flipkart discount sale search here.

Wednesday 31 January 2018

ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே...

ஒரு நாய்க்கு ஒரு எலும்பு கிடைத்தது.

அந்த நாய் எலும்பு துண்டை கடித்து பார்த்தது.

எலும்பு பழசு என்பதால் கல்லு மாதிரி இருந்தது.

அதுல இருந்து எதுவும் வரவில்லை.

இருந்தும் அந்த நாய் அத விடாம கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர ஆரம்பித்தது.

அந்த நாய்க்கு அது தன்னோட ரத்தம் தான் என்று தெரியவில்லை.

ரத்தம் ரொம்ப சுவையாக இருக்கிறதே, நம்ம ரொம்ப சிரமப்பட்டு கடித்ததினால் தான் இதுல இருந்து ரத்தம் வருவதாக நினைத்தது...
அதை மேலும் மேலும் கடித்துக் கொண்டே இருந்தது.

அதனால் வாயில் காயம் பெரிதாகி ரத்தம் அதிகமாக வர ஆரம்பித்தது.

நாயோ ஆஹா எவ்வளவு ரத்தம் எவ்வளவு சுவை என்று பெருமைபட்டுக் கொண்டது.
தன்னுடைய ரத்தம் தான் என்று தெரியாமால் மீண்டும் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தது...

இப்படியே நிறைய ரத்தம் வெளியேறியதால் ஒருநாள் நாய் செத்து போச்சு...

நாமும் இப்படிதான் இலவசங்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலேயே நம்ம ரத்தத்தை நாமே சுவைத்துக் கொண்டு இருக்கிறோம்...

அரசால் வழங்கப்படும் அனைத்து இலவசங்களும் நாம் ஒவ்வொருவரும் செலுத்தக்கூடிய வரிகளாகிய
Professional Tax,
Sales Tax,
Central Sales Tax,
Custom Duty,
Income Tax,
Service Tax,
Dividend Distribution Tax,
Excise Duty ,
Municipal & Fire Tax,
Staff Professional Tax,
Cash Handling Tax,
Food & Entertainment Tax,
Gift Tax,
Wealth Tax,
Stamp Duty & Registration Fee,
Interest & Penalty,
Road Tax,
Toll Tax ,
Vat & etc
போன்றவற்றின் மூலமாக கிடைக்கும் பணமே. அதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் நிலை.

“பசியோடு இருப்பவனுக்கு ஒரு மீனைக் கொடுப்பதற்கு பதிலாக மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது"

யாரும் இலவசமாய் தரவில்லை என்பதை உணருங்கள்...
Please Forward All...

உலகின் முதல் ஊழல்...

கடவுளிடம் வேண்டிகிட்டு காணிக்கை செலுத்தியது தான்
உலகின் முதல் லஞ்சம்..

அதையும் அவர் ஏற்றுகிட்டு
நிறைவேற்றாமல் போனது தான்
உலகின் முதல் ஊழல்.


*படித்ததில் பிடித்தது* 👌🏾👌🏾👌🏾👌🏾

#169 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 791 நாடாது நட்டலிற் | Daily one thi...

#271 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

உண்மையான சுதந்திரம்....

🇨🇺உண்மையான சுதந்திரம்🇨🇺

*👑"ஃபிடல் காஸ்ட்ரோ"..* தெரியாதவர்களுக்கு !

👉தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

👉தனியார் பள்ளி, கல்லூரிகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

🤔காரணம்...

*👑ஃபிடல் காஸ்ட்ரோவின்* தலைமை.

👉6 முதல் 15 வயது வரை கட்டாய இலவசக் கல்வி.
🇨🇺நாடு முழுக்க மாணவர்களுக்கு ஒரே சீருடை.

12 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் (வல்லரசு நாடுகளில்கூட பார்க்க முடியாதது).

*👉🇨🇺க்யூபாவில்* அனைவருக்கும் இலவசக் கல்வி.

 2010லேயே யுனெஸ்கோ ஆய்வின்படி *🇨🇺கியூபாவில்* படிப்பறிவு சதவீதம் 99.8. தனியார் பள்ளி அல்லது கல்லூரிகளே அங்கு கிடையாது. அனுமதி வழங்கப்படவில்லை.

*👉🇨🇺கியூபாவின்* தொழில் நுட்பத் துறையில் பணிபுரிபவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள்தான். ஆண்களுக்கு இணையான சம்பளம்.

👉மருத்துவத்தில் *🇨🇺க்யூபா* படைத்த சாதனை மகத்தானது.

தனியார் மருத்துவமனைகளே இல்லாத நாடு *🇨🇺க்யூபா.*

 'உலகின் மிகச் சிறந்த மருத்துவ சேவை வழங்கும் நாடு *🇨🇺க்யூபா'* என பிபிசி 2006-ல் அறிவித்தது.

👉 மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவு *🇨🇺க்யூபாவில்தான்.*

 👉உலகிலேயே எச்ஐவி பாதித்த நோயாளிகள் குறைவாக இருப்பதும் *🇨🇺க்யூபாவில்தான்.*

👉2015ல் 95 சதவீத *🇨🇺க்யூபா* மக்களுக்கு சொந்த வீடுகள்.

இன்று வீடில்லாத *🇨🇺க்யூபியன்* யாருமில்லை.

 யாருக்கும் சொத்து வரி கிடையாது.

வீட்டுக் கடனுக்கு வட்டி கிடையாது.

🤔காரணம்...

*🇨🇺👑ஃபிடல் காஸ்ட்ரோ*வின் தலைமை.

🙏ஒரே ஒரு நல்லவன் தலைவன் ஆனால் சாதனைகள் இவ்வளவு என்றால்
நாம் எல்லாம் பாவம் செய்தவர்கள் இத்தகைய நல்ல ஒருவர்கூட நமக்கு வாய்க்கவில்லை
*🇨🇺கியூபாவை* விட பல மடங்கு வரி வசூலித்தும் இந்தியா அதில் கடுகளவு செயற்பாடுகளை அல்லது வசதிகளை ஏற்படுத்தவில்லை
காரணம் அதிகாரிகளின், அரசியல்வாதிகளின் *சுயநல அயோக்கியத்தனமே*

இன்னொரு *🇮🇳சுதந்திர போரட்டத்திற்கு தயாராவோம்.*

உண்மையான சுதந்திரம் மேலே உள்ளவை நடந்தால் மட்டுமே

🙂படித்ததை பகிர்கிற மட்டுமல்ல!🤔

நாம் ஒருவர் மூன்று பேறுக்கு அனுப்பினால் போதும்

 உண்மையான *🇮🇳சுதந்திர போராட்டத்திற்கு ஒன்று படுவோம்*

ஒருவர் மூவருக்கு .....

அதாவது

1 × 3 = 3
3 × 3 = 9
9 × 3 = 27
27 × 3 = 81
81 × 3 = 243
243 × 3 = 729
729 × 3 = 2187
2187 × 3 = 6561
6561 × 3 = 19683
19683 × 3 = 59049
59049 × 3 = 177147
177147 × 3 = 531441
531441 × 3 = 1594323
1594323 × 3 = 4782969
4782969 × 3 = 14348907
14348907 × 3 = 43046721
43046721 × 3 = 129140163
129140163 × 3 = 387420489
387420489 × 3 = *1,162,261,467*

அதாவது
*நான் மூன்று பேருக்கு இச்செய்தியை அனுப்பினால்......*

*அந்த மூவரும் மேலும் மூன்று மூன்று பேருக்கு அனுப்பினால் ......*

*ஆச்சரியம் எது என்றால் ......*

*மொத்தம் நூற்றுப்  பதினாறு கோடியே .... இருபத்தி ரெண்டு லட்சத்து ...... அறுபத்து ஒன்று ஆயிரத்து ...... நானூற்று அறுபத்தேழு   பேருக்கு*

*( ஹா ! )*

*இச்செய்தி சென்றடையும்*

பகீர மட்டும் அல்ல .....

        இது ஓர் *இன்னொரு  🇮🇳சுதந்திரப் போராட்டம்* 💪🏽

சில வித்தியாசமான கணக்குகள்....

சில வித்தியாசமான கணக்குகள்....

கூட்டல்:
மனிதன்+தன்னம்பிக்கை = வெற்றி
மனிதன்+கவலை = கண்ணீர்
மனிதன்+ஆனந்தம் = புன்னகை
மனிதன்+இயலாமை = கோபம்
மனிதன்+அன்பு = காதல்
மனிதன்+ஆசை=காமம்

கழித்தல்:

மனிதன் - தன்னம்பிக்கை= தோல்வி
மனிதன் - கவலை = உற்சாகம்
மனிதன் - ஆனந்தம் = சோம்பல்
மனிதன் - இயலாமை = முயற்சி
மனிதன் - அன்பு = குரோதம்
மனிதன் - ஆசை = அமைதி

பெருக்கல்:

மனிதன் × தன்னம்பிக்கை = சாதனை
மனிதன் × கவலை = தற்கொலை
மனிதன் × ஆனந்தம் = ஆயுள் விருத்தி
மனிதன் × இயலாமை = அவதி
மனிதன் × அன்பு = மனிதாபிமானம்
மனிதன் × ஆசை = வக்கிரம்

நன்றி: கவிஞர் பா.விஜய் அவர்களின் வானவில் பூங்கா புத்தகம்.

Tuesday 30 January 2018

மறதியை குறைப்பது எப்படி? | How to increase memory power ? By Shankar S V

#168 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 191 பல்லார் முனியப் | Daily one thi...

#270 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!

அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!*     

1🕹. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர்  குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.

2🕹. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.

3🕹. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.

4🕹. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.

5🕹. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.

6🕹. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.

7🕹. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக  இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது  மனதுக்குள் சிறிது நேரம்  பிரார்த்தனை செய்யங்கள் .

8🕹. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு  நிறைய நல்ல புத்தகங்களைப்  படியுங்கள்.  பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை  சொல்லிக் கொடுங்கள்.

9🕹. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.

10🕹. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.

11🕹. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக  நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)

12🕹. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.

13🕹. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். 

14🕹. கடுமையாக உழைக்காதீர்கள்.  உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.

15🕹. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.

16🕹. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.  அதை செயல்படுத்தவும்  முயற்சி செய்யுங்கள்.

17🕹. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.

18🕹. கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.  முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.

19🕹. குறுகிய கால இந்த வாழ்க்கையில்  யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.

20🕹. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.

21🕹. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.

22🕹. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.

23🕹. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள்.  உங்கள் மனபாரம் நீங்கும்.

24🕹. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.

25🕹. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.

26🕹. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.

27🕹. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.

28🕹. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.

29🕹. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
     
30🕹. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.

மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!

மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..

Monday 29 January 2018

#167 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1195 நாம்காதல் கொண்டார் | Daily one...

#267 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

New GST.. " More Papa..! Purchase Price.. " High Papa..!

*Johny johny..*
                *"Yes papa!*
  *New GST..*
           *" More Papa..!*
*Purchase Price..*
                 *" High Papa..!*
*Petrol Price..*
         *"" Rocket Papa!*
*Subsidies are...*
                 *" Nil Papa..!*
*Monthly income..*
                      *Low Papa..*
*Family outing..*
                  *Fear Papa..*
*Lot of tension..*
                *Yes papa!*
*Too much work..*
                *Yes papa!*
*Bp-sugar..*
                *High papa!*
*Yearly bonus..*
              *Joke papa!*
*Pension Income..*
               *No papa!*
*Total Life*
*Ha Ha Ha😄😄😄*.   
*Its really heart touching poem☝*

*Plz share other Publics*

முதல் முதலாக ஒரு முத்தம் கொடுத்த பொழுது, அவள் சொன்னால்...

காதலர்களாக சுற்றித் திரிந்த வேளையில்
முதல் முதலாக ஒரு முத்தம்
கொடுத்த பொழுது, அவள் சொன்னால்
#சீ  அசிங்கம்  என்று....

கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக
இருந்த பொழுது யாரும் பார்க்காமல் ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னால்
எப்ப பார்த்தாலும் இது தானா என்றால்...

இரண்டு குழந்தைகள் பெற்ற பின்
அடுப்பு வீட்டில் யாரும்  கவனிக்காத போது அவள் கழுத்துக்குக் கீழ்
ஒரு முத்தம் கொடுத்தேன்,
அப்போது அவள் சொன்னால்
என்ன இது குழந்தைகள வச்சிக்கிட்டு
என்றால்...

சில காலத்திற்கு பிறகு
கன்னத்தில் சுருக்கு விழுந்து
பழைய நினைவுகலுடன்
ஒரு முத்தம் கொடுத்தேன், அப்போது அவள்
சொன்னால்
வயசு ஆயிறுச்சு இன்னும் அதே நெனப்புதா
என்றால் அவள்...

கடைசியாக அவளை என் வீட்டு
[#முத்தத்தில்] முற்றத்தில்
ஊரார் குளிப்பாட்டி திருமண பட்டு உடுத்தி
படுக்கையில் கிடந்தவளை  முத்தமிட்டேன்,
அவள் ஒன்றும் சொல்லாமல் படுத்துகிடந்தால்
கிழவனுக்கு வேர வேலையே இல்லை என்பதுபோல்...

இறுதிவரை நேசியுங்கள் 💝💝
அவள் வழி துணையாக வந்தவள் அல்ல 💝💝
அவள் வாழ்க்கை துணையாக வந்தவள் 💝

Sunday 28 January 2018

Cute colour fishes | அழகிய வண்ண மீன்கள். #2

#166 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 693 போற்றின் அரியவை | Daily one thi...

#268 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

மனதை கலங்க வைத்த பதிவு...!

மனதை கலங்க வைத்த பதிவு.....!!
    என்னங்க...!!  இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்,

   இல்ல உங்க அம்மா இருக்கணும்....!!

 யாருன்னு நீங்களே முடிவு பண்ணிக்கங்க".....!!

என்ன லதா என்ன பண்ணுச்சி அந்த கிழவி...!!

