383 சாதனை லிங்கம்
384 சாதி லிங்கம்
385 சாது லிங்கம்
386 சாந்த லிங்கம்
387 சாந்து லிங்கம்
388 சாம்ப லிங்கம்
389 சாமுண்டி லிங்கம்
390 சிகர லிங்கம்
391 சிகா லிங்கம்
392 சிகரி லிங்கம்
393 சிகை லிங்கம்
394 சிங்கார லிங்கம்
395 சிசு லிங்கம்
396 சித்தி லிங்கம்
397 சித்திரை லிங்கம்
398 சிந்தாமணிலிங்கம்
399 சிந்து லிங்கம்
400 சிநேக லிங்கம்
401 சிப்பி லிங்கம்
402 சிபி லிங்கம்
403 சிம்ம லிங்கம்
404 சிர லிங்கம்
405 சிரஞ்சீவி லிங்கம்
406 சிரபதி லிங்கம்
407 சிருஷ்டி லிங்கம்
408 சிலம்பு லிங்கம்
409 சிவ லிங்கம்
410 சிவகதி லிங்கம்
411 சிவாய லிங்கம்
412 சிற்பவ லிங்கம்
413 சினை லிங்கம்
414 சிஷ்ட லிங்கம்
415 சீதன லிங்கம்
416 சீதாரி லிங்கம்
417 சீமை லிங்கம்
418 சீர்மை லிங்கம்
419 சீற்ற லிங்கம்
420 சீனி லிங்கம்
421 சுக்கிர லிங்கம்
422 சுக லிங்கம்
423 சுகந்த லிங்கம்
424 சுகநிதி லிங்கம்
425 சுகுண லிங்கம்
426 சுடர் லிங்கம்
427 சுத்த லிங்கம்
428 சுதர்சண லிங்கம்
429 சுந்தர லிங்கம்
430 சுந்தரி லிங்கம்
431 சுப்பு லிங்கம்
432 சுமித்ர லிங்கம்
433 சுய லிங்கம்
434 சுயம்பு லிங்கம்
435 சுரபி லிங்கம்
436 சுருதி லிங்கம்
437 சுருளி லிங்கம்
438 சுரை லிங்கம்
439 சுவடி லிங்கம்
440 சுவடு லிங்கம்
441 சுவர்ண லிங்கம்
442 சுவாச லிங்கம்
443 சுவாதி லிங்கம்
444 சுனை லிங்கம்
445 சூட்சம லிங்கம்
446 சூர லிங்கம்
447 சூரி லிங்கம்
448 சூரிய லிங்கம்
449 சூல லிங்கம்
450 சூள்முடி லிங்கம்
451 சூளாமணி லிங்கம்
452 செக்கர் லிங்கம்
453 செங்கு லிங்கம்
454 செண்பக லிங்கம்
455 செந்தூர லிங்கம்
456 செம்ம லிங்கம்
457 செம்பாத லிங்கம்
458 செரு லிங்கம்
459 செருக்கு லிங்கம்
460 செல்வ லிங்கம்
461 செழுமை லிங்கம்
462 சேகர லிங்கம்
463 சேலிங்கம்
464 சேது லிங்கம்
465 சேர்ப்பு லிங்கம்
466 சேற்று லிங்கம்
467 சைல லிங்கம்
468 சைவ லிங்கம்
469 சொக்க லிங்கம்
470 சொப்பன லிங்கம்
471 சொர்க்க லிங்கம்
472 சொரூப லிங்கம்
473 சோம லிங்கம்
474 சோண லிங்கம்
475 சோபன லிங்கம்
476 சோலை லிங்கம்
477 சோழ லிங்கம்
478 சோழி லிங்கம்
479 சோற்று லிங்கம்
480 சௌந்தர்ய லிங்கம்
481 சௌந்தர லிங்கம்
482 ஞான லிங்கம்
483 தகழி லிங்கம்
484 தகு லிங்கம்
485 தங்க லிங்கம்
486 தச லிங்கம்
487 தட்சண லிங்கம்
488 தடாக லிங்கம்
489 தத்துவ லிங்கம்
490 தந்த லிங்கம்
491 தந்திர லிங்கம்
492 தமிழ் லிங்கம்
493 தர்பை லிங்கம்
494 தர்ம லிங்கம்
495 தருண லிங்கம்
496 தவ லிங்கம்
497 தளிர்  லிங்கம்
498 தன லிங்கம்
499 தனி லிங்கம்
500 தவசி லிங்கம்
501 தாண்டக லிங்கம்
502 தாண்டவ லிங்கம்
503 தாமு லிங்கம்
504 தாய் லிங்கம்
505 தார லிங்கம்
506 தாழி லிங்கம்
507 தாழை லிங்கம்
508 தாள லிங்கம்
509 தான்ய லிங்கம்
510 தாரகை லிங்கம்
511 திக்கு லிங்கம்
512 திகம்பர லிங்கம்
513 திகழ் லிங்கம்
514 தியாக லிங்கம்
515 தியான லிங்கம்
516 திரி லிங்கம்
517 திரிபுர லிங்கம்
518 திரு லிங்கம்
519 திருமேனி லிங்கம்
520 திருவடி லிங்கம்
521 திருவாசக லிங்கம்
522 திருவாத லிங்கம்
523 திலக லிங்கம்
524 திவ்ய லிங்கம்
525 தீ லிங்கம்
526 தீட்சை லிங்கம்
527 தீர்க்க லிங்கம்
528 தீர்த்த லிங்கம்
529 தீப லிங்கம்
530  தீர லிங்கம்
531 தீர்ப்பு லிங்கம்
532 துதி லிங்கம்
533 துர்கை லிங்கம்
534 துருவ லிங்கம்
535 துலா லிங்கம்
536 துளசி லிங்கம்
537 துறவு லிங்கம்
538 தூங்கா லிங்கம்
539 தூண்டா லிங்கம்
540 தூமணி லிங்கம்
541 தூய லிங்கம்
542 தூளி லிங்கம்
543 தெங்கு லிங்கம்
544 தெய்வ லிங்கம்
545 தெரிவை லிங்கம்
546 தெளி லிங்கம்
547 தென்னவ லிங்கம்
548 தேக லிங்கம்
549 தேகனி லிங்கம்
550 தேகி லிங்கம்
551 தேச லிங்கம்
552 தேசு லிங்கம்
553 தேயு லிங்கம்
554 தேர லிங்கம்
555 தேவ லிங்கம்
556 தேவபத லிங்கம்
557 தேவாதி லிங்கம்
558 தேவு லிங்கம்
559 தேன் லிங்கம்
560 தேன்மணி லிங்கம்
561 தேன லிங்கம்
562 தேனுக லிங்கம்
563 தைரிய லிங்கம்
564 தொகை லிங்கம்
565 தொட்டி லிங்கம்
566 தொடி லிங்கம்
567 தொடைய லிங்கம்
568 தொண்டக லிங்கம்
569 தொண்டை லிங்கம்
570 தொல் லிங்கம்
571 தோகச லிங்கம்
572 தோண்டி லிங்கம்
573 தோணி லிங்கம்
574 தோத்திர லிங்கம்
575 தோரண லிங்கம்
576 தோரி லிங்கம்
577 தோழ லிங்கம்
578 தோன்ற லிங்கம்
579 தௌத லிங்கம்
580 தௌல லிங்கம்
581 நகமுக லிங்கம்
582 நகு லிங்கம்
583 நகை லிங்கம்
584 நங்கை லிங்கம்
585 நசை லிங்கம்
586 நஞ்சு லிங்கம்
587 நடன லிங்கம்
588 நடம்புரி லிங்கம்
589 நடு லிங்கம்
590 நதி லிங்கம்
591 நந்தி லிங்கம்
592 நம்பி லிங்கம்
