flipkart discount sale search here.

Thursday 31 May 2018

கௌ ஙௌ சௌ Kaw ngow saw in tamil | உயிர்மெய் எழுத்துக்கள் | Uyirmei eluthu...

#289 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 951 இற்பிறந்தார் கண்அல்லது | Daily ...

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ள தனிமம்...

புதியதாக வேதியலில் சேர்க்கப்பட்டு உள்ள தனிமம்.,

பெயர் : மனைவி

குறியீடு: Wf

அணு நிறை: முதலில் பார்க்கும்போது இலகுவாக தெரியும், நாட்கள் ஆக ஆக எடை கூடிக் கொண்டே போகும்.,

உடற்கூறு தன்மை:
எப்பொழுதும் அன்பில் உருகக் கூடியது.,

எப்போதும் அன்பில் உறையக்கூடியது.,

தவறாக பயன்படுத்தினால்  கொதிக்ககூடியது.,

வேதியல் தன்மைகள்:

எளிதில் எதிர்வினை புரியக் கூடியது.,

அதிக நிலைத் தன்மை அற்றது.,

தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பணம், காசு, காசோலை என அனைத்தையும் ஈர்க்கும் தன்மை கொண்டது.,

பணமதிப்பை குறைக்கும் வல்லமை கொண்டது.,

காணும் இடங்கள்;

அழகு நிலையம், நகைக் கடைகள், பன்னாட்டு நவீன வணிக வாளகங்கள் மற்றும் ஐஸ் கிரீம் கடைகள்.,

கணவனின் உறவினர்களை கண்டால் எளிதில் தீ பற்றக் கூடியது.,

தனது பெற்றோர்களுடன் இருக்கும் போது இன்பம், மகிழ்ச்சி, குதூகலம், துள்ளல், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஒரே  பன்முக தன்மை உடையதாக இருக்கும்.,

மனப்பான்மை:

நானே இந்த பூலோகத்தின் ராணி, என்னை மிஞ்சிய அழகும், திறமையும், ஆற்றலும், அறிவும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை என்ற நினைப்பு.,

ஆக மொத்தத்தில் புரிந்து கொள்ளவே முடியாத புதிராக இருக்கும்.,

😛😛😛

Monday 28 May 2018

#286 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 98 சிறுமையுவு நீங்கிய | Daily one t...

மிகவும் சிந்திக்கவேண்டிய* *one of the BEST essay...

