flipkart discount sale search here.

Friday 31 August 2018

புதுத்துறை நிறுவனமாகத் திகழும் LICக்கு வயது அல்ல 62 அனுபவம் 62.

LIC....62......1.9.2018

பொதுத்துறை நிறுவனமாகி
இன்றும்
புதுத்துறை நிறுவனமாகத்
திகழும் LICக்கு
வயது அல்ல 62
அனுபவம் 62.

இந்தியா வளர
இந்தியர் வளர
இணையில்லா சேவை!
இன்றும், என்றும்
இளமையுடன்
இருக்கும் LIC.

தன் நன்மைக்காக அல்ல,
தன்னை நம்பும் மக்களின்
நன்மைக்காக
இயங்குவது LIC.!

மக்களுக்காக
சிந்திக்கும் நிறுவனம்!
மக்களை
சந்திக்கும் நிறுவனம்!
திட்டங்கள் பல தீட்டி
திட்டமிட்டு செயல் படும் LIC.
ஐந்தாண்டு திட்டத்திற்கு
அள்ளிக் கொடுக்கும் LIC.

60 வயதானால் ஓய்வு
தனி நபருக்கு!
62 வயதானாலும்
ஓய்வில்லா சூரியனே LIC.

காப்பீட்டுத்துறையை
தனியாருக்கு திறந்துவிட்டு
ஆண்டுகள் பல ஆயிற்று!
பயமுறுத்தினர் பலர்!
இளமையான பலர் வருவர்,
என்ன ஆகுமோ!
என்றனர் சிலர்!

இன்றோ
முன்வரிசையில் LIC.
முகவரி இல்லாமல்
இருப்பவர் பலர்!
வயதானால் ஓட முடியுமா?
என்றவர்கள் இன்று
துரத்தமுடியாமல்
தூரத்தில் உள்ளனர்!

வயதல்ல!
அனுபவம்!
ஜொலிக்கும் வைரம்!

இந்தியா முழுவதும்
வடக்கு, தெற்கு,
கிழக்கு, மேற்கு எல்லா
திசைகளிலும்
எழுந்து நிற்பது LIC.
சென்றாலே சந்திக்க முடியும்
என்ற நிலையில் பல
நிறுவனங்கள்.... ஆனால்
மக்களை சென்று சந்திக்கும்
நிறுவனம் LIC.

LIC
நிதி நிறுவனம்
மட்டுமல்ல,
நீதி நிறுவனம் கூட!
ஆம்,
சமூக அக்கறை  உள்ள
நிறுவனம்கூட!

அடிக்கல் வெளியே தெரியாது
அடிக்கல்லாக இருந்து
அன்று உழைத்து ஓய்வுபெற்றவர்கள்,
அடிக்கல்மீது அரண்மனை
எழுப்பி இன்றும்
உழைப்பவர்கள்,
மக்களுக்கும் நிறுவனத்திற்கும்
பாலமாக இருக்கும்
முகவர்நண்பர்கள்,
நம்பிக்கையுடன் விசுவாசத்தை
தொடரும் பாலிசிதாரர்கள்,
அனைவருக்கும் வாழ்த்துகள்.

LIC
இதயங்களால்
எழுந்த கட்டடம்!

62 வது
ஆண்டு நிறைவு நாளில்
வாழ்த்தும் நேரத்தில்
நம்மை வாழவைத்த
LIC ஐ
வாழவைக்க,
வளர்க்க,
முதலிடத்தில்
நிலைக்க
பாடுபடுவோம் என்ற
உறுதியேற்போம்!

வாழ்க LIC!
வளர்க LIC!

வெற்றி நிச்சயம்...

Thursday 30 August 2018

ஹெல்மெட் வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

உயர்நீதிமன்ற உத்திரவுப்படி ஹெல்மெட்
வேட்டையாடும்
 காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.

1. பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.

2. ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.

3. ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
 லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?

4. ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.

5. Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?

6. அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?

7. Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?

8. ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.

9.பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.

10. 30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
---------------------------------------------
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...

தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...

ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...

மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...

"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...

கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை
பண்ணாணாம்...!

ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!

உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!

ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...

புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...

குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....

நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....

தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....

நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.

ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..

20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...

சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...

இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .

சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...

ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..

கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது...

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போகலாமே...

வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...

இப்பொழுது சொல்லுங்கள்
ஹெல்மெட் அணிவதை நீங்கள் கட்டாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம்....

இந்த பதிவை ஏற்றுக்கொள்பவர்கள்
முடிந்த அளவுக்கு ஷேர் பண்ணுங்கள்..!

#380 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 924 நாண்என்னும் நல்லாள் | Daily one...

உடல் பஞ்ச பூதங்களால் ஆனது...!

