flipkart discount sale search here.

Tuesday 3 September 2019

மனிதன்...

மனிதன்,
5 வயதில் விரல்களை எண்ணினான்,
10 வயதில் எண்களை எண்ணினான்,
15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,
20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்
25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,
30 வயதில் நண்பர்களை எண்ணினான்,
35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,
40 வயதில் கடன்களை எண்ணினான்,
45 வயதில் நோயை எண்ணினான்,
50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,
55 வயதில் மாத்திரையை எண்ணினான்,
60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,
அதற்கு பின் வயதை எண்ணினான்,
இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.
எண்ணிப் பார்க்கையில் ,
தன்னிடம் கூடவே இருந்தது
கணிதம் மட்டும் தான்
என எண்ணினான் !! விடை என்னவோ
தொடக்கமும் முடிவும்"0" தான்.

Thursday 25 July 2019

செல்வம் குறைகிறதா எதனால் என்று பாருங்கள்...

செல்வம் குறைகிறதா எதனால் என்று பாருங்கள்.

1. கழுவபடாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே இருப்பது.

2. வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது.

3. தலைமுடி தரையில் உலாவருவது.

4. ஒற்றடைகள் சேருவது.

5. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது.

6. எச்சில் பொருள்கள் பாத்திரங்கள் காபி கப்புக்கள் ஆங்காங்கே இருப்பது.

6. பெண்கள் தினமும் தலைக்கு குளிப்பவர்களை தவிர மற்றவர்கள் செவ்வாய் வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிப்பது.

7. ஆண்கள் புதன் சனி தவிர மற்ற நாளில் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பது.

8. குழாய்களில் தண்ணிர் சொட்டுவது.சுவற்றில் ஈரம் தங்குவது.

9. செல் (கரையான்) சேருவது.

9. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது.

9. அதிக நேரம் ஈர துணிகள் போட்டு வைப்பது. தேவைக்கு அதிகமான பொருட்கள் வைத்து இருப்பது. வீணடிப்பது.

10. உணவு பொருள்கள் வீண்ணடிப்பது.

11. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது.

12. குறைந்த பட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பதாக வெளிச்சங்களை குறைப்பது.

13. மெல்லிசை கேட்காமல் சதா காலம் ராஜச இசையை, அபச இசைகளை கேட்பது.

14. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது.

15. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது.

16. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது.

17.வீட்டீல் எந்த நேரமும் சீரியல் பார்த்து கொண்டு வீன் கண்ணீர் வடிப்பது.

18.நான் தான் இந்த குடும்பத்தை பார்த்து கொள்கிறேன் என்று வீராப்பும் , திமிரோடும் சொல்லும் ஆண் பெண்களாலும்.

19.எனக்கு மட்டும் ஏன் இந்த நிலமை என்று சதா காலாமும் புலம்பி கொண்டே இருப்பது.

20.எனக்கு மட்டும் எப்ப பார்த்தாலும் நேரமே சரி இல்லை என்று சொல்லி கொண்டு இருந்தால் அதுவாகவே சரியில்லாமல் போய்விடும்.

21.பணத்தினை செலவு செய்யும் போது மனதில் விரக்த்தியுடன் செலவு செய்வது.

22.நல்ல நாட்கள் , நேரம் காலம் தெரியாமல் அசைவம் சாப்பிடுவது.

23.யாரை பார்த்தாலும் பொறாமைபடுவது.

24.நல்லதை யார் செய்தாலும் மனதார பாராட்டாமல் இருப்பதும்.

25.உதவி செய்தோருக்கு நன்றிகள் இல்லாமல் அவர்களுக்கே எதிரியாக செயல்படுவதும்.

26.உங்கள் குடும்ப உறிப்பினர்களுடம் வாரம் ஒரு நாட்கள்யாவது அல்லது தினமும் ஒரு மணி நேரமாவது குடும்ப்பாத்தாருடன்ம நேரத்தை செலவு செய்து ஆனந்ததை பெருங்கள் இல்லை என்றால் அகிலத்தையும் வென்றாலும் அவர்கள் வாழ்க்கை ஒரு பூஜ்யம் தான்.

எப்போதும் நல்ல எண்ணங்களையே எண்ணுங்கள். நல்ல எண்ணங்கள் மிகவும் வலிமையானவை. அவை உங்களுக்கு நல்லதையே கொண்டு வந்து சேர்க்கும்.ஜோதிட ஆசான் மு.கிருஷ்ண மோகன் சொல்கிறார், நீங்கள் உங்களை வலிமையானவராக நினைத்தால் வலிமையானவர்களாக மாறுவீர்கள். பலவீனராக நினைத்தால் பலவீனராகி விடுவீர்கள்.

உங்கள் எண்ணங்களுக்கு அவ்வளவு வலிமை உண்டு. எனவே எப்பொழுதும் எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து ஆரோக்கியமான நல்ல எண்ணங்களுக்கு மட்டுமே மனதில் இடம் கொடுங்கள்.

எனவே உங்கள் எண்ணம் உயர்ந்ததாக இருக்கட்டும். சுயநலம் அற்றதாக இருக்கட்டும். நல்லதாக மற்றவர்களுக்குப் பயன்படுவதாக இருக்கட்டும். இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களை உயர்த்தும்.

Monday 10 June 2019

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்.

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய பயன்தரும் 138 வீட்டுக் குறிப்புகள்.


பகிர்வு

🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿


1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் “ஷூ”க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு “ஷூ”விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.


பகிர்வு

🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.


31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.


பகிர்வு

🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿


75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்க நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

பகிர்வு

🅿 ❀ 🆅•❀ ❀•🅹 ❀ 🅿


100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு
சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.


பகிர்வு

Monday 13 May 2019

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..?

_*மகிழ்ச்சி!*_😄???
_எது மகிழ்ச்சி என்பது தொடர்பாக நிறைய கருத்துக்கள் உள்ளன!_

''மகிழ்ச்சி எங்கே இருக்கிறது..''?
...........................................

உலகில் பிறந்த எல்லாருமே மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள்.மனிதன் பொருட்களில், பணத்தில், பதவியில், பட்டத்தில் என்று பல வகைகளில் மகிழ்ச்சியைத் தேடி அலை கின்றான்.

இதில் கிடைத்துவிடாதா அதில் கிடைத்துவிடாதா என்ற ஏக்கத்தோடும், ஆதங்கத்தோடும் இங்கும் அங்கும் அலைகின்றான்.

இறுதியில் அவனுக்குக் கிடைப்பது ஏமாற்றமே.
மகிழ்ச்சி என்பது வெளியே விலை கொடுத்து
வாங்கக் கூடிய பொருளோ, இடமோ அல்ல.
இது ஒவ்வொரு மனிதனின் கையிலும் உள்ளது.

இந்த உண்மையை மனிதன் எப்போது உணர்ந்து கொள்கின்றானோ,அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ்கிறான்.

அப்போது அவனது மகிழ்ச்சியை அவனிடமிருந்து யாரும் எடுத்துக் கொள்ள முடியாது.

ஒர் ஊரில் பெரிய கோடீஸ்வரன் இருந்தான். அவனிடம் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் குவிந்து கிடந்தன.ஆனால்,மகிழ்ச்சியும், நிம்மதியும்தான் இல்லை.

உள்ளூர்லதான் மகிழ்ச்சி கிடைக்கல. வெளியூர், விதவிதமான நாடுகளுக்குப் போனா கிடைக்கும் என்று எண்ணி அதைத் தேடிப்போனான்…

ம்ஹூம் அங்கேயும் நிம்மதி கிடைச்சபாடில்ல. மனசுக்குள்ள எப்பவும் பரபரப்பு…

எந்த ஊருக்குப் போனாலும் அடுத்த நாளே, வீட்டுல என்ன ஆச்சோங்கிற கவலை. பணப் பெட்டி பத்திரமா இருக்குமாங்கிற பயம்… சொந்தக்காரங்களே அமுக்கிடு வாங்களோங்கிற சந்தேகம்!

இதை மறந்தாவது தொலைக்கலாம்னு சரக்கு, போதைப் பொருள்னு சகலத்திலும் இறங்கிட்டான்.

ஆனா ,அதிலும் நிம்மதி கிடைக்கல…சீ போதும் இந்த வாழ்க்கை…இனி துறவறத்தில் இறங்கி சந்நியாசியா போயிடலாம் அமைதி கிடைக்கும்னு யாரோ சொல்ல, அவனும் துறவறத்தில் இறங்க முடிவு செய்தான்..

அவன் தன் வீட்டில இருந்த தங்கம், வைரம், வைடூரியம்,எக்கச்சக்க பணம் எல்லாத்தையும் ஒரு மூட்டையா கட்டி எடுத்துக்கிட்டு ஒரு துறவியைப் பார்க்கப் போனான்.

அப்போது துறவி ஒருத்தரு மரத்தடியில உட்கார்ந்து  இருந்தார்.

