flipkart discount sale search here.

Monday 31 December 2018

இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!

தயவுசெய்து கட்டண💵 சேனல்களுக்கு யாரும் செல்ல வேண்டாம்...🙏🏻

பின்னர், அவர்களே நம் வழிக்கு இலவச சேனல்களாக மாறுவார்கள். இல்லையென்றால், நாம் மாறாமல் அவர்களை மாற்றுவோம். கோடிகணக்கில் 🎷🎫🎟🎞 விளம்பரத்தில் கொள்ளை🤣🤓 அடிப்பது போதாமல், நாம் வேறு அழவேண்டுமா..?🧐

எனவே, ஒற்றுமையே பலம். யாருமே💪 கட்டண சேனல் பார்க்காவிட்டால், விளம்பர😍 நிறுவனம் தன் விளம்பரத்தை நிறுத்திவிட்டு, இலவச🤓 சேனல்களுக்கு விளம்பரதாரர் திரும்புவர்.👍 பின்னர், கட்டண சேனல்களும் நம் பக்கம் திரும்பியே ஆகவேண்டும்..!👏

ஒற்றுமையே பலம்👍

தொலைக்காட்சி சேனல்களுக்கு நாம் அடிமையா..? நமக்கு தொலைக்காட்சி சேனல்கள் அடிமையா என முடிவு செய்யும் நேரம் இது..!

TRAI-ன் புதிய அறிவிப்பின்படி, கேபிள் டிவி, DTH, இன்டர்நெட் டிவி என அனைத்திலும் உங்களுக்கு தேவையான சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும்.

👂கேட்கும்போதே உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.🤩😇ஆகா, அருமை என்று...

ஆனால், இந்த அறிவிப்பின் முழு விவரத்தை கேட்டால் அட போங்கடா, நீங்களும் உங்கள் அறிவிப்பும் என்று சொல்லத் தோன்றும்..!

இதோ விவரம்...👇

இதன்படி உங்களுக்கு 100 சேனல்கள் இலவசமாக கிடைக்கும்.

நீங்கள் இலவச 100 சேனல்கள் போதும் என்றாலும்,
அடிப்படை கட்டணம் என்று ஒன்று மாதாமாதம் செலுத்த வேண்டும்.

அதாவது, அதற்கு பெயர் நெட்வொர்க் கெபாசிட்டி சார்ஜ்.

விலை: ₹153.40 (18% GST உட்பட)

இது கிட்டத்தட்ட நாம் இப்பொழுது செலுத்திக் கொண்டிருக்கும் கட்டணத்தின் அளவு.

ஆனால், இதில் இலவசம்+கட்டணம் என அனைத்து சேனல்களுக்கும் கிடைக்கிறது.

ஆனால், தற்பொழுது இந்த ₹153.60 க்கு அவர்கள் கொடுக்கும் 100 இலவச சேனல்களில் நமக்கு கிடைக்கும் தமிழ் சேனல்கள் இவை:👇

1.ஏஞ்சல்
2.கேப்டன்
3.பொதிகை
4.இசையருவி
5.கலைஞர்
6.கலைஞர் செய்திகள்
7.மக்கள்
8.முரசு
9.நியூஸ்7
10.பாலிமர்
11.தந்தி
12.புதிய தலைமுறை
13.புது யுகம்
14.சிரிப்பொலி
15.சங்கரா டிவி
16.வசந்த் டிவி
+ பிற மொழி சேனல்கள்

எனக்கு இந்த சேனல்களே போதும் என்றால், அவர்கள் உங்களுக்கு அடிமை...

இது எனக்கு பத்தாது என்றால், நீங்கள் அவர்களுக்கு அடிமை..!

இதற்கு மேல் நீங்கள் சேனல்கள் விரும்பினால், உங்களை போதையில் மயக்கி வைத்திருக்கும் அந்த சேனல்கள் எல்லாம் இப்போது கட்டண சேனல்களாக மாறி விட்டன..!
(ஒரு நாளைக்கு கோடிகளில் புரளும் அவர்களுக்கு விளம்பரதாரர்கள் மூலம் வரும் வருமானம் போதவில்லை. எனவே, நீங்களும் பணம் தந்து உதவ வேண்டும்)

இவர்களை நீங்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால், (கொஞ்சம் கஷ்டம்தான்) அவர்களும் இலவச சேனல்களாக மாற்றியே ஆக வேண்டும்..!

இல்லையென்றால், நீங்கள்தான் அவர்களின் அடிமை..!