ஆன்மா
🙏🙏🙏🙏

உடல் பஞ்ச
பூதங்களால்
ஆனது...!
ஆன்மா உணர்வு
பூர்வமானது...!

உடலுக்கு
உருவமுண்டு...!
ஆன்மாவிற்கு உருவமில்லை...!

உடலைப்
பார்க்க முடியும்...!
ஆன்மாவை
பார்க்க முடியாது...!

உடல்
ஸ்தூலமானது...!
ஆன்மா
சூட்சமமானது...!

உடலுக்கு
பெயருண்டு...!
ஆன்மாவிற்கு
பெயரில்லை...!

உடல் ஆண்
பெண் என
வகைப்படும்...!
ஆன்மா ஆணுமல்ல
பெண்ணுமல்ல...!

கண்கள்
காண்கிறது...!
ஆன்மா
நினைவு
செய்கிறது...!

காதுகள்
கேட்கிறது...!
ஆன்மா
புரிந்து
கொள்கிறது...!

மூக்கு
சுவாசிக்கின்றது...!
ஆன்மா
நுகர்கின்றது...!

வாய்
உண்கிறது...!
ஆன்மா
சுவைக்கின்றது...!

தோல்
தொடுகிறது...!
ஆன்மா 
ஸ்பரிசிக்கின்றது...!

உடலுக்கு
ஐம்புலன்கள்
உண்டு...!
ஆன்மாவிற்கு
அஷ்ட சக்திகள்
உண்டு...!

உடல்
உழைக்கின்றது...!
ஆன்மா
சிந்திக்கின்றது...!

உடல் உணவைப்
பெறுகிறது...!
ஆன்மா அமைதியைப்
பெறுகிறது....!

உடல்
உருவத்தில்
வளர்கிறது...!
ஆன்மா
அறிவில்
வளர்கிறது...!

உடலுக்கு
வைத்தியம்
பார்க்கப்படுகிறது...!
ஆன்மாவிற்கு
வழிபாடு
தியானம்
செய்யப்படுகிறது....!

உடல் விபத்தை
சந்திக்கின்றது...!
ஆன்மா வலியை
அனுபவிக்கின்றது....!

உடலுக்கு
ஆதாரம் சுவாசம்...!
ஆன்மாவிற்கு 
ஆதாரம் விருப்பம்...!

உடலுக்கு
கண்களே ஒளி...!
ஆன்மாவிற்கு
ஞானமே ஒளி...!

உடலுக்கு
16 மண்டலங்கள்
உண்டு...!
ஆன்மாவிற்கு
16 குணங்கள்
உண்டு...!

உடல் ஒரு
கருவி...!
ஆன்மா
அதனை
இயக்குபவர்...!

உடல் ஒரு
வீடு...!
ஆன்மா
அதில்
குடியிருப்பவர்...!

உடல் ஒரு
வாகனம்...!
ஆன்மா
அதன்
ஓட்டுனர்...!

உடல் ஒரு
அடிமை...!
ஆன்மா
சுதந்திரமானது...!

உடல் ஒரு
படைப்பு...!
ஆன்மா
படைப்பவர்...!

உடல்
உருவாக்கப்படுகிறது...!
ஆன்மா ஆதி
அந்தமற்றது...!

உடலுக்கு
தந்தை
வேறுபட்டவர்...!
அனைத்து
ஆன்மாக்களுக்கும்
தந்தை
ஒருவரே...!

உடலுக்கு
இரத்த
சம்பந்தம்
உண்டு...!
ஆன்மாவிற்கு
உணர்வு
சம்பந்தம்
உண்டு...!

உடல்
அழியக்கூடியது...!
ஆன்மா
அழிவற்� ஆன்மா
🙏🙏🙏🙏

உடல் பஞ்ச
பூதங்களால்
ஆனது...!
ஆன்மா உணர்வு
பூர்வமானது...!

உடலுக்கு
உருவமுண்டு...!
ஆன்மாவிற்கு உருவமில்லை...!

உடலைப்
பார்க்க முடியும்...!
ஆன்மாவை
பார்க்க முடியாது...!

உடல்
ஸ்தூலமானது...!
ஆன்மா
சூட்சமமானது...!

உடலுக்கு
பெயருண்டு...!
ஆன்மாவிற்கு
பெயரில்லை...!

உடல் ஆண்
பெண் என
வகைப்படும்...!
ஆன்மா ஆணுமல்ல
பெண்ணுமல்ல...!

கண்கள்
காண்கிறது...!
ஆன்மா
நினைவு
செய்கிறது...!

காதுகள்
கேட்கிறது...!
ஆன்மா
புரிந்து
கொள்கிறது...!

மூக்கு
சுவாசிக்கின்றது...!
ஆன்மா
நுகர்கின்றது...!