அதைப் பார்த்த அந்த கோடீஸ்வரன்,அந்த மூட்டையை துறவியின் காலடில வச்சிட்டு,

“குருவே! இதோ என்னோட மொத்த சொத்தும் இதுல இருக்கு.இனி இவை எதுவும் எனக்கு வேணாம்.எனக்கு அமைதியும், மகிச்சியும்தான் வேணும்…அடுத்து என்ன செய்யணும் சொல்லுங்க…, என்று சொல்லி அவரை கும்பிட்டான்.

எல்லாத்தையும் கேட்டுக்கிட்ட துறவி,

உடனே அந்த மூட்டையை வேகமா பிரிச்சுப் பாத்தார். அதில் கண்ணை தங்கமும் வைர வைடூரியங்களும் கட்டுக் கட்டா பணமும் இருந்தது…

துறவி சடார்னு, அந்த மூட்டையை கட்டி தலையில் வைத்துக் கொண்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சார்.

அதைப் பாத்ததும் கோடீஸ்வரனுக்கு இன்னும் பேரதிர்ச்சி.

‘அடடா..இவன் பஞ்சத்துக்காக காவி கட்டிய போலி சாமியார் போலருக்கே’ன்னு பதறிட்டான்.கோபம் கோபமாக வந்தது. உடனே துறவியை துறத்த ஆரம்பிச்சிட்டான் நம்மாளு!

துறவியின் ஓட்டத்துக்கு செல்வந்தனால் ஈடு கொடுக்க முடியல. துறவி சந்து பொந்தெல்லால் சர்வ சாதாரணமா ஓடறார்.தாவிக் குதிக்கிறார்…

ம்ஹூம். பணக்காரனால ஒண்ணுமே பண்ண முடியல.ஆனா துறவி எல்லா தெருக்களையும் ஓடி முடித்து கடைசியில் அதே மரத்தடிக்கு வந்து நின்னுட்டார்!

அந்த கோடீஸ்வரனும் சிறிது நேரத்தில் அங்கு வந்தார்.

என்னப்பா பயந்துட்டியா…இந்தா உன் சொத்து மூட்டை…நீயே வச்சுக்க என்று திருப்பிக் கொடுத்தார். சொத்து மூட்டை கையில் வந்ததும் கோடீஸ்வரன் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...

ஒரே குதூகலமாயிட்டான்.முகமெல்லாம் சிரிப்பு தாண்டவமாடுது.இப்போது அந்த துறவி கேட்டார்…
“என்னப்பா…புதுசா சிரிக்கிற…இதுக்கு முன்னாடி இந்த செல்வமெல்லாம் எங்கே இருந்துச்சி உங்கிட்டதானே

ஆனால் ,அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல…இப்பவும் நீ வச்சிருக்கிறது அதே சொத்துதான்.ஆனா மகிழ்ச்சியும் நிம்மதியும் உன் முகத்தில் தெரியுது…!”என்று கூறி விட்டு, திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

எல்லாம் புரிந்த தெளிவோடு வீடு திரும்பினான் செல்வந்தன்!

ஆம்.,நண்பர்களே.,

மகிழ்ச்சியை வேறு எங்கும் தேட வேண்டாம் அது நம்மிடத்தில்தான் இருக்கிறது.
அதை அடையாளம் காண்பதில் தான் நமது வெற்றியும் மன நிறைவும் சேர்கிறது.

இனிய நாளாக அமைய  வாழ்த்துகள் _💐👍🏼👍

Saturday 11 May 2019

Mother's day quotes tamil

தாய் பாசம் உள்ளவர்களுக்கு இந்த கவிதை வலி புரியும்....

அம்மா...
நான் பிறந்து
விழுந்த போது...
உன் ( 👉 ) சேலைதான்
ஈரமானது...

நான் உறங்க...
உன் ( 👉 ) சேலைதான்
ஊஞ்சல் ஆனது..
.
நான் பால்
அருந்தும் போது...
உதட்டினை துடைத்தது
உன் (👉)சேலை தான்...

எனக்கு பால்
கொடுக்கும்போது...
உன் (👉)சேலை தான்
எனக்கு திரையானது...

நான் மழையில்
நனையாமல் இருக்க...
உன் (👉)சேலை
தான் குடையானது...

நீச்சல் பழக...
என் இடுப்பில் கட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மழையில் நனைந்த
என் தலையை...
துவட்டியதும்
உன் (👉)சேலை தான்...

மாம்பழம் தின்று
என் கை துடைத்ததும்
உன் (👉)சேலை தானம்மா...

ஆசிரியரின்
மிரட்டலுக்கு...
ஓடி ஒளிந்ததும்
உன் (👉)சேலைதான்...

அப்பா அடிக்க
வரும் போது...
என்னை ஒளித்து
வைத்ததும்...
உன் (👉)சேலை
தானம்மா...

அண்ணனுக்கு தெரியாமல்
மறைத்து வைத்து...
மிட்டாய் கொடுத்ததும்
உன் (👉)சேலை தான்...

காசு எடுத்தால் என்னை
கட்டி வைத்து அடித்ததும்...
உன் (👉)சேலை தான்...

தலை வலிக்கு ஒத்தடம்
கொடுத்ததும்...
உன் (👉) சேலை
தான் அம்மா...

அம்மா உன் (👉) சேலையை
தொட்டு பார்க்கிறேன்...

தொலைந்த இன்பத்தை
உன் கண்ணில் பார்க்கிறேன்...

மறு பிறவியிலும்
நீயே வேண்டுமென்று...
இறைவனிடம் கேட்கிறேன்
அம்மாவாக

*அன்னையர் தின வாழ்த்துக்கள்*

*நட்புடன் alliswell* ...

Thursday 9 May 2019

Life story #37

நிறைவான வீடு

சீனக் கதை

சீனாவில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு மூன்று மகன்கள். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் ஆகியிருந்தது. எப்போதும் வீடு மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், மருமகள்கள் தங்கள் தாய்வீட்டுக்குச் சென்றால், விரைவில் திரும்பி வர மாட்டார்கள்.

அன்றும் மருமகள்கள் தாய்வீடு செல்ல அனுமதி கேட்டனர்.  பெரியவர், “போய் வாருங்கள். வரும்போது நீங்கள் எனக்கு இரண்டு பொருட்களைக் கொண்டுவர வேண்டும். கொண்டு வராவிட்டால், மீண்டும் உங்கள் அம்மா வீடு செல்ல அனுமதிக்க மாட்டேன்” என்றார்.

“சரிங்க மாமா. என்ன வேணும், சொல்லுங்கள்?” என்றனர் இரு மருமகள்களும்.

“ஒரு காகிதத்தில் கொஞ்சம் காற்றை அடைத்துக் கொண்டு வரவேண்டும்” என்று ஒரு மருமகளிடமும், “காகிதத்தில் கொஞ்சம் தீயை கட்டிக் கொண்டுவர வேண்டும்” என்று இன்னொரு மருமகளிடமும் சொன்னார் பெரியவர்.

இதைக் கேட்டு மருமகள்கள் இருவரும் திகைத்தனர். சரி பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கிளம்பிவிட்டனர். தாய் வீட்டில் சந்தோஷமாகச் சில நாட்கள் இருந்தார்கள். வீடு திரும்ப வேண்டிய நாள் வந்ததும்தான் மாமனார் கேட்ட விஷயம் பற்றிய பயம் வந்தது.

இருவரும் கிளம்பினார்கள். வழியெங்கும் கவலையோடு புலம்பிக்கொண்டே நடந்தனர். அப்போது எருமை மீது சவாரி செய்துகொண்டு வந்த ஓர் இளம்பெண், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டார். இவர்களும் தங்கள் மாமனார் கேட்டதைச் சொன்னார்கள். அந்தப் பெண், “இவ்வளவுதானா, கவலைப்படாதீர்கள்” என்று சிரித்தார்.

முதல் மருமகளைப் பார்த்து, “ஒரு காகிதத்தில் விசிறி செய்து  கொடு. நீ ஒரு சிம்னி விளக்கை ஏற்றி, ஒரு காகிதத்தில் சுற்றி எடுத்துட்டுப் போ” என்றார்.

மருமகள்கள் இருவருக்கும் பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ச்சி. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

மாமனாரிடம் அந்தப் பெண் கூறியபடியே விசிறியையும், சிம்னி விளக்கையும் தந்தார்கள். அவர் ஆச்சரியப்பட்டார். இருவரும் வழியில் சந்தித்த அந்தப் பெண் பற்றிச் சொன்னார்கள்.

“இவ்வளவு புத்திசாலியான பெண்ணை, என் கடைசி மகனுக்கு மணம் முடிக்கப் போகிறேன்” என்றார் பெரியவர். அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பினார். கண்டுபிடித்துச் சொன்னதும், சம்பந்தம் பேசினார். திருமணம் இனிதே நடந்து முடிந்தது. வீட்டில் அனைத்தையும் பொறுப்பாகச் செய்தார் கடைசி மருமகள்.