முடிவு உங்களிடம்...✊

பகிர்வோம் அனைவருக்கும்👉

Sunday 23 December 2018

அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி...

*அனைத்து மக்களுக்கும் ஒரு நல்ல செய்தி என்னவென்றால் நாம் அன்றாடம் உபயோகிக்கும் கேஸ், பெட்ரோல்,டீசல் போன்ற* *எரிபொருளுக்கு மூலப்பொருளான கச்சா எண்ணெய் விலை உலக அளவில் சரிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஒரு ஆண்டில் கனடாவில் கனடா குரூட்ஆயில் பேரல் 44 டாலரில் இருந்து 14 டாலராகவும்,* *அமெரிக்காவின் குரூட்ஆயில் பேரல் 77 டாலரில் இருந்து 51 டாலராகவும்* *குறைந்துகொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உலக பொருளாதார சரிவு என்று ஊடகங்கள் எழுதுகிறது. ஆனால் உண்மையான காரணம் அதுமட்டுமல்ல. இதற்கு காரணம் உலகை புரட்டிப் போடப்போகும் ஒரு கண்டுபிடிப்பாகும். அது என்னவென்றால்  நாம் அன்றாடம் உபயோகிக்கும் சிறிய பென்டார்ச்* *பேட்டரிதான். புதிதாக மாற்றம் செய்யப்பட இந்த பேட்டரிக்கு லித்தியம் ஜயான் பேட்டரி என்று பெயர். இதில் நாம் இதுவரை அடைத்ததைப் போல் பல மடங்கு மின்சக்தியை அடைக்க முடியும் அது மட்டுமல்லாமல் அரைமணி நேரத்தில் உபயோகித்த சக்தியை ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த பேட்டரியின் லைப் என்கிற ஆயுட்காலம் 25 வருடம்.*

*உலகம் முழுவதும் இந்த பேட்டரியை உபயோகித்து கார்களையும் ஸ்கூட்டர்களையும் லாரிகளையும் இயக்க ஆரம்பித்து விட்டார்கள். அமெரிக்காவில் இலான்மஸ்க் என்கிற ஒரு மேதை டெஸ்லா என்கிற கார் கம்பெனியை ஆரம்பித்து உலகத் தரம் வாய்ந்த எலக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார். Tesla model 3, model s  என்று பெயரிடப்பட்ட இந்த கார்கள் ஒரே நேர சார்ஜில் 600 கிலோமீட்டர் செல்கிறது. இதன் மணிக்கு வேகம் 800 கிலோமீட்டரும் ஆக்சிலரேசன் 0-60 கிலோமீட்டர் 4 செக்கண்டிலும் செல்கிறது. இதன் விலை அமெரிக்காவில் டீசல் கார் விலையை விட குறைவு அதாவது 35000 டாலர்.*

*இந்தக் கார்  இந்த வருடத்தில் சுமார் 2 லட்சம் விற்றுத் தீர்ந்து விட்டது. இதனால் காத்திருப்போர் பட்டியல் 3 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த கார்களை வீட்டிலேயே சாரஜ் செய்து கொள்ளலாம். பெட்ரோல் போட வேண்டாம் 25  வருடங்கள் பேட்டரி மாற்ற வேண்டாம். இந்த வருடத்தில் இதுவரை உலகமுழுவதும் 20 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. அடுத்த ஆண்டு 50 லட்சம் எலக்ட்ரிக் கார்களும் அதற்க்கு அடுத்த ஆண்டு 1கோடி கார்கள் விற்பனையாகும் என்று நிபுணர்கள் எண்ணுகிறார்கள். மக்கள் இனிமேல் பெட்ரோல் டீசல் கார்களை வாங்க மாட்டார்கள். இதுதான் குரூட் ஆயில் விலை சரிவிற்க்கு காரணம். இன்னும் 10 வருடத்திற்குள் கேஸ், பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்கள் விலை மதிப்பற்று கூவி கூவி விற்கும் நிலைக்கு தள்ளப்படும்.*

*கடைசியாக ஒரு தகவல் பெட்ரோல் எஞ்சினில் மொத்த மூவிங் பாகங்கள் 2000 ஆனால் எலக்ட்ரிக் காரில் 18 பாகங்கள் மட்டுமே இருப்பதால் எளிதில் பழுதடையாது அப்படி பழுதடைந்தால் நாமே சரி செய்து கொள்ளலாம்.*
*நம் ஊருக்கு எலக்ரிக் கார்களும் ஸ்கூட்டர் பைக்களும் வருகிற ஆண்டு அதாவது 2019 ஆண்டில் விற்பனைக்கு வருகிறது.*

*யாவரும் அறிய இச்செய்தியை நாம் பகிர்வோம்...*

Trees Name in English - By All Is Well

Friday 21 December 2018

DTH Channals Price list | New DTH Connection @rs.749 - Call 7010637030

ஜெயித்தவர்களிடம்* *அப்படி* *என்னதான்* *இருக்கிறது*?