 நீ ஏன் டென்சனாகுறே....!!

எனக்கு பிடிக்கலை அவ்வளோ தான்.....!!

சீக்கிரம் நானா அவங்களானு முடிவெடுங்க.....!!

மறுநாள் காலை.....!!

அம்மா நீ சீக்கிரம் கிளம்புமா..!!

" எங்கேடா மகேஷ்.....??? "

" உன்னை ஹோம்ல சேர்த்துடுறேன் மா...!!

அங்கே உனக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.....!!

உன்னை போல நிறைய பேர் இருப்பாங்க....!!

 அவங்க கூட நீ சந்தோசமா இருக்கலாம் மா......!

மகேஷ் எனக்கு இங்க என் பேரக்குழந்தைங்க கூட இருக்கறதுதான்டா சந்தோசம்......!!

உங்கப்பா சாகும்போது உனக்கு வயசு எட்டு....!!

உன்ன வளர்க்க நான் பட்ட கஷ்டம் சொல்லி புரியாது...!!

  எல்லா கஷ்டமும் தீர்ந்து,

   இப்போதான் நான் பேரக்குழந்தைங்க கூட கொஞ்சம் சந்தோசமா இருக்கேன்டா.....!!

 என் கடைசி காலத்தை இங்கேயே கழிச்சிட்டு போயிடுறேன்டா...!! "

உன்னை இப்போ விளக்கம்லாம் கேக்கல நான்....!!

 உயிரை வாங்காமல் கிளம்பு...

 "என்று கொஞ்சம் அதட்டல் தோனியில் மகேஷ் சொல்ல,

கலங்கி போய் நின்றாள் மரகதம்....!

இரண்டு மாதங்கள் உருண்டோடின...!!

மகேசும் லதாவும் கடைத்தெருவுக்கு சென்று திரும்பும் வேளையில்...!!

  எதிரே வந்த லாரி மோதியதில்,

 இருவரும் தூக்கி வீசப்பட மகேஷ் சிறு காயத்துடன் தப்பியிருந்தான்...!!

லதாவிற்கு பலத்த அடிபட்டு 'கிருஷ்ணா மருத்துவமனையில்', அனுமதிக்கப்பட்டாள்....!

டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க டாக்டர்... "

Icu வில் இருந்து வெளியேறிய டாக்டரிடம் அழுகுரலில் கேட்டான் மகேஷ்.....!

உயிருக்கு எந்த ஆபத்தும் இல்ல...!!

ஆக்ஸிடன்ட்ல சிதறின சில கண்ணாடி துண்டுகள்,

 அவங்க விழித்திரைய பலமா கிழிச்சிருக்கு.....!!

 அவங்களுக்கு பார்வை வர வாய்ப்பில்லை.....!!

அய்யோ....!! டாக்டர் லதாவுக்கு,

 கண் பார்வை கிடைக்க ஒண்ணுமே பண்ண முடியாதா....? "

ஒரு வழியிருக்கு.....!!

  இறந்தவங்க யாரோட கண்ணையாவது,

 அவங்களுக்கு உடனே பொருத்தினா பார்வை கிடைக்க வாய்ப்பிருக்கு.....!!

 நாங்க ஐ பேங்க்ல சொல்லியிருக்கோம்....!!

 நீங்களும் உங்க சைடுல ட்ரை பண்ணுங்க.....!!

என்று சொல்லி நடந்த டாக்டரை ,

கலங்கும் கண்களோடு பார்த்து கொண்டிருந்த மகேசின் சொல்போன் சிணுங்கியது.....!

தாய் மரகதம் இருக்கும் ஹோம் நம்பர் திரையில் வர...

   'நானே கடுப்புல இருக்கேன் இந்த கிழவி வேற ,

  பேரனை பார்க்கணும்,
 பேசனும்னு ,

உயிர வாங்குது...!!
 சே....!!சனியன்....!!

     கை கழுவி விட்டாலும்,
   நம்மள விடாது போல'...

 என்று முணு முணுத்துக் கொண்டே ,

மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்தான் மகேஷ்.....!

ஒரு மணிநேரம் கழித்து டாக்டர் வேகமாய் மகேஷிடம் வந்து.....!!

மகேஷ் யூ ஆர் சோ லக்கி...!!

  உங்க மனைவிக்கு கண் கிடைச்சிடுச்சி...!!

 இப்போவே ஆபரேஷன் செஞ்சிடலாம்.....!

  நீங்க நர்ஸ் கிட்ட கேட்டு பார்மாலிட்டிஸ்லாம் முடிச்சிடுங்க....!!

ரொம்ப நன்றி டாக்டர்.....!!

 ரொம்ப நன்றி "

டாக்டரின் கைகளை பிடித்து கண்ணீர் விட்டான் மகேஷ்....!

மூன்று மணிநேரம் கழித்து,

 ஆபரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்தார் டாக்டர்....!!

" டாக்டர் என் மனைவி எப்படியிருக்காங்க "....!!

ஆபரேஷன் நல்லபடியா முடிந்தது மகேஷ்.....!!

இன்னும் ஏழுநாள் கழித்து கட்டு பிரிச்சிடலாம்......!!

அவங்க மயக்கம் தெளிய ரெண்டு மணி நேரமாகும்...!!

 அதுக்கப்புறம் நீங்க போய் அவங்களை பாருங்க.....!!

லதா மயக்கம் தெளிந்து கட்டிலில் படுத்திருந்தாள்.....!!

"லதா உனக்கு ஒண்ணுமில்ல..!!

  நிச்சயம் பார்வை திரும்பிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க....!!

ம்ம்ம்....!!
    நாம அத்தையை தனியா தவிக்க விட்ட பாவமோ என்னவோ,

 இப்படி நடந்துடுச்சி.....!!

திரும்ப அவங்கள கூப்பிட்டு வந்துடுங்க....!!

   நம்ம கூடவே வச்சுக்கலாம்....!!

நான் கட்டு பிரிச்சி முதல்ல பார்க்கறது ,

அவங்க முகமாத்தான் இருக்கணும்...!

சரி லதா...!
    காலையிலே அம்மா போன் பண்ணங்க.....!!

 சன்டே நான் அவங்களை பார்க்க போகும் போதே,

  பேரக்குழந்தையை பார்க்கணும் போல இருக்குனு கேட்டாங்க....!!

 அதுக்குதான் போன் பண்ணி தொல்லை கொடுக்கறாங்கனு,

 நான் சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்....!!

  இதோ இப்பவே அம்மாவுக்கு போன் பண்ணி,

 கிளம்பி ரெடியா இருக்க சொல்லிடுறேன் லதா....!!

மகேஷ் ஹோம்க்கு போன் பண்ணி,

" ஹலோ மேடம் நான் மரகதம் அம்மாவோட மகன் பேசறேன்....!!

 அவங்ககிட்ட கொஞ்சம் பேசணும்......!!!

என்ன சார் இப்படி பண்ணிட்டிங்களே.....!!

 படிச்சவங்க தானே நீங்க...!

  காலையில அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சி.....!!

  கடைசியா மகனையும் பேரனையும் பார்க்கணும்னு சொன்னாங்க.....!!

 உங்களுக்கு போன் பண்ணா கட் பண்ணிட்டு,

 சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டிங்க.....!!

 அவங்க மரணத்தோட போராடி உயிரை விட்டாங்க.....!!

அவங்க கடைசி ஆசையை கூட நிறைவேற்றாத நீங்கலாம் என்ன மனுசங்களோ......!!

அப்புறம் ஒரு விசயம்,

 எங்க ஹோம்ல யாராச்சும் இறந்துட்டா ,

அவங்க கண்களை தானமா கொடுக்கறது பழக்கம்.....!!

 உங்களுக்கு போன் பண்ணினோம்  நீங்க எடுக்கலை....!!

அதனால நாங்களா முடிவு பண்ணி,

 'கண்ணை தானமா' கொடுத்துட்டோம்.....!!!

உங்க அம்மா உயிரோட இருக்கும் போது,

 உங்களை பார்க்க ஆசைப்பட்டாங்க.....!!

 அவங்க கண் 'கிருஷ்ணா ஆஸ்பிட்டல்ல'....,

ஒரு லேடிக்கு வச்சிருக்காங்க....!!

 ஒரு வாரம் கழிச்சி ,

"அவங்க கண்ணையாவது "

 போய் பாருங்க......!!

 அவங்க ,
     "ஆத்மா நிம்மதியாகும்" ......!!

போனை காதிலிருந்து தரையில் தவறவிட்டு,

   அம்மாஆ.......என்று அழுதபடியே ஓடி,

 மருத்துவமனையின் அறிக்கையை தேடி பிடித்து பார்த்தவன்.....

 அதிர்ந்தான்.....!!

அவள் மனைவி லதாவிற்கு கண்தானம் கொடுத்தவர்

 என்னும் அறிக்கையில்,,  "மரகதம் என்றிருந்தது" ....!!!

உயிர் போவதற்கு முன் தன் மகனையும், பாசமான பேரனையும் பார்க்க துடித்த,

அந்த தாயின் ஆசை,
     உள்ளார்ந்த பாசம்,

        இறைவனின்     இதயத்தையும் இளகச் செய்ததோ....??

 இறந்து போன அந்த பாசத் தாய் மரகதம்,

இனி தன் ஆசை தீர மகிழ்வோடு தன் பேரனையும், மகனையும் பார்ப்பாள்....!!

"லதாவின் கண்கள் மூலம்"

 

இறந்த பின்பும் நம்மை வாழ வைப்பது ,

     நம் அன்னை மட்டுமே....!!!

உதிரத்தை பாலாக கொடுத்தவள் தாய்...!!

  நாம் நலமாக வாழ, நமக்காக வாழ்நாள் முழுவதும் தவிக்கும் ,

ஒரே தெய்வம்...."..தாய்"

அவளை ஒருபோதும் கண்ணீர் சிந்தவிடாதீர்கள்...!!

"இரும்பு இதயங்கள் இளகட்டும்" ,.....!!

 பகிருங்கள்..உறவுகளே....!!

Friday 26 January 2018

#164 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1141 அலரெழ ஆருயிர் | Daily one thir...

#266 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

தற்போது எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை .!

Dr.Sakthi Ranjan.:
Dr.சக்திரஞ்சன்.

அனுபவப்பகிர்வு....
நீண்ட பதிவு .

நாட்பட்டஆஸ்துமா விற்கு. ...

பொதுவாக மருத்துவர்களாக நாம் தான் நோயாளிகளுக்கு கற்றுத் தருவோம். என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.

ஆனால் நான் இப்போது பகிர இருப்பது.ஒரு நோயாளி எனக்கு கற்றுத் தந்தது. .

அதாவது எனது ஒரு பழைய ஆஸ்துமா நோயாளியை பல மாதங்களுக்குப் பிறகு சந்திக்க நேர்ந்தது.
.52 வயது ஆண்.

அவருக்கு ...
என்னிடம் மருத்துவம் பார்த்த காலங்களில் ஆஸ்துமா நோய் குறிகுணங்கள் ஓரளவு கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தது.

ஆனால் தற்போது அவர் கிட்டத்தட்ட ஆஸ்துமா வில் இருந்து பூரண குணம் கண்டிருப்பதைக் கண்டேன்.

அவரிடம் விசாரித்தேன்.
பெரிய மருந்துகள் எதுவும் சாப்பிட்டீர்களா? என்று.

அதற்கு அவர்.

 அப்படி மருந்து எதுவும் சாப்பிடவில்லை சார்.

 இடையில் ஒரு வயது முதிர்ந்த சாதுவை சந்திக்க நேர்ந்தது. .அந்த சாதுவிடம் எனது பிரச்சனையை கூறினேன். .
அவரோ...
"உனது பிரச்சனைக்கு emergency க்கு எந்த முறை மருத்துவம் ஆனாலும் எடுத்துக்கொள்.

கூடவே நான் சொல்லும் ஒரு பயிற்சியை மட்டும் அன்றாடம் பழக்கப்படுத்து என்றார்.

அதாவது ..

.அன்றாடம் காலையில் குளிக்கும் போது. ..
1) *அன்றாடம் தலைக்கும் சேர்த்து குளி*.
2) *வெந்நீர் வேண்டாம். அதிக குளிர்ச்சி இல்லாத பச்சை தண்ணீரில் குளி*
3) பொதுவாக குளிக்க ஆரம்பிக்கும் முன்பு  உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் தண்ணீரில் நனைத்த பிறகு வாயில் தண்ணீர் விட்டு கொப்பளித்து உமிழ்ந்து,
முகம் கழுவிய பிறகு குளிக்க துவங்க வேண்டும்
4) குளிக்கும் முன்பு வாயில் ஒரு மடக்கு தண்ணீர் விட்டு வாயை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். குளித்து முடிக்கும் வரை மூடிய வாயைத் திறக்கக்கூடாது.
5) *குளித்து முடித்து உடல் முழுவதும் துவட்டி ஈர உடை அவிழ்த்து வேறு உடை இடுப்பில் உடுத்திய பிறகு வாயில் உள்ள நீரை உமிழ்ந்து விட்டு ,ஒரிரு முறை தண்ணீர் விட்டு வாய் கொப்பளித்து சகஜமான சுவாசத்திற்கு வரவேண்டும்*
இவ்வளவு தான் உனது பயிற்சி. இதை பழக்கம் ஆக்கு.

பணம் செலவு இல்லை. தனியாக நேரம் ஒதுக்கத் தேவையில்லை.

அதாவது குளிக்கும் முழு நேரமும் வாயினால் சுவாசிப்பதைத் தவிர்த்து மூக்கினால் மட்டுமே சுவாசிப்பதை கட்டாயமாக்கும் ஒரு பயிற்சி இது.

ஆரம்பத்தில் இது கஷ்டமாகத் தான இருக்கும். .பழகப்பழக எளிமையாக பழக்கப்படும்.

இதைமட்டும் பழக்கபடுத்து என்று சொன்னார் அந்த சாது.