593 நம லிங்கம்
594 நயன லிங்கம்
595 நர்மதை லிங்கம்
596 நலமிகு லிங்கம்
597 நவ லிங்கம்
598 நவமணி லிங்கம்
599 நவிர லிங்கம்
600 நற்குண லிங்கம்
601 நற்றுணை லிங்கம்
602 நறுமண லிங்கம்
603 நன்மணி லிங்கம்
604 நன்மை லிங்கம்
605  நனி லிங்கம்
606 நா லிங்கம்
607 நாக லிங்கம்
608 நாச்சி லிங்கம்
609 நாசி லிங்கம்
610 நாட லிங்கம்
611 நாடி லிங்கம்
612 நாத்திர லிங்கம்
613 நாத லிங்கம்
614 நாரண லிங்கம்
615 நாரணி  லிங்கம்
616 நாரி லிங்கம்
617 நாபிச லிங்கம்
618 நாயன லிங்கம்
619 நாயாடி லிங்கம்
620 நாவ லிங்கம்
621 நாற்கர லிங்கம்
622 நான்மறை லிங்கம்
623 நான்முக லிங்கம்
624 நிகர் லிங்கம்
625 நித்தில லிங்கம்
626 நித்ய லிங்கம்
627 நிதர்சண லிங்கம்
628 நிதி லிங்கம்
629 நிபவ லிங்கம்
630 நிர்மல லிங்கம்
631 நிரஞ்சன லிங்கம்
632 நிரம்ப லிங்கம்
633 நிருதி லிங்கம்
634 நிமல லிங்கம்
635 நில லிங்கம்
636 நிலை லிங்கம்
637 நிவேத  லிங்கம்
638 நிறை லிங்கம்
639 நிஜ லிங்கம்
640 நிசாக லிங்கம்
641 நீடு லிங்கம்
642 நீடுநீர் லிங்கம்
643 நீத்தவ லிங்கம்
644 நீதி லிங்கம்
645 நீர்ம லிங்கம்
646 நீரச லிங்கம்
647 நீரேறு லிங்கம்
648 நீல லிங்கம்
649 நீள்முடி லிங்கம்
650 நீறாடி லிங்கம்
651 நீறு  லிங்கம்
652 நுதற் லிங்கம்
653 நுதி லிங்கம்
654 நூதன லிங்கம்
655 நெகிழ் லிங்கம்
656 நெஞ்சு லிங்கம்
657 நெட்ட லிங்கம்
658 நெடு லிங்கம்
659 நெய் லிங்கம்
660 நெற்றி லிங்கம்
661 நெறி லிங்கம்
662 நேச லிங்கம்
663 நேர் லிங்கம்
664 நைச்சி லிங்கம்
665 நைவேத்ய லிங்கம்
666 நொச்சி லிங்கம்
667 நோக்கு லிங்கம்
668 நோன்பு லிங்கம்
669 பசு லிங்கம்
670 பசுவ லிங்கம்
671 பசுபதி லிங்கம்
672 பஞ்ச லிங்கம்
673 பஞ்சாட்சர லிங்கம்
674 பட்டக லிங்கம்
675 படரி லிங்கம்
676 படிக லிங்கம்
677 பண்டார லிங்கம்
678 பண்டித லிங்கம்
679 பத்ம லிங்கம்
680 பத்ர லிங்கம்
681 பத்திர லிங்கம்
682 பதி லிங்கம்
683 பதிக லிங்கம்
684 பர்வத லிங்கம்
685 பரசு லிங்கம்
686 பரத லிங்கம்
687 பரம லிங்கம்
688 பரமாத்ம லிங்கம்
689 பரமேஸ்வர லிங்கம்
690 பரணி லிங்கம்
691 பரிதி லிங்கம்
692  பவண லிங்கம்
693 பவணி லிங்கம்
694 பவநந்தி லிங்கம்
695 பவழ லிங்கம்
696 பவாணி லிங்கம்
697 பவித்ர லிங்கம்
698 பளிங்கு லிங்கம்
699 பன்னக லிங்கம்
700 பனி லிங்கம்
701 பரகதி லிங்கம்
702 பராங்க லிங்கம்
703 பராபர லிங்கம்
704 பவநாச லிங்கம்
705 பா லிங்கம்
706 பாக்ய லிங்கம்
707 பாக லிங்கம்
708 பாச லிங்கம்
709 பாசறை லிங்கம்
710 பாசுர லிங்கம்
711 பாத லிங்கம்
712 பாதாள லிங்கம்
713 பாதி லிங்கம்
714 பாதிரி லிங்கம்
715 பார்வதி லிங்கம்
716 பாரதி லிங்கம்
717 பாராயண லிங்கம்
718 பாரி லிங்கம்
719  பாரிஜாத லிங்கம்
720 பாயிர லிங்கம்
721 பாலக லிங்கம்
723 பாலா லிங்கம்
723 பாவை லிங்கம்
724 பானு லிங்கம்
725 பாஷான லிங்கம்
726 பாகோட லிங்கம்
727 பாசுபத லிங்கம்
728 பாணிக  லிங்கம்
729 பார்த்திப லிங்கம்
730 பாநேமி லிங்கம்
731 பாம்பு லிங்கம்
732 பாழி லிங்கம்
733 பிச்சி லிங்கம்
734 பிச்சை லிங்கம்
735 பிட்டு லிங்கம்
736 பிடரி லிங்கம்
737 பிடாரி லிங்கம்
738 பிடி லிங்கம்
739 பிண்ட லிங்கம்
740 பித்த லிங்கம்
741 பிதா லிங்கம்
742 பிம்ப லிங்கம்
743 பிரகதி லிங்கம்
744 பிரகாச லிங்கம்
745 பிரசன்ன லிங்கம்
746 பிரணவ லிங்கம்
747 பிரதர்சன லிங்கம்
748 பிரபாகர லிங்கம்
749 பிரபு லிங்கம்
750 பிரம்ம லிங்கம்
751 பிரம்பு லிங்கம்
752 பிரமிள லிங்கம்
753 பிராண லிங்கம்
754 பிராசித லிங்கம்
755 பிரிய லிங்கம்
756 பிரேம லிங்கம்
757 பிள்ளை லிங்கம்
758 பிழம்பு லிங்கம்
759 பிறவி லிங்கம்
760 பிறை லிங்கம்
761 பீச லிங்கம்
762 பீட லிங்கம்
763 பீடு லிங்கம்
764 பீத லிங்கம்
765 பீதகார லிங்கம்
766 பீதசார லிங்கம்
767 பீதமணி லிங்கம்
768 பீதாம்பர லிங்கம்
769 பீர லிங்கம்
770 பீம லிங்கம்
771 புகழ் லிங்கம்
772 புங்கவ லிங்கம்
773 புங்கவி லிங்கம்
774 புடக லிங்கம்
775 புண்ணிய லிங்கம்
776 புத்தி லிங்கம்
777 புத்ர லிங்கம்
778 புதிர் லிங்கம்
779 புது லிங்கம்
780 புரட்சி லிங்கம்
781 புரவு லிங்கம்
782 பராண லிங்கம்
783 புரி லிங்கம்
784 புருஷ லிங்கம்
785 புருவ லிங்கம்
786 புலரி லிங்கம்
787 புலி லிங்கம்
788 புவன லிங்கம்
789 புற்று லிங்கம்
790 புற லிங்கம்
791 புன்னை லிங்கம்
792 புனித லிங்கம்
793 புனை லிங்கம்
794 புஜங்க லிங்கம்
795 புஷ்கர லிங்கம்
796 புஷ்ப லிங்கம்
797 பூசனை லிங்கம்
798 பூத லிங்கம்
799 பூதர லிங்கம்
800 பூதி லிங்கம்
801 பூபதி லிங்கம்