*ஜெயித்தவர்களிடம்* *அப்படி* *என்னதான்* *இருக்கிறது*?
🏃🏽‍♂🥉🏃🏽‍♂🏅🏃🏽‍♂🎖🏃🏽‍♂🥇🏃🏽‍♂🥉
💪 சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது.
💪 வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது.
💪 வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது.
💪 அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது.
💪 அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது.
💪 வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது.
💪 வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது.
💪 உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது.
💪 தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது.
💪 அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது.
💪 தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது.
💪 தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது.
💪 சூழ்நிலைக்குத் தகுந்தப்படி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது.
💪 விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது.
💪 அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது.
💪 குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது.
💪 கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது.
💪 நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது.
💪 அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது.
🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎🐎

Saturday 15 December 2018

Any genius...

Any genius...❓

Question :-
🚴‍♀+🎾+🍌+🐒= Tamil movie name

1 day time 🕰🕰

Thursday 6 December 2018

Life Story #23

கதை..

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,* *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்..!_*


Wednesday 5 December 2018

Life Story #22



_ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.._
_அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.._

_ஒரு நாள் வேட்டைக்கு சென்ற அரசன் காட்டிலேயே தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.._

_அன்று காலை கண் விழிக்கும் போது சூரியோதயத்துக்கு பதில் அவ்வழியே சென்ற பிச்சைகாரர்  முகத்தில் விழித்துவிட்டார்.._

_கோபத்தோடு ஊர் திரும்பிய அரசன்.._ _குதிரையிலிருந்து இறங்கும்போது தடுமாறி விழுந்தார்.._ _அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.._

*_அரசன் கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.._*

_பிச்சைகாரன் கலங்கவில்லை_ *கல கல* வென _சிரிக்க தொடங்கினான்.._

*_அரசருக்கு மேலும் கோபம்.._* *_மற்றவர்களுக்கு திகைப்பு.._*

_பிச்சைக்காரன் சொன்னான்.._ *என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே..*
*உங்கள் முகத்தில் நான்  முழித்ததால் என் உயிரே போக போகிறதே.. அதை எண்ணி சிரித்தேன்..*

_அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான்.._ _தண்டனையை ரத்து செய்யப்பட்டது.._


👇
*தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்..*

*அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்..*

Sunday 2 December 2018

Life Story #21

ஒரு ராஜா அவரோட தளபதிக்கு வயசாயிடுச்சுனு, வேற ஒரு தளபதிய நியமிக்க முடிவு செஞ்சாரு..

இதை கேள்விப்பட்டு பல பேர் போட்டி போட முன் வந்தாங்க..

ராஜா, தகுதி உள்ள எல்லாரையும் அரண்மனைக்கு வரச்சொல்லி,
”இந்த கோட்டைக்குள்ள பின்பக்கத்துல பெரிய 40 அடி உயரமுள்ள ஒரு வாசல் இருக்கு.. அதோட கதவு நல்ல கனமான உலோகத்தில் செஞ்சது.. இதுவரைக்கும் யாராலயும் அதை திறக்க முடியலை..”
அப்படி, இப்படின்னு 30 நிமிஷம் ராஜா பேசினாரு..

இதுக்கு முன்னாடி பெரிய வீரர்கள் எல்லாம் இருந்திருப்பாங்க, அவங்களாலயே திறக்க முடியல! நம்மால எப்பிடி முடியும்னு சிலர் கிளம்பிட்டாங்க..

கூட்டம் 10
பேரா குறைஞ்சுடுச்சு..!

ராஜா மீதமிருந்த 10 பேரையும் அந்த இடத்துக்கு கூட்டிக்கிட்டு போனார்..

எல்லாரும் அந்த கதவை பார்த்து பிரமிச்சு நின்னுகிட்டுருந்தாங்க!!

இந்த கதவை திறப்பவர்களுக்கு தளபதி ஆகிற தகுதி இருக்கிறது  என ராஜா எல்லாரிடமும் கூறினார்..

