flipkart discount sale search here.

Friday 30 November 2018

Life Story #19

சமாளிக்க முடியாமல் திணறினார்
அந்த இளம் பெண் !

அந்த பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !

கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்..!

அந்த பெண்ணின் பெயர்  ஸ்ருதி. வயது 24.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்..!

கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு..

அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட  கேள்வி...

“இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள்? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா..?”

ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை..

பின் அமைதியாக சொன்னார்...

“இல்லை. என் குடும்பம் மிக மிக  எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்து பெண் நான் ..!”

நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்..

“ மேடம் ..உங்கள் குடும்பம்... அம்மா அப்பா பற்றி சொல்லுங்களேன்..?”

ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ..?

“மேடம் .. நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

“ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

“உங்கள் அப்பா, அம்மா...?”

ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார் .

“ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..? ப்ளீஸ் ”

நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்..

“எங்கே  மேடம்..? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்...

“என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்..”

“ஓஹோ”- நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள்.

ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்..

“என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான்   இருக்கிறார் !”

நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !

ஒரு நிருபர் கேட்டார்.

“ஓ ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”

“இல்லை..”

இன்னொரு நிருபர் கேட்டார்.. “சீனியர் வக்கீலா ..?”

“இல்லை..”

வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி, கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில்  ஒதுங்கி நின்றார் .

நிருபர்களைப் பார்த்து கேட்டார்..

“நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க ... சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார் .

அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க ... ஸ்ருதி தன் கையாலேயே அதை  வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க ...
டீயை குடித்து முடித்த நிருபர்கள் “ மேடம் .. நாம் போகலாமா..?”

ஸ்ருதி நிருபர்களை நோக்கி கேட்டார்..

“எங்கே..?”

நிருபர்கள் சற்றே குழம்பி ..

“மேடம் ..உங்கள் அப்பாவை எங்களுக்கு  அறிமுகப்படுத்தி வைப்பதாக ....”

ஸ்ருதி புன்னகைத்தார்..

“ஓ...ஆமாம் ..அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா..?.....ஓகே ...போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்”

-என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :

“அப்பா ..இங்கே கொஞ்சம் வாங்க !”

திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

ஸ்ருதி அந்த டீ விற்பவரின்  அருகில் நின்று கொண்டு, நிருபர்களை நோக்கி பெருமையாக சொன்னார்..

“இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான்  எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான்  டீ விற்பனை செய்கிறார்.  இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ்ஆக இருக்கிறேன்.”

நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள்...

ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார்..

“ஓகே..  என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.  நான் வரட்டுமா?”

ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே”

நன்றி: Deccan Herald & india times |

Thursday 29 November 2018

Life Story #18

*தினம் ஒரு கதை..*


_அது ஓர் அழகிய நகரம்.._
_அந்த நகரத்தின்  நுழைவு வாயிலில் எப்போதும் ஒரு வயதான பெரியவர்  அந்நியர்கள் யாரும் உள்ளே சென்று விடாமல் காவல் காத்துக்கொண்டிருப்பார்.._
_ஒரு நாள் வாலிபன் ஒருவன் நகரத்தின் வாயிலை நோக்கி குதிரையில் வந்துகொண்டிருந்தான்.._
_அப்போது அங்கிருந்த வயதான காவலாளியிடம்_ *ஐயா பெரியவரே, இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று கேட்டான்..

அதற்குக் காவலாளி *ஏன் கேக்குற தம்பி ? இந்த ஊருக்கு குடிவரப் போறியா?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

*ஆமாம் பெரியவரே.. நான், முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம்.. எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க.. ஒருத்தரைப் பத்தி ஒருத்தர் தப்பா பேசிக்கிட்டும், திட்டிக்கிட்டும்.. எப்படா, அந்த ஊரை விட்டு வருவோம்னு இருந்தது.. அதான் கேட்டேன் இந்த ஊர் எப்படி?* என்று கேட்டான்..

*நீ வேற தம்பி, இந்த ஊர் உன்னுடைய ஊரைவிட ரொம்ப  மோசம்.. போட்டி, பொறாமை, ஜாதிச் சண்டை, கலவரம்ன்னு ஏதாவது ஒரு பிரச்னை இருந்துக்கிட்டே இருக்கும்.. நீயே நிம்மதியைத் தேடி வர, உனக்கு இந்த ஊரு சரிப்படாது தம்பி* _என்று கூறி அந்த வாலிபனை  வெளியே வழியனுப்பி வைத்தார்.._

_சிறிது நேரம் கழித்து,_

_அவ்வழியாக  வந்த வேறொரு ஆள் காவலாளியிடம் அதே கேள்வியை வேறுமாதிரி கேட்டான்.._
*ஐயா, இந்த ஊரில் தங்கி வியாபாரம் பண்ணலாம்ன்னு இருக்கேன்.. இந்த ஊர் மக்கள் எப்படி?* என்று..

_பெரியவர் சிரித்துக்கொண்டே.._ *ஏன் தம்பி, உனக்குக் கல்யாணம் ஆகிடுச்சா ?* என்று கேட்டார்..

*ரெண்டு குழந்தையே இருக்குதுங்க ஐயா* என்றான்..

*அப்புறம் ஏன்? இந்த ஊருக்கு வர்ற? உங்க ஊர்லயே வியாபாரம் பண்ணலாம்ல?* என்றார் காவலர்..

*எங்க ஊர் மாதிரி வராதுங்க.. அந்த ஊர் மக்கள் ரொம்பப் பாசக்காரங்க.. எனது குடும்பம் இப்போது சிறிது வறுமையில இருக்கிறது.. சம்பாதிக்கத்தான் இந்த ஊருக்கு வந்தேன்.. நல்லா  சம்பாதிச்சிட்டு மறுபடியும் அங்கேயே போயிடுவேன்..* என்றும்.. _கண் கலங்கியபடியே கூறினான்.._

*அழாதே தம்பி, இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க.. தைரியமா நீ வியாபாரம் பண்ணலாம்* _என்று கூறி கதவுகளைத் திறந்து உள்ளே அனுப்பி வைத்தார்.._

_காவலாளியின் அருகில் இருந்த ஒருவர், இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்துக்கொண்டிருந்தார்.._

உடனே அவரிடம் *முதலில் வந்தவர்கிட்ட இந்த ஊர் பொல்லாததுன்னு சொன்னீங்க, இவர்கிட்ட மட்டும் நல்ல ஊர்ன்னு சொல்லுறீங்களே ஏன்?* என்று சந்தேகத்துடன் கேட்டார்..

அதற்குப் பெரியவர்  *இந்த உலகம் கண்ணாடி மாதிரி.. நாம எப்பிடி இருக்கிறோமோ அப்படித்தான் கண்ணாடி நம்மைக் காட்டும்'..* என்றார்..