பெரியவருக்கு மகிழ்ச்சி. நிறைவான வாழ்க்கை வாழ்ந்தார். எனவே தன் வீட்டு வாசலில், ‘இது நிறைவான வீடு’ என்று ஒரு பலகையை மாட்டி வைத்தார்.



சில காலம் கழித்து அந்த வழியே சென்ற ஒரு துறவி இந்தப் பலகையைப் படித்தார். ‘யார் இது, இவ்வளவு திமிராக எழுதி வைத்தது? இந்த வீட்டினருக்குப்  பாடம் புகட்டி, திமிரை அடக்கப் போகிறேன்’ என்று முடிவு செய்தார்.

வீட்டில் நுழைந்த அவரை, கடைசி மருமகள்தான்  வரவேற்றார். துறவி, “இது நிறைவான வீடாமே… அப்படியானால் எனக்கு இந்தச் சாலையின் நீளத்துக்கு ஒரு துணியை நெய்து கொடு. இல்லாவிட்டால் சபித்து விடுவேன்” என்றார்.

“கண்டிப்பாக நெய்கிறேன். சாலையின் இரு முனைகளையும் கண்டுபிடித்து, எவ்வளவு நீளம் என்று அளந்து தாங்கள் சொன்னால், அந்த அளவுக்கு நான் துணியை நெய்து கொடுக்கிறேன்” என்றார் மூன்றாவது மருமகள். அவர்கள் வீடு இருந்த சாலை எங்கோ வெகு தொலைவில் இருந்த தலைநகரத்திலிருந்து நாட்டின் எல்லைவரை சென்றது. அதன் ஆரம்பமும் முடிவும் யாருக்கும் தெரியாது என்பதால் துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

“சரி, வேண்டாம். கிணற்று நீர் அளவு எண்ணெய் ஆட்டிக் கொண்டுவா” என்றார் துறவி.

“தாங்கள் தயவு செய்து கிணற்றில் எத்தனை ஆழாக்கு நீர் உள்ளது என்று சொன்னால், உடனே அத்தனை ஆழாக்கு எண்ணெயை  ஆட்டித் தந்துவிடுகிறேன்” என்றார் மூன்றாவது மருமகள் பணிவோடு.

துறவிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சில நொடிகள் யோசித்தார். இந்தப் புத்திசாலிப் பெண்ணை மடக்குவது எளிதல்ல என்பதை உணர்ந்தார். யோசித்தபடியே, பறந்து வந்த ஒரு புறாவைச் சட்டென்று பிடித்தார்.

“நீ மிகவும் புத்திசாலியாக இருக்கிறாய். இந்தப் புறாவை நான் பறக்க விடப் போகிறேனா, இல்லை கூண்டுக்குள் அடைக்கப் போகிறேனா என்று சொல் பார்ப்போம்” என்றார் துறவி.

புத்திசாலி மருமகள் துறவியை வணங்கி, ”நீங்கள் முக்காலமும் அறிந்த ஞானி. வாசலில் நிற்கும் நான் இப்போது உள்ளே செல்லப் போகிறேனா, இல்லை தெருவில் இறங்கப் போகிறேனா என்று சொல்லுங்கள். நானும் உங்கள் கேள்விக்கு விடை தருகிறேன்” என்றார்.

துறவி அமைதியாக இருந்தார்.  “துறவியான தங்களுக்கே என் கேள்விக்கு விடை தெரியாதபோது, அனைத்தும் அறிந்த ஞானியான தங்களது கேள்விக்கு எனக்கு எப்படி விடை தெரியும்?” என்று கேட்டு மீண்டும் அவரை வணங்கினார் மூன்றாவது மருமகள்.

“நீ சொல்வதும் சரிதான். இந்த வீடு நிறைவான வீடுதான்” என்று சொல்லிவிட்டு, துறவி தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

வாந்தி வருவது ஏன்?

வாந்தி வருவது ஏன்?

* வாந்தி என்பது ஒரு தனிப்பட்ட நோயல்ல. நோய் வருவதற்கான ஓர் அபாய அறிவிப்பு. குறிப்பாக, வயிறு சரியில்லை என்பதை நமக்குத் தெரிவிக்கும் எச்சரிக்கை மணியாக இதை எடுத்துக்கொள்ளலாம்.

* உடலில் வாந்தி ஓர் அனிச்சைச் செயல் போல் ஏற்படுகிறது. மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.

* நம் வயிற்றுக்குள் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் உள்ள சென்ஸார் செல்கள் உடனே உணர்ந்து, ‘வேகஸ்’ நரம்பு வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும்.

* வாந்தி எடுத்தால்தான் பிரச்சினை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பிவைக்கும்.

* உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளைகள் பிரெனிக் நரம்பு, வேகஸ் நரம்பு, தண்டுவட நரம்பு, பரிவு நரம்பு, மூளைமைய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்.

* பேட்டரி சார்ஜ் தீர்ந்த கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளிவிடுகிற மாதிரி, இரைப்பை சிரமப்படும்போது, இரைப்பைக்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து சிறுகுடலையும் இரைப்பையையும் அழுத்தும். அப்போது உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேற்றப்படும்.

* இதுதான் வாந்தி. பெரும்பாலும் வாந்தி வருவதற்கு முன்னால் வாயில் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற முன்னறிவிப்புகளை வயிறு நமக்குத் தெரிவிக்கும்.

💥வாந்தி நல்லதா, கெட்டதா?💥

* வயிற்றில் தேவையில்லாமல் இருக்கிற உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியே தள்ள ஒரு சில முறை வாந்தியெடுப்பது நல்லதுதான்.

* அதற்காக ஒரு நாளில் நான்கு அல்லது ஐந்து முறை தொடர்ச்சியாக வாந்தி எடுத்தால், உடலில் இருக்கும் தண்ணீர்ச் சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும்.

* இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே சோர்வடைந்துவிடுவார்கள். இது ஆபத்து.

💥முக்கியக் காரணங்கள்💥

* கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவது, ஒத்துக்கொள்ளாத உணவைச் சாப்பிடுவது, அளவுக்கு அதிகமாக உணவைச் சாப்பிடுவது, இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் போன்றவை வாந்தியை ஏற்படுத்தும்.

💥காதும் ஒரு காரணம்தான்!💥

* காதடைப்பு, காது இரைச்சல், காதில் சீழ் போன்ற காதுப் பிரச்சினைகளாலும் வாந்தி வரும். காதில் ‘வெஸ்டிபுலர் அப்பாரட்டஸ்’ என்று ஓர் அமைப்பு உள்ளது.

* இதுதான் நம்மை நடக்கவைக்கிறது; உட்காரவைக்கிறது; உடலைச் சமநிலைப்படுத்துகிறது, இந்த அமைப்பு தூண்டப்படும்போது வாந்தி வரும். இதனால்தான் பேருந்தில் பயணிக்கும்போது, கடல் பயணம்/விமானப் பயணங் களின்போது வாந்தி வருகிறது.

💥கர்ப்பகால வாந்தி!💥

* கர்ப்பிணிகளுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு திடீர் திடீரென்று ஏறி இறங்குவதால், மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய மது குடித்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

* சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. தவிர, மூளைக்காய்ச்சல் போன்ற கடுமையான காய்ச்சல் ஏற்பட்டால் வாந்தி வரும். ஒற்றைத் தலைவலி, தலையில் அடிபடுதல், மூளையில் கட்டி, மூளை நீர் அழுத்தம் போன்றவற்றாலும் வாந்தி ஏற்படும். பூச்சிக் கடி, பாம்புக் கடி போன்ற விஷக் கடிகளின்போதும் வாந்தி வரும். ஊசி மருந்து, மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம்.

💥உளவியல் காரணங்கள்💥

* சிலருக்குக் கவலை, கலக்கம், பயம், பதற்றம், பரபரப்பு, மன அழுத்தம் போன்ற காரணங்களால் வாந்தி உண்டாவது வழக்கம். இந்த வாந்தி பெரும்பாலும் காலையில் எழுந்தவுடன் அல்லது காலை உணவு சாப்பிட்ட பின்பு ஏற்படும்.

* பகல் நேரப் பணிகளில் பிரச்சினைகளை எதிர்கொள்ளப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். உதாரணமாக, பள்ளிக்குச் செல்லப் பயப்படும் குழந்தைகள் காலையில் சாப்பிட்டதும் வாந்தி எடுப்பது இவ்வகையைச் சேர்ந்தது.

💥சின்னச் சின்னக் காரணங்கள்💥

* பார்வை, நுகர்தல், தொடுதல் போன்றவையும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோருக்கும் வாந்தி வருவது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பல்துலக்கித் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்குச் சில உதாரணங்கள்.