802 பூபால லிங்கம்
803 பூதவணி லிங்கம்
804 பூர்ண லிங்கம்
805 பூர்த்தி லிங்கம்
806 பூர்வ லிங்கம்
807 பூரணி லிங்கம்
808 பூமித லிங்கம்
809 பூமுக லிங்கம்
810 பூவிழி லிங்கம்
811 பூலோக லிங்கம்
812 பூஜித லிங்கம்
813 பெண் லிங்கம்
814 பெண்பாக லிங்கம்
815 பெரு லிங்கம்
816 பேரின்ப லிங்கம்
817 பேழை லிங்கம்
818 பைரவி லிங்கம்
819பொன்னம்பலலிங்கம்
820 பொன்னி லிங்கம்
821 பொருந லிங்கம்
822 பொருப்பு லிங்கம்
823 பொழி லிங்கம்
824 பொய்கை லிங்கம்
825 போக லிங்கம்
826 போதக லிங்கம்
827 போதன லிங்கம்
828 போதி லிங்கம்
829 போற்றி லிங்கம்
830 போனக லிங்கம்
831 பௌதிக லிங்கம்
832பௌர்ணமி லிங்கம்
833 மகர லிங்கம்
834 மகவு லிங்கம்
835 மகா லிங்கம்
836 மகிழ லிங்கம்
837 மகுட லிங்கம்
838 மகுடி லிங்கம்
839 மகேச லிங்கம்
840 மகேஸ்வர லிங்கம்
841 மங்கள லிங்கம்
842 மஞ்சரி லிங்கம்
843 மஞ்சு லிங்கம்
844 மண லிங்கம்
845 மணி லிங்கம்
846  மதன லிங்கம்
847 மதி லிங்கம்
848 மந்தாரை லிங்கம்
849 மந்திர லிங்கம்
850 மயான லிங்கம்
851 மயூர லிங்கம்
852 மரகத லிங்கம்
853 மருக லிங்கம்
854 மருத லிங்கம்
855 மருது லிங்கம்
856 மலர் லிங்கம்
857 மழலை லிங்கம்
858 மவுலி லிங்கம்
859 மன்னாதி லிங்கம்
860 மனித லிங்கம்
861 மனோ லிங்கம்
862 மலை லிங்கம்
863 மாங்கல்ய லிங்கம்
864 மாசறு லிங்கம்
865 மாசி லிங்கம்
866 மாசிவ லிங்கம்
867 மாட்சி லிங்கம்
868 மாணிக்க லிங்கம்
869 மாதங்கி லிங்கம்
870 மாதவ லிங்கம்
871 மாதவி லிங்கம்
872 மாது லிங்கம்
873 மாதேவி லிங்கம்
874 மாமிச லிங்கம்
875 மாயை லிங்கம்
876 மாலை லிங்கம்
877 மார்க்க லிங்கம்
878 மிசை லிங்கம்
879 மிண்டை லிங்கம்
880 மீளி லிங்கம்
881 மீன லிங்கம்
882 முக்கனீ லிங்கம்
883 முக்தி லிங்கம்
884 முகுந்த லிங்கம்
885 முடி லிங்கம்
886 முத்து லிங்கம்
887 மும்மல லிங்கம்
888 முரசு லிங்கம்
889 முருக லிங்கம்
890 முல்லை லிங்கம்
891 முனி லிங்கம்
892 மூர்த்தி லிங்கம்
893 மூல லிங்கம்
894 மெய் லிங்கம்
895 மேக லிங்கம்
896 மேதினி லிங்கம்
897 மேவி லிங்கம்
898 மேனி லிங்கம்
899 மொழி லிங்கம்
900 மொட்டு லிங்கம்
901 மோட்ச லிங்கம்
902 மோன லிங்கம்
903 மோலி லிங்கம்
904 மௌன லிங்கம்
905 யதி லிங்கம்
906 யாக லிங்கம்
907 யாசக லிங்கம்
908 யாத்திரை லிங்கம்
909 யுக்தி லிங்கம்
910 யுவ லிங்கம்
911 யோக லிங்கம்
912 யோகி லிங்கம்
913 ரகசிய லிங்கம்
914 ரம்ய லிங்கம்
915 ரமண லிங்கம்
916 ரத்தின லிங்கம்
917 ரத லிங்கம்
918 ராக லிங்கம்
919 ராட்சச லிங்கம்
920 ராவண லிங்கம்
921 ராஜ லிங்கம்
922 ரிஷப லிங்கம்
923 ரிஷி லிங்கம்
924 ருத்ர லிங்கம்
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம்
927 லகரி லிங்கம்
928 லாவண்ய லிங்கம்
929 லீலா லிங்கம்
930 லோக லிங்கம்
931 வசந்த லிங்கம்
932 வஞ்சி லிங்கம்
933 வடுக லிங்கம்
934 வர்ம லிங்கம்
935 வர லிங்கம்
936 வருண லிங்கம்
937 வல்லப லிங்கம்
938 வழக்கு லிங்கம்
939 வள்ளுவ லிங்கம்
940 வளர் லிங்கம்
941 வன லிங்கம்
942 வனப்பு லிங்கம்
943 வஜ்ர லிங்கம்
944 வாகை லிங்கம்
945 வாசி லிங்கம்
946 வாணி லிங்கம்
947 வாயு லிங்கம்
948 வார்ப்பு லிங்கம்
949 வாழ்க லிங்கம்
950 வான லிங்கம்
951 வானாதி லிங்கம்
952 வார்சடை லிங்கம்
953 விக்ர லிங்கம்
954 விக்ரம லிங்கம்
955 விகட லிங்கம்
956 விகார லிங்கம்
957 விகிர்த லிங்கம்
958 வசித்ர லிங்கம்
959 விடங்க லிங்கம்
960 வித்தக லிங்கம்
961 விதி லிங்கம்
962 விது லிங்கம்
963 விந்தை லிங்கம்
964 விநாசக லிங்கம்
965 விபீஷ்ண லிங்கம்
966 விபூதி லிங்கம்
967 விமல லிங்கம்
968 வியூக லிங்கம்
969 விருட்சக லிங்கம்
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம்
972 விழி லிங்கம்
973 வினைதீர் லிங்கம்
974 வினோத லிங்கம்
975 விஜய லிங்கம்
976 விஷ்ணு லிங்கம்
977 விஸ்வ லிங்கம்
978 விஸ்வேஸ்வரலிங்கம்
979 வீர லிங்கம்
980 வீணை லிங்கம்
981 வெற்றி லிங்கம்
982 வெற்பு லிங்கம்
983  வெள்ளி லிங்கம்
984 வேங்கட லிங்கம்
985 வேங்கை லிங்கம்
986 வேட்டுவ லிங்கம்
987 வேத லிங்கம்
988 வேதாந்த லிங்கம்
989 வேம்பு லிங்கம்
990 வேழ லிங்கம்
991 வேள்வி லிங்கம்
992 வைகை லிங்கம்
993 வைர லிங்கம்
994 வைத்திய லிங்கம்
995 வைய லிங்கம்
996 ஜடா லிங்கம்
997 ஜதி லிங்கம்
998 ஜல லிங்கம்
999 ஜீவ லிங்கம்
1000 ஜெக லிங்கம்
1001 ஜெய லிங்கம்
1002 ஜென்ம லிங்கம்
1003 ஜோதி லிங்கம்
1004 ஶீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம்
1006 ஹேம லிங்கம்
1007 ஐஸ்வர்ய லிங்கம்
1008 சுப லிங்கம்
 