👇
இயற்கை (உலகம்) நிலையானது..
*நாம் என்ன கொடுக்கிறோமோ.. அதைத்தான் நமக்கு திரும்ப தரும்..*

'2.0' திரை விமர்சனம், 2.0 Review Ratings 8.5/10

'2.0' திரை விமர்சனம்

ரஜினிகாந்த், ஷங்கர், ஏ.ஆர்.ரஹ்மான், லைகா போன்ற பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்த படம் என்றால் பிரமாண்டத்திற்கு பஞ்சம் இல்லா படமாக  இருக்கும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாத வகையில் 2.0 உள்ளது. வெறுமே கிராபிக்ஸ் காட்சிகளை மட்டுமே இன்றி இன்றைய உலகிற்கு தேவையான கருத்தை மனதில் பதியும் வகையில் இப்படத்தை ஷங்கர் கொடுத்துள்ளார்.

செல்போன்களை மனிதர்கள் பயன்படுத்த தொடங்கிய பின்னர் அதிலும் கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளால் அளவுக்கு அதிகமான ரேடியேஷன்களால் பறவை இனமே அழியும் ஆபத்து உள்ளது. இந்த உண்மையை புரிந்து கொண்ட அக்சய் குமார் செல்போன்கள் பயன்படுத்துவதை குறைக்க போராடுகிறார். இதற்காக அரசிடம், மக்களிடமும் நீதிமன்றத்திலும் கோரிக்கை வைக்கிறார். ஆனால் அவருக்கு  அவமானம் மட்டுமே மிஞ்சுகிறது. இதனால் ஒரு கட்டத்தில் மனமுடைந்து செல்போன் டவரிலேயே தற்கொலை செய்து கொள்கிறார். அதன்பின் பறவைகளின் ஆன்மாக்களுடன் தன்னுடைய ஆன்மாவை இணைத்து ஐந்தாம் சக்தியை உருவாக்கி அந்த சக்தி உதவியால் செல்போன்களுக்கு எதிராக அவர் தொடுக்கும் போரும், அந்த போரில் இருந்து மனிதர்களை காப்பாற்ற சிட்டியை தட்டி எழுப்பும் ரஜினிக்கும் இடையே நடக்கும் டெக்னாலஜி போர் தான் 2.0 கதை

இதுவரை வெளிப்படுத்தாத நடிப்பை தனது ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற மெனக்கெடல் ரஜினியின் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. வசீகரன் கேரக்டர் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், சிட்டி, ரோபோ வெர்ஷன் 2.0 கேரக்டர்களில் ரஜினி தனது நடிப்பை வெளுத்து வாங்கியுள்ளார். இறுதியில் சஸ்பென்ஸ் ஆக வரும் 3.0 ரஜினி, ரசிகர்களுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்

நாயகியை கவர்ச்சிக்கு மட்டும் பயன்படுத்தாமல் கதைக்கும் சேர்த்தும் பயன்படுத்தும் இயக்குநர் ஷங்கர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் வசீகரனுக்கும், சிட்டிக்கும், 2.0 ரோபோவுக்கும் உதவி செய்யும் ரோபோ கேரக்டரில் எமிஜாக்சன் நடித்துள்ளார். ரோபோவுக்கும் காதல் வரும் என்ற உணர்வை அவர் வெளிப்படுத்திய விதம் சூப்பர்.

அக்சயகுமார் நடிப்பில் மிரட்டுகிறார். இடைவேளைக்கு பின்னர்தான் அக்சய் அறிமுகமாகிறார் என்றாலும், இரண்டாம் பாதியில் அவருடைய கேரக்டர் எடுத்துக்கொள்ளும் பங்கு மிக அதிகம். வயதான பறவைகளின் விஞ்ஞானி கேரக்டரில் நமது நெஞ்சை தொடும் அக்சய், அதன் பின் ராஜாளியாக மாறி செய்யும் அட்டகாசங்கள் சூப்பர்.

எந்திரன்' பட வில்லன் டேனியின் மகன் கேரக்டரில் நடித்திருக்கும் சுதன்ஷூ பாண்டேவுக்கு அதிக காட்சிகள் இல்லை என்றாலும் இரண்டாம் பாதியின் திருப்புமுனைக்கு காரணமான கேரக்டர் என்பதால் ரசிக்க முடிகிறது. அதேபோல் உள்துறை அமைச்சர் கேரக்டரில் நடித்திருக்கும் அதில்ஹுசைன் நடிப்பும் ஓகே

ஏ.ஆர்.ரஹ்மானின் உலகத்தர பின்னணி இசை இபபடத்தை தூக்கி நிறுத்துகிறது. அக்சயகுமாருக்கும், 2.0 ரோபோ ரஜினிக்கும் அவர் கம்போஸ் செய்துள்ள தீம் மியூசிக் இன்னும் காதுக்குள்ளே இருக்கிறது. இரண்டு பாடல்களும் படத்தின் காட்சிகளோடு வருவதால் பாடல்களால் படத்தின் விறுவிறுப்பு குறையவில்லை. நல்லவேளையாக 'இந்திரலோகத்து சுந்தரி' பாடலை படத்தின் இறுதியில் வைத்துள்ளனர்.

நீரவ்ஷாவின் கேமிராவும், அந்தோணியின் படத்தொகுப்பும் பாராட்டும் வகையில் உள்ளது. இருவருமே தங்களுடைய அதிகபட்ச உழைப்பை கொடுத்துள்ளனர்.

ஷங்கரால் இப்படி கூட கற்பனை செய்ய முடியுமா? என்ற அளவுக்கு உள்ளது ஒவ்வொரு காட்சியும். திடீர் திடீரென செல்போன்கள் பறப்பது, செல்போன்கள் சாலையில் ஊர்ந்து வருவது, ராணுவத்தால் கூட முறியடிக்க முடியாத செல்போனின் அட்டகாசங்கள், கிளைமாக்ஸில் கால்பந்தாட்ட மைதானத்தில் ரஜினி-அக்சய் மோதும் காட்சிகள் ஷங்கரின் உச்சகட்ட கற்பனை. மேலும் கற்பனையை விஷூவலாக காட்ட அவர் எடுத்திருக்கும் முயற்சிகள் அபரீதமானவை. ஒவ்வொரு காட்சிக்கும் மெனக்கிட்டு ரசிகர்களுக்கு அனைத்து காட்சிகளையும் பெஸ்ட் ஆக கொடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.

இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கு மட்டுமல்ல. பறவைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உரியது குறிப்பாக மனித இனம் அழியாமல் இருக்க வேண்டும் என்றால் பறவைகள் நிச்சயம் வாழ வேண்டும் என்ற உண்மையை மிக ஆழமாக கூறியுள்ளார் இயக்குனர் ஷங்கர். இந்த கருத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜெயமோகனின் வசனம் அமைந்துள்ளது சிறப்பு

மொத்தத்தில் வெறும் டெக்னாலஜி, கிராபிக்ஸ் காட்சிகளை மட்டும் நம்பாமல் ரஜினியை சரியான வகையில் உபயோகித்தது, அழுத்தமான கருத்துடன் கூடிய திரைக்கதை அமைத்தது, பிரமாண்டமான 3டி காட்சிகள் என ஷங்கரின் பிரமாண்டமான விஷூவல் விருந்துக்காக அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான் '2.0

Tuesday 27 November 2018

Life Story #18

_தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.._

_அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.._

_தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.._
_அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால்.. பல துண்டுகளாக வெட்டினார்.._

_பின்னர் கத்திரிக்கோலை.. தன் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.._

_துணியை தைத்து முடிந்ததும், ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.._

_இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம்,_ *“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.. ஊசி சிறியது.. மலிவானது.. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.. அது ஏன்..?”* என்று கேட்டான்..

