flipkart discount sale search here.

Thursday 30 November 2017

இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்...

*அழகான மனைவிக்கு அன்பான கணவன் எழுதியது*

நான் காலையில் படுக்கையிலிருந்து எழும்புகிறேன்
நீ நெருப்புப் புகையோடு
போராடிக் கொண்டிருக்கிறாய்.

நான் பல் துலக்குகிறேன்
நீ பாத்திரங்களை
புதுப்பிக்கிறாய்.

நான் செய்தித்தாளில்
செய்திகளை சேகரிக்கிறேன்.
நீ வீட்டில் குப்பைகளை
பெருக்குகிறாய்.

நான் உடலை சுத்தம் செய்கிறேன்.
நீ ஆடைகளின் அழுக்குகளை
பிரித்துக் கொண்டிருக்கிறாய்.

நான் பசியாற வயிற்றை நிரப்புகிறேன்.
நீ பாத்திரங்களை
நீரால் நிரப்புகிறாய்.

நான் அலுவலகம் கிளம்புகிறேன்.
நீ பிள்ளைகளை
சீருடையில் அனுப்பி விட்டு
என்முறைக்காக காத்திருக்கிறாய்.

நான் இரவு வீடு திரும்புகிறேன்.
நீ இன்னும் திரும்பவில்லை
சமையலறையிலிருந்து.

நான் தூங்கச்செல்கிறேன்.
நீ கதவின் தாழ்ப்பாள்களையும்
எரியும் மின்விளக்குகளையும்
பிள்ளைகளின் போர்வைகளையும்
சரிபார்த்து விட்டே
படுக்கையில் விழுகிறாய்.

ஒவ்வொரு ஞாயிறுகளும்
ஒவ்வொரு பண்டிகைகளும்
எங்களுக்கு ஓய்வு நாட்கள்
உனக்கு?

உறவு வீட்டு விழாக்களில்
எங்களிடத்தில் நீ!

கல்விக்கூடங்களின்
கேள்விகளுக்கான பதில் நீ!

சோக நிகழ்வுகளிலும்
கண்ணீர் சிந்திய படி நீ!

எங்களின் பிரதிநிதியாக
கோவில்களிலும் நீ!

என் வாழ்க்கைத்தோழியே!
இப்போதெல்லாம்
" நான் வேலைச்செய்கிறேன்''
என்று சொல்லவே
தயக்கமாக இருக்கிறது
கழிந்தப் பொழுதின்
உன் ஒற்றைப் பதிலால்..

புள்ளிவிபரம் சேகரிக்க வந்த
அரசு ஊழியர் உன்னிடம் கேட்டார்
" வேலைப் பார்க்கிறீர்களாமா?"
உன் பதில்..
" இல்லங்க..நான் வீட்டில சும்மாதான் இருக்கிறேன்..."..........

*மனைவியை நேசிப்போம், ஒரு  விதத்தில் அவளும் நம் தாய் தான்..*

#107 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 499 சிறைநலனும் சீரும் | Dhinam Oru ...

#210 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Tuesday 28 November 2017

சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன்.

சமீபத்தில் சென்னையின் சாலையோர கடையொன்றில் சாப்பிட சென்றிருந்தேன். சாப்பாடு தயாராக இருந்தது, மதியநேரம் என்பதால் சாம்பார் சாதம், தயிர்சாதம், தக்காளி சாதம், பிரிஞ்சி, சாப்பாடு என எல்லாம் மனக்க மனக்க இருந்தது. கடைக்காரரிடம் சாம்பார்சாதம் கொடுக்கும்படி கேட்டேன், அவரோ சிறிதுநேரம் காத்திருக்கும்படி சொன்னார், என்ன விஷயம் என கேட்டதற்கு, வாழையிலை காலியாகிவிட்டது கடையில் வேலைசெய்பவர் வாழையிலை வாங்கிவர சென்றுள்ளதாகவும், அவர் வந்தவுடன் கொடுக்கிறேன் என்றார். சாப்பிட வந்தவர்களில் ஒருவர் கேட்டார் "இப்பொழுதுதான் பிளாஸ்டிக் கவர்கள் வந்துருக்கே அதிலே பரிமாறலாமே என கேட்டார்".

கடைக்காரர் சிரித்துக்கொண்டே சொன்னார் "இன்னைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே பல வியாதி வருது இதுல பிளாஸ்டிக் கவர்ல சாப்பாட்டை சூடா வச்சு சாப்பிட்ட என்ன வியாதி வரும் தெரியுங்களா கேன்சர் கூட வரலான்னு சொன்னார், நான் படிக்காதவன் சார் என்ன வியாதி வரும் வராதுன்னு தெரியாது, பிளாஸ்டிக்ல சாப்பாடை சூடா வச்சி சாப்புட்றது உடம்புக்கு கெடுதின்னு தெரியும் , வாழையிலையில் சாப்பிட்டா நல்லதுன்னு தெரியும், என் கடையில பெரிய பணக்காரன் சாப்பிடபோறதுமில்லை வியாதிவந்தா நல்ல ட்ரீட்மெண்ட் எடுத்த்துக்கறதுக்கு, சாதாரண ஆளுங்கதான் சாப்பிடவருவாங்க அவங்களுக்கு பெரியவியாதிவந்தா சமாளிக்க முடியாதுங்க, ஒரு ஆளுக்கு வாழையிலை 1 ரூபா செலவாகும், வாழையிலைக்கு பதிலா பிளாஸ்டிக் சீட் யூஸ் பன்னா மாசம் 200 லிருந்து 300 ரூபா மிச்சமாகும் இந்த பணத்தை வச்சு கோடிஸ்வரன் ஆகா முடியாது,

சமையல்கூட முடிஞ்சளவுக்கு நல்ல பொருளை வச்சுத்தான் செய்யுறேன், வாழையிலை யூஸ் பன்றதாலே நான் போடுற குப்பைக்கூட மத்த ஜீவராசிக்கு சாப்பாடுதாங்க, மாடு வந்து வாழையிலையை சாப்ட்ரும் இடமும் க்ளீனாயிடும், இதுக்கும் மேல என் கடைல பெரும்பாலும் பேச்சுலர் பசங்க சாப்டுவாங்க, இவங்க பெரும்பாலும் சாப்பாடு வெளியிலதான் சாப்புடுவாங்க நம்ம கடைல சாப்பிடும்போதாவது நல்ல சாப்பாடு சாப்பிடட்டுன்னு பிளாஸ்டிக் யூஸ் பன்றதில்லை. என்ன்னால சாப்பாட்ல வேஷத்தை(பிளாஸ்டிக்) கலக்க மனசுவரலாங்கன்னு சொல்லிட்டு கடைசியில் வாழையிலையில் வச்சுதான் சாப்படு கொடுத்தார்.அவர் கடைல பார்சல் சாப்பாடு கூட வாழ எலைலதான் குடுக்குறாரு. இன்னைக்கு உணவு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் கூட சாப்பாடு கெடாம இருப்பதற்கு என்ன வழின்னு யோசிக்கிறாங்களே தவிர, சாப்புட்றவங்க நலனை கண்டுக்கிறதில்ல. ஆனா சாதாரணமா படிக்காத ஒருத்தர் இவ்வளவு யோசிப்பாருன்னு நெனச்சுக்கூட பாக்கல . காசு சம்பாதிக்க என்னவேணுன்னாலும் செய்யலான்னு மனசாட்சி இல்லாம சாப்பாட்டு பொருள்ல கலப்படம் செய்யுற இந்த காலத்துல, இப்படியும் ஒருத்தர்னு ஆச்சர்யமா இருந்தது.

#படித்ததில்_பிடித்தது

Amazing Mathematics given by great Mathematician. Sri Ramanujam.

Today is National Mathematics Day

(Birth Day of Ramanujam),


See this Absolutely amazing Mathematics given by great Mathematician.


1 x 8 + 1 = 9

12 x 8 + 2 = 98

123 x 8 + 3 = 987

1234 x 8 + 4 = 9876

12345 x 8 + 5 = 98765

123456 x 8 + 6 = 987654

1234567 x 8 + 7 = 9876543

12345678 x 8 + 8 = 98765432

123456789 x 8 + 9 = 987654321


1 x 9 + 2 = 11

12 x 9 + 3 = 111

123 x 9 + 4 = 1111

1234 x 9 + 5 = 11111

12345 x 9 + 6 = 111111

123456 x 9 + 7 = 1111111

1234567 x 9 + 8 = 11111111

12345678 x 9 + 9 = 111111111

123456789 x 9 +10= 1111111111


9 x 9 + 7 = 88

98 x 9 + 6 = 888

987 x 9 + 5 = 8888

9876 x 9 + 4 = 88888

98765 x 9 + 3 = 888888

987654 x 9 + 2 = 8888888

9876543 x 9 + 1 = 88888888

98765432 x 9 + 0 = 888888888



And look at this symmetry :

1 x 1 = 1

11 x 11 = 121

111 x 111 = 12321

1111 x 1111 = 1234321

11111 x 11111 = 123454321

111111 x 111111 = 12345654321

1111111 x 1111111 = 1234567654321

11111111 x 11111111 = 123456787654321

111111111 x 111111111 = 12345678987654321


Brilliant isn't it?



Please Share This Wonderful Number Game.

27th November is the birthday of our great mathematician late Sri Ramanujam.  See his some of the mathematics solutions.

உங்கள் மனைவியிடம் அதிக அன்பை பெற 5 வழிகள் | Self Development Videos by S...

#105 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 190 ஏதிலார் குற்றம்போல் | Dhinam Or...

#208 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Sunday 26 November 2017

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ ...

உணவிடை நீரை பருகாதே!

        கண்ணில் தூசி கசக்காதே!

கத்தி பிடித்து துள்ளாதே!

         கழிக்கும் இரண்டை அடக்காதே!

கண்ட இடத்தில் உமிழாதே!

          காதை குத்தி குடையாதே!

காெதிக்க காெதிக்க குடிக்காதே!

நகத்தை நீட்டி வளர்க்காதே!

         நாக்கை நீட்டிக் குதிக்காதே!

பல்லில் குச்சிக் குத்தாதே!

        பசிக்காவிட்டால் புசிக்காதே!

         பசித்தால் நேரம் கடத்தாதே!

வயிறு புடைக்க உண்ணாதே!

           வாயைத் திறந்து மெல்லாதே!

வில்லின் வடிவில் அமராதே!

           வெற்றுத் தரையில் உறங்காதே!

இவைப் பதினாறையும் கடைபிடித்தாலே பாேதும் உடல் ஆராேக்கியத்துடன் வாழ நம் முன்னாேர்களின் எழிய வழிமுறை...!!!

#103 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1318 தும்முச் செறுப்ப | Dhinam Oru ...

#206 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

#206 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Saturday 25 November 2017

TNPSC CCSE IV தேர்விற்கு தேவையான பொது தமிழ் பகுதியின் பதிணெங்கீழ்கணக்கு நூல்கள் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு.

TNPSC CCSE IV தேர்விற்கு தேவையான பொது தமிழ் பகுதியின் பதிணெங்கீழ்கணக்கு நூல்கள் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

பதிணெங்கீழ்கணக்கு நூல்கள் பற்றிய பிற செய்திகள்

https://goo.gl/9jNWsU

ஒளவையார் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/3pp7iC

ஏலாதி பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/Ez952P

சிறுபஞ்சமூலம் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/wbkE9K

இனியவை நாற்பது பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/3RRdte

இன்னா நாற்பது பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/3ptiq1

திரிகடுகம் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/ikmy3k

முதுமொழி காஞ்சி பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/TAwYk9

பழமொழி நானூறு பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/UV8jod

 நாண்மணிகடிகை பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/5E9Jpy

நாலடியார் பற்றிய முழு குறிப்புகள் அடங்கிய வீடியோ தொகுப்பு

https://goo.gl/CMkYvd

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-

இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்:-

🍕 முதல் ஐந்தாண்டு திட்டம்1951 - 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

🍔 இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 - 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

🍣   மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 - 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது - 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

🍲  மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 - 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

🍜 நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 - 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

🍧 ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 - 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 - 80) Rolling Plan
● TRYSEM - 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

🍩 ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 - 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

🍦 ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 - 1990)
 ● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 - 1992)

🍰 எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 - 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

🍞 ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 - 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

🍫  பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 - 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

🍤 பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 - 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்

தமிழ் நூல்கள் சிறப்புகள் பற்றிய தகவல்கள்...

தமிழ் நூல்கள் சிறப்புகள் பற்றிய தகவல்கள்:-
📚 தமிழ் மூவாயிரம் - திருமந்திரம்
📚 தமிழ் வேதம் - நாலாயிர திவ்ய பிரபந்தம்
📚 திராவிட வேதம் - திருவாய் மொழி
📚 தமிழ் மொழியின் உபநிடதம் - தாயுமானவர் பாடல்கள்
📚 வேளாண்வேதம் - நாலடியார்
📚 தென்தமிழ் தெய்வப் பரணி - கலிங்கத்துப்பரணி
📚 வெண்பாப்பாட்டியல் - பன்னிரு பாட்டியல்
📚 குட்டி திருவாசகம் - திருக்கருவைப் பதிற்றுப் பத்தந்தாதி
📚 குட்டி தொல்காப்பியம் - இலக்கண விளக்கம்
📚 குட்டி திருக்குறள் - ஏலாதி
📚 வாக்குண்டாம் - மூதுரை
📚 தமிழ்க் கருவூலம் - புறநானூறு
📚வஞ்சி நெடும்பாட்டு - பட்டினப் பாலை
📚 இயற்கை ஓவியம் - பத்துப்பாட்டு
📚 இயற்கை இன்பக்கலம் - கலித்தொகை
📚 இயற்கை வாழ்வில்லம் - திருக்குறள்
📚 இயற்கை தவம் - சீவகசிந்தாமணி
📚 இயற்கை பரிணாமம் - கம்பராமாயணம்
📚 இயற்கை அன்பு - பெரிய புராணம்
📚 இயற்கை இறையருள் - தேவாரம்
📚 இயற்கை இன்பு வாழ்வு நிலையங்கள் - சிலப்பதிகாரம், மணிமேகலை