               சுபம்
           சிவமயம்

#117 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best inspirational video in tamil

#13 தினம் ஒரு திருக்குறள் | குறள் 583 ஒற்றினான் ஒற்றிப் | Dhinam Oru Thi...

ஒரு வாகன ஓட்டுனர், தனது ஒரிஜினல் ஓட்டுநர் லைசென்சை தொலைத்து விட்டால்...

பொதுமக்களுக்கு கஷ்டந்தான்!

மோட்டார் வாகன சட்டப்படி, அசல் ஆவணங்கள் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. ஒரிஜினல் தொலைந்துவிட்டால் என்ன செய்வது? என்று நாம் அனைத்து ஆவணங்களின் நகலைத்தான் இதுவரை உடன் வைத்திருந்தோம். இனிமேல் போக்குவரத்து காவல்துறையினர்  இதை  அனுமதிக்க மாட்டார்கள். இது நல்லதுக்குத்தான் என்றாலும், நடைமுறை சிக்கல்களை பொதுமக்களாகிய நாம்தான் அனுபவிக்கப் போகிறோம்.

தொலைந்து போனால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு வாகன ஓட்டுனர், தனது ஒரிஜினல் ஓட்டுநர் லைசென்சை தொலைத்து விட்டால், அவர் வசிக்கும் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் கொடுக்க வேண்டுமாம். ஒரு வாரம் கழித்து மீண்டும் அவர்களை போய் பார்த்து, 'கண்டுபிடிக்க முடியவில்லை' என, சான்றிதழ் ஒன்று அவர்களிடமிருந்து வாங்கி வர வேண்டுமாம்.  அந்த சான்றிதழை, அவர் வசிக்கும் பகுதியை சேர்ந்த, வட்டார போக்குவரத்து அலுவலர் (Regional Transport Officer) அவர்களிடம் கொடுக்க வேண்டுமாம். அவர் அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும், அந்த நபரின் டிரைவிங் லைசென்ஸ் எண்ணை அனுப்பி, 'இவரது லைசென்சை, யாராவது ஏதாவது குற்றத்தின் அடிப்படையில் பறிமுதல் செய்து உள்ளீர்களா?' என கேட்டு, கடிதம் எழுதுவாராம்.

அதற்கு, பதில் வராத பட்சத்தில், எல்.எல்.டி., படிவம் மற்றும் 20ரூபாய் மதிப்புள்ள பத்திரத்தில், 'தற்போது, நான் வாங்கும் லைசென்சை தவறாக பயன்படுத்த மாட்டேன். இதில், நடக்கும் தவறுக்கு நானே பொறுப்பு'  என்று நாம் எழுதி கொடுக்க வேண்டுமாம். பின்,10 நாட்களில், புதிய டிரைவிங் லைசென்ஸ் கிடைக்குமாம். (எப்படியும் ரெண்டு மாசம் ஆயிடும்)

Sunday 27 August 2017

#Drawing_for_kids #4 | Easy monkey drawing for kids | Monkey drawing ide...

சிற்றின்பம் ...பேரின்பம்...!!

#சித்தர்_வாக்கு.....

இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!

படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.

படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.

படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.

படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.

படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.

படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.

என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.

இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.

நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.

நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.

அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.

அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.

செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.

செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.

செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.

செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.

புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.

அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.

இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.

வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.

நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.

நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.

உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.

உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.

இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.

துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.

எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.

எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.

பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.

மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.

பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.

பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.

சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.

எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.

பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.

தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.

அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.

அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.

அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.

அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.

அழகை மட்டும் ஆராதித்தால் சிற்றின்பம்.

அழகற்றதும் அழகும் ஒன்றானால் பேரின்பம்.

பயன் கருதி செயல் புரிந்தால் சிற்றின்பம்.

பயன் கருதாது செயல் புரிந்தால் பேரின்பம்.

முதலில் இனித்து பின் கசப்பது சிற்றின்பம்.

முதலில் கசந்து பின் என்றும் இனிப்பது பேரின்பம்.

இரக்கமற்றது, ஒழுக்கமற்றது சிற்றின்பம்.

கருணையுடையது, தர்மமானது பேரின்பம்.

உடலாய் அனைத்தையும் கண்டால் சிற்றின்பம்.

உயிராய் அனைத்தையும் கண்டால் பேரின்பம்.

புலன்களில் இன்பம் துய்ப்பது சிற்றின்பம்.

புலன்களுக்கு அப்பால் சென்றால் பேரின்பம்.

மனம் உலகில் அலைந்தால் சிற்றின்பம்.

மனம் இறைவனில் ஒடுங்கினால் பேரின்பம்.

மரண பயம் ஏற்படுத்துவது சிற்றின்பம்.

மரணத்தையும் வெல்வது பேரின்பம்.

மனமாய் இருந்தால் சிற்றின்பம்.

மனதைக் கடந்தால் பேரின்பம்.

வேறு வேறாய்க் கண்டால் சிற்றின்பம்.

எல்லாம் ஒன்றெனக் கண்டால் பேரின்பம்.

பகுதியாய்க் கண்டால் சிற்றின்பம்.

மொத்தமாய் கண்டால் பேரின்பம்.

அகங்காரம் கொண்டால் சிற்றின்பம்.

அகங்காரம் துறந்தால் பேரின்பம்.

தசையில் சுகம் பெறுவது சிற்றின்பம்.

அன்பில் தன்னை இழப்பது பேரின்பம்.

ஆண் பெண்ணில் இன்புறுவது சிற்றின்பம்.

ஆண் பெண்ணை வணங்குவது பேரின்பம்.

துய்க்கும் நேரத்தில் மட்டும் இருப்பது சிற்றின்பம்.

துய்த்து விட்டால் நீங்காதது பேரின்பம்.

ஜீவராசிகளால் தரமுடிந்தது சிற்றின்பம்.

இறைவனால் தரப்படுவது பேரின்பம்.

உலகைப் பற்றினால் சிற்றின்பம்.

இறைவனைப் பற்றினால் பேரின்பம்.

பிறர் நலனைக் காணாதது சிற்றின்பம்.

தன் நலம் கொள்ளாதது பேரின்பம்.

இன்பம் இல்லாத இன்பம் சிற்றின்பம்.

இன்பமான இன்பமே பேரின்பம்.

அஞ்ஞானம் விரும்புவது சிற்றின்பம்.

ஞானம் விரும்புவது பேரின்பம்.

பெற்று மகிழ்வது சிற்றின்பம்.

கொடுத்து மகிழ்வது பேரின்பம்.

சக்தியை இழப்பது சிற்றின்பம்.

சக்தியாய் மாறுவது பேரின்பம்.

பற்றுக் கொள்வது சிற்றின்பம்.

பற்றற்று இருப்பது பேரின்பம்.

மாறுவது, தாவுவது சிற்றின்பம்.

மாறாதது நிலைத்தது பேரின்பம்.

நிலையற்றது சிற்றின்பம்.

நிரந்தரமானது பேரின்பம்.

#12 தினம் ஒரு திருக்குறள் | குறள் 823 பலநல்ல கற்றக் | Dhinam Oru Thiruku...

#116 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best inspirational video in tamil

Mr. 2000 & Ms. 500 happily married in Nov 2016.

Mr. 2000 & Ms. 500
happily married in Nov 2016.
After 9 months,
they are blessed with twin babies:
Master 50 and Angel 200...😊

கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால்...

பாட்டி வைத்தியம்:-

* பப்பாளி பழத்தை மசித்து முகம், கழுத்து, கைகளில் பூசி 1\2 மணி நேரம் ஊறவைத்து பின்முகம் கழுவ முக அழகு கூடும்.

* கண்ணாடி துண்டால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள், ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.

* கைகால்களில் வெடிப்பு குணமாக மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணை, தேங்காய் எண்ணை சரிசமமாக கலந்த தடவ குணமாகும்.