கதவை பார்த்த பலர்.. எப்படி திறப்பது என்று தயங்கினர்..!

ஒருத்தன் மட்டும் கதவு அருகில் போய் கையை வெச்சு தள்ளி பார்த்தான்..
அட! என்ன ஆச்சரியம் கதவு திறந்துடுச்சு..!

பல பேர் தயங்குவதனாலும், ராஜா சொல்வதனாலும் முயற்சி செய்யாமல் இருக்கிறதுதான் முதல் கோழைத்தனம்..!
என்ற
ராஜா,
அவனை பாராட்டி தளபதி பதவியை அவனுக்கு வழங்கினார்..


👇
“அது முடியாத காரியம்..” என எப்போது நம் காதுகளில் யாராவது சொல்லி விழுகிறதோ அப்போதே புரிந்து கொள்ளவேண்டும், நாம் சாதிப்பதற்க்கு அருகில் வந்துவிட்டோம் என்று..

Saturday 1 December 2018

நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்...

😊👍😊👍😊👍

*உடம்பின் நடுப்பகுதி வயிறு.*

*அதுபோல வாழ்க்கையின் நடுப்பகுதி நாற்பது.*

*இந்த நாற்பதாவது வயது ஆரம்பத்தில்,*
*நீங்கள் எப்படி இருப்பீர்களோ,* *அப்படித்தான் இறுதி வரையில் இருப்பீர்கள்.*

😊
*தொந்தி கனக்க விடாதீர்கள்.*
*தொந்தரவு வரும்.*
*மனம் கனக்க* *விடாதீர்கள்*
*மரணம் வரும்.*

😊
*ஒரு மனிதன்*
*வியாதியுடன்* *வாழப்போகிறானா,*
*வீரியமுடன் வாழப்போகிறானா,*
*நெஞ்ச நிறைவோடு வாழப்போகிறானா* *என்பதைத் தீர்மானிக்கும்* *வயதுதான்*
*இந்த நாற்பது.*

😊
*நிறைய வேலை செய்வதால்*
*நமக்கு நிம்மதி போவதில்லை.*
*உடம்பு உருக்குலைவதில்லை.*

😊
*என்ன நடக்குமோ என்ற*
*பயமும் கவலையும்தான்*
*மனிதன்மீது பாரமாக இறங்கி*
*அவனை நொறுக்கிவிடுகின்றன.*

😊
*பரபரப்பின்றிச் செயல்படுங்கள்.*
*கோபப்படாமல் காரியமாற்றுங்கள்.*
*நிதானத்தைக் கடைபிடியுங்கள்.*
*ஆரவாரம் வேண்டாம்.*
*அலட்டிக் கொள்ளாதீர்கள்.*
*பொறுப்புக்களை*
*சீராக நிறைவேற்றுங்கள்.*

😊
*அவசியமற்ற சுமைகளைப் போட்டுக் கொள்ளாதீர்கள்.*
*அடிக்கடி ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.*

😊
*தினசரி* *மத்தியானம்*
*ஒரு அரைமணி நேரம் தூங்குங்கள்.*
*இரவு பன்னிரண்டு மணிக்குமேல்*
*எக்காரணத்தை முன்னிட்டும்*
*விழித்திருக்காதீர்கள்.*

😊
*பத்துமணிக்கே படுத்துவிடுவது உத்தமம்.*
*அதிகாலையில் எழுந்து கொள்ளுங்கள்.*

😊
*மனம் தளராமல் தினந்தோறும் ஆண்டவனை நினையுங்கள்.*
*இறைவா இன்று முழுக்கவும் என்னுடன் இருந்து என்னை ஆட்கொள் அபபனே.*
*என்னை எந்த தவறும்  செய்ய விடாதே அப்பனே."*
*என்று வேண்டிக் கொள்ளுங்கள்.*

😊
*ஒவ்வொரு நாளும் முகத்தை மலர்ச்சியுடன் வைத்துக் கொள்ளுங்கள்.*
*கடுகடுப்பும் சிடுசிடுப்பும் வேண்டாம்.*

😊
*டென்ஷன் இல்லாமல் இருங்கள்.*
*நூறு வயது வரை பென்ஷன் வாங்கலாம்.*

😊 *ஸ்ட்ரெஸ் உண்டாக்கிக் கொண்டால்,*
*அட்ரஸ் இல்லாமல் போய்விடுவீர்கள்.*

😊
*அதனால்தான் சொல்லுகிறேன்.*
*கவலையைக் *கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுங்கள் என்று !*
*முடிந்தால் அடுத்தவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஒருபோதும் கெடுதல் நினைக்காதீர்கள்*

*மரணம் நம்மை கண்டு ஓடவேண்டும், மரணத்தை கண்டு நாம் ஓடக்கூடாது*

*வாழ்க வளமுடன்*
*வேண்டும் சுபம்*

*நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்*

*
🙏🙏🙏

Life Story #20

#நம்பிக்கை__வை!!!!!🙏🙏

💥ஒரு சமயம் அர்ஜுனனும்,கிருஷ்ணரும் பூங்கா ஒன்றில் உலவிக் கொண்டிருந்தார்கள்.