Tnpsc qustion and answers

Tnpsc சிறப்பு ***

1. தருமம்மால் பிறந்த ஊர் :தட்டான் குடி

2. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்

3. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது : திராவிடன்

4. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்

5. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா

6. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்

7. பேர்லின் மாநாடு :1878

8. சர்வதேச சங்கம் :1920

9. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா

10. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21

: 11. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45

12. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு

13. Ctbt ஆண்டு :1996

14. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942

15. தொழிலாளர் சட்டம் :1921

16. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா

17. முஸ்லி ம் லீக் :1906

18. ஆயுத சட்டம் :1878

19. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா

20. இடைக்கால அரசு :நேரு

: 21. புத்தர் திருமுறை :பீடகம்

22. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்

23. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்

24. மனோர் பொருள் :விவசாயி

25. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்

26. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி

27. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி

28. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு

29. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500

30. பரம்பு மலை ஆட்சி :பாரி

31. கார்சியா இளைஞன் :நேபோலியன்

32. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது colonthree emoticon

33. நீதி காவலர் :பாரோ

34. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்

35. திராவிட நாகரீக மையம் :தமிழகம்

36. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு

37. நாணல் என்பது :எழுதுகோல்

38. ராஜராம் மனைவி :தாராபாய்

39. பாபர் பிறந்த ஆண்டு :1483

40. நீதியின் ஊற்று :ஷெர்ஷா

 41. அம்பாய்ண படுகொலை :1623

42. மராட்டிய போர் :கொரில்லாப் போர்

43. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்

44. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்

45. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592

46. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி

47. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்

48. பால்பான் பேரன் :கைகுராபாத்

49. ஆழ்வார் :12

50. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி

51. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

52. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M

53. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா

54. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்

55. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்

56. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%

57. முதல் வாகன தொழிலகம் :1947

58. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்

59. வசந்த கால பயிர் :கோதுமை

60. முக்கிய பான பயிர் :காபி

61. மின்னியல் நகர் :பெங்கலூர்

62. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004

63. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்

64. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852

65. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200

66. இந்திய கடற்கரை நீளம் :7516M

67. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13

68. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M

69. மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்

70. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்

71. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

72. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

73. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

74. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

75. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

76. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

77. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

78. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

79. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

80. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

81. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

83. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

84. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

85. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

86. மிகப்பெரிய கோள் எது?
வியாழன்

87.  பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

88. பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

89. பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

90. ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

91. மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

92. அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

93. எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

94. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

95. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

96. தற்போது காடுகள் சதவீதம் :20%

97. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

98. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்

99. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

100. இந்திய வானொலி எப்போது துவங்கிபட்டது :1927

செல் உயிரியல் – 10 ம் வகுப்பு சமச்சீர் அறிவியல்

செல் உயிரியல் – 10 ம் வகுப்பு சமச்சீர் அறிவியல்

1) குரோமோசோம் எனப்பெயரிட்டவர்?
விடை = வால்டர்

2) மனித குரோமோசோமின் எண்ணிக்கை?
விடை = 46

3) குரோமோசோம் துண்டுகள் இணையும் பகுதி?
விடை = சென்ட்ரோமியர்

4) பால் நிர்ணயித்தலில் பங்கு பெறுவது?
விடை = அல்லோசோம்கள்

5) பாலிடீன் குரோமோசோம்களை கண்டறிந்தவர்?
விடை = பால்பியானி

6) குறிப்பிட்ட புரதத்தைக் குறியீடு செய்யும் டி.என்.ஏ. துண்டின் பெயர்?
விடை = ஜீன்

7) ஒரிசை சட்டைவா என்பது?
அரிசி

8) ஜீன்களின் ஒரு முழுத் தொகுதியின் பெயர்?
விடை = ஜீனோம்

9) டி.என்.ஏ. இரட்டைச் சுருள் அமைப்பைக் கண்டறிந்தவர்?
விடை = வாட்சன் மற்றும் கிரிக்

10) டி.என்.ஏ. இரட்டைச் சுருள் பிரிவதற்கு உதவும் நொதி?
விடை = டோபோஜசோமெரேஸ்

பொதுத்தமிழ் வினா விடைகள் !

பொதுத்தமிழ் வினா விடைகள் !!

1. தமிழ்க் கவிஞர்களின் இளவரசன் என்று வீரமாமுனிவர் பாராட்டிய புலவர் ? - திருத்தக்க தேவர்

2. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்? - ஜி.யு.போப்

3. இரகசிய வழி எனும் ஆங்கில நு}லை தழுவி தமிழில் நாடக நு}லினை இயற்றியவர் யார் ? - சுந்தரம் பிள்ளை

4. கோதையில் குரிசில் அன்னான் இப்பாடலடி யாரைக் குறிக்கிறது? - இராமன்

5. ரூபாயத் என்ற சொல்லின் பொருள்? - நான்கடிச் செய்யுள்

6. கலித்தொகையில் நெய்தற்கலியின் ஆசிரியர் யார் ? - நல்லந்துவனார;

7. அகராதி என்னும் சொல் முதன் முதலாக இடம் பெற்றுள்ள நு}ல் எது ? - திருமந்திரம்

8. புதுநெறிகண்ட புலவர் என்று பாரதியாரால் போற்றப்பட்ட சிறப்புக்குரியவர் யார்? - இராமலிங்க அடிகளார்

9. உண்மைநெறி விளக்கம் என்ற நு}லை எழுதியவர்? - உமாபதி சிவாச்சாரியார்

10. ஆறுமுக நாவலருக்கு நாவலர் பட்டம் வழங்கியவர்?- சுப்பிரமணிய தேசிகர்

11. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் என வழங்கப்பெறும் நு}ல் எது ? - சிலப்பதிகாரம்

12. குறுந்தொகை என்ற நு}லை தொகுத்தவர்? - பு ரிக்கோ

13. மனிதனின் மனநிலையை இருள், மருள், தெருள், அருள் எனக் கூறியவர் ? - முத்துராமலிங்கத்தேவர்

14. சேரமான் பெருமாள் நாயனார் பாடாத நு}ல் எது ? - போற்றிக் கலிவெண்பா

15. "செல்வத்துப் பயனே தல்" எனப் பாடியவர்? - நக்கீரனார்

It clarifies which one is more dangerous 😀😀 !!

Amazing Fact 🤔

You need at least *1 witness to prove a murder*

And a minimum of *3 witnesses to register a marriage!*

It clarifies which one is more dangerous 😀😀 !!

#102 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 65 | Dhinam Oru Thirukural | Kural 65

#205 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

#கோபத்தை_அடக்க_வழி...

#கோபத்தை_அடக்க_வழி

கோபம் வருகிறதா 100 வரை எண்ணிவிட்டு பிறகு பேசு ...

எதிரில் இருப்பவன் பலசாலியா ??? 1000 வரை எண்ணிவிட்டு  பிறகு பேசு ...

எதிரில் பேசுவது மனைவியா ??? எண்ணிக் கொண்டே இரு ... நிறுத்தாதே 😷😷😷 😜🤣

கஸ்தூரி பாய் குறிப்பு-வரைக? மாணவன் எழுதுகிறான்.

😄ஹாஹாஹா😃  ஆசிரியர் பாடு திண்டாட்டம் தான்!!

பொதுத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி...           

கஸ்தூரி பாய்                       
குறிப்பு-வரைக?         

மாணவன் எழுதுகிறான்.

மாணவன்;-
இது மிகவும்  நீளமான பாய்.
இதில் நீங்கள் குடும்பத்துடன்
படுத்து உருளலாம். புரளலாம்.

கஸ்தூரிபாயின் வகைகள்:

1)கோரைபாய்
2)தார்ப்பாய்
3)குச்சிப்பாய்
4)துணிப்பாய்
5)சாக்குப்பாய் etc........

ஆசிரியர்;-
என்னங்க இது கஸ்தூரிபாய் பத்தி எழுதச்சொன்னா கோரைப்பாய், தார்ப்பாய்னு எழுதியிருக்கான்!?

மற்றொரு ஆசிரியர் சொல்கிறார்.

அட,  உங்களுக்காவது  பரவாயில்லைங்க.

எனக்கு
கஸ்தூரி Boy இல்ல Girlனு ஒரே வார்த்தைல முடிச்சுட்டாக.

Speed post என்றால் ரூ.25 தான் கட்டணம் அடுத்த வேளை நாளில் டெலிவரி செய்துவிடுகிறார்கள்.

ஜி.எஸ்.டி பெயரில் கட்டண கொள்ளை அடிக்கும் புரபசனல் கூரியர்.
ஆதரிப்போம் தபால் துறை சேவைகளை.

Gstக்கு முன்பு தமிழ்நாடு முழுவதும் கவர் அனுப்ப
ரூ.25 தான் புரபசனல் கூரியரில் கட்டணம்.

தற்பொழுது ரூ.50 வாங்குகிறார்கள். கேட்டால் ஜி.எஸ்.டி என்கிறார்கள்.
25 ரூபாய்க்கு 18% ஜி.எஸ்.டி சேர்த்தாலும் ரூ.4.50 தான் சேர்த்து வாங்க வேண்டும். அதாவது ரூ.29.50 தான். அதே போல் துணி சேம்பிள்  பார்சலுக்கு கிலோக்கு ரூ.80 என்று ஏற்றி விட்டார்கள்.

இது போல் ஜி.எஸ்.டி மீது பழி போட்டு பல பெரிய நிறுவனங்கள் ஏமாற்றுகிறது.

இந்திய அரசின் தபால் சேவை நாடு முழுவதும் தற்பொழுது நல்ல வேகத்தில்  டெலிவரி தருகிறார்கள்.

கட்டணம் ரூ.5 முதல் தான் வாங்குகிறார்கள் அதுவே Speed post என்றால் ரூ.25 தான் கட்டணம் அடுத்த வேளை நாளில் டெலிவரி செய்துவிடுகிறார்கள். இந்திய அஞ்சலில் பார்சல் கட்டணம் மிக மிக குறைவாக கிலோவுக்கு ரூ.41 தான் வாங்குகிறார்கள், எடை ஏற ஏற கட்டணம் குறைவாக வாங்கி கொள்கிறார்கள்.

ஆன் லைன் மூலம் தபால் எங்கே சென்று கொண்டு இருக்கிறது என்றும் பார்க்க முடியும்.

இந்த மாதம் முதல் இந்திய அஞ்சல் துறையின் சேவைகளை  பயன்படுத்துகிறேன் தபால்கள் மற்றும் பார்சல்கள் மிக குறைந்த கட்டணத்தில்  கூரியர் சர்வீஸ் இல்லாத குக்கிராமத்துக்கு கூட சரியாக சென்று சேருகிறது.

தயவுசெய்து இந்த ஒரு மாதம் மட்டும் தபால் சேவையை அனைவரும் பயன்படுத்தி பாருங்கள்.

 இரயில் நிலைய தபால் நிலையங்கள் 24 மணி நேரமும் இயங்குகிறது.

தயவுசெய்து பார்வேடு செய்யுங்கள்

மனதை நெகிழ்ச்சியுற செய்த கவிதை வரிகள்...

👭👫👬👭👫👬👭👫👬👭

*. மனதை நெகிழ்ச்சியுற செய்த கவிதை வரிகள்...*

*# ஆசிரியர்கள் நிலைமை #*

 கரும்பலகையில்
கைபதித்து...
சுண்ணாம்புத்தூளை
தினம்
சுவாசித்து...

கற்றுக்கொடுத்து
கற்றுக்கொடுத்து
காற்றை இழந்த
ஆசிரியர்
இதயத்தில்
இன்னும்
இருக்கிறது வலி...

மாணவன்
மண்ணாகிப்போவானோ
என்றெண்ணி
கண்டித்த ஆசிரியரை
தண்டித்த சமூகம்...

வழி காட்டிய
மனிதனுக்கு
வலி ஊட்டிய
சமூகம்...

ஆசிரியர்கள்
ஏணிப்படிகள்
என்பதால்தான்
என்னவோ
எல்லோரும்
ஏறி மிதிப்பார்கள் போலும்...

மரியாதைக்குரிய
ஆசிரியரை
அவமரியாதைக்கு
ஆளாக்கும்
ஆணவ சமூகம்...

காக்க வேண்டிய
கடவுளை
தாக்க வேண்டிய
அவசியம்
எப்படி வந்தது?

கத்தி கத்தி
கற்பித்த குற்றத்திற்கு
கத்திக்குத்துதான்
பரிசா?

மாணவனை
மகனாகப் பார்க்கும்
ஆசிரியரை
எதிர்வினையாக்கி
எதிர்த்துப்பேசும்
சமூகம்.

சிற்பி
கல்லை
காயப்படுத்துவதாய்
கருதி
சிற்பியை காயப்படுத்தினால்
சிலை எப்படி
கிடைக்கும்.

மாணவனை
செதுக்க நினைக்கும்
ஆசிரியரை
தண்டித்தால்
நல்ல
சமூதாயம்
எப்படி கிடைக்கும்?

காலையில்
பள்ளிக்கு ஆசிரியராய்
சென்று
மாலையில்
வீட்டிற்கு
அப்பாவாய்
அம்மாவாய்...
திரும்புவதே
சவாலானதே!

பள்ளியில்
மாணவனை
திட்டிவிட்டு
படுக்கையில்
உறங்காமல்
கிடப்பவனே
இன்றைய ஆசிரியன்...

ஒருபுறம்
தேர்ச்சிக்கான நெருக்கடி
மறுபுறம்
ஒத்துழைக்க மறுக்கும்
மாணவனின் தேள்கடி...
நடுவில்
காயம்பட்ட ஆசிரியன்...

ஆனால்...

*ஆசிரிய நண்பரே !!!*

*ஆண்டிற்கு*
*ஒரு தினம்*
*அது*
*ஆசிரியர் தினம்...*

*_அன்று_* மட்டும்
வாழ்த்துக்கள்
வந்து வந்து
குவியும்...

*_இன்று_*  மட்டுமே
போற்றப்படுவோம்
*_இனி எப்போதும்_*
தூற்றப்படுவோம்...

*_இன்று_*
அறப்பணி
அர்ப்பணி
என்பார்கள்...
*_நாளை_*   நம்மை
பலியிட
அர்ப்பணிப்பார்கள்...

*இன்று*
*சமூக சிற்பி*
என்பார்...
*நாளை*
*சமூக எதிரி* என்பார்...

*இருந்தாலும்*
*இறந்தாலும்*
*ஆசிரியராய் இருப்போம்...*

*_கற்பித்தலை_*
*_கடமை யோடு_*
*_செய்யும்..._*

 *கல்விக்கடவுளாய்*
 *எப்போதும்...*
🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓🍓

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!!!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
(படித்ததில் பிடித்தது)     NICE

ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼

ஞாபகம் இருக்கா. 20 years back to school time.👼

🚪"டக்" "டக்" யாரது..?

😎 "திருடன்"
"என்ன வேனும் .?

🎊 " நகை வேனும்..!!
"என்ன நகை..?
" கலர் நகை...!!
"என்ன கலர்...??

♻ " பச்சை கலர்...!!!
"என்ன பச்சை..??

🍏" மா" பச்சை...
"என்னம்மா..?

💇 " டீச்சரம்மா..!
"என்ன டீச்சர்...?

💯 " கணக்கு டீச்சர்..!
"என்ன கணக்கு..?

🏠 " வீட்டு கணக்கு..!!
"என்ன வீடு...??

🏫 " மாடி வீடு..!!!
"என்ன மாடி ...?

🏢 " மொட்ட மாடி...!
"என்ன மொட்ட..??

😔 " பழனி மொட்ட...!
"என்ன பழனி..??

🍪 " வடபழனி...!!
"என்ன வட..?

🐢 " ஆமை வட..!!
"என்ன ஆமை..?

🚣🏻 🐢 "கொளத்தாம ..!!
"என்ன குளம்...!!

🚣🏻 " த்திரி குளம்..!!
"என்ன திரி..??

🔥 " விளக்கு திரி..!!
"என்ன விளக்கு ..??

👊 " குத்து விளக்கு ...!
"என்ன குத்து..??
" கும்மாகுத்து..!!!/

🏯🏣🏰 சுகமான வலிகளை தரும்
பள்ளி தருணங்கள்...