வாய்
உண்கிறது...!
ஆன்மா
சுவைக்கின்றது...!

தோல்
தொடுகிறது...!
ஆன்மா 
ஸ்பரிசிக்கின்றது...!

உடலுக்கு
ஐம்புலன்கள்
உண்டு...!
ஆன்மாவிற்கு
அஷ்ட சக்திகள்
உண்டு...!

உடல்
உழைக்கின்றது...!
ஆன்மா
சிந்திக்கின்றது...!

உடல் உணவைப்
பெறுகிறது...!
ஆன்மா அமைதியைப்
பெறுகிறது....!

உடல்
உருவத்தில்
வளர்கிறது...!
ஆன்மா
அறிவில்
வளர்கிறது...!

உடலுக்கு
வைத்தியம்
பார்க்கப்படுகிறது...!
ஆன்மாவிற்கு
வழிபாடு
தியானம்
செய்யப்படுகிறது....!

உடல் விபத்தை
சந்திக்கின்றது...!
ஆன்மா வலியை
அனுபவிக்கின்றது....!

உடலுக்கு
ஆதாரம் சுவாசம்...!
ஆன்மாவிற்கு 
ஆதாரம் விருப்பம்...!

உடலுக்கு
கண்களே ஒளி...!
ஆன்மாவிற்கு
ஞானமே ஒளி...!

உடலுக்கு
16 மண்டலங்கள்
உண்டு...!
ஆன்மாவிற்கு
16 குணங்கள்
உண்டு...!

உடல் ஒரு
கருவி...!
ஆன்மா
அதனை
இயக்குபவர்...!

உடல் ஒரு
வீடு...!
ஆன்மா
அதில்
குடியிருப்பவர்...!

உடல் ஒரு
வாகனம்...!
ஆன்மா
அதன்
ஓட்டுனர்...!

உடல் ஒரு
அடிமை...!
ஆன்மா
சுதந்திரமானது...!

உடல் ஒரு
படைப்பு...!
ஆன்மா
படைப்பவர்...!

உடல்
உருவாக்கப்படுகிறது...!
ஆன்மா ஆதி
அந்தமற்றது...!

உடலுக்கு
தந்தை
வேறுபட்டவர்...!
அனைத்து
ஆன்மாக்களுக்கும்
தந்தை
ஒருவரே...!

உடலுக்கு
இரத்த
சம்பந்தம்
உண்டு...!
ஆன்மாவிற்கு
உணர்வு
சம்பந்தம்
உண்டு...!

உடல்
அழியக்கூடியது...!
ஆன்மா
அழிவற்றது...!

உடல்
எரிக்கப்படுகிறது...!
ஆன்மாவை
எரிக்க இயலாது...!

உடல்
புதைக்கப்படுகிறது...!
ஆன்மாவை
புதைக்க இயலாது...!

உடல் பூமிக்குள்
சேர்க்கப்படுகிறது...!
ஆன்மா இறைவனோடு
சேர்ந்து விடுகிறது....!
உடல் நினைவு
செய்யப்படுகிறது...!
ஆன்மா ஆசிர்வதிக்கப்
படுகிறது...!

உடலை
பிரிக்க  இயலும்...!
ஆன்மாவை
பிரிக்க இயலாது...!

உடல்
எல்லைக்குள்
உட்பட்டது...!
ஆன்மா
எல்லைக்கு
அப்பார்ப்பட்டது...!

உடல் ஒரு
அத்தியாயம்...!
ஆன்மா ஒரு
முழுக்கதை...!

உடலைப்
பற்றியது
பௌதீகம்...!
ஆன்மாவைப்
பற்றியது
ஆன்மிகம்...!

உடலை மட்டும்
அறிவது
அசுரகுணம்...!
ஆன்மாவை 
அறிவது
தேவகுணம்...!

🌹🌹🌹வலங்கைமான் ஸ்ரீசீதளாதேவி அம்பாள்🌹🌹🌹🌿🌿🌿

ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?

*ஒரே எழுத்தில் ஆரம்பிக்கும் வார்த்தைகளைக் கொண்டு கதை எழுத முடியுமா?*
அகரத்தில் ஓர் இராமாயணம்
இராமாயண கதை முழுதும்
'அ' என்று ஆரம்பிக்கும் வார்த்தைகளால் வடிவமைக்கப் பட்டுள்ளது.
 *இதுவே தமிழின் சிறப்பு*