⚡அப்போது வானத்தில் ஒரு பறவை பறந்து கொண்டிருந்தது.
கிருஷ்ணர் அதைப் பார்த்தார்.அதை அர்ஜுனனுக்கும் காட்டினார்.

💥"அர்ஜுனா,அது புறா தானே.?" என்று கேட்டார் கிருஷ்ணர்.
" ஆமாம் கிருஷ்ணா,அது புறா தான்.!" என்றான் அர்ஜுனன்.

💥சில விநாடிகளுக்குப் பிறகு,
"பார்த்தா,எனக்கென்னவோ அந்தப் பறவை பருந்தைப் போல் தெரிகிறது.!" என்றார் கிருஷ்ணர்.

⚡அடுத்த விநாடியே,"ஆமாம்.....ஆமாம் ...அது பருந்து தான்.!"
என்று சொன்னான் அர்ஜுனன்.

💥மேலும் சில விநாடிகள் கழித்து
"அந்தப் பறவையை உற்றுப் பார்த்தால்,அது கிளியாக இருக்கலாம் என்று தோன்றுகிறது.!"
கிருஷ்ணர் சொல்ல,

⚡கொஞ்சமும் தாமதிக்காமல் ," தாங்கள் சொல்வது சரிதான்...அது கிளி தான் .!" என பதிலளித்தான் அர்ஜுனன்.

💥இன்னும் கொஞ்சம் நேரமானதும்,
"அர்ஜுனா,முதலில் சொன்னது எல்லாம் தவறு.இப்போது தான் தெளிவாகத் தெரிகிறது.

அது ஒரு காகம்.!" கள்ளச் சிரிப்புடன் கூறினார் கிருஷ்ணர்.

⚡"நிஜம் தான் கிருஷ்ணா...அது
காகமே தான்...சந்தேகமே இல்லை.!"
பதிலளித்தான் அர்ஜுனன்.

💥" என்ன நீ ,நான் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்கிறாயே.! உனக்கென்று எதுவும் யோசிக்கத்
தெரியாதா.?"
கிருஷ்ணர் கொஞ்சம் கோபம் கொண்டவர் போல் கேட்டார்.

⚡"கிருஷ்ணா, என் கண்ணை விடவும்,அறிவை விடவும் எனக்கு உன் மேல் மிகுந்த நம்பிக்கை இருக்கிறது.நீ ஒன்றைச்
சொன்னால் ,அது பருந்தோ,காகமோ,
புறாவோ எதுவானாலும் அதை அதுவாகவே மாற்றும் ஆற்றல் உன்னிடம் இருக்கிறது.

அதனால் நீ என்ன சொல்கிறாயோ,அப்படித் தானே அது இருக்க முடியும்.
தெய்வத்தின் வாக்கினை விட வேறு எதன் மேல் நான் நம்பிக்கை வைக்க முடியும்.?" அமைதியாகச் சொன்னான் ,அர்ஜுனன்.

🌹இந்த நம்பிக்கை தான் பகவானை எப்போதும் அர்ஜுனன் பக்கத்திலேயே இருக்க வைத்தது.

Moral . . .

🌺கடவுள் மேல் சந்தேகம் இல்லாமல் ,நம்பிக்கை வையுங்கள்.
அவர் நினைத்தால் எப்படிப்பட்ட சூழலையும் மாற்ற முடியும் என்பதை உணருங்கள்.
உங்கள் சங்கடங்களைப் போக்கவும்,சந்தோஷத்தை நிலைக்க வைக்கவும்
கடவுளால் மட்டுமே முடியும் என்பதை உணருங்கள்...

👌இந்தத் தத்துவத்தை நீங்களும், நானும் புரிந்து நடந்து கொண்டோமென்றால் இந்த நாள் மட்டுமல்ல எல்லா நாளும் நமக்கு இனிய நாள்தான்!....