💃😿🏃 அம்மாவிடம் இருந்து பிரிந்து போக
முடியாமல்
அழுத தருணம்

👬👭 நாலு பேர்
சேர்ந்து நம்மை பள்ளிக்கு இழுத்து சென்றாலும்

🏠நம் வீட்டையே திரும்பி திரும்பி பார்த்த
தருணம்

👕 வேர்வையை சட்டையிலே துடைத்துவிட்டு விளையாடிய
தருணம்

✒✏ஆசிரியர் அடித்தால் வலிக்க
கூடாது என்பதற்காக

👖👖இரண்டு கால்சட்டையை போட்டு பள்ளிக்கு சென்ற
தருணம்

என்னிடம் ✏ரப்பர் வைத்த பென்சில்
இருக்கிறது என பெருமைபட்ட தருணம்

✒புதிதாக வாங்கிய
பேனாவை நண்பனிடம்
காட்டி சந்தோஷபட்ட தருணம்

வகுப்பு நடைபெறும் போது நண்பனிடம்
📖 புத்தக கிரிக்கெட் விளையாடின
தருணம்

நண்பர் மை இல்லாமல் தவிக்கும்
போது பெஞ்சின் மேல்
🎨 மை தெளித்து உதவிய தருணம்

போர்டில் நம்ம பெயர் மி.மி.அ என்ற
பட்டத்துடன் இருந்தால் நான் தாம்ல இந்த
வகுப்புக்கு ரவுடி என
சொல்லிக்கொண்ட தருணம் (மி.மி.அ-
மிக மிக அடங்கவில்லை)

சனி,ஞாயிறு விடுமுறை என்றாலும்
மழைக்காக விடுமுறை விட்டால்
அளவில்லாத சந்தோஷத்தில்
💃🏃 துள்ளி குதித்திருப்போம்

👣எல்லா நாட்களும் தாமதமாக செல்லும்
நாம் பிறந்த நாள் என்றால் மட்டும்
சீக்கிரமாவே பள்ளிக்கு செல்ல
துடித்திருப்போம்.🚸🚸🚸

விடுமுறை நாளில் பிறந்த நாள்
வந்தால்😿 வருத்தப்படுவோம்

🍞🍚🍣🍛🍔 அனைவரது சாப்பாட்டையும் சாதி,மத
பேதம் பார்க்காமல்
பகிர்ந்து உண்டு மகிழ்ந்தோம்

🕘 ஒன்பது மணி ஆனால் வருத்தப்பட்டோம்,
🕓 நான்கு மணி ஆனால் சந்தோஷபட்டோம்...
இப்போ அந்த நாளுக்காக
ஏங்கி நிற்கின்றோம்...!!!

இதை நீங்கள் அனுபவித்திருந்தால் பகிருங்கள்..

Friday 24 November 2017

யாரவது புதுசா வாட்ஸ்ஆப் கணக்கைத் தொடங்கினாங்கன்னா...

யாரவது புதுசா வாட்ஸ்ஆப் கணக்கைத் தொடங்கினாங்கன்னா பொறுமையா எப்படி பயன்படுத்தறதுன்னு சொல்லி கொடுங்க....

அவங்க என்ன போஸ்ட் போட்டாலும் மதித்து ரிப்ளை பண்ணுங்க....

அப்பதான் தொடர்ந்து இங்கிருப்பாங்க....

இல்லாட்டி வெளிலபோய் உருப்படுறதுக்கு வாய்ப்புகள் இருக்கு.....


அதை நாம அனுமதிக்கக்கூடாது..... 😂😄🤣😂😜

இப்போது சொல்லுங்கள்... கண்ணின் இமைகளா? இல்லை, இம்சை அரசர்களா ?

இதைப் படித்துவிட்டு பிறகு சொல்லுங்கள்...
1.இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை கண்டாலே பயந்து ஓடி ஒளிகிறோம்...
ஆனால். அவர்கள் நம்மை பாதுகாக்க வருபவர்களாக ஒருபோதும் நினைப்பதில்லை
2. முன் பின் தெரியாதவர்கள் சொல்வதைக் கேட்டு நம் மகளை, சகோதரியை மணமுடித்து வைக்கிறோம்...
ஆனால், நமக்கு நன்கு தெரிந்த நபர், இன்ஷூரன்ஸ் எடுக்க சொன்னால் ஆயிரம் முறை யோசிக்கிறோம்.
3.மேஜிக் செய்பவர்களைகூட அற்புதம் செய்யும் மகான்கள் என நம்புகிறோம்...
ஆனால், யதார்த்தத்தை சொல்லி, வழிகாட்டும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகளை நம்ப மறுக்கிறோம்.
4.பத்தாயிரம் ரூபாய் மொபைல் போனுக்கு, ஸ்கிரீன் கார்டு வாங்கி பாதுகாக்கிறோம்....
ஆனால், நம்மை பத்து பைசாவுக்கு கூட, இன்ஷ்யூர் செய்துகொள்வதில்லை.
5. செல்லும் இடங்களில், ஐந்து ரூபாய் கொடுத்து நமது செருப்புகளை பாதுகாப்பாக வைக்கிறோம்...
ஆனால், நாளொன்றுக்கு நமக்காக 50 ரூபாய் செலவில் காப்பீடு எடுக்க நினைப்பதில்லை.
6.நம் குழந்தைகளுக்காக தங்க நகைகளை வாங்குகிறோம்...
ஆனால், அவர்களுக்கான காப்பீட்டு திட்டங்களை கண்ணெடுத்தும் பார்ப்பதில்லை.
7. பென்ஷன் வாங்கும் அரசு ஊழியர்களை பார்த்தால் பொறாமை கொள்கிறோம்...
ஆனால், சிறு தொகையை செலுத்தி, பென்ஷன் பாலிசி எடுக்க முயற்சிப்பதில்லை.
8.பகவத் கீதை குறித்தும் குரான் குறித்தும் நமக்குள் சண்டையிட்டுக் கொள்கிறோம்...
ஆனால், மரணம் நம் கைகளில் இல்லை என்பதை உணர தவறிவிடுகிறோம்.
9. ஒவ்வொரு நாளும், ஒரு லட்சம் பேர், முன்தினம் அலாரம் வைத்துவிட்டு, காலையில் எழுந்திருக்காமல் உறங்கி விடுகிறார்கள் என்கிறது ஒரு சர்வே...
ஆனால், ஒருநாள் எத்தனை அலாரம் அடித்தாலும் எழுதிருக்க முடியாமலே போகும் முடிவு வரும் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்?
10. நாம் என்று மறைகிறோமோ அதுவே நம் வாழ்வின் கடைசி நாள்...
ஆனால், நம்மை சார்ந்தவர்களுக்கு அது அவர்கள் வாழ்வில் மற்றொரு நாளே.
11 கிரெடிட் கார்டிலும் சிம் கார்டிலும் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியும்...
ஆனால், நம் வாழ்நாளில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியுமா?
இப்போது சொல்லுங்கள்...
நம் குடும்பத்தை காக்க சொல்லும் இன்ஷூரன்ஸ் ஏஜெண்டுகள்
கண்ணின் இமைகளா? இல்லை,
இம்சை அரசர்களா ?

வாங்க சார்! என்ன வேணும் ?

வாங்க சார்! என்ன வேணும் ?

ஃபிரிட்ஜ் வேணும்

என்ன ரேட்ல சார் வேணும் ?

12 ல இருந்து 15 ஆயிரத்தில்

இந்தா இருக்கு பாருங்க சார்

இதையே எடுத்துக்கிறேன்... ஆனா என்கிட்டே 1300 ரூபாய்தான் இருக்கு.

பரவாயில்ல சார்! இன்ஸ்டால் மெண்ட்ல கட்டலாம் சார். நீங்க என்ன வேலை பார்க்கிறிங்க?

இப்போதைக்கு வேலை இல்லை. வேலை தேடிகிட்டு இருக்கேன். ஆனா அடுத்த மாதம் ஃபுல்லா செட்டில் பண்ணிருவேன்.

என்ன சார் நீங்க! பணமும் இல்லை, வேலையும் இல்லை, உங்களை நம்பி எப்படி சார் கொடுக்கிறது.

சார் எங்க வீட்டில 6 பேர் இருக்கோம்.
நான் இருக்கிறது ஆர் கே நகர் தொகுதி.

என்னாது! ஆர் கே நகர் தொகுதியா! இதை வந்தவுடனே சொல்லக்கூடாதா சார்...  முதல்ல உக்காருங்க சார்!

ஃபிரிட்ஜ் மட்டும் போதுமா...  இல்லை
வேற ஏதாவது வேணுமா சார்

இப்போதைக்கு இது போதுங்க... அடுத்து பொது தேர்தல் வரும்போது...

ஓ கே சார்! 
டேய் தம்பி...  சாருக்கு கூல்ட்ரிங்ஸ் கொண்டு வா!
😎😜😜😎😎😜😜🤣🤣

கண்டுபிடிங்க... புதிர் கதை... கொலையாளி யார் | Who is the Killer?

#கண்டுபிடிங்க   புதிர் கதை

கொலையாளி யார் | Who is the Killer?

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.

1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.

                 யார் குற்றவாளி???

1. மனைவி
2. சமையல்காரன்
3. தோட்டக்காரன்
4. தபால்காரன்
5. வேலைக்காரன்
6. டிரைவர்

Tuesday 21 November 2017

#98 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 501 அறம்பொருள் இன்பம் | Dhinam Oru T...

#202 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...

*நகைச்சுவை நடிகர் நாகேஷ்*

அவர்களின்,

*தன்னம்பிக்கை மிக்க அருமையான வார்த்தைகள்...*

வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ்..

*வானொலி:*

நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும்?

*நாகேஷ்:*

நான் கவலையே படமாட்டேன் சார்.

ஒரு கட்டடம் கட்டும் போது,

சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி,

குறுக்குப் பலகைகள் போட்டு,

அதன் மேல பல சித்தாள்கள் நின்னு,

கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு,

அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு,

கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து,

*கிரஹப் பிரவேசத்தன்று*

கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ,

அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால்,

எங்கயோ மறைத்து வைத்துவிட்டு,

வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு *கிரஹகப் பிரவேசம்* நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.

இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?

அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும்.

ஆடுமாடுகள் மேயும்.

குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள்.

பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும்.

எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.

அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!!!

*நான் வாழை அல்ல...! சவுக்குமரம்....*

*Always think positive👍

Monday 20 November 2017

தோல்வி என்றால் என்ன? Tamil motivational video by Shankar

எந்த #கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம் ?

எந்த #கிழமையில் என்னென்ன சுபகாரியங்கள் செய்யலாம் ?

⭐ நல்ல நாளில் சுப காரியங்களை செய்தால் அவை தடையின்றியும், மங்களகரமாகவும் நடைபெறும். சுப காரியங்கள் செய்யும்போது நல்ல நட்சத்திரம், நல்ல லக்னம், நல்ல திதி போன்றவற்றை பார்ப்பது போலவே நல்ல நாளையும் பார்க்க வேண்டியது மிகமிக அவசியம்.

⭐ எந்தெந்த கிழமைகளில் என்னென்ன சுப காரியங்களை செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

#ஞாயிறு

⭐ மங்களகரமான காரியங்கள்

⭐ புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லலாம்

⭐ உழவுத்தொழிலை ஆரம்பிக்கலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ புதிய ஆபரணங்கள் அணிந்து கொள்ளலாம்

⭐ தங்கம் வாங்கலாம்

#திங்கள்

⭐ திருமணம் செய்யலாம்

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ தெற்கு திசை பிரயாணம் மேற்கொள்ளலாம்

⭐ புதிதாக கடை வைக்கலாம்

⭐ சங்கீதம் கற்று கொள்ளலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

#செவ்வாய்

⭐ மரங்கள் வெட்டலாம்

⭐ விதை விதைக்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ கிழக்கு திசை பிரயாணம் செய்யலாம்

⭐ ஆராய்ச்சி செய்யலாம்

⭐ பூமியிலிருந்து உலோகங்கள் எடுக்கலாம்.

#புதன்

⭐ மாங்கல்யம் செய்யலாம்

⭐ திருமணம் செய்யலாம்

⭐ ஹோம சாந்தி செய்யலாம்

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ முக்கிய விஷயங்கள் குறித்து விவாதம் செய்யலாம்

⭐ விதை விதைக்கலாம்

#வியாழன்

⭐ குலதெய்வங்களுக்கு பூஜை செய்யலாம்

⭐ கோவில்களில் அபிஷேகம் செய்யலாம்

⭐ ஹோமங்கள் செய்யலாம்

⭐ விரதம் இருக்கலாம்

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ கிணறு வெட்டலாம்

#வெள்ளி

⭐ சுபகாரியங்கள் செய்யலாம்

⭐ புதிய வாகனம் வாங்கலாம்

⭐ வீடு கட்டும் வேலையை தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ உழவுத்தொழிலை தொடங்கலாம்

⭐ மங்களகரமான காரியங்களை செய்யலாம்

#சனி

⭐ கல்வி கற்றுக்கொள்ள தொடங்கலாம்

⭐ தர்ம காரியங்கள் செய்யலாம்

⭐ நவரத்தினங்கள் விற்பனை செய்யலாம்

⭐ எள், பருத்தி ஆகியவற்றை விதைக்கலாம்

⭐ புதிய இயந்திரங்களை இயக்கலாம்...

வாழ்க வளமுடன்.

Sunday 19 November 2017

#96 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1001 வைத்தான்வாய் சான்ற | Dhinam Oru...

#200 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

ஆம் எனில் நம்பர் 1 ஐ அழுத்தவும் என்பார்கள். அழுத்தியவுடன். ஆதார் எண்ணை அழுத்தவும் என்று சொல்வார்கள்.

ஆதார் எண் உங்களுக்கு இருக்கிறதா என்று கேட்டு உங்கள் மொபைல் போனில் கேட்பார்கள். ஆம் எனில் நம்பர் 1 ஐ அழுத்தவும் என்பார்கள். அழுத்தியவுடன். ஆதார் எண்ணை அழுத்தவும் என்று சொல்வார்கள். பிறகு  ஒரு OTP (ONE TIME PASS-WORD) உங்கள் மொபைலுக்கு வரும். அந்த எண் என்ன என்று கேட்பார்கள். நீங்கள் அந்த நம்பரை சொல்லிய உடனே உங்கள் பேங்க் அக்கவுண்டில் உள்ள பணம் முழுதும் வழித்து எடுக்கப் பட்டுவிடும். ஏனெனில் உங்கள் ஆதார் எண் வங்கியில் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்பட்ட பட்டுள்ளது. உஷாரையா உஷாரு!!!!. ஆதார் எண்ணை போனில் யாருக்கும் சொல்லாதீங்க

பொது நலனுக்காக
*👮🏻சென்னை காவல்துறை 🚓*

Saturday 18 November 2017

#95 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 201 தீவினையார் அஞ்சார் | Dhinam Oru ...

#199 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Don't watch SUN TV...!

*Don't watch SUN TV*

அன்பு நண்பர்களே ஒரு இனிய வேண்டுகோள்.....
முக்கிய அறிவிப்பு படியுங்கள்....

தயவு செய்து இனிமேல் யாரும் "சன்டிவி"பார்க்க வேண்டாம்....

புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி அவர்கள் உங்கள் வீட்டை கண் காணிக்கிறார்கள்...!!

அவர்கள் எங்க Camera வைத்து நம்மை பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை...!! முதல்ல இத நான் நம்பல...என் வீட்ல சன்டிவி பாத்த அனுபவத்துல இதை சொல்றேன்

ஜாக்கிரதை...இதை நான் எப்படி கண்டு புடிச்சேன்னு தெரியுமா...!!??


நான் சன்டிவி பார்க்கும் போது அவன்  சரியா சொன்னான்!?
நீங்கள் பார்த்து கொண்டிருப்பது *சன்டிவி* ன்னு...!!!?