அனந்தனே
அசுரர்களை
அழித்து,
அன்பர்களுக்கு
அருள
அயோத்தி
அரசனாக
அவதரித்தான்.
அப்போது
அரிக்கு
அரணாக
அரசனின்
அம்சமாக
அனுமனும்
அவதரித்ததாக
அறிகிறோம்.
அன்று
அஞ்சனை
அவனிக்கு
அளித்த
அன்பளிப்பு
அல்லவா
அனுமன்?
அவனே
அறிவழகன்,
அன்பழகன்,
அன்பர்களை
அரவணைத்து
அருளும்
அருட்செல்வன்!
அயோத்தி
அடலேறு,
அம்மிதிலை
அரசவையில்
அரசனின்
அரியவில்லை
அடக்கி,
அன்பும்
அடக்கமும்
அங்கங்களாக
அமைந்த
அழகியை
அடைந்தான் .
அரியணையில்
அமரும்
அருகதை
அண்ணனாகிய
அனந்தராமனுக்கே!
அப்படியிருக்க
அந்தோ !
அக்கைகேயி
அசூயையால்
அயோத்தி
அரசனுக்கும்
அடங்காமல்
அநியாயமாக
அவனை
அரண்யத்துக்கு
அனுப்பினாள்.
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அங்கேயும்
அபாயம்!
அரக்கர்களின்
அரசன் ,
அன்னையின்
அழகால்
அறிவிழந்து
அபலையை
அபகரித்தான்
அந்த
அடியார்களில்
அருகதையுள்ள
அன்பனை
அரசனாக
அரியணையில்
அமர்த்தினர்.
அடுத்து
அன்னைக்காக
அவ்வானரர்
அனைவரும்
அவனியில்
அங்குமிங்கும்
அலைந்தனர்,
அலசினர்.
அனுமன்,
அலைகடலை
அலட்சியமாக
அடியெடுத்து
அளந்து
அக்கரையை
அடைந்தான்.
அசோகமரத்தின்
அடியில் ,
அரக்கிகள்
அயர்ந்திருக்க
அன்னையை
அடிபணிந்து
அண்ணலின்
அடையாளமாகிய
அக்கணையாழியை
அவளிடம்
அளித்தான்
அன்னை
அனுபவித்த
அளவற்ற
அவதிகள்
அநேகமாக
அணைந்தன.
அன்னையின்
அன்பையும்
அருளாசியையும்
அக்கணமே
அடைந்தான்
அனுமன்.
அடுத்து,
அரக்கர்களை
அலறடித்து ,
அவர்களின்
அரண்களை ,
அகந்தைகளை
அடியோடு
அக்கினியால்
அழித்த
அனுமனின்
அட்டகாசம் ,
அசாத்தியமான
அதிசாகசம்.
அனந்தராமன்
அலைகடலின்
அதிபதியை
அடக்கி ,
அதிசயமான
அணையை
அமைத்து,
அக்கரையை
அடைந்தான்.
அரக்கன்
அத்தசமுகனை
அமரில்
அயனின்
அஸ்திரத்தால்
அழித்தான்.
அக்கினியில்
அயராமல்
அர்பணித்த
அன்னை
அவள்
அதி
அற்புதமாய்
அண்ணலை
அடைந்தாள்.
அன்னையுடன்
அயோத்தியை
அடைந்து
அரியணையில்
அமர்ந்து
அருளினான்
அண்ணல் .
அனந்தராமனின்
அவதார
அருங்கதை
அகரத்திலேய
அடுக்கடுக்காக
அமைந்ததும்
அனுமனின்
அருளாலே.

*உலகில் எந்த மொழியாலும் அசைக்க முடியாத நம் தமிழ்*

Saturday 25 August 2018

#374 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 302 செல்லா இடத்துச் | Daily one thi...

வியக்க வைத்த வரிகள்...

வியக்க வைத்த வரிகள்
"" "" "" "" "" "" "" "" "" "

தெரிந்து மிதித்தாலும்
தெரியாமல் மிதித்தாலும்..,
மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்...!!
👌👌👌👌👌👌👌

நினைப்பது போல் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை..,
அழகாய் அமைந்த வாழ்க்கையைக் கூட சிலருக்கு வாழத் தெரிவதும் இல்லை..!
👌👌👌👌👌👌👌👌

சந்தோஷமா வாழறேன்' னு காட்டிக்கொள்ள தான் பணம் தேவைப்படுகிறது..,
உண்மையில், சந்தோஷமா வாழ பணம் ஒரு பொருட்டே இல்லை
👌👌👌👌👌👌👌👌

நோய் வரும் வரை உண்பவன்,
உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்!
👌👌👌👌👌👌👌👌

பணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல...
ஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..!
👌👌👌👌👌👌👌👌

பணத்தின் மதிப்பு தெரியவேண்டுமா?  செலவு செய்யுங்க.....!
உங்களின் மதிப்பு தெரியவேண்டுமா?.. கடன் கேளுங்க.!
👌👌👌👌👌👌👌👌

பிச்சை போடுவது கூட சுயநலமே...,
புண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்...
👌👌👌👌👌👌👌👌