நானும் நம்பிக்கையுடனும்,  வைராக்கியத்துடன் சாது கூறிய பயிற்சியைத்
தொடங்கினேன்..

ஆரம்பத்தில் மிகச் சிரமமாக இருந்தது.சில நேரங்களில் மூக்குக்குள் தண்ணீர் போய் மூச்சு விட பரிதவித்து இருக்கிறேன். .

இடையிடையே வாய் நீரைத் துப்பி வாய் மூலமாக சுவாசித்து இருக்கிறேன். .

இருந்தாலும் சாது கூறியது பொய்யாக இருக்காது. .நான் என்ன தவறு செய்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். .

எனக்கு ஒரு சூட்சுமம் புரிந்தது..

அதாவது தலையில் இருந்து தண்ணீர் வடியும் போது மூச்சை உள் இழுக்கும் (பூரகம்)போது தான் மூக்குக்குள் தண்ணீர் போய் சிரமப்படுத்துகிறது..
தண்ணீர் வடியும் போது சுவாசத்தை வெளியே விடுவதில்(ரேசகம்) சிரமம் ஒன்றும் இல்லை.

எனவே சுவாசத்தை நன்றாக உள் இழுத்ததும் தலையில் தண்ணீர் ஊற்றினேன்.
தண்ணீர் வடியும் போதே சுவாசத்தை மெதுவாக  வெளியே விட்டேன். .

ஆச்சரியம்  குளிக்கும் போது  மூக்கு வழி சுவாசம் எளிமையானது..

கடந்த ஆறு மாதமாக
இந்த பயிற்சியை எனது அன்றாடப் பழக்கம் ஆக்கிவிட்டேன்..

தற்போது  எனக்கு ஆஸ்துமா பிரச்சனை இல்லை .

இவை தான் எனது அந்த பழைய ஆஸ்துமா நோயாளி கூறியது.

இல்லையில்லை தற்போது அவர் நோயாளி இல்லை. .

எனக்கு ஆச்சரியமும்,ஆர்வமும் அதிகமானது..

எனது புரிதல். .


நுரையீரலை அதன் இயற்கையான தொழிலான சுவாசித்தல் மூலமாகவே வலிமைப் படுத்த இது ஒரு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கருதினேன்.

நானே குளிக்கும் போது இதைக்கடைபிடிக்கத் தொடங்கினேன் ..

சிரமம் இல்லை. நுரையீரல் வலிமை பெறுவதாக உணர்கிறேன். நம்புகிறேன்.

இன்றைய சூழ்நிலையில் எப்பொழுதும் மூக்கின் வழியாகவே சுவாசிக்க வேண்டும் என்ற  உண்மையை 
உணர்த்த உதவுகிறது

பொதுவாக நமது உடலில் தசைகளுக்குத் தெரிந்த, செய்ய முடிந்த ஒரே தொழில் சுருங்குதல் மட்டுமே அல்லவா. .

சுருங்கும் அல்லது எதிர்வினை  தசைகளுக்காக சுருங்காமல் நெகிழ்ந்து கொடுக்கும் ...

தசைகளுக்கு தாமாகவே நீள அல்லது விரியத் தெரியாது. .

உடல் முழுவதும் இயங்கிக்கொண்டு இருப்பதால் தசைகள் மாறி மாறி சுருங்கிக் கொண்டே இருக்கின்றன.அதனால் வெப்பம் உருவாகிக் கொண்டே இருக்கிறது. ஆக குளிர்வித்தல் அவசியமாகிறது.

குளிர்ச்சியானது....... தசைகளை அதன் இயற்கை தொழிலான சுருங்கும் தொழில் சிறப்பாக நடை பெற உதவுகிறது.

சூடு ,வெப்பம் தசைகள் இயற்கை தொழிலான சுருங்கும் தன்மையைச் செய்ய விடாமல் எதிரான செயலைச் செய்விக்கிறது..

ஆக குளித்தல் /குளிர்வித்தல் என்பது தசைகளை வலிமை படுத்த அவசியம் என்பது புரிகிறது.

...✍....

Parts of the body for kids | Parts of body for kids #2

Thursday 25 January 2018

குடியரசு தினம் பிறந்தது எப்படி ?



🚩 இந்தியா சுதந்திரம் பெற்றது 1947, ஆகஸ்ட் 15 என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே இந்தியா 'சுதந்திர தினம்" கொண்டாடியிருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

🚩 1930 ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி அன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என காந்தியடிகள் வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள்தான் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

காந்தியடிகள் அப்படி அறிவித்ததன் பின்னணி என்ன?

🚩 1929ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், 'பு ரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்" என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை செயல்படுத்துவதற்கான போராட்டம் குறித்து காந்திஜியே முடிவு செய்து அறிவிப்பார் என்று மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

🚩 அந்தக் காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தாலும் சுதந்திர எழுச்சியும் காத்துக் கொண்டிருந்தது. அதன் விளைவாக பல வன்முறை போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் மீண்டும் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்கினால் அது மேலும் வன்முறைக்கே வழிவகுக்கும் என்பதை காந்திஜி உணர்ந்தார்.

🚩 ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சை பாதையில் திசை திருப்புவதற்கான வழிகள் குறித்து அவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதிமொழியின் வாசகம் இது தான் :

🚩 'பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம், ஆன்மீகம் ஆகிய நான்கு விதத்திலும் நமது தாய் நாட்டிற்கு கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகம்."

🚩 சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான் ஜனவரி 26. சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாக, அதாவது மக்களாட்சி மலர்ந்த தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949இல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் இது குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

அனைவருக்கும் நித்ராவின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள் !!

#163 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 740 ஆங்கமை வெய்தியக் | Daily one th...

#265 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

Wednesday 24 January 2018

#162 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 384 அறனிழுக்கா தல்லவை | Daily one ...

#264 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

ஒரு பஸ்லே இவ்வளவு என்றால்?

வணக்கம் உறவுகளே ஒரு சின்ன கணக்கு  உங்களுக்கு தெரியுமா
     ஒரு சாதாரண பாமரனின் கணக்கு......
ஒரு பேருந்து திருச்சியிலிருந்து சென்னை சென்று  வருவதாக கொள்வோம்.
திருச்சிToசென்னை....320 Km.
சென்று வர....640 Km.

பஸ் 1லிட் டீஸலுக்கு 5Km செல்லும்.
அப்போ 640Km÷5=128ltsடீஸல்.
ஒரு லிட் டீஸல் ₹65.00×128=₹8320

ஒரு பஸ்ஸில் 50 சீட்.
ஒரு டிக்கட் ₹375.00
அப்போ 50சீட்×₹375=₹18750.00
சென்று வர. .2×18750=₹37500.00

ஆக ஒரு நாள் வரவு:₹37500.00

செலவுகள்....(தோராயமாக)
டீஸல்          ₹8320.00
Toll.                ₹2800.00
படி                 ₹1200.00
இதரசெலவு₹ 500.00
சம்பளம்        ₹2000.00

மொத்த செலவு   ₹14820.00

ஆக ஒரு நாள் லாபம் மட்டும்
          ₹37500-₹14820=₹22680.00
அப்போ மாதம்
            30×₹22680=₹6,80,000.00

ஆக நிகர லாபம்   ₹6,80,000.00

        இது ஸ்டான்டிங் டிக்கட் வருமானம் இல்லாமல்.

  ஒரு பஸ்லே இவ்வளவு  என்றால்? 
மொத்த பஸ் வருமானத்தையும் கணக்கு போட்டுக்குங்ககககக....

     அதெல்லாம் கணக்குப்போட்டா தலைய சுத்துதுங்க.....
              சரி மேட்டருக்கு வருவோம்.
   இவ்வளவு  வருவாய்  எங்கே போகிறது என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்.
என்றும் சமுதாய மக்களின் நலனில் அக்கரை உள்ள உங்கள் 💐☝👆🐙
நாட்டாமை 🙏🙏🙏

காதலிப்பது எப்படி? How to love? By Shankar S V

Sunday 21 January 2018

#159 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 433 தினைத்துணையாங் குற்றம் | Daily ...

#261 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

பஸ்ல போனா...

பஸ்ல போனா பயண கட்டணத்தை பல மடங்கு உயர்த்துறாங்க...🤦🏻‍♀🤦🏻‍♀

பைக்ல போனா  போலீஸ் தொல்லை இன்சூரன்ஸ்க்கு வருசாவருசம் ஆயிரம் ரூபாய் அழனும்...🤦🏻‍♀🤦🏻‍♀

கார்ல போனா  வழிப்பறி கொள்ளையர்களைப்போல் 50 கி.மீ க்கு ஒரு கட்டணவசூல் மையம்...🤦🏻‍♀🤦🏻‍♀

பெட்ரோல் டீசல் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு...🤦🏻‍♀🤦🏻‍♀

இது பத்தாதுனு GST 18% - 28%...🤦🏻‍♀🤦🏻‍♀

சம்பாதிக்கிற காசுல வேற income tax 30% வரை ...🤦🏻‍♀🤦🏻‍♀

இதுல  கார், பைக் வாங்குனா road tax , compulsory vehicle  insurance ...🤦🏻‍♀🤦🏻‍♀

இதையும் மீறி சம்பாதித்து சொத்து சேர்த்து வைத்திருந்தால் Property க்கு tax கட்டணும்...🤦🏻‍♀🤦🏻‍♀

ஒரு பக்கம் பேங்குல காசு போட்டாலும் servive கட்டணம் பணம் எடுத்தாலும்  service கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

ATM கார்டுக்கு வருசத்துக்கு usage கட்டணம் ...🤦🏻‍♀🤦🏻‍♀

Balance குறைந்தால் கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

Message அனுப்ப கட்டணம்...🤦🏻‍♀🤦🏻‍♀

இப்படி எட்டு பக்கமும் பிச்சுப்புடுங்குற கூட்டத்துக்கு நடுவுல வாழுறோம்...🤦🏻‍♀🤦🏻‍♀🤷🏻‍♀

இத விடவா வேற எதாச்சும் திருடன் வந்து நம்ம கிட்ட இருக்கறத திருடிற முடியும்... 🤔🤔🤔⁉🤷🏻‍♀🤷🏻‍♀🤷🏻‍♀🤦🏻‍♀🤦🏻‍♀🤦🏻‍♀

Friday 19 January 2018

#157 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 127 யாகாவா ராயினும் | Daily one thi...

Parts of body for kids | Part 1

பத்து நிமிடங்கள் முன்னதாக...

மனத்தளர்ச்சி  குறைய...!
.

*1.பத்து நிமிடங்கள் முன்னதாக:*

காலை *6 மணிக்கு எழுபவரா நீங்கள்?*
*5.50க்கு எழுந்து பழகுங்கள்.*

கூடுதலாகக் கிடைக்கிற பத்து நிமிடத்தில், அமைதியான காலை நேரத்தில் உங்களின் அன்றைய வேலைக்கான ஆற்றலின் கதவுகள் அகலத் திறப்பதை உணர்வீர்கள்.

*2.பத்து நிமிடங்கள் மௌனமாக:*

நீங்கள் தியானப் பயிற்சி மேற்கொள்ளாதவராக இருந்தால், விரைவில் சரியான இடத்தில் *தியானம் பழகுங்கள்.* அதுவரை ஒரு நாளின் மத்தியில், பத்து நிமிடங்களாவது *மௌனத்தில் இருங்கள்*.

*3.முப்பது நிமிடங்கள்:*

ஒரு நாளின் முப்பது நிமிடங்களை உங்கள் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்துங்கள். *உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா* என்று உங்கள் வழக்கம் எதுவாக இருந்தாலும் சரி. ஆரோக்கியத்துக்காக *முப்பது நிமிடங்கள்* புத்துணர்ச்சிக்கான சிம்மாசனம் என்பதை உணருங்கள்.

*4.உணவில் ஒழுங்கு:*

வேலைச் சுமையைக் காரணம்காட்டி உணவு நேரத்தை அடிக்கடி தள்ளிப் போடுவது, உங்கள் உடலியக்கத்துக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும். உணவுப் பழக்கத்திலும் இதமான முறைகளைக் கையாளுங்கள், வயதுக்கேற்ப சாப்பிடுங்கள். *முறைப்படி சாப்பிடுவதற்க்கு பழகுங்கள்.*