.  👉 *உறவு முறைகள்* *பற்றி* 👈

*மிகவும் சிந்திக்கவேண்டிய*
*one of the BEST essay*
~~~~~~~~~~~~~~~~~~~

*அண்ணன், தம்பி, அக்கா,* *தங்கை, சின்ன அண்ணன்,* *பெரிய அண்ணன், சின்ன அக்கா,* *பெரிய அக்கா,*
*சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான்,* *மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார்,* *தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு,*
*பெரியப்பா பையன்,*
*பெரியப்பா பொண்ணு,*
*அத்தை பையன்,*
*அத்தை பொண்ணு,* *மாமன்* *பொண்ணு,*
*மாமன் பையன்,*

இது போன்ற வார்த்தைகள் எல்லாம் *2050* மேல் யாருடைய காதிலும் விழாது,

யாரும் கூப்பிடவும் மாட்டார்கள்,

அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிடும்.

👉 *காரணம், . . .*

 *ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு* என்று ஒரே ஒரு குழந்தை மட்டும் போதும் என்று முடிவெடுக்க ஆரம்பித்ததுதான்!

அப்படி இருக்கும் போது இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும்?

பெண்கள் வயதுக்கு வந்ததும் சீர்வரிசை செய்யவோ, பந்தல் போடவோ, முதல் புடவை எடுத்துத்தரவோ எந்த தாய்மாமனும் இருக்கப்போவது இல்லை!

திருமணத்தின் போது அரசாணைக்கால் நட
எந்த அண்ணனும் இருக்கப்போவதில்லை,

மாப்பிள்ளைக்கு மோதிரம் போட எந்த தம்பியும் இருக்கப்போவதில்லை,

குழந்தைக்கு மொட்டை போட யார் மடியில் உட்கார வைப்பார்கள்?

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கு எதாவது பிரச்சனை என்றால் அண்ணனும், தம்பியும் பறந்து செல்வார்கள்.

👉 *இனி யார் போவார்?*

ஒவ்வொரு பெண்ணும், சொந்தபந்தம் ஏதுமின்றி
ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்க போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும்
தன் கஷ்டநஷ்டங்களில் பங்குகொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப்பட போகிறார்கள்.

அப்பா, அம்மாவை தவிர எந்த உறவுகளும் இருக்கப்போவதில்லை,

அந்த ஒரு குழந்தையும்
வெளியூருக்கோ,
இல்லை தனிக்குடித்தனமோ சென்றுவிட்டால், . . .
ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என்று வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை அந்த ஒரு குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்!

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு
ஒரு குழந்தைக்கு மேல் வேண்டாம் என சோம்பேறித்தனப்பட்டு
எந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கும் அத்தனைபேருக்கும்
இதே நிலைதான் !

உடல்நிலை சரியில்லாமல் ஆஸ்பிடலில் சேர்க்கப்பட்டால் ஓடோடி வந்து பார்க்க உறவுகள் வேண்டாமா?!

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம்
எனக்கு, உனக்கு என்று சண்டைபோடும் அதே குழந்தைகள் தான், . . .

வயதான காலத்தில் அப்பா, அம்மாவுக்கு எதாவது ஒன்று என்றால் நான் நீ என்று ஓடிவருவார்கள்!

கணவன் குடும்பம், குழந்தை என்று உயிரைவிட்ட பெண்கள் கூட பெற்றோருக்கு
ஒன்று என்றால் அத்தனையும் தூக்கியெறிந்துவிட்டு முதலில் வந்து நிற்பார்கள்!

ஒரே ஒரு முறை உங்கள் கடைசி காலத்தை நினைத்துபாருங்கள்!

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை!

*ஆனால், உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்துவிடக்கூடது!*

கார், பங்களா வசதி வாய்ப்புகளுடன்
ஒண்ணே ஒண்ணு , கண்ணே கண்ணு என்ற பெயரில் உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும்,

*வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா இவ்வளவு பாடுபட்டு, . . .*

               😳👇😟

*ஓடி ஓடி சம்பாதிக்கிறீர்கள்?*

.    👉 *Plz share to all* 👈

😳😳😳😟👍😟😳😳😳

Saturday 26 May 2018