அனுபவத்தால் உணரவேண்டிய ஒன்றை...,
ஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.
👌👌👌👌👌👌👌👌

வாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு...,
அதற்கு அவமானம் தெரியாது
விழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..!!
 👌👌👌👌👌👌👌👌

வெட்டாதீர்கள் - மழை தருவேன் என்கிறது "மரம்".
வெட்டுங்கள் - மழை நீரைசேமிப்பேன் என்கிறது "குளம்"
👌👌👌👌👌👌👌👌

திருமணம் -
ஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்...,
ஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.!!
👌👌👌👌👌👌👌👌

முன்னே செல்பவனை விட்டுவிடுங்கள்...,
பின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.
அவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.
👌👌👌👌👌👌👌👌

மீண்டும் ஒரு முறை முகம் பார்த்து பேசவேண்டியிருக்கும்
என்ற ஒரு காரணத்திற்காகவே,
நம்முடைய பல கோபங்கள் தற்கொலை செய்துகொள்கின்றன...!
👌👌👌👌👌👌👌👌



நேர்மையாக சம்பாதித்த பணம் பெரும்பாலும் கோயில் உண்டியல்களுக்கு வருவதில்லை.
👌👌👌👌👌👌👌👌

இவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட...,
வலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்..............!
👌👌👌👌👌👌👌

பகலில் தூக்கம் வந்தால்,
உடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..!!
இரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்...........!
👌👌👌👌👌👌👌👌

துரோகிகளிடம் 'கோபம்' இருக்காது
கோபப்படுபவர்களிடம் 'துரோகம்' நிச்சயமாக இருக்காது.. 
👌👌👌👌👌👌👌

தன்னை நல்லவராக காட்டிக் கொள்ள *அடுத்தவரை கெட்டவராகச் சித்தரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..*
👌👌👌👌👌👌👌

அழகான வரிகள்....
படித்ததில் பிடித்தது*
பிடித்திருந்தால் பகிரவும்...!!!

Friday 24 August 2018

இதுதான் வாழ்க்கை... கேரளா உணர்த்தும் பாடம்.....

*இதுதான் வாழ்க்கை...*

கேரளா உணர்த்தும் பாடம்.....

“இந்தப் பகுதி
இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்
முக்கியமானதை மட்டும்
எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”

இதைக் கேட்டபோது
அவர்கள் முழங்கால் அளவு
தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்

இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்து என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்

முதலில் கைககளில்
எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ
அதையெல்லாம் கைவிட்டார்கள்
பிறகும் கைவிடுவதற்கு
ஏராளமாக இருந்தன
பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்
அழகு சாதனப்பொருள்கள்
கைவிடுவதற்கு முடிவேயில்லாமல்
ஏராளமாக இருந்தன

நீங்கள் கைவிடும்போது
உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல
உறையச் செய்ய வேண்டும்
எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ
அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்
ஒரு தூக்கிலிடுபவனைப்போல
உங்கள் கண்கள் மரத்துப்போக வேண்டும்

ஒரு பாலிதீன் பை அளவுக்கு மட்டுமே
எதையும் எடுத்துக்கொள்ள
அவர்களுக்கு
அவகாசம் இருந்தது
அனுமதி இருந்தது

அவர்கள் ஒரு பிரம்மாண்டமான
விற்பனையகத்தின் முன்னால்கூட
அப்படி திகைத்து நின்றதில்லை
தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது
அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது
எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல
என்று தோன்றிய கணத்தில்
அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது

கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்
வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக்கொண்டார்கள்
சான்றிதழ்ககளை எடுத்துக்கொண்டார்கள்
ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டர்கள்
ரேஷன் கார்டுகளை,
வாக்காளர் அட்டைகளை,
ஆதார் அட்டைகளை,
வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை
கடன் பத்திரங்களை
இன்னும் என்னென்னவோ
முத்திரையிடப்பட்ட காகிதங்களை
ஆவணங்களைத் தவிர
நாம் வாழ்வை மீட்டும் நீட்டிக்கச் செய்வதற்கு
வேறு எதுவுமே முக்கியமல்ல
என்பது அவர்களை ஒரு கணம்
அதிர்ச்சியடைய வைத்தது

பிறகு வீடுகளை அப்படியே
திறந்துபோட்டுவிட்டு
ஒரு பாலீதின் கவரை
தலைக்கு மேலாக தூக்கிப்பிடித்தபடி
மேட்டு நிலம் நோக்கி
தண்ணீரில் வேகவேகமாக நடந்து சென்றார்கள்

*இதுதான் வாழ்க்கை....*
*இவ்வுலகில் நீங்கள் எதை விட்டுச்செல்ல போகிறீர்கள் ..*
*நாளை எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறீர்கள் ..🌸🌸

Friday 17 August 2018

#367 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1163 காமமும் நாணும் | Daily one thi...