*5.மறுநாளின் டைரியை முதல் நாளே எழுதுங்கள்:*

```Day Task.``` உங்களின் வாழ்க்கை பரபரப்பின்றி அவசரமின்றி இருக்க இந்த பழக்கம் உதவும். *நினைத்த அனைத்தும் நடப்பதை* விரைவில் உணர்வீர்கள்.

*6.அடைசல்கள் அகற்றுங்கள்:*

அடைசல்கள், குப்பைகள், குவிந்துகிடக்கும் கோப்புகள் ஆகியவற்றில் பிரபஞ்ச சக்தி தேங்கிவிடுகிறது. அத்தகைய இடங்களில் செயலாற்றல் தூங்கிவிடுகிறது. போகி பண்டிகைவரை காத்திருக்காது *அவ்வப்போது அடைசல்களை நீக்குங்கள்.*

*7.மனிதர்களை நெருங்குங்கள்:*

இந்த உலகில் காரணத்துடனோ காரணம் இன்றியோ மனிதர்களை வெறுக்கும்போது, அந்த வெறுப்பு நமக்குள்ளே வேண்டாத சுரப்பிகளைத் தூண்டி பதட்டம் சுரக்க வைக்கிறது. மனிதர்களை நிறைகுறைகளுடன் ஏற்றுக்கொண்டு அவர்களை *நேசிக்கத் தொடங்குங்கள்.* எல்லோரையும் நேசிப்பது அவர்களுக்கு நல்லதோ இல்லையோ, உங்களுக்கு ரொம்ப நல்லது.

*8,அடுத்து என்ன? இதுவே மந்திரம்:*

வெற்றியோ தோல்வியோ, சாதனையோ சவாலோ, எது நேர்ந்தாலும் *அடுத்தது என்ன* என்று கேளுங்கள். அப்போதுதான் அடுத்த கட்டம் நோக்கி நகர முடியும். குழந்தை கண்ணாடியை உடைத்துவிட்டதா? அடுத்தது என்ன? அள்ளிப்போட வேண்டியதுதான். ```(WHAT NEXT?)``` இது வெற்றியின் மந்திரங்களில் முக்கியமானது.

*9.நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள்:*

ஒவ்வொருநாள் விடியலிலும் உங்கள் மீது நீங்களே நம்பிக்கைத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். “இதே உற்சாகத்துடன் வேலையில் இறங்கலாம். இன்றைய வேலைகளை சரியாக முடிக்கலாம்” என்று உங்கள் மீது நீங்களே *நம்பிக்கை வைத்து நாளைத் தொடங்குங்கள்.*

*11.பணத்துக்கு வேலை கொடுங்கள்:*

உங்கள் வருமானம் எவ்வளவாக இருந்தாலும் அந்தப் பணத்துக்கு வேலை கொடுங்கள். பணம், தன்னைத்தானே பலமடங்கு பெருக்கிக்கொள்கிற பேராற்றல் உடையது. ஈட்டிய பணத்தை *புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.* அது தானாகவே பெருகும்.

*12.கடிகாரத்தை மட்டுமல்ல நேரத்தையும் கையில் கட்டுங்கள்:*

உங்கள் நேரம் உங்கள் பொறுப்பிலும் கண்காணிப்பிலும் இருக்கட்டும். அரட்டை – அவதூறு – அனாவசியமான பேச்சு என்று *அடுத்தவர்கள் உங்கள் நேரத்தைக் கொள்ளையடிக்க இடம் கொடுக்காமல் விழிப்புடன் இருங்கள்.*

*13.நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்:*

இறுக்கமாய் இருப்பதால் நாம் எதையும் சாதிக்கப் போவதில்லை – மன இறுக்கத்தையும் மன அழுத்தத்தையும் வளர்த்துக் கொள்வதைத் தவிர!! வெற்றியாளர்களும் வரலாற்று புருஷர்களும் நகைச்சுவை உணர்வு நிறைந்தவர்களாகவே இருந்திருக்கிறார்கள். *நகைச்சுவை உணர்வு,* வாழ்வின் பூட்டப்பட்ட *பல கதவுகளைத் திறந்துவிடும்.*

*14.மனிதத்தன்மையே கடவுட் தன்மையின் ஆரம்பம்:*

மற்றவர்களின் சிரமங்களைப் புரிந்துகொள்வதும், மனித நேயத்துடன் உதவுவதும், மற்றவர்களை மன்னிப்பதும், மனிதர்களின் பகுதிநேர வேலை. கடவுளுக்கோ, முழுநேர வேலை. முதலில் உங்களையும், பிறகு மற்றவர்களையும் முழுமனதோடு மன்னித்து, மலர்ச்சியாய் –
மகிழ்ச்சியாய் –
*வாழ்க்கை என்கிற கொண்டாட்டத்தில்* தீவிரமாகப் பங்கெடுங்கள்.

*புதிய சிந்தனை அல்ல இது....*

*புத்துணர்சியூட்டும் சிந்தனை.*.            வாழ்க வளமுடன் ......

Wednesday 17 January 2018

#155 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 944 அற்றது அறிந்து | Daily one thir...

#257 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

#விரலை_வெட்ட_வேண்டாம்

#விரலை_வெட்ட_வேண்டாம்

சக்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விரல்களில் ஏற்பட்ட புண் ஆறவில்லை என

ஆங்கில மருத்துவத்தின் ஆலோசனை படி விரலை எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.!

நாட்டு மருத்துவத்தில் விரைவாக ஆறிவிடும்.
மேலும் விபரங்கள் கீழே.!

சா்க்கரை வியாதிக்காரா்களுக்கு காலில் ஏற்படும் குழிப்புண்களுக்கு
மருத்துவாிடம் சென்றால்,

.சிலநாட்கள் அதற்க்கு மருத்துவம் செய்துப்பாா்த்து விட்டு அந்த புண்கள் ஆறவில்லை என்றால்,

விரலில் புண் இருந்தால் விரலை துண்டித்து விடுவதும்,

காலில் இருந்தால்
காலை துண்டித்து விடுவதும்,

தற்போதைய சூப்பா் ஸ்பெசாலிட்டி ஆஸப்பிடல்களின் தனித்திறமை.

காலையும்,விரலையும்,அதோடு காசையும் இழந்தவனுக்குத்தான் தொியும்

அதனுடைய வலி இதற்க்கு ஒப்பில்லா மருத்துவம் ஒன்று உள்ளது,

எனது தாயாருக்கு காலில் ஏற்ப்பட்ட குழிப்புண்னுக்கு டாக்டா்கள்,

புண் ஏற்ப்பட்ட இடத்தில் விரல் கருப்பாபாகிவிட்ட காரணத்தினால் விரலை வெட்டிவிட வேண்டுமென்று கூறிவிட்டனா்.

எனக்கு ஒன்று தோன்றியது மிளகு அளவு உள்ள குழிப்புண்ணையே ஆற்றமுடியாதவா்கள் விரலையோ காலையோ வெட்டியபின் அதனால் ஏற்படும் இரணத்தை இவா்கள் ஆற்றிவிடவா போகிறாா்கள்.

முடிவில் மரணத்தைதான் தழுவ வேண்டும். இதுதான் நிலை
இதற்க்கு கண்கண்ட மருந்து .

#ஆவாரம்_இலை,

இந்த இலையை அம்மியில்,மிக்ஸியில்,அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறுதனலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும்.

இதுபோல் ஒருநாள்விட்டு ஓருநாள் கட்டிவர குழிப்புண்கள் மாயமாக மறைந்துவிடும்.

இதை அதிகம் பகிா்ந்து பலாின்
கால்களை விரல்களை காப்பாற்றுவோம்.!

Sunday 14 January 2018

#152 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1032 உழுவார் உலகத்தார்க்கு | Daily ...

#254 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

எதற்குப் பொங்கல் யாருக்குப் பொங்கல்...

எதற்குப் பொங்கல்
யாருக்குப் பொங்கல்

நிலம் மலடாகிப் போனது
எதற்குப் பொங்கல்
நிலமகள் கேட்கிறாள்

பயிர் கருகிப் போனது
எதற்குப் பொங்கல்
விவசாயம் கேட்கிறது

நாட்டுமாடுகள் காணவில்லை
எதற்குப் பொங்கல்
பாரம்பரியம் கேட்கிறது

நிலத்தடிநீர் எங்கே
எதற்குப் பொங்கல்
தமிழ்மண் கேட்கிறது

இயற்கைஉரம் இல்லை
எதற்குப் பொங்கல்
பயிர்கள் கேட்கிறது

ஓசோனை ஓட்டையாக்கிவிட்டீர்கள்
எதற்குப் பொங்கல்
சூரியன் கேட்கிறது

இயற்கைவிவசாயம்
இயற்கை உரம்
நாட்டுமாடுகள்
நமக்கு உயிர் தந்தன
நல்ல உணர்வு தந்தன

இவற்றைக்
கொன்றுவிட்டு
யாருக்காகப் பொங்கல்

மண்ணுக்கும்
மாட்டுக்கும்
நன்றி சொல்லும் திருவிழாவில்
விவசாயி தூக்கிட்டுக்கிடக்கும் போது
யாருக்காகப் பொங்கல்

பல்லாயிரம் ஆண்டுகளாய்
பாரம்பரியமாய் நமக்கு வாழ்வு தந்த இவற்றுக்கான நன்றியைக் கொன்றுவிட்டு
யாருக்கு நன்றி சொல்ல இந்தப் பொங்கல்

பொங்கலைக் கொண்டாடும் முன்..
1. பாக்கெட் பால்
வாங்கமாட்டேன்
2. இயற்கை அங்காடிகளையே
பயன்படுத்துவேன்
3. நாட்டு மாடுகள் வளர்க்க
உதவி செய்வேன்
4. ஏசி பயன்படுத்த மாட்டேன்
5. விவசாயம் செழிக்க என் பங்கெடுப்பைச் செய்வேன்

என்ற உறுதிமொழியை
எடுப்போம்

இயலவில்லை எனில்
பொங்கல் வாழ்த்துகள் என்று யாருக்கும் அனுப்பாமல்
தொலைககாட்சியின் சிறப்புத்திரைப்படங்கள் பார்த்துவிட்டு உறங்குவோம்.

பொங்கல் என்பது உணவு தந்தவர்க்கு நன்றி தெரிவிக்கும் விழா

பழையபாடல் கேட்கிறது
நன்றி கெட்ட மகனை விட
நாய்கள் மேலடா...

நான் உட்பட..

🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Saturday 13 January 2018

#151 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 355 எப்பொருள் எத்தன்மைத் | Daily on...

#253 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

தைப்பொங்கலன்று சாமி கும்பிடும் முறை !

*தைப்பொங்கலன்று சாமி கும்பிடும் முறை !!*

*பொங்கல் வைக்கும் முறை*


💥 தைப்பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லை அறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்திற்கும், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும் நன்றி செலுத்துவதே பொங்கல். இந்தப் பண்டிகை தொடர்ச்சியாக நான்கு நாட்கள் நகரம் முதல் கிராமங்கள் வரை விழாவாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் வைக்கும் முறை :

💥 காலையில் நல்ல நேரம் பார்த்து, வீட்டு முற்றத்தில் பெரிய அளவிலான குத்து விளக்கை ஏற்றுங்கள்.

💥 விளக்கிற்கு பூ சூட்டி அலங்கரியுங்கள். விளக்கை ஏற்றி வையுங்கள் இல்லையேல், நிறைவிளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, வலது ஓரத்தில் சாணப்பிள்ளையாரையும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள்.

💥 இடது ஓரத்தில் நாழி நிறைய பச்சை நெல் வைக்க வேண்டும். இலையில் பச்சரிசி, கத்தரிக்காய், கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு, அவரைக்காய், சீனி அவரை, பூசணித்துண்டுகள், பிடிகிழங்கு, காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை), வெற்றிலை, பாக்கு, பழம், மஞ்சள்கிழங்கு, வாழைப்பழம் போன்றவற்றை படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் நிற்கும் படி கட்டி வையுங்கள்.

பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய் சேர்த்து தயாரித்த காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். பொங்கல் பானையை மண் அடுப்பு அல்லது பொங்கல் கட்டி எனப்படும் கற்கள் மீது வைக்க வேண்டும். ஒரு பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். திருவிளக்கிற்கு பத்தி, கற்பூர ஆரத்தி காட்டியபிறகு, உங்கள் குல தெய்வம் இருக்கும் கோயிலின் திசையை நோக்கி காட்டுங்கள்.

💥 பின்னர் சூரியபகவானுக்கு ஆரத்தி காட்டியதும், தேங்காய் உடைத்து, அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும்.

💥 பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றுங்கள். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியவுடன், பொங்கலோ பொங்கல் எனச் சொல்லி குலவையிடுங்கள். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி பொங்க இருக்கிறோமோ, அந்தளவுக்கு எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல தீயின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும். பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள். பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள்.

வழிபடும் முறை :

💥 சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். முதலில் பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். காகம் உணவை எடுத்தப்பிறகு, குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கல் கொடுக்க வேண்டும். அதன்பிறகே பெரியவர்கள் சாப்பிட வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அதன் பிறகு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் ஒற்றுமையாக சாப்பிட வேண்டும்.

💥 வீட்டு வாசலில் பொங்கல் வைக்க வசதியில்லாவிட்டால், தெருமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, நல்ல நேரத்தை தேர்ந்தெடுத்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் இணைந்து பொங்கல் வைக்க வேண்டும். ஊர் மக்கள் ஒன்று கூடி கோவில்களிலும் பொங்கல் வைத்து வழிபடலாம்.

பிறக்கும் தை... நம் அனைவருக்கும்...

பிறக்கும் தை...
நம்.  அனைவருக்கும்

ஆரோக்கியத்....தை
நலத்.....தை,
வளத்......தை,
சாந்தத்.....தை
சமத்துவத்....தை,
நட்பில் இறுக்கத்....தை,
பந்தத்.....தை
பாசத்....தை,
நேசத்.....தை
இரக்கத்.....தை,
உற்சாகத்......தை,
ஊக்கத்.....தை,
ஏற்றத்....தை..
சுபிட்சத்.....தை,

கொடுத்து...

பஞ்சத்.....தை
வஞ்சத்......தை
வன்மத்....தை
துரோகத்....தை,
அலட்சியத்....தை
அகங்காரத்.....தை
ஆணவத்....தை
கோபத்.....தை,
குரோதத்.....தை,
சுயநலத்.....தை,

எடுத்து...

எல்லோரும்
இறையருளால் இனிதாய் வாழ
வாழ்த்தும்...
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..

போகி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

🍉குன்றா நலமும்
🍎குறையா வளமும்
🍓மங்கா புகழும்
🍑மாசிலா  செல்வமும்
🍇அன்புடை சுற்றமும்
🍍அறமறிந்த நட்பும்
🍏பொங்கலோடு பொங்கி
🍋பொங்கியது தங்கி
🍌தங்கியது பெருகி
🍐பெருகியது உதவி