அவனுக்கு எப்படி தெரியுது நான் அதைத்தான் பார்க்கிறேன் என்று.?!
அப்போ எங்கேயோ Camera வச்சி பார்க்கிறான்...தானே








😡😡👊👊கோவப்படதீங்க, எனக்கும் இப்படிதான் இருந்துச்சி😂😂😜..

இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம்?

*"A Government Accident Insurance scheme"*

An amount of Rs. 12.00 has been Debited to ur account XXXX1017 on 27-05-2017 16:38:19 . Available Clear Bal is Rs. 55276.45.

*பிரதம மந்திரி  காப்பீட்டு திட்டம்*

உண்மையிலேயே நல்ல  திட்டம்
ஆனால் இங்கு  நம்மில் எத்தனை பேருக்கு  தெரியும் ?எத்தனை வங்கி  அதிகாரிகளுக்கு  தெரியும் ?

*மிகவும்  வருத்தப்பட வேண்டிய விஷயம*்

சென்றவாரம்  என் வங்கிக்கு  சென்று  இருந்தேன்

அப்போது ஒரு  ஏழைப் பெண்மணி தன் மகனுடன் வந்து இருந்தார்

தன் கணவர் விபத்தில்இறந்து விட்டதாகவும்  அவர் கணக்கில்  இருக்கும்  5000 ரூபாயை எடுக்க அதற்கான சான்றிதழ்களுடன்  வந்து இருந்தார்

வங்கி மேனேஜர்  எல்லாவற்றையும்  பார்த்து  விட்டு பணம் கொடுக்க அனுமதித்தார்

அந்த மேனேஜர்  என் நண்பர் தான்

அந்தப் பெண்  அங்கிருந்து  பணம் பெறப் போகும் போது அந்த  மேனேஜர் மீண்டும் பாஸ்புக்கை  வாங்கி பார்த்து  விட்டு  உன் கணவர் 7000 கடன் வாங்கி  இருக்கிறார்  எனவே நீ தான்  2000 கட்ட வேண்டும்  என சொல்ல   அந்த பெண்  அழுது விட்டார்.

*உடனே நான்  அந்த பாஸ் புக்கை  வாங்கி பார்த்தேன் அதில் கடன் இருப்பது தெரிந்தது

அதை தவிர மேலும்  ஒன்றும் தெரிந்தது

*அந்த கணக்கில்  இந்த காப்பீட்டு திட்டத்திற்காக 12 ரூபாய் டெபிட் (Debit) செய்யப்பட்டு இருந்தது*

இதை நீங்கள்  பார்க்கவில்லையா?
*இந்த பெண்ணிற்கு 2 லட்சம்  வருமே என்று  சொன்னதும் மனிதர்  பதறிவிட்டார்!*

சார் அந்த  பெண்ணின்  கணவரிடம்  அந்த காப்பீட்டு  திட்டபடிவங்களில் கையெழுத்து  வாங்கினீர்களா  இல்லை என்றால்  எப்படி இந்த பணம்  அவர் Nominee க்கு கிடைக்கும்  என்றவுடன் அவர் தலையில்  கை வைத்து கொண்டார்

பிறகு  அந்த பெண்ணை அழைத்து  7000  வாங்கிக்  கொள்ள அனுமதித்தார்

*அந்த பெண்ணுக்கு  2  லட்சம்  கிடைக்குமா  என்பது தெரியவில்லை?*

*இது தான் இன்றைய நிலை!*

*எனக்கு  தெரிந்து பெரும்பாலான  வங்கிகள்  இதை செய்யவில்லை*
*பணத்தை மட்டும்  டெபிட்  செய்து கணக்கு காட்டிவிட்டார்கள்*
இதைப் பற்றி Indian  Bankers Association  க்கு   கடிதம்  எழுதி இருக்கிறேன்

ஒரு அரசு  அதன் நல்ல திட்டங்களை  கொண்டு வரத் தான் முடியும்.

*அதை செயல்படுத்த வேண்டிய வங்கிகள்  தூங்கினால்  என்ன செய்வது?*

இன்று  காலை Modi Parishad  என்ற அமைப்பு  இந்த காப்பீட்டு  திட்டத்தை பற்றி  பதிவிட்டிருந்தது

அதை படித்தவுடன்  இந்த நிகழ்வை நான் பதிவு செய்கிறேன்

இப்போது சொல்லுங்கள்  இது யார் குற்றம்?

நம் நாட்டில்  ஆந்திராவில்  இந்த திட்டத்தை பற்றிய பெரிய விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது.

*ஆசிரியர்கள்,* பல* *சமூக சேவகர்கள்* *அடங்கியுள்ள இந்த *குழும நண்பர்கள்* *தங்களுக்கு* *தெரிந்த*  *பல தன்னார்வ* *தொண்டு* *நிறுவனங்கள் மூலம் இதை மக்களிடம் கொண்டு  செல்லலாமே..*

*இது கதையல்ல*.வாட்ஸ் *அப்பில் நண்பர் அனுப்பியது!மக்களுக்கு* *விழிப்புணர்வு* *ஊட்டும் செயல்.* அதனால்தான் பகிர்கிறேன்.)

*நீங்களும் பகிரலாமே!!!*

சூடு சுரனை இருந்தால் இதை மற்ற குரூப்புக்கு பகிரவும்.....

ஏரியை அழித்து

கல்லூரி கட்டியாச்சு

குளத்தை அழிச்சு

கம்பெனி கட்டியாச்சு

வயக்காட்டை அழிச்சு

வீடு கட்டியாச்சு

தவறு எல்லாம்

மக்களாகிய நம்மீது தானே தவிர

அடுத்தவன் மீது இல்லை

துட்டுக்கு ஓட்டு போட்டது யாரு

இலவசத்துக்கு பல்லகாட்டுனது யாரு

நீர்வளத்தை

மணல்வளத்தை

காடுகளை

அழித்தபோது வேடிக்கை

பார்த்தது யாரு

உன்னால் இன்று

நெஞ்சை நிமிர்த்தி

நம்ம அரசியல்வாதியிடம்

நம்ம பிரச்சனையை

சொல்ல முடியுமா...??
கேட்க முடியுமா....??

முல்லையில் தண்ணீர் கேட்டால்
கேராளக்காரன் அடிக்கிறான்

காவேரியில் தண்ணீர் கேட்டால்
கர்நாடக்காரன் அடிக்கிறான்

செம்மரம் வெட்டுறானு
ஆந்திராக்காரன் அடிக்கிறான்

தீவிரவாதி இனம்னு
இலங்கைக்காரன் அடிக்கிறான்

தமிழனை எங்கு அடித்தாலும்
தமிழ்நாட்டுகாரன்
வேடிக்கை மட்டும் தான்
பார்க்கிறான்.....!!!!

முல்லையில் வந்த தண்ணீரை
நாம் சேமிக்கவில்லை

காவேரியில் வந்த தண்ணீரை
சேமிக்கவில்லை

காமராஜர் ஆட்சிக்கு பிறகு
அணையேதும் கட்டவில்லை

குளமேதும் வெட்டவில்லை

கோலா காரனுக்கு
போதுமான தண்ணீர்
கிடைக்குது

குடிகாரனுக்கு போதுமான
தண்ணீர் கிடைக்குது

ஆனால்

விவசாயத்திற்கு மட்டும்
தண்ணீர் கிடைக்கவில்லை

தமிழக அரசே..

தமிழக தன்மான மக்களே

முதலில் தமிழகத்தில்
அணைகட்ட சொல்லுங்க

நதியை இணைக்க
சொல்லுங்க

இதை செய்யுரவனுக்கு
ஓட்டுப்போடுங்க

மிக்சி.கிரைண்டர்.டி.வி.
எல்லாம் நம்மலே
வாங்கலாம் ஆனா
அணை கட்ட முடியுமா  ....??

 வீரத்தையும் , விருந்ததோம்பலையும் உலகிற்கு கற்று கொடுத்த இனம் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறது

 இன்று

மாறுங்கள்  மண்னின் மைந்தர்களே ..

தன்மான தமிழர்களே
வீர விளைந்த மக்களே!!

சூடும்,சொரைனையும்
நிறைக்கொண்டு வாழும் இனமே..

மாறுங்கள் இல்லை என்றால் தமிழ் இனம் இவ்வுலகில் இல்லாமல் போய்விடும்  .

         வேதனையுடன்
          உங்களில்ஒருவன்...  தமிழன்💪💪💪

சூடு சுரனை இருந்தால் இதை மற்ற குரூப்புக்கு
பகிரவும்.....

       இல்லையெனில்





😠தூக்கு போட்டு சாகவும்😠

#94 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 401 அரங்கின்றி வட்டாடி | Dhinam Oru ...

#198 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

Friday 17 November 2017

செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
.
🌼மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.

பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .

குரங்குக்குக் கொஞ்சம் பயம்
 வந்து விட்டது.

கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.

🌼ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை.

🌼"ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.

குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது

" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன .
*
🌼தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,

எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , 

மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.

"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
 மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".

குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.

 கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
*
🌼அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார்.

குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
*
🌼சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.

அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார்.

🌼குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.

அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.

அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா .
*
🌼குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.

*
🌼நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.

🌼கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
🌼மகிழ்ச்சியாய் இருங்கள், , ,

 🌼ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்

🌼பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்

🌼கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்

🌼துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்

🌼பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்

🌼எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்

🌼அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.

🌼ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.

🌼பசிக்கும் போது உணவருந்துங்கள்.

பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.

எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.   

என்றும் என்றென்றும் நட்புடன்...

Thursday 16 November 2017

#93 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 601 குடியென்னும் குன்றா | Dhinam Oru...

#197 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Ayndhu Ponmozhigal

4 கேள்விகள் உங்களுக்கு... ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க...

4 கேள்விகள் உங்களுக்கு...
ரொம்ப யோசிக்காம உடனே பதில் சொல்லுங்க..
☺😊...நீங்க 😀😀மட்டுமே😁😁 அறிவாளி
...
...
...
கேள்வி :1
நீங்கள் ஒரு பைக் ரேசில் இருக்கீங்க..
ரொம்ப கஷ்டப்பட்டு 2nd positional இருக்கிறவரை முந்துறீங்க...
இப்போ உங்க position என்ன?
...
...
...
....
Position 1ன்னு சொன்னீங்கன்னா..
நீங்க தப்புங்க..
2வது ஆள முந்தினா நாம 2 வது position க்குத்தான் வருவோம்...
...

....
...
ஓகே..
தெளிவாய்ட்டீங்களா.
...
...
...
இப்போ அதே ரேசுல நீங்க கடைசியா வருகிறவரை முந்துறீங்கன்னு வச்சுக்கலாம் ..
இப்போ உங்க position என்ன..
டக்குன்னு சொல்லுங்க..
...
...
...
...
....
கடைசில இருந்து 2வது இடம்னு சொன்னா...
நீங்க சரியா யோசிக்கலைன்னு அர்த்தம்..
கடைசியா வருபவரை எப்புடீங்க ஓவர்டேக் பண்ணுவீங்க..
....
...
...
...
....
இப்போ 3வது கேள்வி...
...
...
...
ஒரு கணக்கு.. கால்குலேட்டர் உபயோகிக்காம வாசிச்ச உடனே ans. சொல்லணும்...
...
...
...
ஒரு 1000 எடுங்க அதோட 40 கூட்டுங்க
மீண்டும் ஒரு 1000 அதோட 30 கூட்டுங்க
இன்னொரு 1000 அதோட 20 கூட்டுங்க
மற்றுமொரு 1000 அதோட 10 கூட்டுங்க..
...
...
...
...
விடை?
5000 அப்படீன்னு சொன்னவங்க கால்குலேட்டரை யூஸ் பண்ணுங்க..
...
...
...
...
...
...
விடை 4100 சரிபார்த்துகீங்க..
...
...
....
.....
......
4 வது கேள்வி..
மேரியோட அப்பாவுக்கு 5 பெண்குழந்தைகள்..
முதல்பெண் Tanu
இரண்டாவது Tenu
மூன்றாவது Tinu
நான்காவது Tonu
அப்போது 5வது குழந்தை பெயர் என்ன?
...
...
...
....
....
....
Tunu அப்படீன்னு சொன்னவங்க கேள்விய திரும்ப வாசிங்க...
...
...
...
...
போனஸ் கேள்வி..
வாய் பேச முடியாதவருக்கு
டூத் பிரஷ் தேவைப்பபட்டது..
கடைக்கு போய்...
" ஈ " என காண்பித்து அது மேல விரலை வைத்து தேய்த்தார்..
கடைக்கார் புரிந்துகொண்டு பிரஷ் எடுத்துக் கொடுத்தார்..
...
...
இப்போ..
கண் தெரியாதவருக்கு ஒரு கூலிங்கிளாஸ் வேணும்..
என்ன செய்யலாம்..
...
...
...
....
கண்ண சிமிட்டுனவங்க
கண்ண தேய்ச்சவங்கல்லாம் அவுட்டு..
...
...
...
...
கண் தெரியாதவர் கூலிங்கிளாஸ் வேணும்ணு வாயாலே கேட்கலாம்...
...
....
...
அம்புட்டு கேள்விக்கும் கரீக்டா பதில் சொன்னவங்களுக்கு வாழ்த்துகள்...💐
....
மத்தவங்க ரொம்ப டென்சனாகீறீங்க...💤💤😭😰
நிதானமா இருங்க..
🙂🙂 பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்...😜😜

குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள். நிறைய பணத்தை அள்ளுங்கள்.

பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு,
கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’
என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன்.

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.

1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

சதுரங்க வேட்டை 3ஆம் பாகம்.

தமிழ் தெரிந்து கொள்வோம்... வாழ்க தமிழ்...

தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு.
அவற்றைத் தெரிந்து கொள்வோம், இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ __எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்
சோ -----> மதில்
தா -----> கொடு, கேட்பது
தீ -----> நெருப்பு
து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
தூ -----> வெண்மை, தூய்மை
தே -----> நாயகன், தெய்வம்
தை -----> மாதம்
நா -----> நாக்கு
நீ -----> நின்னை
நே -----> அன்பு, நேயம்
நை -----> வருந்து, நைதல்
நொ -----> நொண்டி, துன்பம்
நோ -----> நோவு, வருத்தம்
நௌ -----> மரக்கலம்
பா -----> பாட்டு, நிழல், அழகு
பூ -----> மலர்
பே -----> மேகம், நுரை, அழகு
பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
போ -----> செல்
மா -----> மாமரம், பெரிய, விலங்கு
மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
மு -----> மூப்பு
மூ -----> மூன்று
மே -----> மேன்மை, மேல்
மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
மோ -----> முகர்தல், மோதல்
யா -----> அகலம், மரம்
வா -----> அழைத்தல்
வீ -----> பறவை, பூ, அழகு
வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
வௌ -----> கௌவுதல், கொள்ளை அடித்த
இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் தருகின்றன . அவற்றைத் தெரிந்து கொள்வோம் பிறர்க்கும் தெரியப்படுத்துங்கள்..
வாழ்க தமிழ்..

அனைவர்க்கும் பகிருங்கள்....

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...

ஒரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.

எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்.. ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த 🐕🐕🐕🐕🐕 நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.

"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.! பரவாயில்லை... தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.

முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.

அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"

அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது.

வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன்,
இந்த முறை மந்திரியை முதலைகள் 🐊🐊🐊🐊🐊 இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

.