🎯அடல்பிகாரி வாஜ்பாய்🇮🇳 😰 ⚖ஆட்சிக் கால நிஜச் சாதனைகள்...

🎯அடல்பிகாரி வாஜ்பாய்🇮🇳 😰

⚖ஆட்சிக் கால நிஜச் சாதனைகள்💥

✍🏻தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின்தான்...

✍🏻தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது ..

✍🏻இவர் ஆட்சியில்தான் 4.5 ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை.

✍🏻இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிற வில்லை ...
petrol 36/- rs per litre rate.

✍🏻இவர் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3 மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த  தொலைபேசி இனைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்...

✍🏻இந்தியா முழுவதும்  விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது..

✍🏻சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது.

✍🏻பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டது .

✍🏻இவர் ஆட்சியில்தான்  வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள்..

✍🏻வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்:

✍🏻விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர்  இவர் ஆட்சியில்தான் கேஸ் அடுப்பு வாங்கி உபயோகித்து நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்..

✍🏻இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக  இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..

✍🏻இவர் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான  தேசிய நெடுஞ் சாலை கள் கிடைத்தது .

💥அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை 
NH 208 மதுரை to கொல்லம்
 NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 ...NH 67 திருச்சி to  ராமேஸ்வரம் 
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல்  மற்றும் NH 45B ஆகியவை.

✍🏻இவர் ஆட்சியின் போதுதான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..

✍🏻இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது,.

✍🏻இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனாதிபதியானார்,.

✍🏻இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடப்பட்டது..

✍🏻இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை  அடக்கி சுற்றுலா சுலபமானது..

✍🏻இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது..

✍🏻இவர் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி  மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறை போக்கப்பட்டது..

✍🏻இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..

✍🏻இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது

✍🏻இவர் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்.. கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

✍🏻இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..

✍🏻இவர் ஆட்சியில்தான்  வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.

✍🏻இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..

✍🏻இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது...

✍🏻நாட்டு மக்களுக்காக மெய்யாலுமே திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.🙏🏻😢

Thursday 16 August 2018

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்! முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை ...

இந்தியாவை ஆண்ட தலைவர்கள் விபரம்!

முஹம்மது கோரி முதல் நரேந்திர மோடி வரை .