🌻உதவியது உவகை பெருக்கி
🌸பெருகிய உவகை பொங்கி
🌺பொங்கியது நிலைத்து
🌷நீடூழி வாழ
🌾இத் தை திருநாளில்

இல்லங்களில் பொங்கல் பொங்கட்டும். 🌞

உள்ளங்களில் மகிழ்ச்சி தங்கட்டும். 🌝

🙏அனைவருக்கும் இனிய இதயங்கனிந்த போகி மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!🙏

Friday 12 January 2018

மனைவி: டிவி ல ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே...

மனைவி: டிவி ல ஜல்லிக்கட்டு பாக்குறிங்கலே...அவ்லோ ஆர்வம்னா...நேருல போய் மாடு அடக்க வேண்டியது தானே....

கணவன்: கட்டுன மாட்டையே அடக்க முடியல...இதுல கட்டாத மாட்ட எப்படி அடக்குறது??😆😆😜

அதுல இது லேட்டஸ்ட்.... ""Husband temporary"" இதுல Highlight...

ஆளாளுக்கு ரெண்டு மூணு mobile number வச்சிருக்கிறவங்க....அதை அவங்க relatives save பண்ணி வச்சிருக்கிற பேர்களைப் பார்த்தா....ரொம்ப terrorஅ இருக்கு...
example பார்த்தோம்னா.....
"" Mummy new""
""Appa 2""
Wife new""
Wife 2""
""Mother-in law jio""
அதுல இது லேட்டஸ்ட்....
""Husband temporary""
இதுல Highlight...
Husband 1""
Husband 2""
Husband 3"" 😎😩😏😜

என்னைக் கவர்ந்த வாசகங்கள்...

*என்னைக் கவர்ந்த வாசகங்கள்...*
✳பேசி தீருங்கள்.
பேசியே வளர்க்காதீர்கள்.
✳உரியவர்களிடம் சொல்லுங்கள்.
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்.
✳நடப்பதைப் பாருங்கள்.
நடந்ததைக் கிளறாதீர்கள்.
✳உறுதி காட்டுங்கள்.
பிடிவாதம் காட்டாதீர்கள்.
✳விவரங்கள் சொல்லுங்கள்.
வீண்வார்த்தை சொல்லாதீர்கள்.
✳தீர்வை விரும்புங்கள்.
தர்க்கம் விரும்பாதீர்கள்.
✳விவாதம் செய்யுங்கள்.
விவகாரம் செய்யாதீர்கள்.
✳விளக்கம் பெறுங்கள்.
விரோதம் பெறாதீர்கள்
✳சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்.
✳செல்வாக்கு இருந்தாலும்
சரியானதைச் செய்யுங்கள்.
✳எதிர் தரப்பும் பேசட்டும்.
என்னவென்று கேளுங்கள்.
எவ்வளவு சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்.
✳நேரம் வீணாகாமல்
விரைவாக முடியுங்கள்.
✳தானாய்த்தான் முடியுமென்றால்,
வேறு வேலை பாருங்கள்.
*யாரோடும் பகையில்லாமல் புன்னகித்து வாழுங்கள்....*

🎭வாழ்க்கை குறுகியது,
ஆனா
அழகானது...

 👌👌👌😀😆😄👌👌👌

*உப்பைக் குறையுங்கள்*
என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்.

அதனால்
*வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய   உப்புகள் சில:-*

கணவன்கள் - *படபடப்பு*
மனைவிகள் - *நச்சரிப்பு*
டீன் ஏஜ்க்கள் - *பரபரப்பு*
மாணவர்கள் - *ஏய்ப்பு*
மாமியார்கள் - *சிடுசிடுப்பு*
மருமகள்கள் - *கடுகடுப்பு*
வக்கீல்கள் - *ஒத்திவைப்பு*
டாக்டர்கள் - *புறக்கணிப்பு*
அரசியல்வாதிகள் - *ஆர்ப்பரிப்பு*
வயதானவர்கள் - *தொணதொணப்பு*

ஆனால்,
யாரும் குறைக்கத் தேவையில்லாத
ஒரே உப்பு
*சிரிப்பு.* 😀

இது உடம்புக்கு *மிகச்சிறப்பு...*

👌👌👌😄😆😀👌👌👌

#150 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1147 ஊரவர் கெளவை | Daily one thiruk...

#252 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள....

*தெரிந்து மிதித்தாலும்  தெரியாமல் மிதித்தாலும்*

*மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!*
👌👌👌👌👌👌👌


*நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை*

*அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட  சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!*
👌👌👌👌👌👌👌👌


*'சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது*

*உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை*
👌👌👌👌👌👌👌👌


*நோய் வரும் வரை உண்பவன்,*

*உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!*
👌👌👌👌👌👌👌👌


*பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல*

*ஆனால் செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!*
👌👌👌👌👌👌👌👌


*பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!*

*உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!*
👌👌👌👌👌👌👌👌


*பிச்சை போடுவது கூட சுயநலமே...*

*புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...*
👌👌👌👌👌👌👌👌



*அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை*

*ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.*
👌👌👌👌👌👌👌👌


*வாழ்க்கையில் கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு*
*அதற்கு அவமானம் தெரியாது*

*விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!*
 👌👌👌👌👌👌👌👌



*வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".*

*வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"*
👌👌👌👌👌👌👌👌

 

*திருமணம் -*
*ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்*

*ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!*
👌👌👌👌👌👌👌👌


*முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்*

*பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்*

*அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.*
👌👌👌👌👌👌👌👌
 

*மீண்டும் ஒரு முறை* *முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்*
*என்ற ஒரு காரணத்திற்காகவே*

*நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன*
👌👌👌👌👌👌👌👌
 

*நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.*
👌👌👌👌👌👌👌👌
   

*இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட*

*வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!*
👌👌👌👌👌👌👌


*பகலில் தூக்கம் வந்தால்,*
*உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!*

*இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!*
👌👌👌👌👌👌👌👌


*துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது*

*கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது..* 
👌👌👌👌👌👌👌



*தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது*
👌👌👌👌👌👌👌

*#அழகான வரிகள்*

A to Z Alphabet drawing puzzle for kids | குழந்தைகளுக்கு வரை புதிர் விளை...

Thursday 11 January 2018

தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்...

ஒரு குட்டிக் கதை

ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரன் ஒருவன் இருந்தான்.

அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.

ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.

முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.

சட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான்.  ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.

பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி!” என்றான் பிச்சைக்காரன்.

இந்தப் "பிச்சை" ஓட்டை எவ்வளவு
காலமா வச்சிருக்க? என அவர் மறுபடியும் கேட்க..

எங்க தாத்தா, அப்பான்னு இரண்டு தலைமுறைக்கு முன்னாடில இருந்தே இந்த ஓட்டை வச்சிருக்கோம்.
யாரோ ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து, 'இதை வச்சுப் பொழைச்சிக்கோ- ன்னு குடுத்தாராம் என்றான்.

அந்த துறவி  “அடப்பாவிகளா! மூணு  தலைமுறையா இந்த ஓட்டை வச்சு பிச்சைதான் எடுக்கறீங்களா?” எனக் கோபமாக கேட்க..

பிச்சைக்காரனுக்குப் புரியவில்லை.

துறவி அமைதியாக அந்தப் பிச்சை ஓட்டை ஒரு சிறு கல்லினால் சுரண்டத் தொடங்கினார்.

பிச்சைக்காரன் துடிதுடித்துப் போனான்.
“சாமி..! எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து
அந்த ஓடுதான். நீங்க பிச்சை போடாட்டியும்.... பரவால்ல. அந்த ஓட்டக் குடுத்துடுங்க சாமீ..!” என பரிதாபமாக கேட்க...

துறவி சிரித்துக் கொண்டே மேலும் வேகமாக அந்த ஓட்டை சுரண்ட தொடங்கினார்.

பிச்சைக்காரன் அழுதான். அங்கலாய்த்தான்.
“ராசியான ஓடு சாமி! மகான் கொடுத்த ஓடு சாமி. அதை சுரண்டி உடைச்சிடாதீங்க சாமி” என அலறினான்.

துறவியோ ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார். சுரண்டச் சுரண்ட, அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்து...

மெள்ள மெள்ள...

மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்...!

பிச்சைக்காரனின் கண்கள் அகலமாக விரிந்தது. இத்தனை நாள் தங்கத் திருவோட்டிலா பிச்சையெடுத்து தின்றோம். அடக் கொடுமையே என தன்னையே நொந்து கொண்டான்.

ஓட்டின் அருமை தெரியாமல் அதை பிச்சையெடுக்க பயன்படுத்திய தன் முன்னோர்களை காறி துப்பினான்.

பிச்சைக்காரனின் கையில் அந்தத்
தங்க ஓட்டைக் கொடுத்த துறவி மிகவும் வேதனையுடன் சொன்னார்!

“அந்த மகான் கொடுத்தத் தங்க ஓட்டை வச்சுக்கிட்டு இந்த ஊருலேயே பெரிய பணக்காரங்களா இருந்திருக்க வேண்டியவங்க நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களேடா.?” இனியாவது ஓட்டை வைத்து ஒழுங்காக வாழுங்கடா என்று திட்டிவிட்டு போனார்.

இன்றைய தமிழக மக்களும் அந்த பிச்சைக்காரன் போல தான். தங்களிடம் இருக்கும் தங்க திரு ஓட்டில் பிச்சையெடுத்து வாழ்கிறார்கள்.

ஓட்டின் மகிமையை என்று உணர்வார்களோ.. அன்றே தமிழகம் உலகில் உயர்ந்து விளங்கும்.

#149 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 688 தூய்மை துணைமை | Daily One Thiru...

#251 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Daily five golden words | All Is Well

கண்ணீர் வரவழைக்கும் கவிதை....

கண்ணீர் வரவழைக்கும் கவிதை :

உச்சியிலே கண் சுருக்கி,
அண்ணாந்து பாத்து பாத்து

வராத மழைக்காக ஏங்கி நிற்கும்
ஏழை உழவன்,

தூரல் கொஞ்சம் விழுந்ததுமே,
விதைபோட கடன் வாங்கி,

இருப்பதெல்லாம் அடகு வச்சு,
ஏரோட்டி விதைச்சுடுவான்.,

முளை விட்ட பயிர்கண்டு
பிள்ளை பெற்ற ஆனந்தம்

களை வெட்டி உரம் வச்சு
கண்ணைபோல பாதுகாத்து

ஒட்டிப்போன வயிறோடு
மாடாக உழைச்சிடுவான்

போட்டதுல அரைவாசி
வேசையில கருகிடவே

கலங்காம அறுவடைய
காலத்துல செஞ்சிருவான்

அடிச்சு வச்ச மூட்டையெல்லாம்,
மனக்கணக்கு போட்டிடுவான்

வருசமெல்லாம் கஞ்சிக்கு வழியொன்னு தெரியுதுன்னு மனசுக்குள்ள மகிழ்ந்திடுவான்.,

வாங்க வந்த வியாபாரி விலையில்லனு சொல்லிப்போக,
நொந்து போயி போன விலைக்கு வித்திடுவான்

வாங்கியது வட்டிக்கு பத்தாம போகையிலே, மனசுக்குள்ளே மருகிடுவான்.,

கடன்காரன் வாசலிலே
கத்திவிட்டு போகையிலே

வழியின்றி நிற்கையிலே
கண்ணில் படும் காளை மாடு,

கண்ணுக்குள்ள வச்சு வளத்த காளை இரண்டும் கடன்காரன் புடிச்சு போக

மரணவலி கொண்டிடுவான்
மானமுள்ள உழவன் மகன்

இருப்பதெல்லாம் போனாலும்,
உழவையவன் விடுவதில்லை.,

காஞ்சு போன காட்டுக்குள்ள காலாற நடந்திடுவான் அடுத்த பட்டம் வரட்டுமென்று ....

பட்டமுந்தான் வந்தபின்னும்
பருவமழை பொய்க்கையிலே
போக்கத்தை  வாழ்க்கையெண்ணி அனுதினமும் அழுதிடுவான்.,

தண்ணி பாத்து நாளான வெடிச்சு
நிக்கும் மண்ணை பாத்து,
கண்ணீரைச் சிந்தியவன் கடைசியாக
கடன் கேட்டு,

நாலு முல கயிறு வாங்கி
நிக்க வச்ச கலப்பையிலே
தலைப்பாகம் பாத்துக்கட்டி
நாண்டுகிட்டு செத்துருவான் ....

அனுதாபம் தெரிவிச்சு அடுத்தநாளு செய்தியில 2 லட்சம் தருவோம்னு அரசாங்கம் அறிவிப்பு.,

சேர்ந்துச்சா பாத்தவன்தான் எவனுமில்ல ...

கொடுக்கும் 2 இலட்சம் போயி
வங்கியிலே வட்டி தரும்,
ஏர்க்கலப்பையில் மாட்டை
பூட்டி உழுதிடுமா??? 

அழிஞ்சு போகும் இனமுன்னு சில
விலங்குகளை பாதுகாக்க,
கோடிக்கணக்கில் செலவு பண்ணி
சரணாலயம் இருக்குதுங்க ...

அழிஞ்சு போற எம் உழவன்
இனம் யாருக்கும் தெரியலயா?? ...

பணம் மாத்த காத்துநிக்கும்
கோடிமக்கள் ஒருநாள்,

சோத்துக்காக உழவன் வீட்டில்
காத்து நிக்கும் நாள் வரனும் ...

*எழுதியவர்களுக்கு நன்றிகள்*

இப்பலாம் ATM-ல #பணம் எடுக்கவே பயமா இருக்கு...

இப்பலாம் ATM-ல #பணம் எடுக்கவே பயமா இருக்கு...😰

எங்க அங்கயும் வந்து #தமிழனா இருந்தா அதை #SHARE பண்ணு'னு சொல்லிடுவாங்களோ'னு...👀🧐🧐🧐

யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து...