*“ நீ சொல்வது உண்மைதான்”*

*கத்திரிகோல் அழகாகவும்.. மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.. அதாவது பிரிப்பது!*

*ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது..*
என்றார் தையற்காரர்..


👇
_*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே, நிர்ணயிக்கப்படவேண்டும்..*_

_*அவர் உருவத்தை வைத்து அல்ல..*_

#469 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1326 சுழலும் இசைவேண்டி | Daily one ...

#468 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 777 காக்கை கரவா | Daily one thirukk...

Monday 26 November 2018

Life Story #17



_ஒரு குருகுலத்தில் பல சீடர்கள் இருந்தனர்.. அனைவரும் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுவர, ஒரு சீடன் மட்டும் கவலையோடு இருந்தான்.. துறவி அவனை அழைத்து விசாரித்தார்.._
_*குருவே! எல்லோரும் என்னை கிண்டல், கேலி செய்கின்றனர்.. தாங்க முடியவில்லை.. கோபம் தலைக்கேறுகிறது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை!*_ என்றான்..

_*இந்தக் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது ஏறி பத்துமுறை சுற்றிவா!*_ என்றார் குரு.

_குரு எதற்காக அப்படிச் சொல்கிறார் எனத் தெரியாவிட்டாலும், குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கவனமாக கிணற்றுச்சுவரில், ஏறி, சிரத்தையுடன் பத்துமுறை வலம் வந்தான் சீடன்.._

_*நீ கிணற்றுச் சுவரில் ஏறி நடந்தபோதுகூட உன்னை பலர் கிண்டல் செய்தார்களே, அதைக் கேட்டாயா?*_ என்றார் குரு..

_*இல்லை குருவே! கிணற்றிற்குள் விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்.. யார் பேசியதும் எனக்கு கேட்கவில்லை*_ என்றான் சீடன்..

குரு சொன்னார், *_ஒரு செயலில் மிக கவனமாக, உண்மையாக நாம் ஈடுபட்டிருக்கும்போது, பிறர் சொல்லும் வார்த்தை நமக்கு கேட்காது, புரிகிறதா?_* என்றார்..

*சீடனுக்கு எல்லாம் புரிந்தது!*
🐝

👇
*இவன் என்ன சொல்கிறான், அவன் என்ன சொல்கிறான், என்பதை கவனித்துக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது*
-சுவாமி விவேகானந்தர்

Sunday 25 November 2018

#467 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 527 இயல்பாகும் நோன்பிற்கொன் | Daily...

Life Story #16


_ஒரு ஊரில் ஒரு வணிக செல்வந்தன் இருந்தான்.. அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.._

_அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான்.._

_அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர்.. ஆனால் இவன் விற்கவில்லை.._

_இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.._
_ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.._

_தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.._

_வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.._ *ஐயோ என் வீடு ! என் வீடு !* என்று அலறினான்..

_அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து.._ *தந்தையே ஏன் வருந்துகிறீர்கள் ?*

_*இந்த வீட்டை நாங்கள் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டோம்..*_

_*இதனால் நமக்கு நஷ்டம் இல்லை*_ என்று கூறினான்..

_இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.._

_அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.._

_இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

*"அதே வீடு தான்"..*

*"அதே நெருப்பு தான்"..*

_ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும், சோகமும் இப்போது அவனிடம் இல்லை.._

_சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து_ *தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?*

_*நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்..*_

*முழு தொகை இன்னும் வரவில்லை..*

*_வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே_* என்றான்..

_இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான்.._

_மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான்.._

_கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.._

_தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.._

_சில மணித்துளிகள்.. வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.._ *தந்தையே கவலை வேண்டாம்.. இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன்..*

*_இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது.. வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது.._*

_*ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம்..*_ என்று *என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்* என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்..

_இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.._
*கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான்..*

_கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.._

_மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

_இங்கு எதுவுமே மாறவில்லை_
*அதே வீடு..*
*அதே நெருப்பு..*
*அதே இழப்பு..*
🐝

👇
 *இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது..*

*இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது  சோகம் நம்மை தாக்குவது இல்லை..*

_*உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை..*_

இதைத்தான் அனைத்து மதமும்   போதிக்கிறது..

எதை நீ இழந்தாய்..
எதற்காக அழுகிறாய்..
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது..
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது..
கடமையை செய்..
பலனை எதிர்பாராதே..
ஏனெனில் கடமைக்கான பலனை  இறைவன் தர மறப்பதில்லை..

Friday 23 November 2018

#465 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 344 இயல்பாகும் நோன்பிற்கொன் | Daily...

Life Story #14

*தினம் ஒரு கதை..*

*மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!*

அவர் ஒருநாள் அரசவையில், *மன்னா ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள்.. அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ டேண்டும்!*  என்று வேண்டுகோள் விடுத்தார்..

அரசனும் அதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தான்..

*அரசாங்கச் செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக, சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன..*

இந்த விஷயம், *ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்குத் தெரிய வந்தது..*

_அன்று இரவு, சாணக்கியரின் வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர்.._

_திட்டப்படி அன்று இரவு சாணக்கியரின் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர்.._

அங்கு, *அரதல்பழசான கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர்.. அருகில், அவரின் தாயாரும் அப்படியே!*
 _கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்.._

_கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார்.._

எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், *ஐயா.. நாங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம்.. இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும், நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?* என்று கேட்டான்..

அதற்கு சாணக்கியர், *அவை, ஏழை-எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள்.. அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?* என்றார்.

_அதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர்.._
*இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்..* என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்..


👇
_சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்.. அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!_

Life Story #15

*தினம் ஒரு கதை..*

எமதர்மராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது..
அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார்..!

அவள் மானுடப் பெண் என்றாலும்,

அவளை மணந்து, அவளுடன் வாழவேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது..

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பன் ஆனார் எமதர்மன்..

அவர் மணந்த பெண் நல்லவள் தான்..
என்றாலும் நாளாக, நாளாக எமனுக்கு அவ்வாழ்க்கை மீது சலிப்பு தட்டியது..

மேல்உலகம் சென்று விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார்..

மனைவியை பிரிந்து செல்ல முடிவு செய்தார்..

ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால்,

மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை.. தத்தளித்தார்..

மகன் கொஞ்சம் வளர்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார்..

மகனே..
நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்..

மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்..

எப்படித் தெரியுமா..?

ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால், நான் அங்கு இருப்பேன்..