💥என்ன செய்யலாம்?💥

* வாந்தியை நிறுத்துவதற்குப் பல மருந்துகள் உள்ளன. என்றாலும், வாந்திக்கு என்ன காரணம் என்று தெரிந்து, அதற்குரிய சிகிச்சையைப் பெற்றால்தான் வாந்தி சரியாகும். அதற்கு மருத்துவர் உதவியை நாடுவதே நல்லது.

💥வாந்தியைத் தடுக்க வழி!💥

உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் சாப்பிடாதீர்கள்.அவசர அவசரமாகச் சாப்பிடாதீர்கள்.

* அளவுக்கு அதிகமாகவும் சாப்பிடாதீர்கள்.அஜீரணத்துக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிற கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

* வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓ.ஆர்.எஸ்’ எனப்படும் உப்பு சர்க்கரைக் கரைசலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது காய்ச்சி ஆறவைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.

* பயண வாந்திக் கோளாறு உள்ளவர்கள் பேருந்துப் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு ‘அவோமின்’ போன்ற வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்


*என்றும் அன்புடன்... #ALLISWELL

Thursday 14 March 2019

உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்..... Not sale your vote...

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...சிந்திப்போம் செயல்படுவோம்...
 உங்கள் வாக்குகளை விற்றுவிடாதீர்கள்.....

Wednesday 9 January 2019

பொங்கல் பரிசு தொகை உண்டு.... Pongal parisu theavaiyaa ithai paarunga...

👉 👉 உங்கள் ரேஷன்கார்டில் இந்த குறியீடு இருக்கிறதா? அப்போ பொங்கல் பரிசு தொகை உண்டு....


சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, எதற்காக பொங்கல் பரிசு பணம் வழங்குகிறீர்கள்? வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதற்காக பொங்கல் பரிசு பணம் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.

அதேநேரம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல அந்தியோஜனா திட்டம் கொண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது ஹைகோர்ட்.

ரேஷன்கார்டுகளில், PHH/PHH-AAY/NPHH/NPHH-S என்ற குறியீடுகளில் ஏதாவது உங்கள் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்களும் பொங்கல் பரிசு வாங்க தகுதியுடையவர்களாகும். அல்லது, பொங்கல் பரிசு தொகை கிடைக்காது.

Pongal parisu theavaiyaa ithai paarunga...

👉 👉 உங்கள் ரேஷன்கார்டில் இந்த குறியீடு இருக்கிறதா? அப்போ பொங்கல் பரிசு தொகை உண்டு....


சென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்களுக்கு, எதற்காக பொங்கல் பரிசு பணம் வழங்குகிறீர்கள்? வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் எதற்காக பொங்கல் பரிசு பணம் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது.

அதேநேரம் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஏழைகளுக்கு, பொங்கல் பரிசு தொகை வழங்கலாம் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டது. அதேபோல அந்தியோஜனா திட்டம் கொண்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பரிசுத் தொகை வழங்க அனுமதி அளித்துள்ளது ஹைகோர்ட்.

ரேஷன்கார்டுகளில், PHH/PHH-AAY/NPHH/NPHH-S என்ற குறியீடுகளில் ஏதாவது உங்கள் ரேஷன் கார்டில் இடம் பெற்றிருந்தால், நீங்களும் பொங்கல் பரிசு வாங்க தகுதியுடையவர்களாகும். அல்லது, பொங்கல் பரிசு தொகை கிடைக்காது.

Sunday 6 January 2019

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்...

ரேஷன் கடைகளில் முறைகேடு புகார் தகவல் தெரிவிக்க கீழ்கண்ட எண்ணிற்கு தொடர்புகொள்ளவும்
...........................................................
☄ *காஞ்சிபுரம்-  9445045604.

☄ *திருவள்ளூர்- 9445045605.

☄ *சென்னை-   9445045601.

☄ *சென்னை (வ)-    9445045602.

☄ *சென்னை (தெ)- 9445045603.

☄ *திருச்சி- 9445045618.

☄ *வேலூர்- 9445045606.

☄ *தஞ்சை- 9445045619.

☄ *தி.மலை- 9445045607.

☄ *திருவாரூர்- 9445045620.

☄ *விழுப்புரம்- 9445045608.

☄ *நாகை- 9445045621.

☄ கடலூர்- 9445045609.

☄ புதுகை- 9445045622.

☄ தர்மபுரி-9445045610.

☄ திண்டுக்கல்- 9445045623.

☄ சேலம்- 9445045611.

☄ தேனி- 9445045624.

☄ நாமக்கல்- 9445045612.

☄ மதுரை- 9445045625.

☄ ஈரோடு- 9445045613.

☄ சிவகங்கை- 9445045626.

☄ கோவை- 9445045614.

☄ விருதுநகர்- 9445045627.

☄ நீலகிரி- 9445045615.

☄ ராமநாதபுரம்- 9445045628.

☄ கரூர்- 9445045616.

☄ தூத்துக்குடி- 9445045629.

☄ பெரம்பலூர்- 9445045617.

☄ நெல்லை- 9445045630.

☄ கன்னியாகுமரி- 9445045631.

☄ கிருஷ்ணகிரி-    9445045632.

☄ அல்லது- 044-28592828

பிறரும் தெரிந்துகொள்ள பகிருங்கள்😉🌹

Thursday 3 January 2019

Life story #36



_ஒரு ஊரில் ஒரு கருமி வாழ்ந்து வந்தார்.._

_அவர் மிகப்பெரிய பணக்காரர்.. ஆனால் யாருக்கும் உதவ மாட்டார்.._

_ஆனால், ஒரு ஆசை மட்டும் வெகுநாட்களாக இருந்தது.._

*_தான் உயிருடன் இருக்கும்போதே.. சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்த்துவிட வேண்டும் என்ற ஆசை தான் அது.._*

_ஒருநாள், அவரது கனவில் ஒரு பெரியவர் தோன்றினார்.._

_*அவரின் ஆசையை நிறைவேற்றுவதாக கூறினார்..*_
_அவரை அழைத்துக் கொண்டு சென்றார்.._

_*முதலில் அவரை நரகத்திற்கு கூட்டி சென்றார்..*_

_அங்கு உணவு நேரத்தில் பெரிய, பெரிய அண்டாக்களில் சாதம்.. குழம்பு.. மற்றும் சுவைமிக்க பதார்த்தங்களும் இருந்தன.._
_அவரவர்களுக்கு தட்டுகள் கொடுக்கப்பட்டு சுவைமிக்க உணவு பரிமாறப்பட்டது.._

_எல்லோருக்கும் நாவில் எச்சில் ஊறியது.._

_ஆனால், அந்தோ பரிதாபம்.._

_அனைவராலும் கையை நீட்டி உணவுப் பொருளை எடுக்க முடிந்ததே தவிர, கையை மடக்கி வாய்க்கு உணவை கொண்டு செல்ல முடியவில்லை.._

_எனவே, அறுசுவை உணவு எதிரே இருந்தும் அவர்களால் உண்ண முடியவில்லை.._ _*அவர்களுக்கு பசியோடு ஆத்திரமும் சேர்ந்து கொண்டது..*_ _அனைத்தையும் கீழே தள்ளிவிட்டு.. அவற்றில் உள்ள உணவை கொட்டித் தள்ளினர்.. பின்னர் தாங்க முடியாத பசியினால் அழுது கொண்டே இருந்தனர்.. அது ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.._

_*அதன் பின்னர், அந்த பெரியவர் கருமியை சொர்க்கத்திற்கு அழைத்துச் சென்றார்..*_ _அங்கும், அதே போல.. நிறைய அருமையான சாப்பாடு வைக்கப்பட்டுருந்ததது.. அங்கு இருந்தவர்களுக்கும் கையை நீட்ட முடிந்தது.. ஆனால் தங்கள் வாய்க்கு அருகில் கொண்டு செல்ல கையை மடக்க முடியவில்லை.._

_ஆனால், அவர்களில் ஒருவர் தனது கையினால் இனிப்பு வகைகளை எடுத்து மற்றொருவர் வாய் அருகே நீட்டினார்.._

*_கையை மடக்கத்தானே முடியாது.. கையை நீட்டி எதிரே இருப்பவரின் வாயில் ஊட்டலாமல்லவா.._*

_இப்படியே அனைவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழ்ந்தனர்.. அனைவரின் வயிறும் நிரம்பியது.._

_கனவில் இருந்து மீண்ட கருமி.. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதே சொர்க்கம் என்பதை புரிந்து கொண்டார்.. தான் மட்டும் சுகமாய் வாழ நினைப்பது நரகம் என்பதை உணர்ந்தார்.. அன்றிலிருந்து அவர் அனைவருக்கும் உதவிகள் பல புரிந்து நல்வாழ்வு வாழ்ந்தார்.._


👇
*அடுத்தவருக்கு செய்யும் உதவியே.. ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு..*

*பிறரை மகிழ்வித்து மகிழ்..*

*அதுவே சொர்க்கம்..*


Life story #34



_அவ்வூரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை.._ _அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.._ _மக்கள் பசியால் வாடினர்.._

_நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.._
*ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம்.. சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் ஒரு வேளை உணவுக்காவது நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்* என்று வேண்டினர்..

_இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,_ *இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.. தினமும் ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன்.. என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!* என்றார்..

_மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரரை அழைத்தார்.._ *இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்.. ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும்.. கூடவும் கூடாது, குறையவும் கூடாது.. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருங்கள்..* என்றார்..

_மறுநாள், வேலைக்காரர் மோதகக் கூடையுடன் வெளியே வந்தார்.._ _அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.._ _கூடையை அவர்கள் முன் வைத்தார் அவர்.._

_பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.._ _ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.. எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.._

_இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது.. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.. ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது.. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள்.. அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய்.. அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.._

_அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.._ *ஐயா! இது உங்கள் தங்கக் காசு.. மோதகதுக்குள் இருந்தது.. பெற்றுக் கொள்ளுங்கள்!* _என்றாள் அவள்.._

*குழந்தாய்! உன் உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு.. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்..*  _என்றார் செல்வந்தர்.._

_துள்ளிக் குதித்தபடி வீட்டிற்கு ஓடினாள் அச்சிறுமி.._


👇
_*எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் இறைவனின் ஆசியை பெறலாம்..*_


Life story #35



_ஒரு ஞானி ஓர் ஊரில் தங்கியிருந்தார்.._ _அந்த ஊரைச் சேர்ந்த விவசாயி அவரது வீட்டுக்கு பின்னால் சுமார் இரண்டடி நீளமுள்ள ஒரு பாம்பை அடித்துக் கொன்றார்.._
_பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று தன் மனைவியிடம்_ *நான், மூன்றடி நீளமுள்ள பாம்பை கொன்றேன்..* _என்று சொன்னார்.._

_அதைக் கேட்டு அதிசயித்த மனைவி தன் பக்கத்துவீட்டுப் பெண்ணிடம்_ *என் கணவர் சுமார் ஐந்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக்கொன்றார்.. தெரியுமா?* _என்று பெருமையாகச் சொன்னார்.._

_அந்த பெண்மணியோ, தன் பக்கத்து தெருவில் உள்ள தோழியிடம்.._ *எங்கள் தெருவில் ஒருவர், சுமார் பத்தடி நீளமுள்ள பாம்பை தனி ஒருவராக அடித்துக் கொன்றார்* _என்று கூறினார்.._

_அதனைக் கேட்ட அத்தோழி_ *எங்கள் ஊரில் ஒருவர் முப்பதடி பாம்பை சாகடித்திருக்கிறார்..* _என்று தம்பட்டம் அடித்துக் கொண்டார்.._

_இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ஞானி.._ *மிகைபடுத்துவதால், கற்பனைத்திறன் வேண்டுமானால் வளருமே தவிர..* *உண்மை இருக்குமிடம் தெரியாமல் போய்விடும்..* _என்று ஊர் மக்களுக்கு அறிவுறுத்தினார்.._

_அதைக்கேட்ட விவசாயி_ *தான் இரண்டை  மூன்றாக்கியது.. இப்போது முப்பதாகிவிட்டதை அறிந்தான்..* _ஆனாலும், முப்பதடி பாம்பைக்கொன்ற பெறுமையையும் விட்டுக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.._
*தன் வீரம் பற்றி, புதிதாக வந்திருக்கும் ஞானிக்கு என்ன தெரியும்?*  _என்று அலட்சியமாக கேட்டான்.._

_உடனே, ஞானி விவசாயின் ஐந்து வயது மகனை அழைத்தார்.._ *உன் அப்பா.. முப்பதடி பாம்பை கொன்றாரா?* _என்று கேட்டார்.._

_ஆனால், அவனோ அவரை அதிசயமாக பார்த்து விட்டு.._ *செத்த பாம்பு, வளருமா?* என்று கேட்டான்..

_அதை கேட்டு ஞானி பெரிதாக சிரித்தார்_

*தனது தந்தையார், பாம்பை கொன்றதாக சொன்னபோது ஓடிப்போய் பார்த்திருக்கிறான்.. அது வெறும் இரண்டடி பாம்புதான் என்பதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது..*
*அந்தப் பையனைப் போல, எல்லோரும் உண்மையை ஆராய்ந்ருந்தால்.. வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காது இல்லையா..?* _என்று அவர் ஊர் மக்களை பார்த்து கேட்டார்.._

_மக்கள் அனைவரும் தலைகுனிந்து கொண்டனர்.._


👇
 *இன்று ஊரும் செய்திகளும் அப்படித்தான் உலா வருகிறது..*

*ஈரை பேனாக்கி..*
*பேனை பெருச்சாளியாக்கும் உலகமிது..*

ஆகையால்.. எதையும் ஆராயாமல் பரப்ப வேண்டாம்..

*நல்லவையே படிப்போம்..*
*நல்லவையே பரப்புவோம்..*


Life story #33

(தொடர்கிறது..)

*நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன்.. அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை..*
*தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை..*
*என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது..*
*கடவுளிடம் கதறி அழுதேன்..*

*ஐயா கனவான்களே.. கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார்..*

*நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது.. என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது..*

*நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன்..*

*அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது..*
*உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது..*

*கடவுள் இருக்கிறார்.. என்றும் இருக்கிறார்.. இதை விட நான் என்ன சொல்ல..*
_என்று முடித்தார் அவர்.._

_அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.._

_அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.._

_அந்த ஒரு ஜோடிக்கண்,_ *எதையும் சொல்லாதீர்கள்* _என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.._

_அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.._
_அந்த முதியவரை தழுவிக்கொண்டு_ *ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்..*
_இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.._


👇
*யாரும் யாருக்கும் கடவுளாகலாம்..*

_(இது ஒரு இராணுவ வீரரால் சொல்லப்பட்ட உண்மை கதை..                                        மார்க்கம் @ கூப்வாரா செக்டார் காஷ்மீர் பகுதி)_

*அழுவதை விட, அதிகமாக சிரியுங்கள்..*

*பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்..*

*வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்..*


Life story #32



_பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.._

_மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.._

_இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.._
_அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.._

_ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும்.._
_அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.._

_அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது.. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.._

*அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.. ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம்..* என்றார் மேஜர்..

_அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்.._ *சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்..  நாம் பூட்டை உடைக்கலாமே..* என்றார்..

_இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு.._
_*தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா*_ _என்று குழம்பினார்.._

_சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.._

_*வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்..*_

_அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.._

_அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக உண்டு புறப்பட தயாராகினார்கள்.._

_*நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..*_
_இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க.._

_*அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து.. அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு.. கதவை மூடி விட்டு.. தன் குற்ற உணர்ச்சி துறந்து.. புறப்பட்டார்..*_

_அடுத்த மூன்று மாத காலத்தில்.. அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றிட, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.._

_அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை.. ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்.._

_ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.._

_எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.._

_அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.._

_அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.._
_மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.._

_ஒரு வீரர் கேட்டார்.._ *தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..* என்று..

*அப்படி சொல்லாதீர்கள் தம்பி.. கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது..*

*மூன்று மாதம் முன்பு.. சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான்..*

(தொடரும்...

Life story #31



_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *கோவில்பட்டி-யை சேர்ந்த இன்கார்ப் இரவி* _அவர்களுக்கு_
*_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.._

_அக்கடையில் முதலாளியே தொழிலாளி.._

_ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்_ *முதலாளி மூளையிருக்கா..?* என்று கேட்பான்..

_அதற்கு முதலாளியோ_ *மூளை இல்லை* _என்றவுடன்,_
*என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?* _என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.._

_இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.._

_நாட்கள் நகர்ந்தன.._

_ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.._
_அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற,_

*அட இவ்வளவு தானே.. நான் பார்த்துக்கொள்கிறேன்..* _என்று நண்பரும் கூறினார்.._

_கடையை மூடப்போகும் சமயம்,_ _அத் திமிர்பிடித்தவன் வந்து.. முதலாளியிடம்,_ *முதலாளி மூளையிருக்கா..?* _என்று வழக்கம் போலக் கேட்டான்.._

_அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து,_
*இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது.. ஆனால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை..* என்றார்..

_திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த.. கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.._


👇
*எத்தனுக்கு எத்தன்.. இந்த உலகத்தில்.. ஏதோ ஒரு மூலையில்.. யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருப்பார்..*

*இந்த உலகில் நாம் தான் புத்திசாலி என்று இருப்பது தவறில்லை.. ஆனால் அதை வைத்து அடுத்தவரை முட்டாள் என கருதி காயப்படுத்தக் கூடாது..*


Life story #30



_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *தஞ்சாவூரை சேர்ந்த நிர்மல் ராஜ் சகோதரர்* _அவர்களுக்கு_
*_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் வந்தார்.._

_அந்த வீட்டில் நிறைய கன்றுகுட்டிகள் இருந்தன.._

_*அதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள்.. அதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில், கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன்..*_ _என்று செல்வந்தரிடம் கேட்டார்.._

_அவரும் கொடுத்து விட்டார்.._

_மிகச்சிறிய அந்தக் கன்று, தன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார்.._

_வழியில் மூன்று திருடர்கள் வந்தனர்.._

_கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர்.._

_முதலில் ஒருவன் வெளியே வந்து.._ _*சாமி! யாராவது பன்றிக்குட்டியைச் சுமப்பார்களா..? நீங்கள் சுமக்கிறீர்களே..?*_ _என்று கேட்டான்.._

_*மடையா..! மடையா..! இந்த கன்றுகுட்டியாடா..! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்..*_ _என்றதும் அவன் போய்விட்டான்.._

_அடுத்தவன் வந்தான்.._
_*யாராவது பன்றிக்குட்டியை சுமப்பார்களா..? நீர் சுமக்கிறீரே..?*_ _என்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார் அந்தணர்.._

_மூன்றாமவன் வந்தான்.._
_*சாமி..! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே..! பிறகேன், பன்றிக்குட்டியை சுமந்து செல்கிறீர்..?*_ என்றான்..

_அந்தணருக்கு பயம் வந்து விட்டது.._ _அந்த செல்வந்தர் கருமி போலும்..! என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பன்றியை மந்திரம்வைத்து கன்றுபோல மாற்றி தந்து விட்டார் என நினைக்கிறேன்.. உண்மையிலேயே இது பன்றிக்குட்டியாகத்தான் இருக்கும்.. என் கண்ணில் மட்டும் கன்றுக்குட்டி போல தெரிகிறது.. யாருமே இதைக் கன்று எனச் சொல்லவில்லையே என நடுங்கியவர், கன்றைகீழே இறக்கி விட்டுச் சென்றார்.._

_அதன்பிறகு.. திருடர்கள் எளிதாகத் கன்றுக்குட்டியை தூக்கிச் சென்று விட்டனர்.._


👇
*மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக.. நாம், நமது நல்ல முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே  இல்லை..*

*நம் முடிவில், நாம் உறுதியாக இருக்க வேண்டும்..*

*சுயபுத்தி தான் மனிதனுக்கு மிக முக்கியம்..*

Life story #29



_ஒரு வேடன் தன் மனைவி மற்றும் ஏழு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தான்.._
_அவன் தினமும் வேட்டைக்கு செல்வான்.._
_9 கொக்குகள் வரை வேட்டையில் தினமும் கிடைத்து வந்தது.._
_கொண்டு வந்து மனைவியிடம் கொடுப்பான்.._ _அவள் அவைகளை சமைத்து எல்லோருக்கும் பரிமாறுவாள்.._ _வேடனுக்கு ஒரே ஒரு கொக்கின் கறி தான் கிடைத்தது.._ _அவன் திருப்தி அடையவில்லை.._ _மேற்கொண்டு கிடைக்குமா என்று முயன்று பார்த்தான்.._ _கிடைப்பதாக இல்லை.._

மனைவியிடம் *நான் வேட்டையில் கொண்டு வரும் கொக்குகள் அனைத்தையும் சமைத்து, நீ சிறிது எடுத்து கொண்டு.. மீதம் எல்லாம் எனக்கே வைத்து விட வேண்டும் என்றான்..*
_இதைக் கேட்டு அவள் மிகவும் மனம் வருந்தி_ *பிள்ளைகளுக்கு என்ன கொடுக்க?* என்று கேட்டாள்..

_அதற்கு அவன்_ *பிள்ளைகளை எங்கேனும் காட்டுக்குள் அனுப்பி விடு, மிருகங்களுக்கு இறையாகட்டும்* என்றான்..

_அவள் பதறிபபோனாள்.._

_இருந்தாலும் மனதை கட்டுபடுத்தி கொண்டாள்.._
_ஏனென்றாள் இருக்கும் வெறியில் அவன் ‌ பிள்ளைகளை கொன்றாலும் கொன்று விடுவான் என பயந்தாள்.._

வேடன் கிளம்பினான்..

_*நான்வரும் சமயம் பிள்ளைகள் இருக்க கூடாது*_ என சொல்லி சென்றான்..

_காட்டில் எவ்வளவு முயன்றும் ஒன்று, இரண்டு கொக்குகளை பிடிப்பதே கஷ்டமாக இருந்தது.._

_வீட்டிற்கு வந்தான்.. பிள்ளைகளை காணவில்லை.._

மனைவியிடம் *எங்கே பிள்ளைகள்* என்றான்..

*நீங்கள் சொல்லியபடியே செய்து விட்டேன்* என்றாள்..

_உணவு என்றைக்கும் கிடைக்கும் அளவே அன்றும் அவனுக்கு சாப்பிட கிடைத்தது.._

மனதில் சிறிது கீறல் விழ ஆரம்பித்தது..

_மேலும் ஓரிரு நாட்கள் அப்படியே சென்றன.._

_மிகவும் புலம்ப ஆரம்பித்து விட்டான்.._

மனைவியிடம் *நான் தவறான முடிவு எடுத்து விட்டேன்.. நீயாவது என்னை மாற்றி இருக்க கூடாதா?* என்றான்..

அதற்கு அவள்  சிரித்து கொண்டே *இது நான் எதிர்பார்த்தது தான்* என்றாள்..

மறு நாள் வேட்டைக்கு கிளம்பும் முன் மனைவியிடம் *இன்று நல்ல நாளாக அமைய வேண்டும்* என்று புலம்பினான்..

அதற்கு அவளும் *நீங்கள் வேட்டைக்கு சென்று வாருங்கள்.. நல்ல வேட்டை கிடைக்கும்..* என்று ஆறுதல் சொல்லி அனுப்பினாள்..

*என்ன ஆச்சரியம்.. முன்பு போல் ஏழு எட்டு கொக்குகள் கிடைத்தன..* சந்தோஷமாக வீட்டிற்கு வந்தான்..

வீட்டில் அவனது குழந்தைகள்  விளையாடி கொண்டு இருந்தனர்..

*இப்பொழுது குழந்தைகள் இருக்கிறார்களே என அவன் வருத்தப்படவில்லை..*

அவர்களுக்கும் சேர்த்து தான் இன்று ஆண்டவன் அதிக அளவு கிடைக்க செய்து இருக்கிறார் என்பதை புரிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான்..

மனைவியிடம் *எப்படி குழந்தைகள் கிடைத்தன?* என்று வினவினான்..

*தங்கள் குணம் அறிந்து, நான் அவர்களை எனது தாயிடம் பத்திரமாக விட்டு வைத்து இருந்தேன்* என்றாள்..
_மனைவி மக்களோடு சந்தோசமாக வாழ ஆரம்பித்தான்.._


👇
*நாம் காக்க வேண்டிய அனைவருக்கும் சேர்த்து தான், ஆண்டவன் நமக்கு படி அளப்பார் என்பதை புரிந்துகொள்வோமாக..*



Life story #28


ஓர் அரசன் மூன்று அதிகாரிகளை தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த நியமித்து அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தார்..

ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும், அந்தஸ்தையும் வழங்கினார்..

மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன.. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தார் மன்னன்..

*ஐயோ.. நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்* என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்..

செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள்..

இந்த மூவருமே ஊழல்வாதிகளா அல்லது குற்றமற்றவர்களா என்பதை அறிய வேண்டும்.. என்று நினைத்தார் மன்னன்..

அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தார்..

இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்..

*மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன்..*

*உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும்.. அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்..*

*உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும்..*

*அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு, ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்..*

*நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்..*

*அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்..*

*அவன் அதை உண்டு, உங்களை வாழ்த்த வேண்டும்..*

*இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்..* என்றார்

_மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.._

_காடுகளில் காய், கனி, கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.._

_ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது.._

_மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.._

_மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.._

_அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.._

*_முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார்.._*

 *_நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.._*

_சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது.._

_ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.._

_இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார்.._

*_பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார்.._*

*_சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள்.._*

_மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம்.. கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அவர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.._

_மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை.._

*_பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள்.. என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.._*

_ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.._

_மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தார்.._

_அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டார்.._

*இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்..*

*அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்..*

*சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்..*

*அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்..* என்றும்


*அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு..* என்று உத்தரவிட்டார்..

மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை.. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்..

இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு, எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார்..

ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது..

மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டார்..

முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார்..

தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்..

மன்னன் அவருக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவரை முதன்மை அமைச்சர் ஆக்கிக் கொண்டார்..