யோவ் கண்டக்டர் பஸ்ஸை நிறுத்து.. ஒருத்தர் பஸ்ல இருந்து தவறி விழுந்துட்டாரு..

சும்மா இருய்யா.. கண்ட இடத்துல விசில் அடிச்சா டிரைவர் என்னைத் திட்டுவாரு.

யோவ் பஸ்ல இருந்து தவறி விழுந்தது டிரைவர் தான்யா!

ஆம்புலன்ஸை பார்த்து வழிவிடாதவன் கூட ...

ஆம்புலன்ஸை பார்த்து வழிவிடாதவன் கூட அரசு பஸ்ச பாத்து வழி விடுறான்...

ஏன்னா ட்ரைவிங் அப்டி....

*மரண பயத்த காட்டிடானுங்க பரமா*🚎🤥🤣

போன வருஷம் இந்நேரம் பசுக்காக போராடினோம்!

போன வருஷம் இந்நேரம் பசுக்காக போராடினோம்!

இந்த வருஷம் பஸ்சுக்காக போராடுறோம்!
😖😖😖😖😖😖😖😖😖

வாழ்க்கையே ஒரு போராட்டம்னு சொன்னது போய் வாழ்வதே ஒரு போராட்டம்னு ஆகி போச்சு...🤣😂🤣😂😜😜

Monday 8 January 2018

#146 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 514 எனைவகையான் தேறியக் | Daily One ...

#248 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal | All Is Well

தமிழ் எண்கள்... 1 – க, 2 – உ, 3 – ங, 4 – ச, 5 – ரு, 6 – சு, 7 – எ, 8 – அ, 9 – கூ, 10 – கo,

*தமிழ் எண்கள்*
1 – க, 2 – உ, 3 – ங, 4 – ச, 5 – ரு, 6 – சு, 7 – எ, 8 – அ, 9 – கூ, 10 – கo,
11 – கக, 12 – கஉ, 13 – கங, 14 – கச, 15 – கரு, 16 – கசு, 17 – கஎ, 18 – கஅ, 19 – ககூ, 20 – உo 21 – உக, 22 – உஉ, 23 – உங, 24 – உச, 25 – உரு, 26 – உசு, 27 – உஎ, 28 – உஅ, 29 – உகூ, 30 – ஙo
31 – ஙக, 32 – ஙஉ, 33 – ஙங, 34 – ஙச, 35 – ஙரு, 36 – ஙசு, 37 – ஙஎ, 38 – ஙஅ, 39 – ஙகூ, 40 – சo, 41 – சக, 42 – சஉ, 43 – சங, 44 – சச, 45 – சரு, 46 – சசு, 47 – சஎ, 48 – சஅ, 49 – சகூ, 50 – ருo
51 – ருக, 52 – ருஉ, 53 – ருங, 54 – ருச, 55 – ருரு, 56 – ருஎ, 57 – ருஎ, 58 – ருஎ, 59 – ருகூ, 60 – சுo 61 – சுக, 62 – சுஉ, 63 – சுங, 64 – சுச, 65 – சுரு, 66 – சுசு, 67 – சுஎ, 68 – சுஅ, 69 – சுகூ, 70 – எo
71 – எக, 72 – எஉ, 73 – எங, 74 – ஏசு, 75 – எரு, 76 – எசு, 77 – எஎ, 78 – எஅ, 79 – எகூ, 80 – அo 81 – அக, 82 – அஉ, 83 – அங, 84 – அச, 85 – அரு, 86 – அசு, 87 – அஎ, 88 – அஅ, 89 – அகூ, 90 – கூo
91 – கூக, 92 – கூஉ, 93- கூங, 94 – கூச, 95 – கூரு, 96 – கூசு, 97 – கூஎ,
98 – கூஅ, 99 – கூகூ, 100 – கoo
101 – கoக, 102- கoஉ, 103 – கoங,
104 – கoச, 105 – கoரு, 106 – கoசு,
107 – கoஎ, 108-கoஅ …….
————————————–
இச்செய்தி பகிற்விற்கு ஏற்றது!
நம்  நண்பர்களுக்கு அவசியம் பகிரலாம்.

2 stories to begin with Nokia refused Android

2 stories to begin with
1. Nokia refused Android
2. Yahoo refused Google

Story Over
Lessons Learnt
1. Take risks
2. Embrace changes
3. If you refuse to change with time, you might perish

Ok 2 More stories
1. Facebook takes over whatsapp and instagram
2. Flipkart takes over Myntra and flipkart owned Myntra takes over jabong

Story Over

Lessons learnt
1. Become so powerful that your competitors become your allies
2. Reach the top position and then eliminate the competition
3. Keep innovating

2 More stories
1. Colonel sanders founded KFC at the age of 65
2. Jack Ma, who coudnt get job in KFC, founded Ali baba

Story over

Lessons learnt
1. Age is just a number
2. Only those who keep trying succeeds

Last but not the least
1. Lamborghini was founded as result of revenge of a tractor owner who was insulted by Enzy Ferrari, the founder of ferrari

Story Over

Lessons learnt
1. Never underestimate anyone, ever !!
2. Success is the best revenge


Just keep working hard !!
Invest your time wisely !!
Do what pleases you !!
Dont be afraid to fail !!!

Sunday 7 January 2018

ஊத்தி மூடிய MLM Schemes...

மக்களே உஷார் !

சமீப காலமாக Face Book மற்றும் WHATSAPP இல் பகிரங்கமாக (MLM- Multi Level Marketing) விளமபரங்கள் கீழ்கண்ட தலைப்புகளில் பதிவாகின்றன !
(அரசின் சட்ட வரையறைகள் அட்டாச் செய்யப்பட்டுள்ளது-MLM Banned in any mode for any kind of product)

1. முதலீடு இல்லாமல் தொழில் வாய்ப்பு

2.புதிதாக தொழில் செய்ய விருப்பமா

3.500 ரூபா முதலீடு லச்சம் ரூபா வருமானம்

4. மொபைல் போன் மூலம் வருமானம் (அன்லிமிடெட் வருமானம்)

5. ஆன்லைன் கிளிக் செய்தால் வருமானம் (அன்லிமிடெட் வருமானம்)

6. Android App டவுன்லோட் செய்தால் (அன்லிமிடெட் வருமானம்)

இவர்கள் டார்கெட் செய்வது தமிழ் படித்து வேலைகிடைக்காத லச்சக்கணக்கான இளைஞர்களை !

ஊத்தி மூடிய MLM Schemes-

MODICARE , AMWAY, EEMU KOLI, GOLD QUEST (தங்க நாணயம்) , NUTRILITE, VESTIGE, Social Trade, Champ Cash, Herbal Life, 4Life, OriFlame,

துரதிஷ்ட வசமாக நாம் செலுத்தும் நாம் கஷ்டப்பட்டு சேர்த்த பணம் மேற்க்கண்ட அமெரிக்க நிறுவனங்களின் வங்கி கணக்கில் நேரிடையாக சேர்கிறது ???

முடிந்தால் சிந்திப்பீர் !
முடிந்தால் தப்பியுங்கள் !

Please do google for the blow said Indian Rule,

"The Prize Chits And Money Circulation Schemes (Banning) Act, 1978".

Search Results
[PDF]Direct Selling Guidelines Final .pdf - Department of Consumer Affairs

#பகவத்கீதையின்_மிகச்சிறந்த_வசனங்கள்.

#பகவத்கீதையின்_மிகச்சிறந்த_வசனங்கள்___.....  ....             

 1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது.

அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது.

அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.

2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.

5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான்.

சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.

7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி.

இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை.

தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.

8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல.

அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.

9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.

10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.

11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு.

ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும்,
துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.

13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது.

ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.

14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன.

ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.

15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறு யாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.

16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை.

முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.

17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.

18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட,

என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான் வேண்டும்.

19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை;

நாளைய பொழுதும் நிச்சயமில்லை;

இன்றைக்கு மட்டுமே நம் கையில்.

20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.

21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.

22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி.

ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.

23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம்.

ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.

24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து.

அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.

25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல்
பின் வாங்குவது இழிவானது.

      படித்ததில் பிடித்தது.

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு முன்பு...

இயற்கை மருத்துவம்:-

# பப்பாளிப் பழத்தைத் தேனில் ஊறவைத்துச் சாப்பிட்டால் மூல நோய் குணமாகும்.

# வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், சளித் தொல்லை நீங்கும்.


# வில்வ பழத்தை நாள்தோறும் சாப்பிட, பிரசவித்தப் பெண்களுக்குத் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

# ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு முன்பு வயிற்று வலி வருகிறதா? மாதவிடாய்    வருவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே முருங்கை இலையை இடித்துப் பிழிந்து, அதன் சாற்றை  வெறும் வயிற்றில் காலை நேரத்தில் சாப்பிட்டால் வயிற்று வலி வராது.

# மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் தினமும் திராட்சை ரசம் அருந்துவது நல்லது.

Thursday 4 January 2018

ரஜினி அரசியலுக்கு வந்தது பயமில்லை...ஆனால்....

😂ரஜினி அரசியலுக்கு வந்தது பயமில்லை👍
 லதாரஜினிI  அமைச்சர் ஆனாலும் பயமில்லை 💐
தனுஷ்  அமைச்சர் ஆனாலும்   பயமில்லை 🙏
ஆனால்.அந்த பொண்ணு ஐஸ்வர்யாரஜினி பதவி ஏற்பு விழாவில் பரதநாட்டியம் ஆடுமேனு  💃🏼 நினைச்சா தான்... இப்பவே   கண்ணக்கட்டுதே... 😂🙊😁🤣

பொது அறிவு #3

🔰 பொது அறிவு :

1. #  தேன்போன்ற இனிய பாடல்களாலான மாலை என பொருள் வருமாறு தேம்பாவணியைப் பிரித்து எழுதுக .
விடை – தேன் + பா + அணி

2. #  ‘ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்’ என்று பாடியவர் ?
விடை – பாரதியார்

3. #  ‘என்பணிந்த தென்கமலை ஈசனார் ’ – இவ்வடியில் தென்கமலை என்பதன் பொருள் ?
விடை – தெற்கே உள்ள திருவாரூர்

4. #  ‘ நகைசெய் தன்மையி னம்பெழீ இத்தாய்துகள் ’ எனத்துவங்கும் தேம்பாவணி பாடல் இடம்பெறும் படலம் யாது ?
விடை – மகவருள் படலம்

5. #  தூக்கணாங்குருவி எங்கு வாழும் ?
விடை – சமவெளி மரங்கள்

6. #  திருவாரூர் நான்மணிமாலையில் உள்ள செய்யுள்களின் எண்ணிக்கை ?
விடை – 40

7. #  நாடகம் தோற்றம் பெற்றதன் வரலாற்றை அறியப்புகும்போது , ______ எனும் பண்பு அடிப்படையாக அமையும் .
விடை – 40

8. #  பறவைகளை எத்தனை வகையாக பிரிக்கலாம் ?
விடை – 5

9. #  ‘ கற்பிப்போர் கண்கொடுப்போரே ‘ என்று பாடியவர் ?
விடை – வாணிதாசன்

10. #  நாடகப்பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுக்கும் நூல் ?
விடை – தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்

1. #  கரைவெட்டி பறவைகள் புகலிடம் அமைந்துள்ள மாவட்டம் ?
விடை – பெரம்பலூர்

2. #  வானவர் உறையும் மதுரை என்று மதுரையைப் போற்றிப் பாடிய நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

3. #  நாடகக்கலையைப் பற்றியும் ,காட்சித்திரைகளைப் பற்றியும் , நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாக கூறும் நூல் ?
விடை – சிலப்பதிகாரம்

4. #  உலகிலேயே நஞ்சுமிக்க மிக நீளமான பாம்பு எது ?
விடை – இந்திய ராஜநாகம்

5. #  கோவலன் கொலைக்களப் பட்ட இடம் ?
விடை – கோவலன் பொட்டல்

6. #  மதங்க சூளாமணி எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – சுவாமி விபுலானந்தா

7. #  நல்லபாம்பின் நச்சிலிருந்து எடுக்கப்படும் கோப்ராக்சின் எனும் மருந்து எதற்கு பயன்படுகிறது ?
விடை – வலிநீக்கி

8. #  பொருட்பெயர் , எத்தனை வகைப்படும் ?
விடை – 2 (உயிருள்ள , உயிரற்ற)

9. #  மல்லிகை சூடினாள் – ஆகுபெயர் கூறுக .
விடை – பொருளாகு பெயர்

10. #  பொருள் தருக – மடவார்
விடை – பெண்கள்

1. #  பார்வதிநாதன் , ஆரோக்கிய நாதன் போன்ற புனைப்பெயர்களை உடையவர் ?
விடை – கண்ணதாசன்

2. #  ‘புகழெனின் உயிரும் கொடுப்பர் ’ என்ற வரிகள் இடம்பெறும் நூல் ?