உனக்கு மட்டும் நான் கண்ணுக்குத் தெரிவேன்..

நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே..

நீ வைத்தியம் செய்து, அவர் இறந்து போனால்.. உன் புகழ் குறையும்..

எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும்.. நான் அங்கு இல்லையென்றால்,
தைரியமாக மருந்து கொடு..

அவன் பிழைத்து, எழுந்து கொள்வான்..

அதனால் உன் புகழ் மேலும், மேலும் பரவும் என்றார் எமன்..

மகனை அணைத்து கண்ணீர் விட்ட எமதர்மன், மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல்,
இவ்வுலகை விட்டு நழுவி விட்டார்..

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான்..

அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான்..

ஒருவர் கூடச் சாகவில்லை.. எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள்..

யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது,

எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான்..

இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது..

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள்..

யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை..

இவனை அழைத்தார்கள்.. என் மகளைக் காப்பாற்றினால் ,

அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன்,

ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா..

அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி..

எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார்..

வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள்..

ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி,

ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்..

இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார்..

எப்படி அவரை விரட்டுவது..?

பளிச்சென்று யோசனை பிறந்தது..

வாசல் பக்கம் பார்த்து கத்தினான்..

அம்மா....!!
அப்பா உள்ளே இருக்கார்..

ரொம்ப நாளா அப்பாவைக் காணோம், காணோம்னு தேடினேயே..!

இங்க இருக்கார்..!
என்று அலறினான்..!

அவ்வளவுதான் துண்டைக் காணோம் ,
துணியைக் காணோம் என்று எமன் ஒரே ஓட்டமாக ஓடியேவிட்டார்..


👇
எமனாயிருந்தாலும்,
இல்லை எவனாயிருந்தாலும்..
நம்பியவர்களை ஏமாற்றியவரின் நிலை இதுதான்..
அவர்களை வாழ்க்கையில் எங்கு கண்டாலும் ஓடி ஒழிய  வேண்டிய நிலைதான் ஏற்படும்..


Life Story #13

 *தினம் ஒரு கதை..*
_ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி புனிதநூலை படித்துக்கொண்டே இருப்பார்.. இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான்.._

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , "தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்..

பெரியவர் சொன்னார்,
*_"ஒரு அம்பது.. அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்.."_*

*_"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க..?"_* என்றான்..

தாத்தா சிரித்தபடி கூறினார்,
*_"எனக்கு ஒரு உதவி செய்.. நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்.."_*

இளைஞன் கேட்டான்,
*_"என்ன உதவி தாத்தா..? "_*

_பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார்.. அதில் அடுப்புக் கரி இருந்தது.. அதை ஒரு மூலையில் கொட்டினார்.. பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.._

பெரியவர் சொன்னார்,
_*" தம்பி.. அதோ இருக்குற குழாயில இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்.."*_

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது..
 *இருந்தாலும்.. பெரியவர் சொல்லி விட்டதால்.. எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.. அவன் வந்து சேருவதற்கு முன்பே, எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது..*

பெரியவர் சொன்னார்,
_*" இன்னும் ஒரு முறை.."*_

_இளைஞன் மீண்டும் முயன்றான்.._
_ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?_
மீண்டும் சிந்திப் போனது..

_பெரியவர் கேட்டார்,_
_*" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.."*_

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்..
_*"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம்.. அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது..? "*_
_தண்ணீர் பிடித்தான்.. வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.._
_*"தாத்தா, இந்தாங்க உங்க கூடை.. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க"*_
என்றான்..

அவர் புன்னகையோடு சொன்னார்,
_*" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும்.. நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? "*_ என்றார்..

இளைஞன் சொன்னான் ,
_*"ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது.."*_

_*"இப்போ பார் "*_ என்றார்..

*தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது..*

பெரியவர் சொன்னார்,
_*"தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.. எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு..*_

_*அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு புனிதநூலையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது.. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்.."*_ என்றார்..

Life Story #12

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *சென்னையை சேர்ந்த சகோதரர் விக்னேஷ் குமார்* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.._

_சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.._

_வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது..
*_ஒரு பெரிய கூஜா நிறைய காப்பியையும் .. மற்றும் பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி என பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.. கோப்பைகளில் சிலவகை விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும்.. சிலவகை சாதாரணமானதாகவும் என பலவிதங்களில் இருந்தன.._*

_பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை கோப்பைகளில் தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.._

_எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார்.._
 *நண்பர்களே கவனியுங்கள்..*
_*"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள்..*_

_*உங்கள் கைகளில் இருக்கும் கோப்பைகள் போக மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள்..*_ _*உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன..*_ _*அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள்.. அது தான் உங்கள் பிரச்சினைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.."*_
அனைவரும் புரிந்தும்புரியாமலும் பேராசிரியரை பார்த்துக்கொண்டிருந்தனர்..
தொடர்ந்து அவர்..
_*"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி மட்டுமே, கோப்பையல்ல.. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.."*_

_*"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள்.. இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள்.. இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.."*_

_*"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைத்து காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.."*_
அனைவரும் அவரின் கூற்றை உள்வாங்கி தங்களின் செயல்பாடு அவ்வாறு தான் உள்ளது என நன்கு உணர்ந்தனர்..


👇
_*"ஆகவே.. நண்பர்களே கோப்பையில் நமதூ கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை மட்டும் அனுபவிப்போம்.."*_


Life Story #11

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *சென்னை, நங்கநல்லூரை சேர்ந்த சகோதரர் பத்ரி நாராயணன்* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்..

இரவு நேரம்,
பெருத்த மழை வேறு..

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்..

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா" என்று கேட்டார்..

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்..

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?
என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார்,

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்..

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்..

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்..

(தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை,

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்..

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்..

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்..

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்..

பொழுது விடிந்தது, மழையும் நின்றது..

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,

என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து,

நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்,
என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்..

மூன்று ரொட்டிகளை கொடுதவர்,

அந்த காசுகளை சமமாகப்பிரித்து,

ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்..

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்..

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார். (3: 5 )

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,

நான் பங்கிட சம்மதித்தேன்..

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது..

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது,
என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்..

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது..

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை..

நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்..

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை..

வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது..

மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து,

தீர்ப்பும், விளக்கமும் தந்தார்..
கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது..

அடுத்த நாள் சபை கூடியது..

மன்னர் இருவரையும் அழைத்தார்..

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்,

ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்..

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்..
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்.." என்றார்..

அரசர் சொன்னார்..
நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்..

அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது..

அவன் தந்தது பதினைந்து துண்டுகள்..

அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது..

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி..

இதற்கு இதுவே அதிகம்..

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்..

ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன் (1 : 7 ) என்றார்..


ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்..

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு..

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு..

இது கடவுளின் கணக்கு..

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை..

தர்ம புண்ணிய கணக்கு..!

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்..
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவான்..