* அரைக்கீரை இலை 10 கிராம், 2 கிராம் மிளகுடன் மைய அரைத்து, மோரில் கலந்து தினம் இருவேளை சாப்பிட சிறுநீர் எரிச்சல், அடிக்கடி சிறுநீர் போவது குணமாகும். தூக்கத்தில் சிறுநீர் செல்வது கட்டுப்படுத்தும்.

* உத்தாமணி இலை 10 கிராமை 100 மில்லி நீரில் சிறிது வசம்பு சேர்த்துக் காய்ச்சி காலை, மாலை 10 மில்லி சாப்பிட, மந்தம், வயிற்று உப்புசம், ஜீரண சக்தியின்மை குணமாகும்.

* ஊமத்தை இலை சாறு 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 200 மில்லி இரண்டையும் நன்கு கலந்து, நீர் வற்றும் வரை காய்ச்சி எடுத்துக்கொள்ளலாம். அழுகிய புண்கள், குழிப்புண், தீ புண், புரையோடிய புண்ணிற்கு மேல் உபயோகம் பயன்படுத்த குணமாகும்.

* எருக்கன் பழுத்த இலையை அனலில் வதக்கி எடுத்த சாறுடன் தேன், சுண்ணாம்பு சேர்த்து குழைத்து, உடலில் தோன்றும் சிறு சிறு அனல் கட்டிகளுக்கு தடவிட உடையும். குளவி தேனீ, தேள் கடித்த இடத்தில் தடவிட விஷம் இறங்கும்

உன் இயல்பை வெளிபடுத்த அஞ்சாதே !!

குறை சொல்வான் !! குற்றம் காண்பான் !! என்று உன் இயல்பை வெளிபடுத்த அஞ்சாதே !! ( அஞ்சேல் என்று உடனிருந்து அருளிக்கொண்டு இருப்பவன் தயவாலே !! )

பிறர் என்ன நினைப்பார் !! எப்படி ஏற்றுகொள்வார் !! குற்றம் காண்பாரோ ?? என்று நமக்கான தனித்தன்மையான வெளிபாட்டை பிறருக்கு ஏற்றவாறு வெளிபடுத்தி ?? அஞ்சி ?? நமது தனித்தன்மையே இழந்து வாழ்கிறோம் !!

முதலில் குறை சொல்வார் ?? குற்றம் காண்பர் ?? பற்றிய மெய்யை உணர்வோம் !!

குறை சொல்லிக்கொண்டே !! குற்றம்சாற்றிகொண்டே !! வாழ்பவர்கள் நிறைவாக வாழதெரியாதவர்கள் !! தன் குறையை பிறரிடம் எதிர்பார்பவர்கள் ??

என்னதான் நிறைவு இருந்தாலும் அதில்  குறையே தேடி நிறையை  அனுபவிக்காதவர்கள் !! தன் குற்றம் ஒத்துகொள்ளாது பிறர் குற்றம் கண்டுபிடிப்பதே வாழ்வாக வாழ்ந்து !! தன் வாழ்வை வாழாதவர்கள் !!

கேவலாமான  இவர்களுக்கு அஞ்சி உங்கள் இயல்பை தொலைத்து !! என்றும் அவர்களிடம் நல்ல பேர் வாங்கவே முடியாது !! இது மெய் !!

இந்த மெய்யை பலவருடம் பட்டு அலுந்தியே உணர்வேன் / உணர்ந்தேன் என்று உங்கள் வாழ்வை அவர்களுக்காக தொலைத்து !! தனித்தன்மையும் இழந்து வாழாதே ?? அவர்களை புறம்தள்ளி உங்கள் வாழ்கையை வாழுங்கள் !!

அனுபவிப்பதில் எல்லாம் குற்றமே கண்டு !! அனுபவிப்பதன் பயனை அறியாதவர் பற்றி நமக்கு என்ன !!

எங்கும் எதுவாகவும் நிறைந்தவன் தயவாலே !! ஒரே அனுபவிப்பதில் நில்லாது !! அனுபவிக்க ஆயிரம் அருளியவனோடு அனுபவித்து வாழுங்கள் !!

எதற்கும் அஞ்சேல் என்று அருளிகொண்டே எப்போதும் உடனாகவும் !! உள்ளும் !! இருப்பவன் இருக்கிறான் !! கொண்டாடுங்கள் !! வாழுங்கள் !! அனுபவிக்க வைத்தவனோடு அனுபவித்து  வாழுங்கள் !!

( யாருக்கு என்று அறிந்தவன் உணர்த்தலால் !! ஏதும் அறியாதவன் பதிவு !! அறிவுறுத்தியவன் தயவாலே !! ( கு அ ))

திருச்சிற்றம்பலம்

நற்றுணையாவது நமச்சிவாயவே

Saturday 26 August 2017

#Drawing_for_kids #3 | Simple dog drawing for kids | Dog drawing ideas f...

Vijay all 61 movies | விஜய் படங்கள்...

📽 *Vijay Movies* 🎬

1990 - Naaliya theerpu {1}
1993 - Senthoora Paandi {2}
1994 - Rasigan {3}
1995 - Rajavin parvaiyile {4}
1995 - Deva {5}
1995 - Vishnu {6}
1995 - Chandralekha {7}
1996 - Coimbatore mapulai {8}
1996 - Poove unakaga {9}
1996 - Vasantha vasal {10}
1996 - Maanbumigu manavan {11}
1996 - Selva {12}
1997 - Kaalemellam kaathuiruppen {13}
1997 - Love today {14}
1997 - Once more {15}
1997 - Nerrukku Ner {16}
1997 - kadhalukku mariyadhai {17}
1997 - Ninaithen vandhai {18}
1998 - Priyamudan {19}
1998 - Nilaave Vaa {20}
1999 - Thulladha manamum thullum {21}
1999 - Endrendrum Kadhal {22}
1999 - Nenjinile {23}
1999 - Minsara kanna {24}
2000 - Kannukul nilavu {25}
2000 - Kushi {26}
2000 - Priyamaanavale {27}
2001 - Friends {28}
2001 - Badri {29}
2001 - Shajahan {30}
2002 - Thamizhan {31}
2002 - Youth {32}
2002 - Bhagavathi {33}
2003 - Vaseegara {34}
2003 - Puthuiya Geethai {35}
2003 - Thirumalai {36}
2004 - Udhaya {37}
2004 - Gilli {38}
2004 - Madhurai {39}
2005 - Thirupaachi {40}
2005 - Sachien {41}
2005 - Sukran {42}
2005 - Sivagasi {43}
2006 - Aadhi {44}
2007 - Pokkiri {45}
2007 - Azhagiya Tamil magan {46}
2008 - Kuruvi {47}
2009 - Villu {48}
2009 - Vettaikaaran {49}
2010 - Sura {50}
2011 - Kaavalan {51}
2011 - Velayudham {52}
2012 - Nanban {53}
2012 - Thuppakki {54}
2013 - Thalaiva {55}
2014 - Jilla {56}
2014 - kaththi{57}
2015- puli{58}
2016-THERI{59}
2017-Bhairava{60}
2017-Mersal (61) coming soon

#Drawing_for_kids #2 | Simple cat drawing for kids | Cat drawing ideas f...

Thursday 24 August 2017

#Kids_Drawing #1 | Simple elephant drawing | Happy ganesh chaturthy 2017

#113 தினம் ஐந்து பொன்மொழிகள் | Best inspirational video in tamil

#9 தினம் ஒரு திருக்குறள் | குறள் 489 | எய்தற் கரியது | Dhinam Oru Thiruk...

#ஆரம்பக்கல்வி #5 | ஒன்று முதல் இருபது வரை தெரிந்துகொள்வோமா.? Learn numbe...

#ஊடலுவகை - The Pleasures of Temporary Variance | 1321 to 1330 | திருக்குறள் - Thirukural | காமத்துப்பால் - Kamathupaal | அதிகாரம் - Chapter

#குறள் 1321:


இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு.