👇
*நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை..*

*என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டார்..*
*ஆகையால் எப்பொழுதுமே*
*_நல்லதையே நினைப்போம்.._* *_நல்லதையே செய்வோம்.._*


Life story #27



_ஒரு அரசருக்கு ஓரே ஒரு மகள்.._
_அதாவது ராஜகுமாரி.._
_இந்த சிறுமி விளையாடும் போது கண் ஒன்றில் மண் புகுந்தது.._
_கண் சிவந்ததோடு, வீங்கவும் தொடங்கியது.._
_போதாத குறைக்கு, சிறுமியோ தன் கண்ணை கசக்கியவாறு அழுதுவந்தாள்.._ _அரண்மனை மருத்துவர் வந்து பரிசோதித்தார்.._

_மருந்து தயாரித்து சிறுமியின் கண்ணில் இட முயற்சிக்கும் போது, சிறுமி ஒத்துழைக்கவில்லை.. கண்ணை கசக்கியும், அழுதும் தொடர்ந்ததால் காயம் பெரியதானது.._

_அரசருக்கு தன் மகளின் காயம் பெரிய வருத்தம் தந்தாலும், மகளின் விருப்பத்தை மீறி கட்டாயப்படுத்துவதை மன்னர் விரும்பவில்லை.._

_அரண்மனை மருத்துவர் தனது இயலாமையை தெரிவித்து விழகிக் கொண்டார்.. சிறுமி அழுவதும் கண்களை கசக்குவதும் தொடர்ந்ததால் காயமும் எளிதாக ஆறுவதாக இல்லை.._

_இந்த செய்தியை அறிந்த பெரியவர் ஒருவர், இந்த நோயை மருந்து இல்லாமலேயே குணப்படுத்த முன்வந்தார்.._

_அரசரும் ஒப்புக்கொண்டார்.._

_இதை தொடர்ந்து பெரியவர் சிறுமியை பரிசோதித்தார்.._ _உதட்டை பிதுக்கினார்.._
_பின், அரசரைக்கண்டு *தனியாக பேச வேண்டுமே* என்றார்.._

_சிறுமி உள்பட அனைவருக்கும் ஒரு சஸ்பென்ஸ்.._ _மன்னர் வந்தார்.._ _மன்னரிடம் ஏதேதோ பெரியவர் விளக்கினார்.._

_பின் சிறுமியும் கேட்கும்படியாக, அரசரிடம் விளக்கம் தந்தார்.._ *இந்த கண்ணில் உண்டான காயம் மிக விரைவில் குணமாகிவிடும் இது பெரிய விஷயமில்லை..*

_*ஆனால், நான் கவலைப்படுவது அதற்காக இல்லை.. இந்த பெண்ணுக்கு வால் ஒன்று முளைக்க இருக்கிறது.. அது வளர்ந்தால், சுமார் முப்பது அடிவரை வளரும்.. அதன் பின் என்னாகுமோ என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் அதனால் எதுவும் பெரிய ஆபத்தில்லை..*_

_*சில நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும்.. சிறிது வால் தோன்றியதும் எனக்கு உடனடியாக அறிவித்து விடவேண்டும்.. அதற்கு மிக சிறந்த மருந்து ஒன்று உண்டு..*_

*அதைக்கொண்டு வால் வளராமல் செய்துவிடலாம், எவ்வளவு விரைவில் எனக்கு தகவல் கிடைக்கிறதோ, அவ்வளவு வேகம் வால் பெரிதாகாமல் தடுக்கலாம்* என்றார்..

_வாலுள்ள பெண்ணா?_
_சிறுமி, ராஜகுமாரிக்கு பயம் தோன்றியதில் வியப்பில்லை.. படுக்கை அறையிலிருந்த சிறுமி வெளியே வரவேயில்லை.._ வால் முளைத்ததா என்று அறிவதிலேயே கவனமாக இருந்தாள்..

*கண் வெகுவிரைவிலேயே குணமானது..*

பெரியவர் சிறுமியை பரிசோதித்து, *வால் முளைப்பதற்கான அறிகுறிகள் மறைந்து விட்டதாக* கூறினார்..

_எல்லாமே நல்லபடியாக முடிந்தது.. அரசரும் பொன்னும் பொருளும் அள்ளித்தந்து பெரியவரை பாராட்டினார்.._


👇
*சிறிய பிரச்சனைகளை, ஒரு பெரிய பிரச்சனை இடம் தெரியாமல் அழித்துவிடும்..*

_ஆகவே நாம் நம் சுய நலத்தை விட்டுவிட்டு பொதுநல சேவை, சமூக சேவை என்று இறங்கிவிட்டால்,_
_நமது கவலைகளும் பிரச்சனைகளும் இடம் தெரியாமல் ஓடிவிடும்.._

*அதனால், நமக்கு மட்டுமில்லை நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும்  நன்மைதான்..*


Life story #26



_ஒரு பணக்காரருக்கு மிகவும் அழகான மகள் ஒருத்தி இருந்தாள்.._

_வளர்ந்தவுடன் அவளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுத்து ஊரில் உள்ள தகுதியான இளைஞர்களுக்கு ஒரு போட்டி வைப்பதாகவும்,_
_அதில் வெற்றி பெறும் இளைஞனுக்கு தன் மகளை மணமுடித்து வைப்பதாகவும் அறிவித்தார்.._

_போட்டி நாள் அன்று, ஊரிலுள்ள வலுவான, திறமையான, புத்திசாலியான இளைஞர்கள் எல்லோரும் கூடுகிறார்கள்.._ _சிலர், கையில் பேப்பரும் பேனாவுமாய்.. சிலர், கையில் கத்தியுடன், சிலர் வீச்சரிவாளுடன், சிலர் துப்பாக்கியுடன்.. இப்படியாக.._

_அவர்களை, தன் மிகப்பெரிய நீச்சல் குளத்துக்கு அழைத்துப் போகிறார்.._

*இந்த நீச்சல் குளத்தில், இந்த முனையிலிருந்து, எதிர் முனைக்கு முதலில் யாரால் நீந்தி கடக்க முடிகிறதோ, அவருக்கு என் மகளை திருமணம் செய்து தருவேன்!*
 
_அவர் சொல்லி முடித்த வினாடியே, கடகடவென அனைவரும் நீச்சலுக்கு தயாராக, வேகமாக உடைகளை கழற்ற ஆரம்பித்த பொழுது.._

*அது மட்டுமில்லை.. கூடவே ஒரு 10 கோடி ரூபாய் பணமும், ஒரு தனி பங்களாவும் கூட தருவேன்.. அப்பொழுதுதானே, என் அருமை மகள் தன் மணவாழ்வை சுகமாக ஆரம்பிக்க முடியும்!*

*சரி.. உங்கள் எல்லோருக்கும் நல்வாழ்த்துகள்! என் மருமகனை, நான் நீச்சல் குளத்தின் மறு கரையில் சந்திக்கிறேன்* என்றவாறு, அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்..

_சொல்லி முடித்தவுடன்.. மொத்த இளைஞர்களும், இன்னமும் வேகமாக தண்ணீரில் இறங்க முற்பட்ட பொழுது.._ *அந்தப் பணக்காரரின் ஹெலிகாப்டர், அந்த நீச்சல் குளத்துக்கு நேர் மேலே பறந்து வந்து,*
_*டஜன் கணக்கில் முதலைகளை, அந்தக் குளத்தில் இறக்கிவிட்டுச் சென்றது*_

_அவ்வளவுதான்! அத்தனை பேரும், மரண பயத்தில் உடனே பின்வாங்கி ஏமாற்றத்துடன் மீண்டும் தங்கள் உடைகளை மாட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.._

*இதென்ன பைத்தியக்காரத் தனமாக இருக்கிறது? யாரால் இது முடியும்? பார்க்கலாம்! எவன் இதில்  ஜெயிக்கிறான் னு?*
 *நிச்சயமா எவனாலும், முடியாது* என்று சத்தமாய் பேச ஆரம்பித்தனர்..

அப்பொழுது..

_*திடீரென்று, ஒருவன் குளத்தில் குதிக்கும் சத்தம்*_

_அத்தனைபேரும் மூச்சுக்கூட விட மறந்து.._
_உச்சபட்ச அதிசயத்தில், அவனையே, கண்ணிமைக்காமல் கவனிக்க ஆரம்பித்தனர்_

_அந்த இளைஞன்.. மிகவும் லாவகமாக, அத்தனை முதலைகளிலுமிருந்து விலகி.. விலகி.. மிக வேகமாய் நீந்தி, அடுத்த கரையில் விருட்டென ஏறி,_

வெடவெடவென நின்றான்..