Life Story #10

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *கோவில்பட்டி-யை சேர்ந்த சகோதரர் இன்கார்ப் இரவி* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

அவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன்..
ஒரு நாள் இரவு மன்னனின் காதில் ஒரு பூச்சி நுழைந்து விட்டது..

காதில் இருந்த பூச்சியை எடுக்க மன்னனைச் சேர்ந்தவர்கள் படாத பாடுபட்டார்கள்..

அவர்கள் முயற்சி எதுவும் பலிக்கவில்லை..

மன்னனின் பிரச்னையைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பிரமாண்டமான பரிசுகள் அறிவிக்கப்பட்டன..

எங்கிருந்தெல்லாமோ வைத்தியர்கள் வந்தார்கள்..
யாராலும் அந்தப் பூச்சியை வெளியே எடுக்க முடியவில்லை..

மன்னனால் தூங்க முடியவில்லை.. உணவும் குறைந்து விட்டது.. மன்னன் பொலிவு இழந்தான்..
மன்னனோடு சேர்ந்து நாடும் கலை இழந்தது..

இந்த நேரத்தில் இமயமலையிலிருந்து ஒரு துறவி அங்கு வந்து சேர்ந்தார்..

மன்னனின் காதை நன்றாகப் பரிசோதித்தார்..

"இது மிகவும் அபூர்வ வகை பூச்சி.. நம் பக்கத்து மூலிகைகளுக்கு இது கட்டுப்படாது.."

இங்கிருந்து மூவாயிரம் மைல் தூரத்தில் உள்ள ஒரு காட்டில் விளையும் அபூர்வமான ஒரு மூலிகைக்குத்தான் இந்தப் பூச்சி கட்டுப்படும்..

இன்றே என் சீடர்களை அனுப்புகிறேன்.. எப்படியும் ஒரு மாத காலத்திற்குள் அவர்கள் திரும்பி வந்துவிடுவார்கள்.. அதன்பின் உங்கள் பிரச்னை முற்றிலுமாகத் தீர்ந்துவிடும்.."

மூன்றே வாரங்களில் சீடர்கள் மூலிகையுடன் வந்தார்கள்..

மறுநாள் காலை விடிவதற்கு முன்னால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மன்னனின் காதில் அந்த மூலிகைச் சாறு அரைத்து ஊற்றப்பட்டது..

அடுத்த சில நொடிகளில் செத்த பூச்சி வெளியில் வந்து விழுந்தது..

 மன்னனிடம் அந்தப் பூச்சியைக் காட்டினார் துறவி..

மன்னன் இப்போது நிம்மதியாகத் தூங்கினான்.. நன்றாக உண்டான்.. பழைய பொலிவு திரும்பி விட்டது..

அவருக்கும் அவரது சீடர்களுக்கும் உரிய மரியாதை செய்து அனுப்பி வைத்தான் மன்னன்..
அவர்கள் நாட்டு எல்லையைத் தாண்டியதும் துறவியின் சீடர்களில் ஒருவன் கேட்டான்..

"குருதேவா! அந்த அற்புதமான மூலிகை பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்!''

''துறவி புன்னகை பூத்தார்"..

"பூச்சி அத்தனை நாள் எங்கே இருந்தது என்று நினைக்கிறீர்கள்?'' மன்னனின் செவிக்குள்..
''அதுதான் இல்லை.. மன்னனின் காதிற்குள் பூச்சி போனது உண்மையாக இருந்திருக்கலாம்.. சிறிது நேரத்திலேயே அது செத்திருக்கும்.. இல்லை, வெளியே வந்திருக்கும்..

அந்தச் சிறிது நேரத்தில் அது மன்னனின் செவிகளுக்குள் ஒரு குறுகுறுப்பு உணர்வை ஏற்படுத்தி விட்டது.. அது மன்னனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது..

அந்தப் பூச்சிகாதுக்குள் உயிருடன் இருப்பதாகவே மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்."

"குருதேவா அதை விளக்கிச் சொல்லி மன்னனை குணப்படுத்தியிருக்கலாமே..?''


"மனோவியாதியை அப்படி எளிதாகக்குணப்படுத்திவிட முடியாது!

பிரச்னை தீவிரமானது என்று மன்னன் நினைத்துக் கொண்டிருந்தான்..

அதனால் தான் நானும் சிகிச்சை தீவிரமானது என்று பாசாங்கு செய்தேன்..

தொலைதூரத்தில் இருந்து மூலிகை வர வேண்டும் என்று பொய் சொன்னேன்."

''அந்த மூலிகை?''

"நம் ஊரில் சாதாரணமாக விளையும் தூதுவளைதான்..
அதை யாரும் கவனிக்காமல் பார்த்துக் கொண்டேன்..

பின் ஒருநாள் பூஜை செய்து காலை இருட்டு நேரத்தில் மூலிகைச் சாற்றை மன்னனின் காதில் விட்டு ஏற்கனவே பிடித்து வைத்திருந்த ஒரு செத்த பூச்சியைக் காட்டினேன்.. மன்னன் நம்பி விட்டான்.. அவன் நோயும் தீர்ந்தது.."



இன்று மனித இனத்தைப் பீடித்திருக்கும் நோய்களில் பெரும்பான்மையானவை நம் மனங்களில் தான் இருக்கின்றன..

காதில் நுழைந்த பூச்சி செத்து விட்டது.. மனதில் நுழைந்த பூச்சிதான் நம்மைச் சாகடித்துக் கொண்டிருக்கிறது..

இன்று நம்மில் பலர் சூழ்நிலையைக் காரணம் காட்டி தமது வாழ்க்கையைத் தாமே கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

"எங்கப்பாகிட்ட மட்டும் பணம் இருந்தா நான் பெரிய ஆளாகியிருப்பேன்'' என்று எத்தனை பேர் ஜல்லியடிக்கிறார்கள் பாருங்கள்.
இன்று பெரிய ஆட்களாக இருக்கும் பலரும் காசில்லாத தகப்பனுக்குப் பிறந்தவர்கள் தான்..

பிரச்னை நம் பெற்றோரிடமோ, நம் ஆசிரியரிடமோ, நம் பள்ளி-கல்லூரியிடமோ, நம் சூழ்நிலையிலோ இல்லை.. அது நம் மனதில் இருக்கிறது.. பூச்சி காதில் இல்லை, மனதில் இருக்கிறது..

ஒரு இல்லாத பிரச்னையை, இருப்பதாக நினைத்துக்கொண்டு நம் வெற்றி வாய்ப்புக்களைக் கெடுத்துக் கொண்டிருக்கிறோம் நாம்!