1193  : முஹம்மது கோரி
1206   :குத்புதீன் ஐபக்
1210   :ஆரம்ஷா
1211  : அல்தமிஷ்
1236  : ருக்னுத்தீன் ஷா
1236  : ரஜியா சுல்தானா
1240  : மெஹசுத்தீன் பெஹ்ரம்ஷா
1242  : ஆலாவுத்தீன் மஸூத் ஷா
1246  : நாஸிருத்தீன் மெஹ்மூத்
1266  : கியாசுத்தீன் பில்பன்
1286  : ரங்கிஷ்வர்
1287  : மஜ்தன்கேகபாத்
1290  :ஷம்ஷீத்தீன் கேமரஸ்
(கோரி வம்ச ஆட்சி முடிவு 97 வருடம்)
கில்ஜி வம்சம்
1290 : ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி
1292  :அலாவுதீன் கில்ஜி
1316  :ஷஹாபுதீன்  உமர் ஷா
1316  : குதுபுத்தீன் முபாரக் ஷா
1320  : நாஸிருத்தீன் குஸ்ரு ஷா
( கில்ஜி வம்ச ஆட்சி முடிவு 30 வருடம்)
துக்ளக் வம்சம்
1320  :கியாசுத்தீன் துக்ளக்
1325  :  முஹம்மது பின் துக்ளக்
1351  :பெரோஸ்ஷா துக்ளக்
1388  : கியாசுத்தீன் துக்ளக்
1389 : அபுபக்கர்ஷா
1389  :மூன்றாம் முஹம்மது துக்ளக்
1394  :அலெக்சாண்டர் ஷா
1394  : நாஸிருத்தீன் ஷா
1395  : நுஸ்ரத் ஷா
1399  :நாஸிருத்தீன் முஹம்மது ஷா.
1413  :தவுலத் ஷா
(துக்ளக் வமிச ஆட்சி 94வருடம்)
சையித் வம்சம்
1414  :கஜர்கான்
1421  :மெஹசுத் தீன் முபாரக் ஷா
1434  :  முஹம்மது ஷா
1445  :அலாவுதீன் ஆலம் ஷா
(சையத் வம்சம் 37 வருடம்)
லோதி வம்ச ஆட்சி
1451  : பெஹ்லூல் லோதி
1489  : அலெக்சாண்டர் லோதி
1517  : இப்ராஹிம் லோதி
 (லோதி ஆட்சி 75 வருடம்)
முகலாயர் ஆட்சி
1526  : ஜஹிருத்தீன் பாபர்
1530 : ஹிமாயூன்
சூரி வமிச ஆட்சி
1539   : ஷேர்ஷா சூரி
1545  :அஸ்லம் ஷா சூரி
1552  :மெஹ்மூத் ஷா சூரி
1553   :இப்றாஹிம் சூரி
1554  :பர்வேஸ் ஷா சூரி
1554 :முபாரக் கான் சூரி 1555 :அலெக்சாண்டர் சூரி
(16வருடம் சூரி ஆட்சி)
முகலாயர் ஆட்சி
1555  :ஹிமாயூன்
1556  :ஜலாலுத்தீன் அக்பர்
1605  :ஜஹாங்கீர் சலீம்
1628  :ஷாஜஹான் 
1659 : ஒளரங்கசீப்
1707 :ஷாஹே ஆலம்
1712  :பஹதூர் ஷா  1713 :பஹாரோகஷேர்   1719  :ரேபுதாராஜத், நேகஷ்யார்&மெஹ்மூத் ஷா
1754  :ஆலம்கீர்  1759 :ஷாஹேஆலம்
1806 :அக்பர் ஷா
1837 :பஹதூர்ஷா ஜஹபர்
(முகலாயர் ஆட்சி 315 வருடம் )
ஆங்கிலேயர் ஆட்சி
1858 : லார்டு கேங்க்
1862 :லார்டு ஜேம்ஸ்பரோஸ்எல்ஙன்
1864 : லார்ட் ஜான் லோதேநஷ்
1869 :லார்டு ரிசர்டு
1872 :லார்டு நோடபக்
1876 ;லார்டுஎட்வர்ட்
1880 :லார்ட் ஜார்ஜ் ரிப்பன்
1884 :லார்டு டப்ரின்
1894 :  லார்டு ஹேஸ்டிங்
1899 : ஜார்ஜ்கர்னல்
1905: லார்டு
கில்பர்ட்
1910 :லார்டு
சார்லஸ்
1916 :லார்ட் பிடரிக்
1921 : லார்ட் ரக்ஸ்
1926:.லார்ட் எட்வர்ட்
1931: லார்ட் பெர்மேன்வெலிங்டன்
1936 :லார்டு ஐ கே
1943:லார்டு அரக்பேல்
1947 : லார்டு மவுண்ட்பேட்டன்
( ஆங்கிலேயர்கள் ஆட்சி முடிவு)
சுதந்திர இந்தியாவின் ஆட்சி
1947:ஜவஹர்லால் நேரு
1964:குல்சாரிலால் நந்தா
1964:லால் பகதூர் சாஸ்திரி
1966:குல்சாரிலால் நந்தா
1966: இந்திராகாந்தி
1977: மொராஜி தேசாய்
1979: சரண்சிங்   1980:இந்திராகாந்தி
1984:ராஜீவ்காந்தி
1989:V P சிங்
1990:சந்திரசேகர்
1991:. P.V. நரசிம்மராவ்
1996 A.B.வாஜ்பாய் 13 நாள் ஆட்சி
1996:  A.J. தேவகொளடா
1997: I.K.குஜ்ரால்
1998:A.B.வாஜ்பாய்
2004 :மன்மோஹன்சிங்
2014:நரேந்திர மோடி

இதை தொகுத்த நண்பருக்கு நன்றி!

என்னதான் ஆச்சி இந்த 2033 க்கு...

ஜெயலலிதா மறைவு
5/12/2016
0+5+12+2016=2033
கலைஞர் கருணாநிதி மறைவு
7/8/2018
0+7+8+2018=2033
அடல் பிகாரி வாஜ்பாய் மறைவு
16/8/2018
1+6+8+2018=2033
என்னதான் ஆச்சி இந்த 2033 க்கு

Tuesday 14 August 2018

மானங்கெட்டத் தமிழனே...

மானங்கெட்டத் தமிழனே.
***************************
உலக மக்களின் பார்வை படும்
மெரினாவில்
அண்ணா சமாதி,
எம்ஜிஆர் சமாதி,
ஜெயலலிதா சமாதி,
பெரியார் சிலையென்று
எல்லா எளவும் இருக்குது

எங்கடா அந்த
ராஜராஜ சோழன் சமாதி ?

எங்கடா அந்த
ராஜேந்திர சோழன் சமாதி ?

எங்கடா போனது என்
சூர்யவர்மன் சிலை?

எங்கடா அந்த
குலோத்துங்கன் நினைவிடம்?

எங்கடா போனது அந்த
பாண்டிய மன்னனின்
நினைவு மண்டபம்.?