விடை – புறநானூறு

3. #  கிழக்கு தொடர்ச்சி மலைகளில் உயா்ந்த மலை – சேர்வராயன் மலை

4. #  இன ஒதுக்கல் கொள்கை முடிவிற்கு வந்த ஆண்டு– 1990

5. #  அலையில்லா கடற்பரப்பு கொண்ட கடற்கரைப் பகுதி?—ராமேஸ்வரம்

6. #  செம்மொழி தரவரிசையில் தமிழ் எத்தனையாவது இடம்? – 8

7. #  அடர்ந்த காடுகள் அதிகம் காணப்படும் மாநிலம்? அருணாச்சலபிரதேசம்

8. #  எவர்களுடைய ஆட்சி காலம் ‘தமிழ் நாட்டின் பொற்காலம்? சேர சோழ பாண்டிய பல்லவர்கள்

9. #  தமிழக அரசு சிறப்புமிக்க மலராக அங்கீகாரம் செய்த மலர்? குறிஞ்சி மலர்

10. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 4

1. #  இந்திய பரப்பளவில் தமிழ் நாடு 11 இடம்

2. #  இந்திரா முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது.

3. #  ஆரிய மற்றும் திராவிட இரு நாகரீகங்கள் கலந்ததால் தமிழ் நாடு நாகரிகத்தின் தொட்டில் என அழைக்கப்படுகிறது.

4. #  சங்க காலத்தின் படைப்பிலக்கியங்கள் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

5. #  முதல் தமிழ் அச்சகம் எங்கு ஆரம்பிக்கப் பட்டது தரம்கம்பாடி

6. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது டச்சு பாதிரியார்கள்

7. #  தமிழ் நாட்டின் மலைத்தொடரின் அதிக பட்ச உயரம் — தொட்டபெட்டா 9TH BOOK 2620M,10TH BOOK 2637M

8. #  தென்னக ஆற்றுச் சமவெளிகளை உருவாக்கிய நதிகள் வைகை, வைப்பார், தாமிரபரணி

9. #  கிழக்கு நோக்கி பாயும் ஆறுகளால் உருவாக்கப்படும் பகுதி சமவெளி

10. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு கொள்ளிடம்

தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்...

தமிழ் இதழ்கள் நடத்திய ஆசிரியர்கள்

🌹 தேசபக்தன் - திரு. வி. க

🌹 குயில் - பாரதிதாசன்

🌹 சுதேசிமித்ரன் - ஜி. சுப்பிரமணிய ஐயர்

🌹 பாலபாரதி - வ. வே. சு. ஐயர்

🌹 ஞானபோதினி - சுப்ரமணிய சிவா

🌹 இந்தியா, விஜயா - சுப்பிரமணிய பாரதி

🌹 தமிழ் நாடு - வரதராஜுலு நாயுடு

🌹 மணிக்கொடி - பி. எஸ். ராமையா

🌹 எழுத்து - சி. சு. செல்லப்பா

🌹 குடியரசு, விடுதலை - பெரியார்

🌹 திராவிட நாடு - அண்ணா

🌹 தென்றல் - கண்ணதாசன்

🌹 சாவி - சா. விஸ்வநாதன்

🌹 கல்கி - ரா. கிருஷ்ணமூர்த்தி
* - - * - - * - - *
தலைவர்கள் பிறந்த வருடம்
அனைத்து வருடங்களும் 10ண் அடுக்கு உறவு முறைகள்

🌹 தாத்தா

🌹 தந்தை

🌹 மாமா

🌹 சித்தப்பா

🌹 அண்ணா

🌹 தாத்தா - மகாத்மா காந்தி பிறந்த வருடம் 1869

🌹 தந்தை - தந்தை பெரியார் பிறந்த வருடம் 1879

🌹 மாமா - ஜவஹர்லால் நேரு பிறந்த வருடம் 1889

🌹 சித்தப்பா - நாராயணகவி பிறந்த வருடம் 1899

🌹 அண்ணா - அறிஞர் அண்ணா பிறந்த வருடம் 1909
* - - * - - * - -*
புதுக்கவிதை

🌹 புதுக்கவிதையின் புரவலர் - சிசு செல்லப்பா

🌹 புதுக்கவிதை செழுமையுற காரணமாக இருந்தவர் - சி.சு.செல்லப்பா

🌹 புதுக்கவிதையின் துருவ நட்சத்திரம் - பசுவையா(சுந்தர ராமசாமி)

🌹 புதுக்கவிதையின் படிமவாதி - தருமுசிவராமு

🌹 புதுக்கவிதையின் விடிவெள்ளி - தமிழன்பன்

🌹 புதுக்கவிதையின் தாத்தா - மேத்தா

🌹 புதுக்கவிதையின் சொல்லேர் உழவர் - சிற்பி

🌹 மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்- தமிழன்பன்

🌹 மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர்; புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் - அப்துல் ரகுமான்

🌹 புதுக்கவிதையின் பிதாமகன் - நா. பிச்சமூர்த்தி

🌹 புதுக்கவிதையின் முன்னோடி - நா. பிச்சமூர்த்தி

🌹 புதுக்கவிதையின் மறுபிறப்புக்கு வித்திட்டவர் - நா.பிச்சமூர்த்தி

🌹 யாப்பறிந்து யாப்புடைத்த புதுக்கவிஞர் - மணி

🌹 புதுக்கவிதையின் தந்தை - பிச்சமூர்த்தி

பொது அறிவு #2

🔰🔰பொது அறிவு :

1. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851

2. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்

3.  பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100

4. # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்

5. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்

6. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

7. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்

8. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்

9. # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்

1. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்

2. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்

3. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்

4. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்

5. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு

6. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)

7. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்

8. # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி

9. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்

10. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10

1. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3

2. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்

3. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

4. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)

5.  ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி

6. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்

7. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்

8. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை

9. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்

10. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்

1. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை

2. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக

3. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்

4. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா

5. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை

6. # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை

7. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி

8. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10

9. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம் அறிவு :

1. # சென்னை எழும்பூர் அருங்காட்சியகம் தொடங்கப்பட்ட ஆண்டு ?
விடை – 1851

2. # யானைப்போர் காண்பதற்காக மதுரையில் அமைந்திருந்த மைதானம் ?
விடை – தமுக்கம் மைதானம்

3.  பிள்ளைத்தமிழிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை ?
விடை – 100

4. # ‘அஞ்சலை அரக்க ! பார் விட்டந்தர மடைந்தா’ எனும் பாடல் இடம்பெறும் நூல் ?
விடை – கம்பராமாயணம்

5. # ஏறுதழுவுதல் எந்நிலத்தில் நடைபெறும் வீரவிளையாட்டு ?
விடை – முல்லைநிலம்

6. # மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் ?
விடை – பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம்

7. # தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத்தோற்றமும் அதற்கு கீழே இருபுறமும் யானைகளும் , குதிரைகளும் பூட்டிய ரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி ரகசியத்தைக்காட்டுவதாக கூறிய வெளிநாட்டு வானியல் அறிஞர் ?
விடை – கார்ல் சேகன்

8. # தஞ்சாவூரில் ஜ.யு .போப் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் ?
விடை – 8 ஆண்டுகள்

9. # ‘சுப்புரத்தினம் ஒர் கவி ’ என்று பாரதிதாசனை அறிமுகிப்படுத்தியவர் ?
விடை – பாரதியார்

1. # கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் தன் கவிதைகளில் பயன்படுத்தியவர் ?
விடை – க. சச்சிதானந்தன்

2. # துன்பத்தையும் நகைச்சுவையோடு சொல்வதில் வல்லவர் யார்?
விடை – ராமச்சந்திரகவிராயர்

3. # குறிஞ்சித்திட்டு எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – பாரதிதாசன்

4. # அபிதான சிந்தாமணியைத் தொகுத்தவர் ?
விடை – சிங்காரவேலனார்

5. # அகரமுதலிகள் தோன்ற அடிப்படையாக அமைந்த நிகண்டு ?
விடை – அகராதி நிகண்டு

6. # இலக்கிய வகையில் சொற்கள் எத்தனை வகைப்படும் ? அவை யவை ?
விடை – 4 (இயற்சொல் , திரிசொல் , திசைச்சொல் , வடசொல்)

7. # சிறந்த ஊர்களைக் குறிக்கும் சொல் ?
விடை – புரம்

8. # ‘ தெரியல் இவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை ’ எனத்துவங்கும் பாடல் இடம்பெறும் நூல் எது ?
விடை – நளதமயந்தி

9. # கணினியின் முதல் செயல் திட்ட வரைவாளர் ?
விடை – லேடி லவ்லேஸ்

10. # சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும் ?
விடை – 10

1. # இயல்பு வழக்கு எத்தனை வகைப்படும் ?
விடை – 3

2. # திராவிட மொழிகளின் தாய் தமிழ் என , உலகுக்குப் பறைசாற்றியவர் ?
விடை – கால்டுவெல்

3. # மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார் ?
விடை – சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை

4. அசலாம்பிகை அம்மையார் பிறந்த ஊர் ?
விடை – இரட்டணை (திண்டிவனம்)

5.  ‘அறவுரைக்கோவை’ என வழங்கபெறும் நூல் ?
விடை – முதுமொழிக்காஞ்சி

6. # யாருடைய மகளை , காந்தியடிகள் வர்தாவிற்கு அழைத்துச்சென்று லீலாவதி எனப்பெயரிட்டு வளர்த்தார் ?
விடை – அஞ்சலையம்மாள்

7. # சரியான தமிழ்ச்சொல் தருக – அட்டவணை
விடை – பொருட்குறிப்பு பட்டியல்

8. # அறநெறி விளங்க , ராமலிங்க அடிகளார் எதை நிறுவினார் ?
விடை – ஞானசபை

9. # மேடைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் ?
விடை – திரு.வி.கலியாணசுந்தரனார்

10. # தாயுமானவர் நினைவு இல்லம் அமைந்துள்ள மாவட்டம் மற்றும் ஊர் ?
விடை – லட்சுமிபுரம் , ராமநாதபுரம்

1. # என்பி லதனை வெயில்போலக் காயுமே அன்பி லதனை அறம் – இக்குறள் பயின்று வரும் அதிகாரம் ?
விடை – அன்புடைமை

2. # பொதுமை வேட்டலின் முதல மற்றும் இறுதி தலைப்பு எவை ?
விடை – தெய்வநிச்சயம் முதலாக போற்றி ஈறாக

3. # திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்தவர் ?
விடை – வீரமாமுனிவர்

4. # கிரெம்ளின் மாளிகை உள்ள நாடு ?
விடை – ரஷ்யா

5. # உலகத்தமிழராயாச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம் ?
விடை – சென்னை

6. # பொருள் தருக – எய்யாமை .
விடை – வருந்தாமை

7. # அற்புதமான அறிவுக் கதைகள் எனும் நூலின் ஆசிரியர் ?
விடை – ஜெயவர்ஷினி

8. # உ.வே . சா பதிப்பித்த பத்துப்பாட்டு நூல்கள் எத்தனை ?
விடை – 10

9. # இல்லார்க்கொன் றீயும் உடைமையும் , இவ்வுலகில் நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – இப்பாடல்வரிகள் இடம்பெறும் நூல் யாது ?
விடை – திரிகடுகம்

பொது அறிவு #1....

💯 பொது அறிவு :

1. #  முதலில் இறக்குமதியும் பின்னர் ஏற்றுமதியும் செய்யும் வணிகமுறை நேரடி வணிகம்

2. #  முதலில் ஏற்றுமதியும் பின்னர் இறக்குமதியும் செய்யும் வணிகமுறை பல்கிளை வணிகம்

3. #  நேரிணை வணிகத்திற்கு வேறு பெயர் நேரடி வணிகம்

4. #  காவிரியாற்றின் முதன்மை கிளையாறு? கொள்ளிடம்

5. #  முதல் தமிழ் அச்சகம் யாரால் ஆரம்பிக்கப் பட்டது? டச்சு பாதிரியார்களால் தரங்கம்பாடியில்

6. #  காலநிலை என்பது- – 30 அல்லது 32 ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிகழும் வானிலையின் சராசரி

7. #  7 மலைகள் கொண்ட மலைத்தொடர்—சாத்பூரா மலைத்தொடர்

8. #  எல்நினோ என்பது– பருவகால மாறுபாடு

9. #  தமிழ்நாட்டில் சூறாவளி மழைப்பொழிவு மாதம்?—டிசம்பர்

10. #  _________முனை பகுதி 2004ம் ஆண்டு சுனாமியால் கடலில் மூழ்கியது. இந்திராமுனை

1. #  தீபகற்ப இந்தியாவில் ஆறுகள் தோன்றும் இடம்? மேற்கு தொடர்ச்சி மலைகள்

2. #  மான்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது மெளஸிம் என்ற அரேபிய சொல்லிருந்து

3. #  கேதார்நாத் அமைந்துள்ள மலைத்தொடர்—இமாச்சல்