Kural 1321 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Illai Thavaravarkhkhu Aayinum Ooduthal
Vallathu AvarAlikhkhu Maaru.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
எந்த தவறும் இல்லாத நிலையிலும்கூட காதலர்க்கிடையே தோன்றும் ஊடல், அவர்களின் அன்பை மிகுதியாக வளர்க்கக் கூடியது.
மு.வரதராசனார் உரை:
அவரிடம் தவறு ஒன்றும் இல்லையானலும், அவரோடு ஊடுதல், அவர் நம்மேல் மிகுதியாக அன்பு செலுத்துமாறு செய்ய வல்லது.
சாலமன் பாப்பையா உரை:
அவரிடம் தவறே இல்லை என்றாலும், அவர் என்னிடம் மிகுந்த அன்பைச் செலுத்தும்படி செய்யவல்லது ஊடல்.
பரிமேலழகர் உரை: 
[அஃதாவது , அப்பெற்றித்தாய ஊடலால் தமக்குக் கூடல் இன்பம் சிறந்துழி , அச்சிறப்பிற்கு ஏதுவாய அவ்வூடலைத் தலைமகள் உவத்தலும் , தலைமகன் உவத்தலும் ஆம் . அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

(தலைமகள் காரணமின்றிப் புலக்கின்றமை கேட்ட தோழி, அங்ஙனம் நீ புலக்கின்றது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) அவர்க்குத் தவறு இல்லையாயினும் - அவர்மாட்டுத் தவறில்லை ஆயினும், அவர் அளிக்குமாறு ஊடுதல் வல்லது - நமக்கு அவர் தலையளி செய்கின்றவாறு அவரோடு ஊடுதலை விளைக்கவற்றாகின்றது. ('அவர்க்கு' என்பது, வேற்றுமை மயக்கம். 'அளவிறந்த இன்பத்தராகலின், யான் எய்தற்பாலதாய இத்தலையளி ஒழிந்தாரும் எய்துவர் எனக் கருதி அது பொறாமையான் ஊடல்நிகழா நின்றது' என்பதாம்.).
மணக்குடவர் உரை: 
அவர்மாட்டுத் தவறில்லையானாலும் அவர்செய்யும் அருள் ஊடுதலைச் செய்யவற்று. இது துன்பம் பயப்பதாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கென்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காதலிரிடத்தில் தவறு ஒன்றும் இல்லையென்றாலும் அவர் நம்மீது பேரன்பினை அளிக்கும் தன்மை அவருடன் பிணக்கினை உண்டாக்கிக் கொள்ள வல்லமையுடையதாகின்றது.
Translation: 
Although there be no fault in him, the sweetness of his love
Hath power in me a fretful jealousy to move.
Explanation: 
Although my husband is free from defects, the way in which he embraces me is such as to make me feign dislike.



குறள் 1322:


ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

Kural 1322 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Oodalin Thoandrum Siruthuni Nallali
Vaadinum Paadu Perum.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
காதலரிடையே மலர்நதுள்ள நல்லன்பு சற்று வாடுவதற்கு, ஊடுதல் காரணமாக இருந்தாலும் அதனால் விளைகிற சிறிய துன்பம் பெருமையுடையதேயாகும்.
மு.வரதராசனார் உரை:
ஊடுதலால் உண்டாகின்ற சிறிய துன்பம், காதலர் செய்கின்ற நல்ல அன்பு வாடிவிடக் காரணமாக இருந்தாலும் பெருமை பெறும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடல் காரணமாக என்னிடம் தோன்றும் சிறு துன்பத்தினால் அவர் என்மீது காட்டும் பேரன்பு வாடினாலும் பெருமை பெறும்.
பரிமேலழகர் உரை: 
(புலவாக்காலும் அத்தலையளி பெறலாயிருக்க, அஃது இழந்து புலவியான் வருந்துவது என்னை? என்றாட்கு, அவள் சொல்லியது.) ஊடலின் தோன்றும் சிறுதுனி - ஊடல் ஏதுவாக நங்கண் தோன்றுகின்ற சிறிய துனிதன்னால்; நல்லளி வாடினும் பாடு பெறும் - காதலர் செய்யும் நல்ல தலையளி வாடுமாயினும் பெருமை எய்தும். ('தவறின்றி நிகழ்கின்ற ஊடல் கடிதின் நீங்கலின் அத்துன்பமும் நில்லாது' என்பாள், 'சிறு துனி' என்றும், 'ஆராமைபற்றி நிகழ்தலின் அதனான் நல்லளி வாடாது' என்பாள், 'வாடினும்' என்றும், 'பின்னே பேரின்பம் பயக்கும்' என்பாள் 'பாடு பெறும்' என்றும் கூறினாள்.).
மணக்குடவர் உரை: 
ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஊடல் காரணமாகத் தம்மிடம் தோன்றுகின்ற சிறிய பிணக்கினால் காதலர் செய்யும் நல்லன்பு வாடுமாயினும் அது பெருமையினையே பெறுவதாகும்.
Translation: 
My 'anger feigned' gives but a little pain;
And when affection droops, it makes it bloom again.
Explanation: 
His love will increase though it may (at first seem to) fade through the short-lived distress caused by (my) dislike.



குறள் 1323:


புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

Kural 1323 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

PulathThalinn PuththoalNaadu Undoh NilathThodu
NeeriYaindh ThannNaar Agaththu.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
நிலத்தோடு நீர் கலந்தது போல அன்புடன் கூடியிருக்கும் காதலரிடத்தில் ஊடல் கொள்வதை விடப் புதிய உலகம் வேறொன்று இருக்க முடியுமா?.
மு.வரதராசனார் உரை:
நிலத்தோடு நீர் பொருந்தி கலந்தாற் போன்ற அன்புடைய காதலரிடத்தில் ஊடுவதை விட இன்பம் தருகின்ற தேவருலம் இருக்கின்றதோ?.
சாலமன் பாப்பையா உரை:
நிலத்தோடு நீர் கலந்தாற்போன்ற ஒற்றுமையை உடைய என்னவரோடு ஊடிப் பெறும் இன்பத்தைப் போலத் தேவர்கள் நாட்டு இன்பம் இருக்குமோ?.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது.) நிலத்தொடு நீர் இயைந்து அன்னார் அகத்துப் புலத்தலின் - நிலத்தொடு நீர் கலந்தாற்போல ஒற்றுமை உடைய காதலர் மாட்டுப் புலத்தல் போல; புத்தேள் நாடு உண்டோ - நமக்கின்பம் தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ? இல்லை. (நீர் தான் நின்ற நிலத்தியல்பிற்றாமாறு போலக் காதலரும் தாம் கூடிய மகளிரியல்பினராகலான், அதுபற்றி அவரோடு புலவி நிகழும் என்பாள், 'நிலத்தொடு நீர் இயைந்தன்னாரகத்து' என்றும், 'அவர் நமக்கும் அன்னராகலின்', அப்புலவி பின்னே பேரின்பம் பயவாநின்றது' என்பாள், 'புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ' என்றும் கூறினாள், உவமம் பயன்பற்றி வந்தது.).
மணக்குடவர் உரை: 
நிலனும் நீரும் பொருந்தினாற்போல ஒன்றுபட்ட நெஞ்சுடையார்மாட்டுப் புலத்தல்போல, இன்பந்தருவதொரு புத்தேள் உலகம் உண்டோ?. நிலத்தோடு நீரியைதலால் அவை வெப்பமும் தட்பமும் கூடியிருக்குமாறு போல இன்பமும் துன்பமும் கூட அனுபவிப்பார் மாட்டென்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: 
நிலத்துடன் நீர் கலந்ததைப் போன்ற ஒற்றுமையுடைய காதலரிடத்தில் புலந்து கொள்ளுவதைப் போல நமக்கு இன்பம் தருவதொரு புத்தேள் நாடு உண்டோ?.
Translation: 
Is there a bliss in any world more utterly divine,
Than 'coyness' gives, when hearts as earth and water join?.
Explanation: 
Is there a celestial land that can please like the feigned dislike of those whose union resembles that of earth and water?.