எங்கடா அந்த
கரிகால சோழனின் சிலை?

எங்கடா இருக்கு என்
வேலுநாச்சியார் சமாதி ?

எங்கதான்டா இருக்கு
சேரன் செங்குட்டுவனின் சமாதி ?

எங்கடா அந்த அழகுமுத்தோட
நினைவு மண்டபம்.?

எங்கு பார்த்தாலும்

அண்ணா அறிவாலயம்
அண்ணாநகர்,
அண்ணா சாலை
அண்ணா சிலை

பெரியார் மண்டபம்
பெரியார் பேருந்து நிலையம்
பெரியார் சாலை
பெரியார் சிலை

எம்ஜிஆர் மணிமண்டபம்
எம்ஜிஆர் பல்கலைகலகம்
எம்ஜிஆர் பேருந்து நிலையம்
எம்ஜிஆர் நகர்
எம்ஜிஆர் நூலகம்
எம்ஜிஆர் சாலை
எம்ஜிஆர் சிலை

அடுத்தால அம்மா, சின்னம்மா
புஜ்ஜிமா,கட்டுமரம்
இப்படி சொல்லியே
நாசமா போங்க..

உலக சாம்ராஜ்யங்களை
வென்றுகாட்டி நம் தேசத்திற்கு
வெள்ளையனைத் தேடி
வரவழைத்த நம்
முன்னோர்களுக்கு சரியான
சிலைகளுமில்லை,
நினைவு கட்டிடங்களும் இல்லை.

அவர்களின் வரலாறும்
வகுப்பறைப் பாடத்திட்டத்தில்
ஒழுங்காக இல்லை

இடையில் வந்த அத்துனை
கழிசடைகளின் வரலாறும்
பாடத்திட்டத்தில்
ஓங்கி ஒலிக்கிறது.

கரிகாலன் கட்டியக் கல்லணை
இன்றுவரை சுற்றுலாத் தலமாக
மாற்றப்படவில்லை.

மாபெரும் கடற்படையை கட்டமைத்து
உலகின் பல நாடுகளை வென்று
மாபெரும் சோழப் பேரரசை நிறுவிய
ராஜேந்திர சோழனை பற்றி
இங்கே கற்பிக்கப்படவில்லை!

ஒவ்வொரு தமிழனும் தினமும்
கோவிலுக்கு செல்கிறான்
அந்தக் கோவிலைக் கட்டியவன்
யாரென்று கூடத் தெரியாமல்

அந்தக் கோவிலைக் கட்டிய
மாமன்னன் தன் பெயரை அதில் பதிவிடாமல்
இருந்தாலும் கூட
அப்பேற்பட்ட அவனது
நடுநிலைத்தன்மையைப்
பாராட்டி நீ அல்லவா
அவனது பெயரை
உலகம் போற்றிட
செய்திருக்க வேண்டும்.?

ஒன்றுமே செய்யாமல்
இருந்துவிட்டாயே
நன்றி கெட்டவனே.

பசுவுக்காக தன் மகனையே
கொன்ற சோழனின்
கல்லறையை பாரடா..

கஜினி முகமதுவை
பதினேழு முறை
ஓடவிட்டு விரட்டிய
நம் சோழனின்
கல்லறையை பாரடா..

தான் கட்டியக் கோவிலில்
தன் பெயரை எழுதாமல்
அதில் வேலை செய்த
சிற்பக்கலைஞர்களின்
பெயரை எழுதி வைத்த
நம் ராஜ ராஜ சோழனின்
கல்லறையை பாரடா..

தெற்காசியாவை ஆண்ட
ஒரு மாமன்னனின்
கல்லறையை நீ வைத்திருக்கும்
கோலத்தைப் பாரடா
மானங்கெட்டத் தமிழனே.

அப்படி என்னாடா இந்த
இடையில் வந்தவன்
உனக்கு செய்துவிட்டான்?

இடையில் வந்த ரெண்டு
நல்ல மனுஷன் கக்கனும்,
காமராஜரும்

கக்கன் யாரென்று
யாருக்குமே தெரியாது.
காமராஜரை சாதிசங்க
தலைவராய் மாற்றி
வைத்துவிட்டாய்.

மாகராஷ்ட்ராவில் எத்தனையோ
தலைவர்கள் ஆண்டாலும்
இன்றும், முதல் மரியாதை
சத்திரபதி சிவாஜிக்குத்தான்.

அந்த மான உணர்வு
உனக்கு ஏனடா
இல்லாமல் போனது
மானங்கெட்டத்  தமிழனே..

*இதை படித்தவுடன் சவுக்கால் அடித்தது போல் இருக்கா...*

#364 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 427 அறிவுடையார் ஆவ | Daily one thir...