Life Story #9

*தினம் ஒரு கதை..*

_பறக்கும் பருவத்தை அடைந்த இரண்டு வெள்ளை நிற புறாக்களின் தாய் தனது இரண்டு குஞ்சுகளின் திறமையினையும் பரிசோதிப்பதற்காக ஒருநாள் தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து.._

_*உங்களுக்கு பறந்து இரை தேடும் அளவுக்கு சிறகுகள் வளர்ந்துவிட்டன.. நீங்கள் இனி தாராளமாக வெளியில் பறந்து சென்று உங்களது இரைகளை தேடி பெற்றுக்கொள்ளுங்கள்,*_
*_நீங்கள் இரையை பெற்றுக்கொள்ளும் ரகசியத்தை மாத்திரம் ஒருத்தரிடம் ஒருத்தர் சொல்லிக்கொள்ளக்கூடாது_* _என கண்டிசன் போட்டு_ _*இன்றில் இருந்து நான் உங்களுக்கு சாப்பாடு தருவதை நிறுத்திக்கொள்கின்றேன்*_ _எனக்கூறியது தாய் புறா.._

_இரண்டு குட்டிப்புறாக்களும் தனது தாயின் வேண்டுகோளுக்கிணங்க தங்களது இரையை தேட ஆரம்பித்தன.._

*_அதில் ஒரு புறா தினமும் காலையில் சேற்றில் விழுந்து அழுக்காகிக்கொண்டே இரை தேட ஆரம்பிக்கும் இரை தேடி முடிந்ததும் ஆற்றில் கழுவிக்கொண்டு வீடு செல்லும்.._*

_இதைப்பார்த்த மற்றப்புறா_ _*நீ அழுக்கோடு என்னுடன் வருவதால் எனக்கு கேவலாமாக இருக்கின்றது.. உன்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் உன்னை கவனிக்காமல் ஒதுக்கி விடுகின்றார்கள், என்னை பார்க்கும் மனிதர்கள் எல்லாம் என் அழகை ரசிக்கின்றார்கள்.. நீ முட்டாளைப்போல நடந்துகொள்ளாதே..*_ என தினமும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கும்..

சரியாக இரண்டு வாரங்கள் கழிந்து தாய்ப்புறா தனது இரண்டு குஞ்சுகளையும் அழைத்து சோதனை செய்ததில் ஒரு புறா நன்றாக கொழுத்துப்போய் இருந்தது மற்றப்புறா எலும்பும் தோலுமாய் இருந்தது..

_கொழுத்துப்போய் இருந்த புறாவை அழைத்து_ _*நீ இவ்வளவு பிரகாசமாக இருக்கின்றாய்.. உனது சகோதரன் ஏன் இப்படி எலும்பாக தேய்ந்துள்ளான்?*_ எனக்கேட்டது..

அம்மா _*நான் தினமும் காலையில் சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்செல்வேன்.. நான் அழுக்காக இருப்பதால் மனிதர்கள் யாரும் என்னை கண்டுகொள்ளமாட்டார்கள்.. நான் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் எனது வயிறு நிறைய இரைகளை பெற்றுக்கொள்வேன்..*_

*_அண்ணன் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால்.. அவனால் நிம்மதியாக இரை தேட முடிவதில்லை.. மனிதர்கள் அவனை கண்டால் பிடிப்பதற்கு துரத்துகின்றார்கள்.. அதனால் அவன் இரை தேடும் நேரத்தை விட உயரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் நேரமே அதிகம்.. அதனால் குறை வயிற்றோடு தினமும் திரும்பி விடுவான்.. ஆகவேதான் அவன் பசியால் வரண்டு மெலிந்து போய் உள்ளான்.._* என பதிலளித்தது..

இப்பதிலை கேட்ட தாய்ப்புறா தன் குஞ்சின் புத்திக்கூர்மையினை நினைத்து மெய்சிலிர்த்துப்போய் மற்றப்புறாவை அழைத்து _*உனது தம்பி எவ்வாறு நடந்து கொள்கின்றானோ அவ்வாறே நீயும் நடந்துகொள், அது உன்னையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்.. உனது வயிற்றையும் குறைவில்லாமல் நிறைவடையச் செய்யும்..*_ எனப்புத்திமதி கூறி மறுநாள் காலை *தாய்ப்புறாவும் தனது குஞ்சுகளோடு சேர்ந்து சேற்றில் குளித்துக்கொண்டு இரை தேடச்சென்றது..*


👇
*நாம் எவ்வளவுதான் அழகு மற்றும் அறிவோடு இருந்தாலும்.. இடத்துக்கு ஏற்றாற்போல் நம்மை மாற்றிக் கொள்ளாவிடின் எதிரிகளிடம் இருந்து தப்பிக்கவும் முடியாது.. நிம்மதியாக வாழவும் முடியாது..*


Life Story #8

*தினம் ஒரு கதை..*


மரியாதை ராமன் வசித்து வந்த ஊரில் சோமன் என்ற ஒரு பணக்காரன் இருந்தார். அவர் மிகவும் பொல்லாதவர், பணத்தாசைப் பிடித்தவர். தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு சரியான கூலி கொடுக்கமாட்டார்.

ஒருமுறை சோமன் தன் தோட்டத்தில் விளைந்த தேங்காய்களை சந்தையில் விற்று விட்டு, கிடைத்த பத்தாயிரம் ரூபாயுடன் தன்னுடைய மாட்டு வண்டியில் காட்டு வழியாக வீட்டுக்கு வரும் போது தனது பணப்பையைத் தொலைத்துவிட்டார்.

வீட்டுக்கு வந்ததும் வண்டியில் பணப் பையை தேடி பார்த்து கிடைக்காமல் புலம்பி தள்ளினார். மாட்டு வண்டி ஓட்டி வந்தவர் முதல் அனைவரையும் கேட்டு பார்த்து கிடைக்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தார்.

அப்போ அவரது மனைவியார் ‘உங்க பணப்பையை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் கொடுக்கிறேன் என்று சொல்லுங்க, கண்டிப்பாக யாராவது கொண்டு வந்து கொடுப்பாங்க’ என்றார்.

ஆகா இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று நினைத்து அடுத்த நாளே ஊர் முழுவதும் தண்டோரா போட்டு சொல்லிவிட்டார். ஊரு மக்களும் பணப்பை கிடைத்தால் கொடுத்து சன்மானம் வாங்கலாம் என்று நினைத்தார்கள். அப்படி தேடி பார்த்தும் யாருக்கும் பணப்பை கிடைக்கவில்லை.

இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு பின்பு அருகில் இருந்த ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஒரு வழிப்போக்கர் வந்தார். அவர் பெயர் பூபாலன். மிகவும் நல்ல குணமுடையவர். ஏழையாக இந்தாலும் கவுரவமாக வாழ பிரியப்படுபவர். தன்னால் முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுபவர்.

அவர் விவசாயம் செய்த நிலத்தில் நிலத்தடி நீர் கிடைக்காததால் விவசாயம் சரியாக செய்ய முடியவில்லை வேறு தொழில் செய்யவோ தன்னிடம் பணமும் அனுபவமும் இல்லை என்பதால் பக்கத்து ஊருக்கு சென்று ஏதாவது வேலை செய்து சம்பாதித்து பின்னர் தொழில் தொடங்க நினைத்து வந்தார். போகிற வழியில் காட்டுப் பாதையில் இருந்த அம்மன் கோயிலுக்கு போய் வேண்டிக் கொண்டார்.

