flipkart discount sale search here.

Friday 24 November 2017

கண்டுபிடிங்க... புதிர் கதை... கொலையாளி யார் | Who is the Killer?

#கண்டுபிடிங்க   புதிர் கதை

கொலையாளி யார் | Who is the Killer?

அன்று ஞாயிற்றுக் கிழமை.காலையில் தாமதமாக எழுந்து குளிக்கப்போனான் அந்தக் குடும்பத் தலைவன்.அவனது மனைவி சிறிது நேரம் கழித்து பாத்ரூம் போனாள்.அங்கேதனது கணவன் பாத்ரூமில் கொல்லப்பட்டுக் கிடப்பதைக்கண்ட மனைவி, உடனடியாக காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தாள்.காவலர்கள் வந்தார்கள். ஆய்வாளர் தனது விசாரனையைத் துவக்கினார்.விசாரனையின் முடிவில் சில விஷயங்களைத் தெரிந்து கொண்டார்.

1- மனைவி காலையில் தான் தூங்கிக் கொண்டு இருந்ததாகக் கூறினாள்.
2- தான் காலை உணவு தாயாரித்துக் கொண்டிருந்ததாக சமையல்காரன் சொன்னான்.
3- பூச்செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்ததாக தோட்டக்காரன் சொன்னான்.
4- தபால்காரரிடம் கடிதங்களைப் பெற்றுக் கொண்டிருந்ததாக வேலைக்காரன் கூறினான்.
5- காரைத் துடைத்துக்கொண்டிருந்ததாக டிரைவர் கூறினான்.

இதையெல்லாம் கேட்ட ஆய்வாளர், உடனே குற்றவாளியைக் கைது செய்தார்.

                 யார் குற்றவாளி???

1. மனைவி
2. சமையல்காரன்
3. தோட்டக்காரன்
4. தபால்காரன்
5. வேலைக்காரன்
6. டிரைவர்

1 comment:

  1. Velaikaran.. because sunday post office leave. So there is no chance to collect the letters.

    ReplyDelete