4. #  வடகிழக்கு இந்தியாவின் தலக்காற்று—நார்வெஸ்டார்ஸ்

5. #  5 முதல் 10 வருடங்களுக்கு ஒரு முறை காணப்படும் வானிலை நிகழ்வு?– எல்நினோ

6. #  மாஞ்சூன் என்ற சொல் எதிலிருந்து வந்தது? மெளசிம் என்ற அரேபிய சொல்

7. #  தமிழ்நாடு & தெற்கு ஆந்திரா வில் குளிர்கால மழையை தரும் காற்று? வடகிழக்கு

8. # பஞ்சாப்,ஹரியானா, இமாசலப்பிரதேசம் மாநிலங்களுக்கு நல்ல மழையை ஏற்படுத்தி கோதுமை விளைச்சலுக்கு உதவும் காற்று? தென்மேற்கு பருவகாற்று

9. #  எந்த இடத்தில் 150 மெகாவாட் அலைசக்தி உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது—விகின்ஜம்

10. #  காரகோரம் கணவாய் இணைக்கும் நாடுகள்?– ஆப்கானிஸ்தாம் இந்தியா

1. #  காவிரி ஆற்றின் பிறப்பிடம்—குடகுமலை

2. #  இந்தியாவில் நிலவுவது– அயனமண்டல காலநிலை

3. #  ஸ்ரீரங்கம் எந்த இரண்டு ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ளது?– காவிரி கொள்ளிடம்

4. #  டெல்டா என்பது– வண்டல்மண் சமவெளி

5. #  பூமியின் வளங்களுக்குள் அதிக மதிப்புடைய வளம் எது?—மனிதவளம்

6. #  வனப்பாதுகாப்புச்சட்டம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு– 1980

7. #  டூன் வகை பள்ளத்தாக்கு உள்ள மலைத்தொடர்—சிவாலிக்

8. #  தமிழ்நாட்டிலுள்ள மொத்த சர்க்கரை ஆலைகளின் எண்ணிக்கை? 42

9. #  தமிழ்நாடு சிமெண்ட் கூட்டுறவு நிறுவனம் (TANCEM) அமைந்துள்ள இடம்?—அரியலூர்

10. #  தமிழ்நாட்டில் மொத்தம் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?—15

1. # சொல்லின் இறுதியில் இருக்க வேண்டிய எழுத்துக்கு மாறாக வேறு ஒரு எழுத்து இருந்தால் அது கடைப்போலி.

2. # தொன்றுதொட்டு காரணம் எதுவும் இன்றி வரும் பெயருக்கு இடுகுறிப் பெயர் என்று அர்த்தம். அதற்கு உதாரணம் : கல், கலம், கன்னல்

3. # ஒரு காரணம் பற்றியோ அல்லது பல காரணங்கள் பற்றியோ வழங்கி வரும் பெயருக்குக் காரணப் பெயர் என்று அர்த்தம். உதாரணம் : முக்காலி (மூன்று கால்), பறவை (பறத்தல்)

4. # எழுத்துக்களின் ஒலி அளவு குறித்ததே மாத்திரையாகும். கண் இமைக்கும் நேரம் அல்லது கைநொடி நேரமே மாத்திரை ஆகும்.

5. # குறில் எழுத்துக்கு 1 மாத்திரை அளவு

6. # நெடில் எழுத்துக்கு 2 மாத்திரை அளவு

7. # மெய் எழுத்துகள், சார்பெழுத்துகள் – அரை மாத்திரை அளவு

8. # மகரக் குறுக்க எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு

9. # குற்றியலிகரம், குற்றியலுகரம் எழுத்துகளுக்கு கால் மாத்திரை அளவு

10. # ஆய்த எழுத்துகளுக்கு – கால் மாத்திரை அளவு

தேர்தல்கள்...

தேர்தல்கள்:

இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு 1950.

முதல் தேர்தல் ஆணையர்- சுகுமார் சென்

முதல் பொது தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1952.

ஒரு நபர் ஆணையமாக இருந்த ஆணையம் மூன்று நபர் ஆணையமாக மாற்றப்பட்ட ஆண்டு 1989.

வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக குறைக்கப்பட்ட ஆண்டு.1989
(61 வது திருத்தம்.)

தேர்தல் நடத்தை விதிமுறைகள் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதலே அமலுக்கு வரும்

தேர்தல் பரப்புரைகள் வாக்குப் பதிவுக்கு 48 மணி நேரம் முன்பாக முடிவுக்கு வரும்

சுயேச்சை வேட்பாளராக இருந்தால் அந்த தொகுதியைச் சேர்ந்த 10 வாக்காளர்கள் முன்மொழிய வேண்டும்

அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் வேட்பாளராக இருந்தால் அந்த தொகுதியைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிந்தாலே போதும்

ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது

மக்களவை பொது தொகுதிக்கு வேட்பாளர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ .25000/-

மக்களவை தனி தொகுதிக்கு வேட்பாளர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை ரூ .12500/-

மக்களவைத் தொகுதி வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள செலவின உச்ச வரம்பு. ரூ.70 இலட்சம் (இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்)

முதல் முறையாக சோதனை முயற்சியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1998 (M.P, RAJASTAN &; DELHI Assembly)

ஒரு மாநிலம் முழுமைக்கும் முதன் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1999 (கோவா)

மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு -1999 (45 தொகுதிகளில் மட்டும்)

மக்களவைத் தேர்தலில் நாடு முழுமைக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்ட ஆண்டு- 2004

இந்தியாவில் தற்போதுள்ள(2013) தேசிய கட்சிகளின் எண்ணிக்கை 6.(INC, BJP, CPI, CPM, BSP & NCP)

இந்தியாவில் தற்போதுள்ள மாநில கட்சிகளின் எண்ணிக்கை 51.

இந்தியாவில் தற்போதுள்ள பதிவு பெற்ற கட்சிகளின் எண்ணிக்கை 1415

வாக்காளர் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தொகுதி-மல்காஜ்கிரி (ஆந்திரா ) 29.53 LAKHS

வாக்காளர் அடிப்படையில் இந்தியாவின் மிக சிறிய தொகுதி- லட்சத்தீவுகள் 47972 பேர்

நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய தொகுதி- லடாக்

நிலப்பரப்பு அடிப்படையில் இந்தியாவின் மிக சிறிய தொகுதி- சாந்தினி சௌக்

#5 | Drawing Puzzle for Kids | குழந்தைகளுக்கு வரை புதிர் விளையாட்டு

#142 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 257 உண்ணாமை வேண்டும் | Daily One Th...

#244 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal | All is well

உன் தாத்தா பேர சொல்லு...


         😂சிரிக்க மட்டும் இந்த கதை😂
.
😂 கொஞ்சம் லென்த்தான ஜோக் தான்...
பட் ஸ்ட்ரென்த்தான ஜோக்'.😂😂😂

😂ஒரு பள்ளிக்கூடத்துக்கு ஆய்வாளர் ஒருத்தர் வந்தாரு. அந்த பள்ளிக்கூடத்தப் பத்தி ஏற்கனவே நிறைய அவரோட வேலை பாத்தவங்க சொல்லி இருக்காங்க... 'இது ஒரு ஏடாகூமான ஸ்கூலு பார்த்து ட்ரீட் பண்ணுங்க'ன்னு அதனால எதுக்கும் தயாராத்தான் அவர் வந்தார்...😂

😂முதல்ல ஒரு வகுப்புக்குள்ள   நுழைஞ்சாரு... உடனே பசங்க எல்லாம் எழுந்திருச்சு நின்னு வணக்கம் சொன்னாங்க...

😂சரி... எடுத்தவுடனேயே எதாவது கேள்வி கேக்க வேண்டாம்ன்னு முதல் பையன எழுப்பி...😂

😂"உன் பேர் சொல்லு"
"பழனி"
"உன் அப்பா பேரு" "பழனியப்பா",

😂அடுத்தப் பையன எழுப்பி ,
"உன் பேர் சொல்லு" "மாரி"
"உன் அப்பா பேரு" "மாரியப்பா..." 😂

😂அவருக்கு கொஞ்சம் டவுட் வருது😦...
😂இருந்தும் அடுத்தப் பையன எழுப்பி...
"உன் பேர் சொல்லு"
"பிச்சை"
"உன் அப்பா பேரு"
 "பிச்சையப்பா"
இப்பொ அவருக்கு கன்பார்ம் ஆயிடுச்சு, சரி பசங்க ஆரம்பிச்சுட்டாங்க அப்படினு புரிஞ்சுருச்சு😒...

😂அடுத்தப் பையன எழுப்பினாரு...

😂"முதல்ல நீ உன் அப்பா பேரைச் சொல்லு..." (மனசுக்குள்ள ஒரு பெருமிதம்😍)

 😂"ஜான்"
"இப்பொ உன் பேரைச் சொல்லு"
"ஜான்சன்"
கொஞ்சமா டென்சன் ஆயிடுச்சி...😈😈😈

😂அடுத்த பையன எழுப்பி,
"உன் அப்பா பேர சொல்லு..."
"டேவிட்.."
"உன் பேரு...?"
 "டேவிட்சன்" கொலவெறி ஆயிட்டாரு😬😬😬,

😂கொஞ்ச நேரம் நிதானமா யோசிச்சி,
அடுத்த பையன எழுப்பி,

😂"உன் தாத்தா பேர சொல்லு...😣"
"சார்... அப்பாவோட தாத்தாவா?, அம்மாவோட தாத்தாவா?"
ஆய்வாளர் பல்ல கடிச்சிக்கிட்டு😬😠,
"அப்பாவோட தாத்தா...😤."ன்னாரு
"வீரமணி",
 "சரி அப்பா பேரு?",
"வீ.ரமணி",
 "உன் பேரு?😕",
"வீ.ர.மணி...😊"
அப்புறம் என்ன... !!!! அதுக்கு அப்பறம் அந்த பள்ளிக்கு ஆய்வாளருன்னு ஒருத்தருமே எட்டி பார்க்குறதில்லியாம்... 😂😂😂
😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂😁😂

Wednesday 3 January 2018

பெற்றோர்களை நோகடிக்காதே.. நாளை உன் பிள்ளையும் உனக்கு அதை தான் செய்யும்...!

1) ❤😡❤😡❤😡பெற்றோர்களை 
     நோகடிக்காதே...
     நாளை உன் பிள்ளையும்
     உனக்கு அதை தான்
     செய்யும்...!!😡😡😡

2) ❤❤❤பணம் பணம் என்று
     அதன் பின்னால்
     செல்லாதே...
     வாழ்க்கை போய் 
     விடும்...
     வாழ்க்கையையும்
     ரசித்துக் கொண்டே 
     போ...!!😡😡😡

3) ❤❤❤நேர்மையாக இருந்து
     என்ன சாதித்தோம்
     என்று நினைக்காதே...
     நேர்மையாக இருப்பதே
     ஒரு சாதனை தான்...!!😡😡😡

4) ❤❤❤நேர்மையாக
     இருப்பவர்களுக்கு
     சோதனை வருவது
     தெரிந்ததே, அதற்காக
     நேர்மையை கை விட்டு
     விடாதே...
     அந்த நேர்மையே
     உன்னை
     காப்பாற்றும். ..!!😡😡😡

5) ❤❤❤வாழ்வில் சின்ன சின்ன
     விஷயத்திற்கெல்லாம்
     கோபப்படாதே...
     சந்தோஷம்
     குறைவதற்கும்,
     பிரிவினைக்கும் இதுவே
     முதல் காரணம்...!!😡😡😡

6)❤❤❤ உன் அம்மாவிற்காக
     ஒரு போதும்
     மனைவியை விட்டு
     கொடுக்காதே...
     அவள் உனக்காக
     அப்பா அம்மாவையே
     விட்டு வந்தவள்...!!
😡😡😡

7)❤❤❤ உனக்கு உண்மையாக
     இருப்பவர்களிடம்...
     நீயும் உண்மையாய்
     இரு...!!😡😡😡

8) ❤❤❤அடுத்தவர்களுக்கு தீங்கு
     செய்யும் போது
     இனிமையாகத்தான்
     இருக்கும்...
     அதுவே உனக்கு வரும்
     போது தான், அதன்
     வலியும் வேதனையும்
     புரியும்...!!😡😡😡

9) ❤❤❤உன் மனைவி
    உண்மையாக இருக்க
    வேண்டும் என்று, நீ
    நினைப்பது போல்...
    நீயும் உண் மனைவிக்கு
    உண்மையாய் இரு,
    எந்த பெண்ணையும்
    ஏறெடுத்து பார்க்காதே,
    அதுவே உன்
    மனைவிக்கு கொடுக்கும்
    மிகப்பெரிய பரிசு...!!😡😡😡

10)❤❤❤ஒருவன் துரோகி
      என்று தெரிந்து
      விட்டால்...
      அவனை விட்டு
      விலகியே இரு...!!😡😡😡

11)❤❤❤எல்லோரிடமும்
      நட்பாய் இரு...
      நமக்கும் நாலு
      பேர் தேவை...!!😡😡😡

12)❤❤❤நீ கோவிலுக்கு
      சென்று தான்
      புண்ணியத்தை
      சேர்க்க வேண்டும்
      என்பதில்லை...
      யாருக்கும் தீங்கு
      செய்யாமல்
      இருந்தாலே...
      நீ கோவில்
      சென்றதற்கு சமம்...!!😡😡😡

13)❤❤❤நிறை குறை இரண்டும்
      கலந்தது தான்
      வாழ்க்கை...
      அதில் நிறையை மட்டும்
      நினை...
      நீ வாழ்க்கையை
      வென்று விடலாம்...!!😡😡😡

14)❤❤❤எவன் உனக்கு உதவி
      செய்கிறானோ,
      அவனுக்கு மட்டும்
      ஒரு நாளும் துரோகம்
      செய்யாதே...
      அந்த பாவத்தை நீ
      எங்கு போனாலும்
      கழுவ முடியாது...!!😡😡😡


15)❤❤❤அடுத்தவர்களைப்
      போல் வசதியாக
      வாழ முடியவில்லை
      என்று நினைக்காதே...
      நம்மை விட 
      வசதியற்றவர்கள்
      கோடி பேர்
      இருக்கிறார்கள்
      என்பதை மனதில்
      கொள்...!!😡😡😡

16)❤❤❤பிறப்பிற்கும்
      இறப்பிற்கும் இடையில்,
      நீ செய்யும் பாவம்
      புண்ணியம் மட்டுமே
      உனக்கு மிஞ்சும்...
      உன்னுடன் கடைசி
      வரை வருவதும்
      இதுவே...!!

        வாழ்க வளமுடன்...!!!!

தமிழ் புத்தாண்டு எப்போது... அவரவர் பின்பற்றப்படும் மாதங்கள் ...

*தமிழ் புத்தாண்டு எப்போது:*

அவரவர் பின்பற்றப்படும்  மாதங்கள் 👇👇👇


ஆங்கிலேயர்களுக்கு

1. சனவரி
2. பிப்ரவரி
3 . மார்ச்
4. ஏப்ரல்
5. மே
6. சூன்
7. சூலை
8. ஆகத்து
9. செப்டம்பர்
10. அக்டோபர்
11. நவம்பர்
12. திசம்பர்

வடமொழியை தாய்மொழியாக கொண்டவர்களுக்கு

1. சித்திரை
2. வைகாசி
3. ஆனி
4. ஆடி
5. ஆவணி
6. புரட்டாசி
7. ஐப்பசி
8. கார்த்திகை
9. மார்கழி
10. தை
11. மாசி
12. பங்குனி

 *தமிழர்களுக்கு*

1. *சுறவம்* (தை)
2. *கும்பம்* (மாசி )
3. *மீனம்* ( பங்குனி)
4. *மேழம்* ( சித்திரை)
5. *விடை* (வைகாசி)
6. *ஆடவை* (ஆனி)
7. *கடகம்* (ஆடி)
8. *மடங்கல்* (ஆவணி)
9. *கன்னி* (புரட்டாசி )
10. *துலை* (ஐப்பசி )
11. *நளி* (கார்த்திகை)
12. *சிலை* (மார்கழி)

வரலாற்றில் தெளிவு பெறாத இனம் எழுச்சி பெற முடியாது.

எனவே தமிழர்களுக்கு *தை* திருநாளே *தமிழ் புத்தாண்டு* .

#141 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 918 ஆயும் அறிவினர் | Daily One Thir...

#243 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal | All is well