நீதி:

நிர்வாகம் உன்னைத் தூக்கணும்னு முடிவு பண்ணா...
அதுல  மாற்றமே இருக்காது

😂😂😆😂😂

நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்...

1. செல்லாத காசிலும் செப்பு உண்டு!!!!

2. ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

 வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை.
 பக்கத்தில் கடைகளும் ஏதும் இல்லை.

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார்.

 அனைத்து போல்ட்டுகளையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது,

 கால் தடுக்கிக் கீழே விழ ,

கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய்
சாக்கடையில் விழுந்தன.

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன்

 ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான்.
அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்.

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த சாக்கடையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம்,

 " இந்தக் சாக்கடையில் விழுந்த போல்ட்டுகளை எடுத்து
கொடுக்க முடியுமா......??

 எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்.....!!

அதற்கு வழிப்போக்கன்

"இதுதான் உங்கள் பிரச்னையா......?

 அந்தக் சாக்கடையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது........!!

மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி

 இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார்
செய்து கொள்ளுங்கள்.......!!!

வண்டியை ஓட்டிச் சென்று,

 அருகில் உள்ள மெக்கானிக் கடையில்,

 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது.......!!!

 நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும்,

 இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே.........!!!

இவரைப்போய் ,

குறைத்து மதிப்பிட்டு விட்டோமே ........
என்று
தலை குனிந்தார் விஞ்ஞானி......!

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு.........!!!!!!!

உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு.........!!!!!

நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம்.........!!!

யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்........!!!!

Wednesday 15 November 2017

#92 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 301 செல்லிடத்துக் காப்பான் | Dhinam ...

#196 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

இப்படிதாங்க நம்ம தமிழ் நாட்டு அரசாங்கம் நடக்குது.. படித்தவுடன் வாய்விட்டு சிரித்தது.

ஒரு குட்டிக் கதை...!

புத்திசாலி!!!
மனைவியா??? புருஷனா?😳🤔

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் மனைவி அவரிடம் வந்து ....

" என்னங்க...நானும் எல்லார்கிட்டையும் நாலு வருஷத்துக்கு மேலா நான் எம்.எல்.ஏ பொண்டாட்டி, நான் எம்.எல்.ஏ பொண்டாட்டின்னு சொல்லிகிட்டு இருக்கேன்..

எப்பதான் நான் மந்திரி பொண்டாட்டின்னு சொல்ரது..? உடனே சி எம் ஐப் பார்த்து, அதான் நம்ம தலைவரைப் பார்த்து, மந்திரியாகிற  வேலையைப் பாருங்க..

"அதுவும் நீங்க போலீஸ் மந்திரியாதான் ஆகணும்" என்றாள் மனைவி..

"அதென்ன வேற துறை மந்திரியா ஆகக் கூடாதா ? கேட்டார் எம்.எல்.ஏ...

முடியாது...நீங்க போலீஸ் மந்திரியாகத்தான் ஆகனும், ஏன்னா என் பிரண்ட்ஸ் பல பேர் இன்ஸ்பெக்டர் மனைவி, எஸ்.பி மனைவி, கலெக்டர் மனைவின்னு பெருமை பட்டுக்கொள்கிறார்கள்.

நான் போலீஸ் மந்திரியின் மனைவின்னு ஆயிட்டா...அதான் எனக்கு கெத்து...

சரி...சரி... கிளம்புங்க உடனே ! தலைவரைப் பார்த்து போலீஸ் மந்திரி ஆகுற வேலையைப் பாருங்க... என விரட்ட, சட்ட மன்ற உறுப்பினர் முதல்வரைச் சந்திக்க முதல்வரின் வீட்டிற்கு வருகிறார்...

முதல்வர் தன் வீட்டில் பொதுச்செயலாளர் மற்றும் நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டு இருக்கையில் எம்.எல்.ஏ வந்துள்ள செய்தியை சொல்கிறார் உதவியாளர்.

"ஜாதி ஓட்டிற்காக உங்க எல்லாரோட பேச்சைக் கேட்டு இவனை எம்.எல்.ஏ ஆகிட்டு நான் அனுபவிக்கும் கொடுமை கொஞ்சமா நஞ்சமா... சரி அவனை உள்ளே வரச்சொல்" என்றார் முதல்வர் வேதனையுடன்.

"வணக்கம் தலைவரே! நான் வந்த நேரம் எல்லாருமே இருக்காங்க.."

" என்ன விஷயம் ? "
கேட்டார் முதல்வர்..

" தலைவரே ! நேரா விஷயத்துக்கு வரேன். என்ன பண்ணுவிங்களோ, ஏது பண்ணுவிங்களோ, எனக்குத் தெரியாது, என்னை உடனடியா போலீஸ் மந்திரியா ஆக்கிடுங்க" என்றார்...

கோபம் கொண்ட முகத்துடன் பொதுச் செயலாளரைப் பார்த்து முறைத்தார் முதல்வர்.

உடனே பொதுச் செயலாளர், எம்.எல்.ஏ விடம் அவருடைய பொது அறிவுத்திறன் பற்றி அவருக்கு உணர்த்த ஒரு கேள்வி கேட்டார்.

"ஆபிரகாம் லிங்கனை சுட்டுக் கொன்றவன் யார்?" எனக் கேட்டார்.

பொதுச் செயலாளர் அருகில் வந்து " அடுத்த வாரம் இதே நாளில் வந்து சொல்கிறேன்." என்று சொல்லி முதல்வருக்கு வணக்கம் சொல்லி கிளம்பினார் எம்.எல்.ஏ.

இதைக் கண்ட முதல்வர், அவன் கோபமா போயிட்டான் போல என்று சொன்னார்.

வீட்டிற்கு வந்த எம்.எல்.ஏ மனைவியிடம், என்ன சாப்பாடு என்று கேட்டார்.

" முதல்ல போன விஷயத்தச் சொல்லுங்க" என்றாள்.

"ஏறக்குறைய முடிவு ஆன மாதிரிதான். அடுத்த வாரம் அறிவிப்பு வரும்."

"எப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க? எனக் கேட்டாள் மனைவி.

" இல்லன்னா எடுத்த உடனேயே ஒரு கொலை கேசை எங்கிட்ட ஒப்படைப்பாங்களா ?

யாரோ ஆப்ரகாம் லிங்கனாம், எவனோ போட்டுத் தள்ளிட்டு இருக்கான், பெரிய இடம் போல, அதான் நியூஸ் இன்னும் வெளியில் வரலே. நான் ஒரு வாரம் டைம் கேட்டுகிட்டு வந்திருக்கேன்.

அந்த ஆப்ரகாம் லிங்கனை கொலை செய்தவனை கண்டுபிடுச்சி அவங்க முன்னாடி ஒப்படைத்து, நான் போலீஸ் மந்திரின்னு எல்லோருக்கும் காட்டுறேன்" என்று சொல்ல,

"உண்மையான குற்றவாளியைக் கண்டு பிடிக்க முடியலேன்னா யாரையாவது சும்மாவாவது ஒத்துக்க வச்சிருங்க, அதுக்கு எவ்வளவு செலவு ஆனாலும் பரவால்லை!!" என்றாள் மனைவி.

இப்படிதாங்க நம்ம தமிழ் நாட்டு அரசாங்கம் நடக்குது..

படித்தவுடன் வாய்விட்டு சிரித்தது.

Tuesday 14 November 2017

#91 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1201 உள்ளினும் தீராப் | Dhinam Oru T...

#195 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

தினமும் செய்ய வேண்டியவை..!!

தினமும் செய்ய வேண்டியவை..!!

1)சோகத்தை ~ Delete செய்யுங்க.

2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க.

3)சொந்தங்களை~ recharge செய்யுங்க.

4)நட்புகளை ~Down load செய்யுங்க.

5)எதிரிகளை ~Erase செய்யுங்க.

6) உண்மையை ~Broad cast செய்யுங்க.

7)துக்கத்தை ~switch off செய்யுங்க.

8)வேதனையை ~Not reachable செய்யுங்க.

9)பாசத்தை ~Incoming செய்யுங்க.

10)வெறுப்பை ~outgoing செய்யுங்க.

11) சிரிப்பை ~Inbox செய்யுங்க.

12)அழுகையை ~outbox செய்யுங்க.

13)கோபத்தை ~Hold செய்யுங்க.

14)இன்முகத்தை ~send செய்யுங்க.

15)உதவியை ~ok செய்யுங்க.

16)இதயத்தை ~vibrate செய்யுங்க.
பிறகு பாருங்க..
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்!!
Good evening

விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து...

*ஒரு குரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக,மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.*
*விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண்,*
*எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.*
*இப்போது குருவின் முறை வந்தது. அவரிடமும் பணிப்பெண் ஒரு மதுக் கோப்பயை நீட்டினார்.*
*அவர் வாங்க மறுத்து விட்டார்.*
*பணிப் பெண்,"ஐயா ,எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது.ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார்.*
*மதகுரு,"அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் " என்றார்.*
*பணிப்பெண் விடவில்லை.*
*உலகிலேயே விலை உயர்ந்த மது வகை இது.*
*கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் " என்றார்.*
*அப்போதும் மதகுரு ஏற்றுக்கொள்ளவில்லை.பணிப் பெண் கடைசியாகச் சொன்னார்*
*''"இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன்.*
*குரு சொன்னார்,*
*" அம்மா , நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன்.*
*நீங்கள் ஒன்று செய்யுங்கள்.*
*இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்".*
*அவர் அப்படிச்சொன்னதும் பணிப்பெண் ஆடிப்போனார்.*
*"ஐயோ,*
*பணியில் இருக்கிற விமானி எப்படி*
*மது அருந்த முடியும்...?*
*இதை,*
*அவர் குடித்தால் அவர் புத்தி*
*தடுமாறிவிமானம் விபத்துக்கு உள்ளாகுமே.*
*இத்தனை உயிர்கள் பறிபோகுமே "*
*என்று பதறினார்.*
*குரு சொன்னார்,*
*"''சகோதரி,*
*வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான்.*
*தகாத_காரியங்களை_செய்தால்*
*புத்தி_தடுமாறி_விபத்து_நேரிடும்.*
*'வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்.*
#நல்ல_குணங்களுடன்_இறைபக்தியுடன்_வாழ்கிற_வாழ்வே_தரமான_வாழ்வு.
*படித்ததில்ரசித்தது*

நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன்...

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் வந்து...

மனிதன் 1 : இறைவன் எல்லாரையும் வசதியாக எல்லாம் செல்வங்களோடு வைத்திருக்கிறான். ஆனால் நான் மட்டும் பிறந்ததில் இருந்து இன்று வரை ஏழையாக இருக்கிறேன். இதுவரை எதுவும் எனக்கு தந்ததில்லை" என்று சலித்துக் கொண்டான்.

மனிதன் 2 : நான் உனக்கு 1 லட்சம் தருகிறேன் , உன்னுடைய ஒரு கையை வெட்டி எனக்கு தந்து விடு".

மனிதன் 1 : இல்லை முடியாது .

மனிதன் 2 : 10 லட்சம் தருகிறேன். உன்னுடைய ஒரு காலை வெட்டி எனக்கு தந்து விடு.

மனிதன் 1 : இல்லை முடியாது .

மனிதன் 2 : நீ எவ்வளவு பணம் கேட்கின்றாயோ அதற்கு மேலும் தருகிறேன் உனது இரு கண்களையும் எனக்கு தந்துவிடு .

மனிதன் 1 : நீங்கள் இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வங்களை கொடுத்தாலும் என் கண்களை குடுக்க முடியவே முடியாது .

மனிதன் 2 : இறைவன் உனக்கு எவ்வளவு விலை உயர்ந்த செல்வங்களை தந்திருக்கிறான் , ஆனால் அதற்கு நன்றி செலுத்தாமல் , இதுவரை எனக்கு எதுவும் தந்ததில்லை என்று சலிக்கின்றாயே?

  எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.

அவன் தான் இறைவன்

பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.

 கடலில் உள்ள திமிங்கலத்திற்கு ஒரு நாளைக்கு 33 டன் அதாவது, 36,960 கிலோ மீன்களை உணவு வழங்குகிறார்.

உலகில் மனிதனாய் பிறந்திட்ட ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.

இறைவன் சிலரை
வறுமையால் சோதிக்கின்றார்,

இன்னும் சிலரை
நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,

இன்னும் சிலர்களை
கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.

ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்" .

நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.

*இறைவனுக்கு நன்றி செலுத்து.*
நீ உனது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றாய். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.
   
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*

     நீ உனது தொழிலை நோக்கி செல்கின்றாய். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல்  அலைகின்றனர்" .

*இறைவனுக்கு நன்றி செலுத்து.*

 நீ உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றாய்.
எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்" .

*இறைவனுக்கு நன்றி செலுத்து.*

நீ இன்னும் உயிருடன் இருக்கின்றாய். எத்தனையோ மரித்த ஆத்துமாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர் ".

*இறைவனுக்கு நன்றி செலுத்து.*

நீ உனது தேவைகளை முறையிட்டு வணங்குவதற்கு உனக்கொரு உயிருள்ள இறைவன் இருக்கின்றான். எத்தனையோ பேர் கல்லுக்கும் மண்ணுக்கும் சிரம் தாழ்த்திக் கொண்டிருக்கின்றனர்.
*இறைவனுக்கு நன்றி செலுத்து.*

நீ நீயாக இருக்கின்றாய். எத்தனையோ பேர் அவர்கள் உன்னைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்" .

இறைவனுக்கு நன்றி செலுத்து.

  எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வி .

     இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இரு.
படித்ததில் பிடித்தது

அப்பாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது...

அம்மா ராஜா கதை சொன்னாள்.

பிள்ளை சொன்னான் : அம்மா.  நான் பெரியவனானால், எனக்கும் மூணு பெண்டாட்டி வேணும்.

அம்மா : எதுக்குடா மூணு?

பிள்ளை : ஒருத்தி சமைப்பா. ஒருத்தி பாட்டு பாடுவா. ஒருத்தி எனக்கு துணி துவைப்பா.

அம்மா :  நாலாவது ஒரு பெண்டாட்டி வச்சுக்கோயேன் ராத்திரி தூங்குறதுக்கு…?

பிள்ளை : வேண்டாம்மா..  நான் உன் கூடதான் தூங்குவேன்.

(அம்மாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது.)

அம்மா : அப்போ அந்த மூணு பெண்டாட்டிகளும் யார்கூட தூங்குவாங்க?

பிள்ளை : அப்பாகூட தூங்கட்டும்.

(அப்பாவுக்கு ஆனந்தம். கண்களில் நீர் பனிக்கிறது)
😁😀😃😄😆

மன முதிர்ச்சி என்றால் என்ன?

*மன முதிர்ச்சி என்றால் என்ன?*

 *What is Maturity of Mind?*

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு
    நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்)
    ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம்
    நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும்
என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind
      without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய
    விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs
      and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல
     என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected
      with material things.

*இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்*
*Our life will be simple if only we practice 7 or 8 of the above 12*

"Experienced means not in years count, how u realise urself & intake the meaningful things from others."

Monday 13 November 2017

#90 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 2 கற்றதனால் ஆய | Dhinam Oru Thirukur...

#194 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய் பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை..

கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாள்.....,   பொண்ணுக்கு அலங்காரம் பண்ணிய பியூட்டி பார்லர் அக்காவை தேடி போய்  பரிசு கொடுத்தார் மாப்பிள்ளை..  Apple iphone 7 box அவர் கைல.

பார்லர் அக்காவுக்கு ஒரே சந்தோசம். சிரிச்சிக்கிட்டே டப்பாவ பிரிச்சா உள்ள nokia 1100.

அக்கா பேந்த பேந்த முழிக்க, மாப்பிள்ளை எரிச்சலோடு சொன்னார்....

"இப்படி தானே இருந்து இருக்கும் எனக்கும்"😠😡😡😡😡😡

😂😂😂😂😂😂😂
(Whatsappல் சிரித்து ரசித்தது)

படித்து பகிர வேண்டிய தகவல்...

*படித்து பகிர வேண்டிய தகவல்*

 *நோய்கள் உருவாகும் இடங்கள் !*
-------------------------------------------

*நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ, நீரோ, காற்றோ கிடையாது.*

*இதோ*

*1 - இரசாயன வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்*

*2 - டீ*

*3 - காபி*

*4 - வெள்ளை சர்க்கரை*

*5 - வெள்ளை சர்க்கரையில் செய்த இனிப்பு.*

*6 - பாக்கெட் பால்.*

*7 - பாக்கெட் தயிர்*

*8 - பாட்டில் நெய்*

*9 - சீமை மாட்டு பால்*

*10 - சீமை மாட்டு பால் பொருட்கள்.*

*11 - பொடி உப்பு*

*12 - ஐயோடின் உப்பு*

*13 - அனைத்து ரீபையின்டு ஆயில்*

*14 - பிராய்லர் கோழி*

*15 - பிராய்லர் கோழி முட்டை*

*16 - பட்டை தீட்டிய அரிசி*

*17 - குக்கர் சோறு*

*18 - பில்டர் தண்ணீர்*

*19 - கொதிக்க வைத்த தண்ணீர்*

*20 - மினரல் வாட்டர்*

*21 - RO தண்ணீர்*

*22 - சமையலுக்கு அலுமினிய பாத்திரங்கள்*

*23 - Non Stick பாத்திரங்கள்*

*24 - மைக்ரோ ஓவன் அடுப்பு*

*25 - மின் அடுப்பு*

*26 - சத்துபானம் என்னும் சாக்கடைகள்*

*27 - சோப்பு*

*28 - ஷாம்பு*

*29 - பற்பசை*

*30 - Foam படுக்கை மற்றும் இருக்கை*

*31 - குளிர்பானங்கள்*

*32 - ஜஸ் கீரீம்கள்*

*33 - அனைத்து மைதா பொருட்கள்*

*34 - பேக்கரி பொருட்கள்*

*35 - சாக்லேட்*

*36 - Branded மசாலா பொருட்கள்*

*37 - இரசாயன கொசு விரட்டி*

*38 - Ac*

*39 - காற்றோட்டம், வெளிச்சம் இல்லா வீடு.*

*40 - பிஸ்கட்டுகள்*

*41 - பன்னாட்டு சிப்ஸ்*

*42 - புகைப்பழக்கம்*

*43 - மதுப்பழக்கம்*

*44 - சுடு நீரில் குளிப்பது*

*45 - தலைக்கு டை*

*46 - துரித உணவுகள்*

*47 - குளிர்பெட்டியில் வைத்த அனைத்து உணவுப்பொருட்கள்*

*48 - சுவை ஏற்றப்பட்ட பாக்கு மற்றும் புகையிலை பொருட்கள்.*

*49 - ஆங்கில மருந்துகள்*

*50 - அலோபதி வைத்திய முறை மற்றும் தடுப்பூசிகள்*

*51 - உடல் உழைப்பு இல்லாமை*

*52 - பசிக்காமல் உண்பது*

*53 - அவசரமாக உண்பது*

*54 - மெல்லாமல் உண்பது*

*55 - இடையில் தண்ணீர் குடிப்பது*

*56 - எண்ணை நீக்கப்பட்ட மிளகு சீரகம் போன்ற நறுமண பொருட்கள்.*

*57 - 6 மணி நேரத்திற்கு மேல் ஆன மாமிசம்*

*58 - அறியாமை*

*59 - சுற்றுச்சூழல் மாசுபாடு*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மனம்*

*அரசு சொல்வது போல் நோய்கள் உருவாகும் இடம் சாக்கடையோ, கொசுவோ கிடையாது*

*மேலே குறிப்பிட்ட தவறான உணவு மற்றும் வாழ்க்கைமுறையில் தான் நோய்கள் உருவாகிறது.*

*உயிர் பிழைக்க ஒரே வழி*

*இயற்கைக்கு திரும்புவது மட்டுமே.*

*குணமாகும் இடங்கள் !*
---------------------------------------------

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது.*

*இதோ*

*1 - இயற்கை வழி வேளாண்மையில் விளைந்த உணவுப்பொருட்கள்.*

*2 - மூலிகை தேனீர்*

*3 - சுக்கு மல்லி காபி*

*4 - பனங்கருப்பட்டி*

*5 - பனங்கற்கண்டு*

*6 - வெல்லம்*

*7 - கரும்பு சர்க்கரை*

*8 - இதில் செய்த இனிப்புகள்*

*9 - நாட்டு பசும் பால்*

*10 - நாட்டு பசு தயிர்*

*11 - நாட்டு பசு நெய்*

*12 - நாட்டு பசும்பால் பொருட்கள்*

*13 - இந்துப்பு*

*14 - கல் உப்பு*

*15 - மரச்செக்கில் ஆட்டிய எண்ணெய்கள்*

*16 - நாட்டு கோழி*

*17 - நாட்டு கோழி முட்டை*

*18 - பட்டை தீட்டப்படாத அரிசி*

*19 - வடித்த சோறு*

*20 - மண் பானையில் ஊற்றி வைத்த நீர்*

*21 - பச்சை தண்ணீர்*

*22 - மூன்றடுக்கு சுத்திகரிப்பு மண் பானை நீர்*

*23 - மழை நீர்*

*24 - சமையலுக்கு மண் பாண்டங்கள்*

*25 - இரும்பு பாத்திரங்கள்*

*26 - விறகு அடுப்பு*

*27 - பயோ கேஸ் அடுப்பு*

*28 - சத்துமாவு கலவை*

*29 - குளியல் பொடி*

*30 - சிகைக்காய் பொடி*

*31 - இயற்கை பற்பொடி*

*32 - இலவம் பஞ்சு படுக்கை மற்றும் இருக்கை*

*33 - கோரைப்பாய்*

*34 - பழச்சாறுகள்*

*35 - நாட்டுபசும்பால் பழ ஐஸ்கிரீம்கள்*

*36 - சிறுதானியம், அரிசி தின்பண்டங்கள்*

*37 - கருப்பட்டியில் செய்த சாக்லேட்*

*38 - வீட்டில் அரைத்த மசாலா பொருட்கள்*

*39 - இயற்கை கொசு விரட்டி*

*40 - வீட்டில் மரம், செடி, கொடிகள்*

*41 - காற்றோட்டம், வெளிச்சம் உள்ள வீடு*

*42 - நம் நாட்டு சிப்ஸ்கள்*

*43 - பனங்கல், பதநீர், தென்னங்கல், இளநீர்*

*44 - குளிர்ந்த நீரில் குளிப்பது*

*45 - இயற்கை ஹேர் டை*

*46 - நம் நாட்டு சிற்றுண்டிகள்*

*47 - மண் பானை குளிரூட்டி*

*48 - பச்சை கொட்டை பாக்கு*

*49 - மரபு மருத்துவங்கள்*

*50 - உடல் உழைப்பு*

*51 - பசித்து உண்பது*

*52 - மெதுவாக சுவைத்து உண்பது*

*53 - மென்று உமிழ்நீர் கலந்து உண்பது*

*54 - ஆழ்ந்த நிம்மதியான உறக்கம்*

*55 - இடையில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது*

*56 - எண்ணெய் நீக்கப்படாத நறுமணப்பொருட்கள்*

*57 - உயிர்பிரிந்து 6 மணி நேரத்திற்குள் சமைத்து சாப்பிட்ட மாமிசம்*

*58 - புத்திகூர்மை*

*59 - சுற்றுச்சூழல் தூய்மை*

*60 - அனைத்திற்கும் மேலாக உங்கள் மன அமைதி*

*நோய்கள் குணமாகும் இடங்கள் மருந்தோ மருத்துவமனையோ கிடையாது*

*உங்களின் உணவுமுறைகளும்
வாழ்க்கை முறைகளுமே என்பதுதான் நிதர்சனமான உண்மை

 அம்மியில் அரைத்த சட்னி ருசி அதிகம்
   - மிக்ஸி வந்தது;

 ஆட்டு உரல் மாவு இட்லி ருசி அதிகம்
   - கிரைண்டர் வந்தது;

 உலையில் வைத்த சாதம் ருசி அதிகம்
   - குக்கர் வந்தது;

 விறகு அடுப்பு சமையல் ருசி அதிகம்
   - கேஸ் அடுப்பு வந்தது;

 வீட்டில் செய்த மசாலா ருசி அதிகம்
   - மசாலா பொடி வந்தது;

 பானையில் ஊற்றி வைத்த நீர் ருசி அதிகம்
   - பிரிட்ஜ் வந்தது;

 மண்ணில் விளையாட்டு மகிழ்ச்சி அதிகம்
   - வீடியோ கேம் வந்தது;

 பாட்டி சொன்ன கதையில் உயிர் இருந்தது
   - டி.வி. வந்தது;

     இயற்கையை நம்பியிருந்தால் இன்பமாய் வாழ்ந்திருப்போம்;

     இயந்திரங்களை நம்பியதால் இயந்திரமாகவே வாழ்கிறோம்..

               முடிந்தவரை இயற்கையை சார்ந்து வாழ்வோம்..

மொத்தத்தில் இயற்கை போய் செயற்கை வந்தது;

1. சர்க்கரை நோய் வந்தது

2.:இரத்தகொதிப்பு வந்தது

3. புற்றுநோய் வந்தது

4. மாரடைப்பு வந்தது

5. ஆஸ்த்துமா வந்தது

6. கொழுப்பு வந்தது

7. அல்சர் வந்தது

ஓட்டுக்கு 2000 ரூபாய்? வீட்டுக்கு வந்தது.                           

கெட்டவர்களின் ஆட்சி நாட்டுக்கு வந்தது .                                                         

இவ்வுளவு வந்தும் நமக்கு புத்தி வந்ததா???🙏🙏

Sunday 12 November 2017

​உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாதென அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று!​

😱😱
​உருவத்தை வைத்து யாரையும் எடை போடக்கூடாதென அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாள் இன்று!​

​"பெரிய" வெங்காயம் கிலோ 50 ரூபாய்!​

​"சின்ன" வெங்காயம் கிலோ 140 ரூபாய்!​
😲😲😌

Government SETUP BOX ...இது எனக்கு வந்த செய்தி...!!!

SETUP BOX...இது எனக்கு வந்த செய்தி...!!!

விரைவில் உங்கள் வீடு தேடி வர இருக்கும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறேன்.

அணைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் திட்டம் பல இடங்களில் கொடுக்க தொடங்கி விட்டார்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும்.

இந்நிலையில் இலவச செட்டப் பாக்ஸ் க்கு ஆப்ரேட்டர்கள் 500 ,600 ஏன் 1000 வரை கூட வசூலித்து வருகிறார்கள். எனவே  ஏமாறாமல் இருக்க கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் குறித்த சில முக்கிய தகவல்களை நான் பகிர விரும்புகிறேன்.

✴ முதலில் ..... 200 ரூ இன்ஸ்டாலேஷன் பீஸ் என்று கேட்பார்கள் . ஆம் அது உண்மை தான் அந்த 200 ரூ நாம் தர தான் வேண்டும்.

✴ ஆக்டிவேஷன் பீஸ் என்று 100 ரூ கேட்பார்கள் கேட்டால் அரசு வசூலிப்பதை தான் கேட்கிறோம் என்பார்கள்...சுத்த பொய் அரசு அப்படி
எந்த கட்டணமும் கேட்க வில்லை.

✴ மாதம் தோறும் ரீச்சார்ஜ் என்று gst அது இது எல்லாம் சேர்த்து 200 ,250 க்கு கிட்ட தட்ட கேட்பார்கள்.
இது ஓரளவு சரி தான் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ,அதில் 125 பேக்.. 175 பேக் என்று பல வகை உள்ளது. யாவற்றையும் நீங்கள் ஆப்ரேட்டர் வழியாக தான் கட்ட போகிறீர்கள் என்பதால் அவர்கள் உங்களுக்கு எந்த பேக் ஆக்டிவ்ட் செய்துள்ளார்கள் எவ்வளவு வாங்குகிறார்கள் என்று கவனிக்கவும் (125 ரூ க்கு கிட்ட தட்ட 200 சானல் வரும் )

✴ இதை தவிர வேறு எந்த கட்டணமும் இல்லை உங்கள் செட்டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசம் தான் .வேறு கட்டணம் கேட்டால் தைரியமாக காரணம் கேளுங்கள். குறிப்பாக கிராம புற மக்கள் போதிய தகவல் இல்லாமல் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக கேபிள் டிவி சார்ந்த புகார்களை அளிக்க வேண்டிய நம்பர் கொடுக்கிறேன்..குறித்து கொள்ளுங்கள்.
18004252911

✴அதே போல மேலும் தங்களுக்கு அரசு கேபிள் டிவி சார்ந்த பொது தகவல்களுக்கு கிண்டி யில் உள்ள தலைமை அலுவலக போன் நம்பர் ...
04428432911 குறித்து கொள்ளுங்கள்.
விழிப்புடன் செயல் படுங்கள்...

(சமீபத்தில் தான் வீட்டில் அம்மா 600 ரூபாய் கொடுத்து இருந்தார் . பிறகு நான் சம்பந்த பட்டவர்களிடம்  தெளிவாக விளக்கம் கேட்ட பின் பணத்தை திரும்பி தருவதாக ஒத்து கொண்டார்கள்.

இது பலருக்கும் உதவுமே என்று தான் இதை பகிர்ந்தேன் )

இந்த வீடியோ பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=3Q3SncD0lh4

#89 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 850 உலகத்தார் உண்டென்பது | Dhinam Or...

#193 | தினம் ஐந்து பொன்மொழிகள் | Dhinam Aynthu Ponmozhigal

உலகம் ஒரு நாள், உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! ! ​நீ . . .நீயாக இரு !​

​நீ . . .நீயாக இரு !​

தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .
ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்ய முடியாது . . .
அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .
​எனவே நீ . . .நீயாக இரு !​

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .
தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?
​நீ . . .நீயாக இரு !​

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .
ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !
​நீ . . .நீயாக இரு !​

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .
ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !
​நீ . . .நீயாக இரு !​

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .
ஆனாலும் வெயிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !
​நீ . . .நீயாக இரு !​

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .
ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !
​நீ . . .நீயாக இரு !​

நேற்று போல் இன்றில்லை . . .
இன்று போல் நாளையில்லை . . .
அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !
​எனவே நீ . . .நீயாக இரு !​

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !
அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !
அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !
அதில் பாவம் ஏதுமில்லை !
அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !
உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .
​நீ . . .நீயாக இரு !​

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !
​நீ . . .நீயாக இரு !​

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !
​நீ . . .நீயாக இரு !​

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !
​நீ . . .நீயாக இரு !​

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !
​நீ . . .நீயாக இரு !​

அடுத்தவனுக்காக மாறி உனக்காக உள்ளோரை இழக்காதே ! ! !
​நீ . . .நீயாக இரு !​
​நீ . . .நீநீயாகவே இரு !​

உங்களை நான்கூட "மச்சான்"னு சொன்னதில்ல.