குறள் 1324:


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

Kural 1324 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Pulli VidaaAph PulaviYul ThoandruMen
Ullam Udaikhkhum Padai.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
இறுகத் தழுவி இணை பிரியாமல் இருப்பதற்குக் காரணமாக ஊடல் அமைகிறது. அந்த ஊடலில்தான் என் உள்ளத்து உறுதியைக் குலைக்கும் படைக்கலனும் இருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
காதலரைத் தழுவிக்கொண்டு விடாமலிருப்பதற்கு காரணமான ஊடலுள், என்னுடைய உள்ளத்தை உடைக்க வல்ல படை தோன்றுகிறது.
சாலமன் பாப்பையா உரை:
என்னவரைத் தழுவிக் கொண்டு, விடாமல் இருப்பதற்குக் காரணமாகிய ஊடலில் அதற்குமேலே சென்று என் உறுதியையும் உடைக்கும் ஆயுதம் இருக்கிறது.
பரிமேலழகர் உரை: 
(அப்புலவி இனி யாதான் நீங்கும்? என்றாட்குச் சொல்லியது.) புல்லி விடாப் புலவியுள் தோன்றும் - காதலரைப் புல்லிக் கொண்டு பின் விடாமைக்கு ஏதுவாகிய அப்புலவிக்கண்ணே உளதாம்; என் உள்ளம் உடைக்கும் படை - அதன் மேற்சென்ற என்னுள்ளத்தைக் கெடுக்கும் படைக்கலம். ('புலவியுள்' என்னும் ஏழாவது வினைநிகழ்ச்சிக்கண் வந்தது. என்னுள்ளம் உடைக்கும் படைக்கலம் என்றது, வணக்கத்தையும் பணிமொழியையும் . படைக்கலம் என்றாள், அவற்றான் அப் புலவிஉள்ளம் அழிதலின். புலவி நீங்கும் திறம் கூறியவாறு.).
மணக்குடவர் உரை: 
என் உள்ளத்தை அழிக்குங் கருவி, புல்லினவிடத்து விட்டுப் புலந்தவிடத்துத் தோன்றும். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால் அதனைக் கெடுக்கும் இன்பமுடைத்தென்று கூறியவாறு. படை- பணிமொழி. இவை யெட்டும் தலைமகன் கூற்று.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
என் உள்ளத்தினைக் கெடுக்கும் படைக்கலம், காதலரைத் தழுவிக் கொண்டு பின்னர் விடாமைக்குக் காரணமான அப்புலவியின்கண் உண்டாவதாகும்.
Translation: 
'Within the anger feigned' that close love's tie doth bind,
A weapon lurks, which quite breaks down my mind.
Explanation: 
In prolonged dislike after an embrace there is a weapon that can break my heart.



குறள் 1325:


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து.

Kural 1325 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Thavarilar Aayinum ThaamVeezhvaar Mendroale
Agaralin AanghGhon Rudaiththu.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
தவறே செய்யாத நிலையிலும்கூட தன்னுள்ளம் கொள்ளை கொண்டவளின் ஊடலுக்கு ஆளாகி அவளது மெல்லிய தோள்களைப் பிரிந்திருப்பதில் ஓர் இன்பம் இருக்கிறது.
மு.வரதராசனார் உரை:
தவறு இல்லாத போதும் ஊடலுக்கு ஆளாகித் தாம் விரும்பும் மகளிரின் மெல்லிய தோள்களை நீங்கி இருக்கும் போது ஓர் இன்பம் உள்ளது.
சாலமன் பாப்பையா உரை:
ஆண்கள் மீது தவறு இல்லை என்றாலும் தவறு செய்தவராகவே நின்று, மனைவியால் ஊடப்பட்டு தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது, அந்த ஊடலிலும் ஓர் இன்பம் இருக்கிறது.
பரிமேலழகர் உரை: 
(தலைமகளை ஊடல் நீக்கிக் கூடிய தலைமகன் கழியுவகையனாய்த் தன்னுள்ளே சொல்லியது.) தவறு இலராயினும் தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் - ஆடவர் தங்கண் தவறிலராயினும், உடையார்போல ஊடப்பட்டுத் தாம் விரும்பும் மகளிருடைய மெல்லிய தோள்களைக் கூடப்பெறாத எல்லைக்கண்; ஆங்கு ஒன்று உடைத்து - அவர்க்கு அப்பெற்றியதோர் இன்பம் பயத்தல் உடைத்து. (உடையராயக்கால் இறந்த இன்பத்தோடு வரும் இன்பமுமெய்துவர் ஆகலின், அது மிக நன்று. மற்றை இலராயக்காலும் வரும் இன்பத்தை இகழ்ந்ததில்லை என்னும் கருத்தால், 'தவறிலராயினும் ஆங்கு ஒன்று உடைத்து' என்றான். ஊடலினாய இன்பம் அளவிறத்தலின், 'கூறற்கரிது' என்பான், 'அப்பெற்றியதொன்று' என்றான். 'தவறின்றி' ஊடியதூஉம் எனக்கு இன்பமாயிற்று' என்பதாம்.).
மணக்குடவர் உரை: 
தாம் தவறிலராயினும் தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள்களை நீங்குதலானே, அஃது ஓரின்பமுடைத்து. இது குற்றம் உண்டாயினும் இல்லையாயினும் ஊடலிற் கூடல் நன்றென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஆடவரிடத்தில் தவறு இல்லையென்றாலும் இருப்பதுபோல ஊடுதல் செய்கின்ற (தாம் விரும்பிய), மகளிரது மெல்லிய தோள்களைக் கூடப் பெறாதபோது காதலர்க்கு அப்படிப் பட்டதோர் இன்பம் தரும் தன்மையுடையதாம்.
Translation: 
Though free from fault, from loved one's tender arms
To be estranged a while hath its own special charms.
Explanation: 
Though free from defects, men feel pleased when they cannot embrace the delicate shoulders of those whom they love.



#குறள் 1326:


உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

Kural 1326 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Unalinum Undadhu AralYinidhu Khaamam
Punardhalin Oodal Yinidhu.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
உணவு அருந்துவதைவிட, அருந்திய உணவு செரிப்பதிலே ஒரு சுகம். அதைப்போல் உடலுறவைவிட ஊடல் கொள்வதிலேயே காதலர்க்கு ஒரு சுகம்.
மு.வரதராசனார் உரை:
உண்பதை விட முன் உண்ட உணவுச் செரிப்பது இன்பமானது, அதுபோல் காமத்தில் கூடுவதைவிட ஊடுதல் இன்பமானது.
சாலமன் பாப்பையா உரை:
உண்பதைவிட உண்டது செரிப்பது இனியது; அதுபோலக், கூடிக் கலப்பதை விட ஊடுவது காதலுக்கு இனியது.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது.) உணலினும் உண்டது அறல் இனிது - உயிர்க்கு, மேலுண்பதனினும் முன் உண்டது அறுதல் இன்பந்தரும்; காமம் புணர்தலின் ஊடல் இனிது - அதுபோலக் காமத்திற்கு மேற்புணர்தலினும் முன்னைத் தவறு பற்றி ஊடுதல் இன்பம் தரும். ('காமத்திற்கு' என்புழிச் சாரியையும் நான்கனுருபும் விகாரத்தால் தொக்கன. பசித்துண்ணும்வழி மிக உண்ணலுமாய் இன்சுவைத்துமாம்; அது போல,அகன்று கூடும்வழி ஆராததுமாய்ப் பேரின்பத்ததுமாம் எனத் தன் அனுபவம் பற்றிக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை: 
உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
உண்ணுகின்றபோது உண்டாகின்ற இன்பத்தினைவிட உண்டது சீரணிக்கின்றதால் உண்டாகும் இன்பம் சிறந்ததாகும். அதுபோல் காமத்திற்குப் புணர்தலைவிட ஊடலின்பம் சிறந்ததாகும்.
Translation: 
'Tis sweeter to digest your food than 'tis to eat;
In love, than union's self is anger feigned more sweet.
Explanation: 
To digest what has been eaten is more delightful than to eat more; likewise love is more delightful in dislike than intercourse.