அப்படி காட்டு வழியில் போகும் போது அங்கே ஒரு புறா அடிப்பட்டு கீழே கடந்தது. அதை பார்த்து இரக்கப்பட்ட பூபாலன் அந்த புறாவை தூக்கிக் கொண்டு அருகில் இருந்த குளத்திற்கு கொண்டு சென்ற தண்ணீரை எடுத்து அந்த புறாவின் வாயில் ஊற்றினார், பின்னர் அந்த புறாவை அருகில் இருந்த மரக்கிளையில் வைத்துவிட்டு வந்தார்.

அவர் அப்படி வரும் போது பாதையின் ஓரத்தில் காலில் ஏதோ மாட்டியதை கண்டார், அது ஒரு பை அதில் நிறைய பணமும் இருந்தது. அதை எடுத்தவுடன் பூபாலனுக்கு யாரோ பாவம், தன் பணப்பையை விட்டுவிட்டு போயிட்டாங்க, அப்படி தொலைத்தவர் மனம் எத்தனை வேதனைப்படுமோ, எனவே விரைவில் அவரை கண்டுபிடித்து கொடுத்துவிட வேண்டும் என்று ஊருக்கு விரைந்தார்.

அப்போது ஊருக்குள் சென்ற போது அங்கு இருந்த கடையில் விசாரித்தபோது கடைக்காரர் சோமனைப் பற்றி சொல்லி அவர் தான் தொலைத்தவர், நீங்க இதை கொடுத்தால், கண்டிப்பாக சன்மானம் கொடுப்பார் என்றார்.

உடனே பூபாலனும் சோமன் வீட்டை தேடி பிடித்து சென்று பணப்பை கிடைத்த விபரத்தை சொன்னார். சோமனுக்கு சந்தோசம் தாங்கமுடியவில்லை. உடனே அந்தப் பணப்பையை வாங்கிக் கொண்டார், அதேநேரம் அவரது கெட்ட எண்ணமும் வெளிப்படத் தொடங்கியது. பணப்பை கிடைத்துவிட்டது, பணமும்சரியாக இருந்தது, இப்போ ஏன் இவனுக்கு சன்மானம் கொடுக்க வேண்டும். சன்மானம் கொடுக்காமல் தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் சோமன்..

(தொடர்ச்சி அடுத்த பாகத்தில்..)

Life Story #7

*தினம் ஒரு கதை..*
_ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் வாழ்ந்து வந்தனர்.._

*_நீண்ட நாட்களாக வைத்தியர் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.._*

_கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!_

_வைத்தியரும் சொன்னதில்லை!_

*_மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!_*

_இப்படியே பல ஆண்டுகள் கழிந்து.. இருவருக்குமே வயதாகிவிட்டது.._

_*ஆனாலும் வைத்தியர் தேடுவதை நிறுத்தவில்லை!*_

_ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியை காணவில்லை.._

_*மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்..*_
*_வைத்தியரை  பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்._*

_வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.._

*யாரம்மா நீ..?* என்று கேட்டார்..

அதற்கு அந்த இளம்பெண்.. *நான்தான் உங்கள் மனைவி* என்றாள்..

_வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.._

*என்ன நடந்தது..?* என்று கேட்க..

 _மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.._
_*"உங்களுக்காக கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.. காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது.. அதனால், அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன்.. கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது.. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன்.. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.. குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளம் பெண் ஆகிவிட்டேன்"*_ என்றாள்

_வைத்தியர் பதறி அடித்துபோய்_ _*"எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் "*_ என்று கேட்க..

அதற்கு அந்த மனைவி _*"அந்த குச்சியை  நான், அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? "*_ என்றாள்..

*வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!..*

👇
*நம்பிக்கையானவர்களுக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*

*அப்படி செஞ்சால் அது அவர்களுக்கு தான் லாபம்..*

*சொல்லாமல்.. மறைப்பவர்களுக்கு எப்பவுமே அல்வா தான்..*

Life Story #6

*தினம் ஒரு கதை..*🐝

_அற்புதமான சிற்பி ஒருவர், ஒருநாள் கடைத்தெருவில் நடந்து போய் கொண்டிருந்தார்.._

_அப்பொழுது ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார்.._
_ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி,_

_அதன் பின் அந்தக் கடைக்காரரிடம்,_ *'ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா?'* என்று கேட்டார்..

*'தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள்.. இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது.. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்'* என்றார் கடைக்காரர்..

_பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி,_

_அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார்.._

_அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது.._

_போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர்.._

*_அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர்.._*

_முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.._

_அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர்,_ *'இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்?'* என்று கேட்டார்..

அதற்கு சிற்பி, *'வேறு எங்கிருந்தும் இல்லை. .தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன்..*

*என்னை தங்களுக்கு நினைவில்லையா? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார்..*
கடைக்காரர் வியந்தார்..

*_ஆம்.. தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது.. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது.._*

*வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன்.. உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது!'* என்றார்..


👇
*ஆம்..*  _*தேவையற்ற வார்த்தைகளை வாழ்வில் நீக்கினால் நாமும் விலைமதிப்பற்ற மனிதனாய்,*_
_*ஒவ்வொருவரும்  நம்மை போற்றும் வகையில் வாழ்ந்து காண்பிக்கலாம்..*_

Life Story #5

*தினம் ஒரு கதை..*

_ஒருவர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க எண்ணி, ஒரு சிற்பியை காண சென்றார்.._

_அவர் சென்றபொழுது அந்த சிற்பி ஒரு கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.._

_கொஞ்ச நேரம் சிற்பி சிலை செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,_
_*அதே மாதிரி செதுக்கிய இன்னொரு சிலை அங்கு கிடப்பதை கவனித்தார்..*_

உடனே அவர் சிற்பியிடம், *”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி இரு சிலைகள் வைப்பார்கள்?* *_இல்லை.. இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?”_* என்று சிற்பியிடம் கேட்டார்..

சிற்பி சிரித்துக்கொண்டே,
_*“இல்லை ஐயா.. கீழே கிடக்கும் சிலையில் பிழை உள்ளது..”*_ என்றார்..

அவர் ஆச்சரியத்துடன், _*"என்ன சொல்றீங்க.. மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை.. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!"*_ எனக் கேட்டார்..

_*"அந்த சிலையின் இடது காதில் சின்ன கீறல் இருக்கிறது.. பாருங்கள்"*_ என்றார் சிற்பி..

_*“ஆமாம்!. அது சரி.. இந்த சிலையை கோவிலில் எங்கே வைக்கப் போகிறார்கள்?”*_ என்று கேட்டார்..

_*“இது கோவில் கோபுரத்தில், இருபது அடி உயரத்தில் வரும் சிலை!”*_ என கையை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி..

அவர் வியப்புடன், _*”இருபது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் மடத்தனமாக இன்னொரு சிலை செய்கிறீர்கள்..!”*_ என்றார்..

_*“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்”*_ என்றார் சிற்பி..