👧மனைவி :- என்னங்க!
இதுவரை உங்களை
நான்கூட "மச்சான்"னு
சொன்னதில்ல.FACEBOOK லயும், WHATSAPP லயும் எவளோ
ஒருத்தி உ ங்களை மச்சான்னு
சொல்றாளாமே.
எவ அவ?😡
👨கணவன் :- அப்படிலாம் மரியாதை
இல்லாம பேசக்கூடாது. அவங்க
உனக்கு "தங்கச்சி" மாதிரி!😍
👧மனைவி:- மாதிரியும் இல்ல,
மாருதியும்😏 இல்ல. எந்த வகையிலும்
சொந்தம் இல்லாத ஒருத்தி உங்களை
''மச்சான்னு" சொல்றான்னா,
அவளுக்கும்,
உங்களுக்கும் என்ன
தொடர்பு?
எனக்கு இப்பவே உண்மை
தெரிஞ்சாகணும்.🤓🤓
👨கணவன்:- சரி...சரி.....
மகாத்மா காந்தியை
நீ என்னன்னு சொல்லுவ..?
👧மனைவி :- காந்தி தாத்தா.
👨கணவன்:- ஜவஹர்லால் நேருவை..?
👧மனைவி:- நேரு மாமா.
👨கணவன் :- கருணாநிதியை..?
👧மனைவி:- அய்யா
👨கணவன்:- ஜெயலலிதாவை..?
👧மனைவி:- அம்மா
👨 *கணவன் :-  இப்படி உனக்கு எந்த*
*சொந்தமும் இல்லாத* *இவங்களை, நீ*
*இவ்வளோ உறவு முறை*
*சொல்றியே,*
*எப்பவாச்சும் நான்*
*உன்மேல சந்தேகப்பட்டு*
*கேட்டிருக்கேனா?*
👧 *மனைவி:-??????*
😇😇😇
*கருத்து:*
*நல்லர்வர்கள்,*
*வல்லவர்கள்,*
*உத்தமர்களாகிய ஆண்களை, பெண்கள் சந்தேகப் படக்கூடாது....*                                - .🤣🤷🏽‍♂🤷🏽‍♂

Saturday 11 November 2017

மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...

1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊

👉 நேரம்
👉 இறப்பு
👉 வாடிக்கையளர்கள்

2. மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளையும் விரோதியாக்கும்.

👉 நகை
👉 பணம்
👉 சொத்து

3. மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது.

👉 புத்தி
👉 கல்வி
👉 நற்பண்புகள்

4. மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்.

👉 உண்மை
👉 கடமை
👉 இறப்பு

5. மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.

👉 வில்லிலிருந்து அம்பு
👉 வாயிலிருந்து சொல்
👉 உடலிலிருந்து உயிர்

6. மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்.

👉 தாய்
👉 தந்தை
👉 இளமை

7. இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு.

👉 தாய்
👉 தந்தை
👉 குரு

நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் :

1) ஏழ்மையிலும் நேர்மை
2) கோபத்திலும் பொறுமை
3) தோல்வியிலும் விடாமுயற்சி
4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5) துன்பத்திலும் துணிவு
6) செல்வத்திலும் எளிமை
7) பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு விஷயங்கள் :

1) சிந்தித்து பேசவேண்டும்
2) உண்மையே பேசவேண்டும்
3) அன்பாக பேசவேண்டும்
4) மெதுவாக பேசவேண்டும்
5) சமயம் அறிந்து பேசவேண்டும்
6) இனிமையாக பேசவேண்டும்
7) பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு விஷயங்கள் :

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2) பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3) பிறருக்கு உதவுங்கள்
4) யாரையும் வெறுக்காதீர்கள்
5) சுறுசுறுப்பாக இருங்கள்
6) தினமும் உற்சாகமாக வரவேற்கத்தயாராகுங்கள்
7) மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு விஷயங்கள் :

1) கவனி உன் வார்த்தைகளை
2) கவனி உன் செயல்களை
3) கவனி உன் எண்ணங்களை
4) கவனி உன் நடத்தையை
5) கவனி உன் இதயத்தை
6) கவனி உன் முதுகை
7) கவனி உன் வாழ்க்கையை

சும்மா ஏதேனும் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்.

ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?

குரு
===
1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுthதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை இருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைசேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும்,சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம்தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரேகுருவாவர்.

39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.

40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா

42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.

44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.

45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்

57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.

62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

65. குரு நேசம்?
சிவ நேசம்.

66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.

69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.

83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.

90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.

92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.

95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்

102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாகஇருப்பார்.

110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.

112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.

121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.

122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;

123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.

124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.

128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.

135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ

139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........

149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.

151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.

153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.

158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - அருள்பவர்

160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.

163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே -மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம்ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது -மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.குரு
===

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுthதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை இருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைசேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும்,சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம்தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரேகுருவாவர்.

39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.

40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா

42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.

44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.

45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்

57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.

62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

65. குரு நேசம்?
சிவ நேசம்.

66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.

69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.

83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.

90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.

92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.

95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்

102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாகஇருப்பார்.

110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.

112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.

121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.

122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;

123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.

124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.

128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.

135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ

139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........

149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.

151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.

153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.

158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - அருள்பவர்

160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.

163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே -மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம்ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது -மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.குரு
===

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுthதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை இருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைசேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும்,சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம்தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரேகுருவாவர்.

39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.

40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா

42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.

44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.

45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்

57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.

62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

65. குரு நேசம்?
சிவ நேசம்.

66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.

69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.

83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.

90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.

92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.

95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்

102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாகஇருப்பார்.

110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.

112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.

121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.

122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;

123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.

124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.

128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.

135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ

139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........

149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.

151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.

153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.

158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - அருள்பவர்

160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.

163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே -மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம்ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது -மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.குரு
===

1. குரு எல்லாம் குருவா ?
எல்லா குருவும் குரு அல்ல
குருமுன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்
குருவிடம் பணம் பேசக் கூடாது

2. குருவை தேடுபவர் யார்?
குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.
குருவைத் தேடுபவன் தன்னைத் தானே அறிகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?
குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

6. குருவைக் கண்டால் என்னவாக உருவாகிறான்?
குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

7. குரு முழுமையானவராக சாட்சி என்ன?
குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி

8. குரு என்பவர் யாருக்காக?
குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதுthதர்

9. குருவிடம் என்ன கிடைக்கும்?
குருவால் திருவருள் கிட்டும்.

10. குரு என்பவர் யார்?
குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்

11. குருத்துவம் என்றால் என்ன?
குருத்துவம் தனித்துவம் ஆனது.

12. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?
இறைவனிடம் சேர்க்கும்.

13. நல்ல குருவை அறிவது எப்படி?
சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை, ,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

14. குருவாக ஆவதற்கு வயது உண்டா?
தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

15. குருவில் ஆண் பெண் உண்டா?
தெய்வீக வழியில் நhடவும்.- அறியாமை இருளை மறையச் செய்ய - யார்
வேண்டுமானாலும் இருக்கலாம்.

16. குரு தன்மை என்ன?
இறைத்தன்மை நிறைந்தவர்.

17. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?
முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

18. குருவுக்கு தகுதி வேண்டுமா? - கடவுளை காட்ட
வேண்டும் உணர முடியாததை உணர்த்தும் போது உணர்ந்து கொள்ள
வேண்டும் நீ உணரவும் தகுதி உள்ளவனாக வேண்டும்.

19. குரு ஞானம் எப்படிப்பட்டது?
காலத்தில் உன்னை மீட்பது
காலம் கடந்தும் வாழ்வதும்
மறைந்த பின்னும் வாழவைக்க வாழ்வது

20. குரு ஞானத்தை வெல்ல முடியுமா?
குரு ஞானத்தில் நீ வெற்றியடைந்தால் உன் வெற்றி
குருவின் வெற்றியை பன்மடங்காக்கும்

21. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?
பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம்
நீ முன்னேறாமல் இருப்பாய்

22. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?
முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு

23. குரு சேவை எதற்கு?
குரு சேவை குருவுக்கு அல்ல அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறைசேவை.

24. குரு ஆடையை வைத்து எடை போடலாமா?
குரு என்பவர் ஆடை அணிகலன்களில் இல்லை. பணிவும், பண்பும்,சொல்லும்
செயலும் ஒன்றாக இருக்கும் தெய்வீகம். தெய் வீகத்திற்கு ஆடை அலங்காரம்தேவையில்லை.

25. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?
குரு என்பவர் பாவ விமோட்சகர்.

26. குரு உருவம் எப்படிப்பட்டது?
குரு என்பவர் மனித உருவில் உயர் நிலையை உடையவர். ஒரு இறைவனின்
போதகர் சாந்தமான தெய்வீகமே குருவின் உருவம்.

27. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?
இறைதேடல், இறைதாகம், இறைப்பசி, இருந்தால் நீ தேடுவாய்

28. குரு என்பவர் கடவுளா?
உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்

29. ஒழிந்து இருப்பதின் அர்த்தம் என்ன?
எல்லாம் கடந்தவர் கடவுள்.கடவுளை அறிந்தால் குருவைத் தேடமாட்டாய்.
உன்னுள் ஒழிந்தவனை தேடுவாய் நீ ஒளிர.

30. குரு என்பவர் எதற்கு?
குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை
ஏற்படுத்துவதற்கு.மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார் .

31. குரு கடவுளை அறியச் செய்வாரா?
குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

32. குருவின் மகத்துவம் என்ன?
தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

33. குருவை சோதிக்கலாமா?
அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

34. குருவை எவ்வாறு அறிவாய்?
மெய்யை மெய் அறியும்

34. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?
குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

35. குரு பக்தி எப்படிப்பட்டது?
குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

தாய்மை தெய்வத்தின்(பிறப்பிடம்)

36. குருவிடம் போக மனப்போராட்டம் இருக்கலாமா?
முதலில் குருவிடம் சரணடைய மனப்போராட்டம் மாண்டுபோகும்.

37. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?
அவரைக் காண மனம் துடிக்கும்
அவரை ஒவ்வொரு கனமும் காண மனம் ஏங்கும்
ஒரு நாள் ஒரு பொழுதேனும் அவரை நினைக்கும்
அவர் முன் அமர மனம் ஏங்கும்
அவரைப் பிரியாது இருக்க மனம் மறுக்கும்
அவர் முன் மனம் அடங்கும்
அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

38. குருவாக பணம் வேண்டுமா?
குருவாக நல்ல மனம் மட்டுமல்ல இறைவனின் உணர்நிலையுடன் உள்ளவரேகுருவாவர்.

39. குருவைப் பார்ப்பாயா? குருவை சுற்றியுள்ளவரை பார்பாயா?
உன் வியாதிக்கு மருத்துவரையே அறிய வேண்டும்.
சுற்றியுள்ளவர்களிடம் நற்பண்புகளை பாற்க வேண்டும். குரு
உன்னை அறிந்துக்கொள்வார்.

40. குருவுக்கு ஜாதி உண்டா?
சுவாசம் ஒன்றே.

41. குருவிடம் ஜாதி பார்க்கலாமா?
இறைவனிடம் ஜாதி பார்க்கலாமா

42. குருவுக்கு தனித்தனி தெய்வம் உண்டா?
குரு தனித்துதான் இருப்பார்கள். குருவுக்கு தனி தெய்வம் இருக்கலாம். குரு
காட்டும் தெய்வம் ஒன்றே.

43. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?
குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல
எல்லாம் கடந்தால் குருவாக முடியும்
எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க முடியும்.

44. குருவால் உலகிற்கு என்ன பயன்?
அன்பான உலகம், பகையில்லா குடும்பம், தெய்வீகமான மனம்,
அமைதி எங்கும் நிலவும்.

45. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?
குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

46. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?
குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்

47. குரு சிஷ்ய துரோகம் பாவமா?
தெய்வ நிந்தனைக்கு உரியது. பல இழிபிறப்பைத் தரும்.

48. குருவாக ஏற்க மறைந்தவர்களை தேர்வு செய்யலாமா?
மறைந்தவர் என்றாலும் உன் மனம் மானசீகமாக ஏற்க வேண்டும்.

49. குருவாக முதல் தகுதி என்ன?
எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே.

50. குரு பட்டம் யார் தருவார்?
இறை பக்தர்கள் மூலம் இறைவன் குருபட்டம் தருவார்.

51. என் குரு நீயே என்றால் நம்பலாமா?
குருவால் பயனடைந்தால் மட்டுமே குரு என்பான்
ஒருவனால் வஞ்சபுகழ்ச்சிக்கு கூட குருவை தன்னைவிட உயர்த்த முடியாது.
இது இறைவன் தீர்ப்பு.

52. குரு கிடைக்காதவன் யார்?
வழி இருந்தும் குருடே. அவன் மகாபாவி

53. குரு இல்லாது இறைவனில் கலந்தவன் யார்?
உலகம் உடல் எல்லாம் மறந்து தெய்வத்தையே நினைப்பவன்.
இவனே இறைவன் விரும்பிய மனிதன்

54. நம்முடைய பாதி வயதில் குருவிடம் செல்ல சந்தர்ப்பம் அமைவது ஏன்?
கர்மபலன்இ செயல்பயன் கடவுளையும் குருவையும் நிர்ணயமாகும்.

55. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?
பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன்
கூடியவனாக இருக்க வேண்டும்.

56. குருவிடம் பயின்றவன் யோகி ஆக முடியுமா?
முதலில் சன்னியாசியாகி பின் யோகியாகமுடியும்

57. குரு சன்யாசம் தரலாமா?
குருவின் முதல் கடமையே சன்னியாசியை உருவாக்குவதே.

58. குருப் பெரியவரா? சன்னியாசி பெரியவரா?
குருவே பெரியவர். குருவை மிஞ்சிய சிஷ்யனும் உண்டு.

59. குரு எவ்வாறு வெளிப்படுகிறார்?
சிஷ்யர்களை, சன்னியாசிகளை, சாதுக்களை உருவாக்கும் போது ஒரு
குரு வெளிப்படுகிறார். சன்னியாசத்தில் தெய்வம் nவளிப்படும்.
தெய்வீகம் குருவில் வெளிப்படும்.

60. குருவுக்கு நிறம் தேவையா?
குருவுக்கு மனம் அதிலும் தெய்வீக குணம் மட்டுமே வேண்டும்

61. குருவுக்குள் அடங்கியது எது?
பிரபஞ்சமே அண்டம் அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே
உள் அடக்கியவன் குரு.

62. குரு இறையை அடக்கி வாழ்வாரா?
குரு முதலில் தன்னை அடக்கி வாழ்வார்

63. இறைவனை அடைவதற்கு ஞானம் தேவையா?
இறைவனை அடைவதற்கு தேடல்கள் மடடுமே,ஞானம் தேவையில்லை.

64. குருவிடம் விஞ்ஞானம் செல்லுமா?
குருவிடம் விஞ்ஞானம் செல்லாது. ஏனெனில் விஞ்ஞானம் என்பது
மாயை குருவின் தெய்வீகம் என்பது உண்மையின் உண்மை.