*பணக்காரரால், தன் கண்களை நம்பமுடியவில்லை..*

*பிரமாதம்.. நான் தருவதாக சொன்ன விஷயங்களுக்கும் மேல.. உனக்கு என்ன வேணுமோ கேளு.. நான் தருகிறேன் எதுவாக இருந்தாலும்..*

_அந்த இளைஞனோ, இன்னமும் நடுக்கத்திலிருந்து மீளவில்லை_
_வாய் தந்தியடித்தது, மிரட்சியில்_
_கண்கள் அரண்டு போய் இருந்தது_

பின், ஒருவித வெறியுடன்..
*அதெல்லாம் இருக்கட்டும்..  என்னை, இந்த குளத்தில் தள்ளிவிட்டவனை மட்டும், யாருன்னு எனக்கு காட்டுங்கள்..* என்றான்


👇-1 :
முதலைகள் இருக்கும் நீரில் தள்ளிவிடப்படும் வரை.. உன் திறமை என்னவென்று,
உனக்கே தெரியாது! (அந்த ரப்பர் முதலைகள் போன்றே, பிரச்சினைகளும் போலிதான்.. என்பதும் புரியவரும்!)

👇-2 :
உன்னை, முதலைகளுக்கு காவு குடுக்க நினைத்தவர்கள்..
உண்மையில், உன் உள்ளிருந்த திறமையை வெளிக்கொண்டுவந்து, உன் கனவு எதிர்காலத்தை அடைய உதவியவர்களே! (நன்றி காட்டாவிட்டாலும், வன்மம் வேண்டாமே!)

👇-3 :
சிலநேரம், மிகவும் மோசமான தருணங்களை கடக்கும்பொழுதுதான்,
நம் உள்ளிருக்கும் நிஜத் திறமை வெளிப்படும்!

👇-4 :
சிலருக்கு.. இம்மாதிரி, அசாத்திய பிரச்சினைகளில் வலுக்கட்டாயமாக தள்ளப்படும்பொழுது மட்டுமே,  அவர்களால் வாழ்வின் உயர் இலக்கை அடைய முடிகிறது! (சில தொலைநோக்குப் பெற்றோருக்கு, இந்த சூட்சுமம் தெரியும்! பெற்றோரை நம்புங்கள்!)

Life story #24



ஒரு சீடன் தன் குருவிடம் கேட்டான்..
*குருவே! நல்லதைப் படைத்த இறைவன்தானே கெட்டதையும் படைத்துள்ளான்.. அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன..?*

_குரு அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.._

_தன் கேள்விக்கு குருவாலேயே பதில் அளிக்க முடியவில்லை என்று நினைத்துக்கொண்டான் சீடன்.._

_பகல் உணவுவேளை வந்தது.._

_அப்போது தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்துவிட்டான் சீடன்.._

_ஒரு கிண்ணத்தில் பசுமாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டிருந்தது.._

_சீடன் விழித்தான்.._

குரு, புன்முறுவலுடன் சொன்னார் *பால், சாணம் இரண்டுமே பசுமாட்டிடம் இருந்துதான் கிடைக்கிறது.. பாலை ஏற்றுக்கொள்ளும்போது சாணத்தை ஏற்றுக்கொள்ளக் கூடாதா..? என்றார்*

_சிஷ்யன் மௌனமானான்.._

குரு கூறினார் *இந்த உலகத்தில் நல்லது, கெட்டது இரண்டும் உள்ளது.. ஒருவருக்கு நல்லதாக இருப்பது, இன்னொருவருக்கு கெட்டதாக இருக்கும்.. உதாரணமாக உன் தட்டில் உள்ள சாணம் உனக்கு உணவல்ல.. ஆனால் அது சில உயிர்களுக்கு உணவாகிறது..*

*எது மனிதர்களுக்கு நல்லதோ அது பிற உயிர்களுக்கு கெட்டதாக இருக்கலாம்.. எது மனிதர்களுக்கு கெட்டதோ அது பிற உயிர்களுக்கு நல்லதாக இருக்கலாம்..*

*இயற்கையில் எல்லாம் உள்ளது.. நமக்கு எது நல்லதோ அதை மட்டும் ஏற்றுக்கொண்டு வாழவேண்டும்.. கடவுளின் செயல்களை முழுமையாக யாராலும் அறியமுடியாது* என்று கூறினார்..



Life story #25

கதை..

துறவி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார்..

பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்..

இளைஞன் ஒருவன் வந்தான் *_சாமி எனக்கு ஒரு சந்தேகம்.._* *உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்..*
*_ஆனால் இன்றும் மனிதன் தீயவழியில் தான் செல்கிறான்.. உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்..??_* என்று கேட்டான்..

துறவி  அவனிடம் சொன்னார்..
*தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன், அதற்கு முன் ஒரு வேலை செய்..*

_*ஒரு குதிரையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை..*_
*_நான் ஊரைவிட்டு செல்லும் வரை குதிரை அங்கேயே கட்டி இருக்கட்டும்.._*

*தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு* _என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார்.._

_மறுநாள் காலை துறவி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார்.._

_அப்பொழுது அந்த இளைஞன் அந்த குதிரையை சுத்தி இருந்த சாணத்தையும், அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான்.._

_இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன.._

_அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞரிடம் வந்தார் துறவி.._
*தினமும் நீ சுத்தப் படுத்தினாலும்.. இந்த இடத்தை குதிரை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே.. பிறகு ஏன் தேவை இல்லாமல் சுத்தம் செய்கிறாய்..??* என்று கேட்டார்..

_அதற்கு அவன்,_
*என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்க ரீங்க..?*

_*திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுனு சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா..?*_

_இதை கேட்ட துறவி  அப்போது சொன்னார்_ *தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு, இதுதான் பதில்..*

*நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன், அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல், மனிதர்களை நல்வழி படுத்தும்  செயலை பெரியோர்கள் இடைவிடாமல் செய்வார்கள்..*

இளைஞன் கேட்டான்.. *சாமி இதற்கு நிறந்தர தீர்வு என்ன..?*

_அவர் உடனே அங்கு கட்டி இருந்த குதிரையை அவிழ்த்து விட்டு விரட்டினார்,_

_பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்.._
*இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா..?*

*ஆகாது சாமி..* என்றான்..

துறவி  கூறினார்.. *உன் கேள்விக்கு இதான் பதில்..*

*நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம்..*

*இப்பொழுது, நான் செய்த வேலையைப் போல்..* _*என்று மனிதன் தன்னிடம்  இருக்கும் தீய எண்ணம் என்ற குதிரையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,*_  *அப்பொழுதே எங்களின் சுத்தப் படுத்தும் கடமை முடிந்து விடும்,* *_அன்று வரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார்..!_*


ஒரு ஆணின் கண்ணீர்.மிகவும் மென்மையானது...

🌼பெண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள்,  இறுதியாக ஆணை படைக்க ஆரம்பித்தார்.

🌼ஒரு நாள், இரு நாள் அல்ல.

🌼தொடர்ந்து 6 நாட்களாக ஆணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.

🌼இதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்?” என்றது.

🌼அதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை வரங்களாக கொடுக்க வேண்டும்.

🌼இந்த ஆண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும்.

🌼அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும்.

🌼சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவன் மருந்தாக இருக்க வேண்டும்.

🌼அவனுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவனே அவனை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 24மணி நேரம் உழைக்க வேண்டும்.

🌼இது அத்தனையும் செய்ய அவனுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.

🌼“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும?” என்று ஆச்சரியப்பட்டதுதேவதை.

🌼ஆர்வத்துடன் லேசாக ஆணை தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவனை ரொம்ப கடினமாக படைத்திருக்கிறீர்களே?” என்றது தேவதை.

🌼அதற்கு கடவுள், “இவன் உடலளவில் கடினமானவன்

🌼ஆனால் மனதளவில் ரொம்ப ரொம்ப மென்மையானவன்

🌼அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவான்

🌼அது மட்டுமல்ல, அவனால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும்.

🌼கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவனுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும்.

🌼சிரிப்பு வந்தாலும் அதை  கோபம் மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்டு.

🌼தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வான்

🌼மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவான் ,” என்றார்.

🌼“ஓ………இந்தளவுக்கு ஆணால் யோசிக்க முடியுமா?” தேவதை கேட்டது.

🌼“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல.

🌼அவற்றுக்கு தீர்வையும் அவனால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.

🌼அந்த தேவதை ஆணின் கண்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவன் கண் ஏன் வரச்சியாக இருக்கு இவன் கண்களில் கண்ணீர் வராதா? என்றது

🌼“ஒரு ஆணின்  கண்ணீர்.மிகவும் மென்மையானது அது எப்பவும்மே வராது அது வந்தால் அவனை மட்டும் அல்ல அவனை சுற்றி உள்ள அனைவரையும் பாதிக்கும் என்பதால், அவனுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே சிரித்தே கடந்து செல்வான் ,” என்று பதிலளித்தார் கடவுள்.

🌼ஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான்.

🌼இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா?” என்றது தேவதை.

🌼“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவனுக்கு எப்போதுமே தெரியாது,”…… கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.

அனைத்து ஆண்களுக்கும் சமர்ப்பணம்..!