குறள் 1327:


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும்.

Kural 1327 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Oodalil Thoatravar Vendraar AdhuMannum
Koodalir Kaanaph Padum.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
ஊடல் என்கிற இனிய போரில் தோற்றவர்தான் வெற்றி பெற்றவராவார். இந்த உண்மை ஊடல் முடிந்து கூடிமகிழும் போது உணரப்படும்.
மு.வரதராசனார் உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர், அந்த உண்மை,ஊடல் முடிந்த பின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவார்; அந்த வெற்றியைக் கூடிப் பெறும் இன்பத்தில் அறியலாம்.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். (தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.).
மணக்குடவர் உரை: 
ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காமம் நுகர்வதற்குரிய இருவருள் ஊடலின்கண்ணே தோற்றவர் வென்றவராவார். அது அப்போது அறியப்படாததே யாயினும், பின்னர் புணர்ச்சியின் பொது அவரால் அறியப்படும்.
Translation: 
In lovers' quarrels, 'tis the one that first gives way,
That in re-union's joy is seen to win the day.
Explanation: 
Those are conquerors whose dislike has been defeated and that is proved by the love (which follows).



#குறள் 1328:


ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

Kural 1328 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Voodiph PeruGhuvam Kolloh NudhalVeyarphPakh
Koodalil Thoandriya Uphpu.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
நெற்றியில் வியர்வை அரும்பிடக் கூடுவதால் ஏற்படும் இன்பத்தை, மீண்டும் ஒருமுறை ஊடல் தோன்றினால், அதன் வாயிலாகப் பெற முடியுமல்லவா?.
மு.வரதராசனார் உரை:
நெற்றி வியர்க்கும் படியாக கூடுவதில் உளதாகும் இனிமையை ஊடியிருந்து உணர்வதன் பயனாக இனியும் பெறுவோமாக?.
சாலமன் பாப்பையா உரை:
நெற்றி வியர்க்கும்படி கலவியில் தோன்றும் சுகத்தை இன்னுமொரு முறை இவளுடன் ஊடிப் பெறுவோமா?.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது.) நுதல் வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு - இதுபொழுது இவள் நுதல் வெயர்க்கும்வகை கலவியின்கண் உளதாய இனிமையை; ஊடிப் பெறுகுவம் கொல்லோ - இன்னும் ஒரு கால் இவள் ஊடி யாம் பெறவல்லேமோ? (கலவியது விசேடம்பற்றி 'நுதல் வெயர்ப்ப' என்றான். இனிமை: கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறிதலானாய இன்பம், 'இனி அப் பேறு கூடாது' எனப் பெற்றதன் சிறப்புக் கூறியவாறு.).
மணக்குடவர் உரை: 
நுதல்வெயர்ப்பக்கூடிய கூட்டத்தாலே யுண்டாகிய இன்பத்தை இன்னும் ஒருகால் ஊடிப் பெறுவோமோ?. ஊடுதல் இருவர்க்கும் உண்டாமாதலால் பொதுப்படக் கூறினார். இஃது ஊடினார்க்கு அல்லது இன்பம் பெறுதலரிதென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
இப்பெண்ணின் நுதல் வெயர்க்கும் வகையில் புணர்ச்சியின் கண்ணே உளதாகிய இனிமையை இன்னும் ஒருமுறை இவள் ஊடி யாம் பெறுவோமோ?.
Translation: 
And shall we ever more the sweetness know of that embrace
With dewy brow; to which 'feigned anger' lent its piquant grace.
Explanation: 
Will I enjoy once more through her dislike, the pleasure of that love that makes her forehead perspire?.



#குறள் 1329:


ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா.

Kural 1329 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Vooduga Mannoh Oliyizhai Yaamiraphpa
Needugha Mannoh Yiraa.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
ஒளி முகத்தழகி ஊடல் புரிவாளாக; அந்த ஊடலைத் தீர்க்கும் பொருட்டு நான் அவளிடம் இரந்து நிற்கும் இன்பத்தைப் பெறுவதற்கும் இராப்பொழுது இன்னும் நீடிப்பதாக.
மு.வரதராசனார் உரை:
காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.
சாலமன் பாப்பையா உரை:
ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது.) ஒளி இழை ஊடுக மன் - ஒளியிழையினை உடையாள் இன்னும் எம்மோடு ஊடுவாளாக; யாம் இரப்ப இரா நீடுக மன் - அங்ஙனம் அவள் ஊடிநிற்கும் அதனை உணர்த்துதற் பொருட்டு யாம் இரந்து நிற்றற்கும் காலம் பெறும் வகை, இவ்விரவு விடியாது நீட்டித்தல் வேண்டுக. ('ஊடுக', 'நீடுக' என்பன வேண்டிக்கோடற்பொருளன. 'மன்' இரண்டும் ஆக்கத்தின்கண் வந்தன. ஓகாரங்கள் அசைநிலை. கூடலின் ஊடலே அமையும் என்பதாம்).
மணக்குடவர் உரை: 
விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவாளாக வேண்டும்: யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும் இராப்பொழுது நெடிதாக வேண்டும். இது மனவூக்கத்தின்கண் வந்தது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒளி பொருந்திய அணிகலன்களைக் கொண்ட இப்பெண் எம்முடன் ஊடுதல் செய்வாளாக; அவ்வாறு இவள் ஊடிக் கொள்ளவும் யான் வேண்டி நிற்பதற்கும் காலம் பெரும் வகையில் இரவு நீட்டித்தல் வேண்டும்.
Translation: 
Let her, whose jewels brightly shine, aversion feign!
That I may still plead on, O night, prolong thy reign!.
Explanation: 
May the bright-jewelled one feign dislike, and may the night be prolonged for me to implore her!.



#குறள் 1330:


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

Kural 1330 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL

Voodudhal KaamathThirkhu Inbham Adharkinbam
Koodi Muyanghaph Perin.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
ஒருவருக்கொருவர் செல்லமாகச் சினங்கொண்டு பிரிந்திருப்பது எனப்படும் ஊடல், இருவரும் சேர்ந்த பிறகு காதல் இன்பத்தை அதிகமாகப் பருகிட உதவும். எனவே ஊடல் கொள்வதே ஒரு இன்பமான செயல்தான்.
மு.வரதராசனார் உரை:
காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும், ஊடல் முடிந்த பின் கூடித் தழுவப் பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.
சாலமன் பாப்பையா உரை:
காதல் நுகர்ச்சிக்கு இன்பம் ஊடுதலே அவ்வூடலுக்கும் இன்பம், அளவு அறிந்து ஊடலை நீக்கிக் கூடித் தழுவுதலே.
பரிமேலழகர் உரை: 
(இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம். (கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.) ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.
மணக்குடவர் உரை: 
காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
காம நுகர்ச்சிக்குத் தமக்குள் ஊடல் செய்வது இன்பமாகும்; அந்த ஊடலுக்கு இன்பமானது காதலர் சேர்ந்து தழுவிக் கொள்ளுதலாகும்.
Translation: 
A 'feigned aversion' coy to pleasure gives a zest;
The pleasure's crowned when breast is clasped to breast.
Explanation: 
Dislike adds delight to love; and a hearty embrace (thereafter) will add delight to dislike.