65. குரு நேசம்?
சிவ நேசம்.

66. குருவின் பதி?
சிவபதியே ஆவாள்.

67. குருவால் முக்தி தர முடியுமா?
குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

68. ஞான குரு என்றால் என்ன?
தியானத்தில் ஞானம் கிடைக்கும்.ஞானத்தில் தெளிவு கிடைக்கும.
குருவே ஞானம்.

69. குரு எதையாவது தேடுவாரா?
தேடுவார் நல்ல சிஷ்யனை.

70. குரு சிஷ்யனை ஏன் தேட வேண்டும்?
இறை அமுதைப் பருக ஆள் வேண்டாமா

71. நான் குருவாக முடியுமா?
முடியும் 'நான்' என்பதை அறிந்து ;நான்' என்பதை மறந்தால்

72. குருவுக்கு ஞானம் எங்கிருந்து கிடைக்கிறது?
இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது
உலகின் தேவை அனைத்தும் இறைவனிடமிருந்தே பெறப்படுகிறது.

73. குருவுக்கு 'நான்' என்பது இருந்தால் என்ன?
நான் என்பதற்கு இரண்டு நிலைகள் உண்டு.
நான் - அகங்காரம்
நான் - தெய்வீகம்
அகங்காரம் மனித இயல்பு
தெய்வீகம் தெய்வீக இயல்பு
இதனை ஆத்மபலன் மிக்கவரே அறிய முடியும்.

74. குரு ஜடநிலையா?
எல்லாம் மறந்தவர்கள். அதாவது துறந்தவர்கள் எல்லாம்
இல்லாது இருந்தாலும் ஒன்றானவனிடம் ஒன்றாதல் ஆகும்.

75. குரு சம்மந்தம் நமக்கு வேண்டுமா?
உன் மனம் ஏற்றவhறே சம்மதம்.

76. குருவிடம் குருட்டு நம்பிக்கை வைக்கலாமா?
உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

77. குரு உன்னதம் எவ்வாறு அறிவது?
தேன் சொரியும் மலர் - மலர் தேடும் வண்டு
குருவே மலர் - உன்னதம் தேன்

78. குருவைத் தேடி கூட்டம் செல்வது ஏன்?
நற்பொருள் ஞானம் - மெய் தன்னால் பரவும்.

79. குருவுக்குள் கோயில் கொள்வது எது?
இறைவன்
80. குருவானவர் பேதம் பார்ப்பாரா?
இறைவனிடம் பேதம் கிடயாது.

81. குரு பாவத்தை போக்குவாரா?
குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார். பாவத்தை அனுபவித்து
கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

82. குருவுக்கு சிஷ்யன் தட்சணையாக பணம் தர வேண்டுமா?
குருவுக்கு மனதையும் உன்னையும் கொடு மனமுள் பணம் பறந்து போகும்.

83. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?
நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

84. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?
குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு) இரும்பாக இருந்தாலும்
துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும். இரும்பும் பின் காந்தமாகும்.

85. குரு சிஷ்யன் வளர்வதை எவ்வாறு அறிவார்?
முளை நெல்லின் மூக்கை அறியலாம்

86. குரு சிஷ்யனை சன்னியாசம் பெற வற்புறுத்தலாமா?
தெய்வீக நாட்டம் இருந்தால் குருவிடம் சரண் புகுவான்.
இறைவன் அவனுள் புகுந்து கொள்வார்.

87. குரு சிஷ்யனை அறிய முடியுமா?
தாய் அறியா சூழ் உண்டோ, தெய்வம் அறியாத நிலை உண்டா

88. குருவுக்கு சிஷ்யன் பிரியமாகுவது ஏன்?
மாறாத தெய்வீக பணிவு, பணிவுடன் மதிப்பும் மரியாதையும்

89. குருவிடம் சிஷ்யன் முழுமையான சரணடையக் காரணம்?
குருவுக்குள் இருக்கும் கடவுள் என்னும் கருணையாளன்.

90. குருவுக்கு முன் தாயை ஏன் வைத்தார்கள்?
தயாபரன் தாயுமாகிறான்.

91. குருவின் முதல் குரு யார்?
முதல் குரு உன் தாயே.

92. குருவுக்கு கல்வி தேவையா?
தெய்வத்தை அறிய கல்வி தேவையில்லை

93. குரு தந்தையாக முடியுமா?
எல்லாம் ஆகியவன் எல்லாம் ஆக இருப்பதால்

94. குரு கற்றவராக இருக்க வேண்டுமா?
குருவின் தெய்வீகத்தை படிக்கவே முடியாது.
கல்வி ஒரு உபகரணமே.

95. குரு வேதம் கல்லாதவராக இருந்தால் என்ன?
ஒருகினைந்த மனம் மட்டுமேபோதும். பக்தன் பயபக்தியுடன்
இறைவனை மூச்சாக மூச்சில் இருந்தாலே போதும்.

96. குரு வேதம் ஓத வேண்டுமா?
மானசீக பூஜையுடன் மானசீகமாக இறைவனாகவே இருப்பார்.

97. குருவிடம் சென்றால் நீ சித்தனாகலாமா?
குருவின் சிவநெறியை கடைபிடித்தால் சித்தனாகலாம்.

98. குருப்பயிற்சியில் சாதனை முக்கியமா?
பயிற்சியில் தபம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, வைராக்கியம் அவசியம்.

99. குரு ஜாதி பார்க்கலாமா?
சிவமாகியவர்.

100. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?
இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

101. குருவுக்கு வேஷம் உண்டா?
குரு அதுவே தெய்வம். வேஷம் அல்ல நேசம்

102. குரு சோதனை செய்வாரா?
சோதனை செய்வார் இறைவன் செய்ய நினைத்தால்.

103. குருவை மறந்தால்?
தெய்வம் மறக்கும்

104. குருவிடமிருந்து விலகியவன்?
தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.
105. குருவை வஞ்சிப்பது?
தெய்வக் குற்றம்

106. குருவுக்கு பின்னால் புறம் பேசுவது?
மிகப் பெரிய பாவம்.அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கொல்லும்.
தெய்வம் தண்டனை தராது- உன்னைக் கொல்லும்.
107. குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது?
நற்குருவை தாழ்வாக விமர்ச்சிப்பது தாழ்ந்த மனமுடையவனால்
மட்டுமே முடியும். அது அவன் அழிவிற்கு வழி வகுக்கும்.

108. குருவிடம் மந்திரம் திருடலாமா?
குருவிடம் மந்திரத்தை தந்திரமாகக் கூட வாங்க கூடாது. தந்திர
திருட்டே ஆனாலும் அதற்கேற்ற பலனே இறை தருவார்.

109. குருவின் வெளிப்பாடு யாது?
குருவின் வெளிப்பாடு மெய் ஞானம், தெளிந்த தெய்வீகம், குரு பிரம்மாகஇருப்பார்.

110. குருவை வஞ்சபுகழ்ச்சி செய்யலாமா?
எல்லாம் புகழும் இறைவனுக்கே

111 . குரு வணக்கம் யாரைச் சாரும்?
குரு வணக்கம் குருவைச் சாரும். குரு இறைவனுக்கு
சமர்ப்பணம் செய்வார்.

112. நற்குரு எதை தனதாக்கி கொள்வார்?
இறைவனை மட்டுமே தனதாக்கி கொள்வார்.

113. குரு சேவை கர்மவினை கழியுமா?
குரு சேவையே இறைசேவை, இறைசேவையாக நீ நினைத்தால்
கர்மவினை கழியும்.

114 . குரு கர்மவினையை கழிப்பாரா?
குரு கர்மவினையை குறைப்பார்.கழிக்க முடியாது.

115. குரு தவறு செய்து மறைத்து புகழ் பெற முடியுமா?
குருவாக இருக்க முடியாது.

116. குரு தவறு செய்யலாமா?
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே.

117. குரு பாடம் யாரிடம் எல்லாம் கற்கலாம்?
மனிதனில் இருந்து நாய் எறும்பு தேனீ நரி புலி சிங்கம்
நாய் - நன்றி, எறும்பு - உழைப்பு, தேன்- சேமிப்பு, நரி -தந்திரம்
புலி -பதுங்கி பின் தாக்குதல்,சிங்கம்- பசியின்றி புசிக்காது,
ஒவ்வொன்றினதும் நற்குணங்கள் ஆகும்.

118. குரு சொல் கேளாதவன்?
தெய்வம் சொல் கேளாதவன்

119. குருவின் மகத்துவம்?
மெய்யை வெளிப்படுத்துவது (மெய் என்பது பரம்பொருள்)

120. குரு எதற்குச் சமம்?
தெய்வநிலை எதற்கும் ஈடாகாது. கடவுளாக தோன்றும் குருவே,
.இறைவனுக்கு நிகர் இறைவனே.

121. குருவால் உன் ஜென்மத்தை உணர்த்த முடியுமா?
உன் ஜென்மத்தை உணர்த்த முடியும்.

122. குருவாக யாரையும் மனம் ஏற்க மறுத்தால் என்ன செய்ய?
உன் ஜென்ம பலன், குரு இன்றி இறை தேட முடியாது. ;

123. குரு வாழ்க்கையை நாம் பின் நோக்கி பார்க்கலாமா?
குருவிடம் ரிஷிமூலம் நதிமூலம் பார்காதே.

124. குரு வாழ்வியலில் எவ்வித வழிகாட்டி?
துறவிக்கு தெய்வீக வழிகாட்டி, இல்லற வாசிக்கு வாழ்க்கை நெறிகாட்டி.

125. குரு பேசும் போது நாம் பேசலாமா?
நீ பேச நினைப்பதை அவர் பேசுவார்.

126. குருவிடம் என்ன கேட்கலாம்?
உலக இன்பத்தை தவிர தெய்வீகத்தை யாசிக்கலாம்.

127. குருவிடம் நம் குறைகளை சொல்லலாமா?
சொல்லலாம் குறையை மறந்து புது மனிதனாய் அவர் முன்
அமர்ந்து உபதேசம் கேள்.

128. குரு மனவிழிப்படையச் செய்பவரா?
ஆம் உன் ஆத்துமாவை காட்டி மனவிழிப்படையச் செய்வார்.

129. குருவை எப்படி நிர்ணயிக்கிறார் இறைவன்?
இறைவன் பல கோடி மக்களில் ஒருவரை மட்டுமே குருவாக
தேர்வு செய்கிறார். இதுவும் ஜென்ம பலனே.
130. குரு சித்தனானால் என்ன ஆகும்?
புத்தி சிவத்தோடு இருந்து விட்டால் சித்தனாகலாம்.

131. குருவின் மன்னிக்க முடியாத தவறு உண்டா?
காமம் - மன்னிப்பே இல்லை, ஆண் பெண்ணாக இருப்பினும் பாவத்தின்
சம்பளம் மரணமும் மரணத்தை விட கொடிய அவமானமும் மிஞ்சும்.

132. குரு சுகபோகமாக வாழலாமா?
குரு சுகமாக வாழலாம். ஆனால் போகம் இறைக்கு உரியதல்ல.

133. குருவிடம்தான் மந்திரம் வாங்க வேண்டுமா?
குரு உன் உயிர் பலன், எண்ணபலன், உடல்
பலன், அறிவு பலன் கருதியும் மந்திரம் தருவார்.

134. குரு சொன்ன இடத்தில் தான் மந்திரம் உச்சரிக்க வேண்டுமா?
ஆம் குரு சொல்லை தட்டாதே.

135. குரு சொல்லிய மந்திரத்தை விட்டு இறை நாமம் செல்லலாமா?
மந்திரத்தை மட்டுமே உச்சரிக்க வேண்டும்.

136 . குருவிடம் மந்திரம் மாற்றிக் கொள்ள நினைக்கிறேன் சரியா?
மந்திரம் பாற்றும் அதிகாரம் குருவிற்கு மட்டுமே.

137. குருவை மானசீகமானவராக அறிய முடியுமா?
குரு மூலம், ரிசி மூலம் பார்க்காதே.

138. இறைவன், குரு, பக்தன் விளக்குக?
இறைவன் தோற்றுவித்தவன் தோற்றுபவன்
குரு பார்க்கச் செய்பவன் பக்தன் தேடுபவன்எ

139. குரு திகட்டுவாரா?
தெய்வம் திகட்டாது.

140. குரு செயல் அனைத்தும் என்ன?
அனைத்தும் தெய்வத்தின் கட்டளையே.

141. குரு செய்ய நினைப்பதை யார் செய்வார்?
சிஷ்யன் செய்து முடிப்பான்.

142. சிஷ்யன் எவ்வழி?
குரு எவ்வழியோ சிஷ்யனும் அவ்வழியே

146. குரு சிஷ்யனும் எந்த பரிமாற்றத்திற்கு உரியது?
கொடுக்கலும் வாங்கலும் இறைவன் நீதி.

147. குரு மௌனத்தில் இருப்பதன் இரகசியம் என்ன?
மௌனத்தில் இறை தொடர்பில்........

149. குரு வேலை என்ன?
மாயை திரையை விலக்கி தெய்வீகம் மிளிர வைப்பார்
150. குருவை அறியாது விமர்ச்சிப்பது ஏன்?
விமர்சிப்பவன் மூடன்.

151. குருவை மாற்றலாமா?
மாற்றக்கூடாது.

152. குரு உபதேசம் என்ன?
உன்னை அறியச் செய்வது.

153 . குருவுக்கு நன்மதிப்பிற்கு உரிய சிஷ்யன் உண்டா?
உண்டு, தெய்வ ரகசியம்.

154. குருவின் பணி என்ன?
ஆன்மீக உலகை உருவாக்குதல்.

155. குரு பக்தி எது?
குரு வழியை பின்பற்றுதல் குரு பக்தி.

156. குரு எப்போது உருவாகுகிறார்?
இறைவனின் ஆணைப்படி யோகத்தில் - வழி மெய் ஞானம் பெற்று .

157. குரு முன் அமர்ந்தால் பல சந்தேகம் வருகிறது ஏன்?
அஞ்ஞானத்தை போக்கவே, பயனுள்ள கேள்வி பதில் அறிந்து கொள்ள,
குருவின் நேரத்தை வீணாக்காதே.

158. குருவின் வார்த்தையை அப்படியே நம்பலாமா?
இறைவன் வார்த்தையே.

159. குரு யோகி வித்தியாசம் என்ன?
குரு - விடிவிப்பவர்
யோகி - அருள்பவர்

160. உலகில் முதல் குரு யார்?
உலகில் முதல் குரு இயற்கையே.

161. குடும்பப் பெண் குருவாகலாமா?
இறைவனின் மாற்று உருவே.

162. குருவுக்கு பாத பூஜை செய்யலாமா?
குருவுக்குள் இருக்கும் தெய்வீகத்திற்கு சமர்ப்பணம்.

163 . தியானத்தில் ஞானம் அடைந்ததை எவ்வாறு அறிவது?
தேடல் இராது தேவையும் இராது.

மௌனத்திலும் ஒரு மந்திரமான தந்திரமே, மன சலனத்தின் வழிகாட்டியே -மௌனம் பேரானந்த பேறு நிலையை வழிவகுக்கும். உள் ஆனந்தம் விரையம்ஆகாது. ஆண்டவனுடன் பிணைந்தும் தொடர்ந்தும் இருக்க வல்லது -மௌனம். மௌனத்தில் உலகத் தொடர்பை மறந்தால் பேரானந்த பேறு நிலை கிடைக்கும்.