_வந்தவர் சிற்பியின் தொழிற்பக்தியை எண்ணி தனக்கான சிலையை தாங்களே செய்யவேண்டும் என்று கூறி சென்றார்.._


👇
*_அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்வதை விட.._*

*_நம் மனத்திருப்திக்காக வேலை செய்வதே சிறந்ததாகும்.._*

Life Story #4

*தினம் ஒரு கதை..*🐝

ஒரு ஊரில் *அவன்-இவன்* என இரு நண்பர்கள் இருந்தார்கள்..

_அதில் அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தைக் கொண்டவன்.._

_அவனை இவன் மாற்ற எண்ணி.._
_அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான் இவன்.._

*நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ..? அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும்* என்றான் இவன்..

அவனும் அப்படியே செய்தான்..
*முதல் நாள் அவன் 35 ஆணிகளை* அடித்தான்..

*மறு நாள் 30* _என்று இப்படியாக குறைந்துகொண்டே வந்தது.._

*_சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.._*

அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை.

*_அதை நண்பன் பார்த்துப் பெருமைப்பட்டான்.._*

அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட இவன், *அவனிடம் அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கச் சொன்னான்..*

அவனும் அப்படியேச் செய்தான்..

_அதை பார்த்த இவன் அவனிடம் சொன்னான்.._
*நண்பனே.. நீ நான் சொன்னபடியே நீ அடித்த எல்லா ஆணிகளையும் பிடிங்கிவிட்டாய்..*

ஆனால் *ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார்.. இந்த சுவர் முன் இருந்த மாதிரி இல்லை.. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன..*

*அது போலத் தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும்..*

*_நீ என்ன தான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.._*
*நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும்,* _*செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை..*_ என்றான் நண்பன்..

அவன் *இனி எக்காலத்திலும் கோபப்படுவதில்லை என உறுதி எடுத்துக்கொண்டான்..*

Life Story #3

*தினம் ஒரு கதை..*🐝
_ஒரு இளம் தம்பதி புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போனார்கள்.._

_அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.._

_பக்கத்து வீட்டுப் அம்மா ஒருவர் துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.._

_பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,_
*“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது.. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்..”*

_கணவனும் பார்த்தான்.._

_ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.._

_தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டு அம்மா துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.._

_திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மா துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,_
*“அப்பாடா, இன்று தான் அந்தம்மாள் துணி துவைக்கக் கற்றுக் கொண்டாளோ..? இல்லை, நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா..? என்று தெரியவில்லை..*

*இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!* என்றாள்

கணவன் அமைதியாகச் கூறினான்,
*“இன்றைக்கு அதிகாலையில் தான்.. நான், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்..”* என்று..


👇
*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன..*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை..*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...?..!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்..?

*குற்றம்* என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும் தெரிவது..

*மனிதம்* என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!   

👇
*பிறர் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்க்காமல்,*
*நம் அகமறிந்து, நம்மிடம்  உள்ள குறைகளை, களைந்து வாழ்வோம் வளமாக..*

Life Story #2

*தினம் ஒரு கதை..*🐝

*பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார்..*

_தன் வேலைக்காரனை அழைத்து,_
*"இந்த வாழைத் தாற்றைக் கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா.."* என்றார்..

_வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்_

_அன்றிரவு_ பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
*"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது.."* என்றார்..

_திடுக்கிட்ட பண்ணையார்,_
*"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்.."* என்றார்..

*"இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது.."* என்றார் இறைவன்..

_விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து_
*"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோவிலில் கொண்டு சேர்த்தாயா.."* என்றார்..

அவன் *"ஆம்"* என்றான்..

*_பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது.._*

_அவர் வேலைக்காரனை வேகமாக ஓங்கி ஒரு அறை அறைந்தார்.._
*"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்.."* எனறார்..

அவன், *"உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான்.. நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன்.. மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.."* என்றான்..

*பண்ணையாருக்குப் புரிந்து விட்டது..*

_*ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.. கோவிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை..*_


👇
_*கோவிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது  ஏழைகளுக்கு போய்ச் சேராது..*_
ஆனால்
_*ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்..*_

👇
_*கோவிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்..*_
*_ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி.. இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை.. அதில் போட்டால் அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்.._*

*இதையே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள்..*

Life Story #1

*தினம் ஒரு கதை..*


_*எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..*_
_அதை கண்ட வியாபாரி.._
_மிகவும் கவலை கொண்டான்.._
*_மிக விலை உயர்ந்த வைரம்.._*
_*எப்படியாவது அதனை எடுத்து விடவேண்டும்..*_
என்று
_எலி பிடிப்பவனை நாடினார்.._

_வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து_ _*எப்படியாவது அந்த எலியை பிடித்து வைரத்தை எடுக்க உதவ வேண்டும்*_ என கேட்டுக் கொண்டார்..

_எலி பிடிப்பவனும் தன் வலையுடன் வந்துவிட்டான்.._

_*எலி அங்கே இங்கே என்று ஓடி போக்கு காட்டியது..*_

*திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன..*

_*எலி பிடிப்பவன் சற்று நேரம் குழம்பிவிட்டான்..*_

சிறிது நேரத்தில்..
*_ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும்.. ஒரு எலி மட்டும் அந்த கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது.._*

_எலி பிடிப்பவன் சிந்தித்தான்.._ _அதுவே அவனுக்கு வசதியாக போய் விட்டது.._

*_சரியாக குறி பார்த்து அந்த ஒரு எலியை மட்டும் நோக்கி  வலையை வீசினான்.._*

எலி பிடிபட்டது..

_*வைர வியாபாரி அந்த எலியின் வயிற்றை சோதித்து பார்த்தார்..*_
*அதில் வைரம் இருப்பது உறுதியானது..* _பின்னர் அதன் வயிற்றை கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டார்.._

_எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி_ *மகிழ்ச்சி.. ஆனால் ஒரு சந்தேகம்..*
_ஆமா..!_ _*நீ எப்படி அந்த எலிதான் வைரம் விழுங்கிய எலியென்று சரியாக அடையாளம் கண்டு அதை பிடித்தாய்..?*_ என்றார்..

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
_*ஒரு எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே!*_ அப்போதே புரிந்தது..
*வைரம் வயிற்றில் இருந்தால்..*
*கர்வம் தலைக்கு போய்விடும்..* என்று..
_இப்படித்தான்.._
*பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,*
*தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்* அதுவே..
*ஆபத்து நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது என்றான்..*


👇
*அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிடுகிறார்கள்..*

_ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும்_ *_சொந்த பந்தமும், நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.._*

பொக்கிஷங்கள்! 32

பொக்கிஷங்கள்! 32

1. பேசும்முன் கேளுங்கள்! எழுதும்முன் யோசியுங்கள்! செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்!

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்!
...
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்கு கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்!

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்!

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்!

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை!

15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்!

16. யார் சொல்வது சரி என்பதல், எது சரி என்பதே முக்கியம்!

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்!

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்!

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்!

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்!

22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்!

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்!

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்!

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்!

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்!

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்!

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்