#284 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 841 அறிவின்மை இன்மையுள் | Daily one...

மனைவிய உண்மையா நேசிக்குறவங்க நேசிக்கணும்னு நினைக்குறவங்க இந்த பதிவ படிக்காம கடந்து போயிராதிங்க...

மனைவிய உண்மையா நேசிக்குறவங்க நேசிக்கணும்னு நினைக்குறவங்க இந்த பதிவ படிக்காம கடந்து போயிராதிங்க .

        என் பேரு அனிதா .சொந்த ஊர் காரைக்குடி .ஊர பத்தி நிறைய சொல்ல வேண்டியது இல்ல.அடுக்கடுக்காய் அழகான வீடுகள் .நேர்மையான சடங்குமுறை திருமணங்கள் .அனைவரும் விரும்பும் உணவு முறைகள் .அன்பான உபசரிப்புகள் என காரைக்குடியின் அடையாளங்கள் தனித்துவம் வாய்ந்தவை .இந்த ஊர்ல எங்கப்பா ஒரு போஸ்ட் மேன்.அம்மா வீட்ட பாத்துக்குறாங்க .எனக்கு ஒரு அக்கா ,ஒரு தம்பி.அப்பா ரோம்ப கஷ்டப்பட்டு தான் படிக்க வச்சுட்டு இருந்தாரு.எங்க அப்பாவுக்கு ஒரு தங்கச்சி சின்ன வயசுலேயே கணவன இழந்தவங்க.எங்கப்பா நிழல்ல தான் இருக்காங்க .அவுங்களுக்கு ஒரே பையன் பேரு ராம்குமார்.எங்க பாட்டிக்கு என்ன மட்டும்  ரோம்ப புடிக்கும் .எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அதுக்கு ரோம்ப ஆசை.

           எங்க மாமா வீட்டுக்கு வந்தாளே "உன் புருஷன் வர்றான்டி"சொல்லும் எனக்கு கோபமா வரும் .ஆனால் நான் பெரிய பொண்ணு ஆனதும் எங்க மாமா மேல தனி பிரியம் வளர்ந்தது .மாமா வந்த ஓடி போய் ஒளிஞ்சுக்குவேன்.ஆனால் மறைஞ்சு மறைஞ்சு பாத்துட்டு இருப்பேன் .எங்க பாட்டி புருஷன்னு சொல்லி சொல்லி அதுவே மனசுல பதிஞ்சு போச்சு .புதுசா தாவணி கட்டுனா எங்க மாமா எதிர்க்க நடந்து வந்துட்டே இருப்பேன் .எங்க மாமா என்கிட்ட அதிகமா பேச மாட்டாங்க .பேசனும்னு ஆசைப்படுவேன்.மாமா வீட்டுக்கு வந்தா நிறைய சாப்பிட வச்சு தருவேன் மாமா சாப்பிட்ட மிச்சத்த மறைச்சு வச்சு சாப்டுவேன்.நான் +2 முடுச்சதும் கல்யாண பேச்சு ஆரம்பம் ஆச்சு .ஒரு நாள் என் தம்பி ஓடி வந்து மாமா ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்குறத பாத்ததா சொன்னான் .கோபத்துல ஓங்கி அறஞ்சுட்டேன்.அழுதுட்டே இருந்தான் .சமாதானபடுத்திட்டேன்.ஒரு நாள் நானே பாத்துட்டேன் மனசு நொறுங்கி போயிருச்சு .வீட்ல யாருக்கும் தெரியாம மறஞ்சு மறஞ்சு அழுதுட்டு இருந்தேன் .

          எங்க பாட்டி கல்யாண பேச்சு பேச எங்க அப்பாவ அனுப்பி வச்சாங்க .கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கலாம்னு சொன்னாரு .எனக்கு ஒண்ணுமே புரியல .கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு முதலிரவு அறைக்குள் போனேன் .மாமா முன்னாடி போய்"என்ன ஏன் கட்டிகிட்டீங்க?நீங்க விரும்புன பொண்ண கட்டிக்க வேண்டியது தான ?எனக்கு எல்லாம் தெரியும் "என்று அழ தொடங்கினேன் .மாமா என் கைய புடுச்சு "உண்மை தான் அனிதா .என் மனசுல இன்னோரு பெண் இருந்தா.எங்கப்பா உன்ன கட்டிக்க சொல்லிருந்தா மறுத்திருப்பேன்.ஆனா உங்க அப்பா.ஒரு தாய்மாமானா இல்லாம தகப்பனா வளத்தவரு.என் முன்னாடி நம்பிக்கையா நின்னாரு.அவர ஏமாத்த விரும்பல."என்றதும் பதிலுக்கு "என்ன புடிக்கலையா மாமா?"என்று நான் சொல்ல பதிலுக்கு அவர் "இதுவரைக்கும் உன் கூட பழகினது இல்ல .இனி மேல் தான் பழகனும்.நிறைய லவ் பண்ணனும் சரியா?என்று சிரித்தபடியே "இரண்டு மனசும் சேரும் போது நாமும் சேரலாம் ok"என்றார் .ஆரம்பத்துல அவரிடம் நெருங்க தயக்கமாக இருந்தது .ஆனால் கொஞ்ச நாள்ல அவர் என் காதல புரிஞ்சுகிட்டார்.என்ன இறுக்கி கட்டி புடுச்சுகிட்டார்.அவரது கண்ணீர் துளிகள் என் முதுகில் படர்வதை உணர்ந்தேன் .

           வாழ்க்கை அருமையா இருந்துச்சு .அந்த சமயத்துல என் அக்கா இறந்துவிட அவளது மூன்று பெண் குழந்தைகளை நாங்கள் வளர்க்க ஆரம்பித்தோம்.எங்களுக்கும் ஆறு வயசுல அருண் இருந்தான் .கலகலப்பான குடும்ப வாழ்க்கை.நானும் டீச்சர் வேலைக்கு போய்ட்டு இருந்தேன் .அந்த சமயத்துல என் உடம்புல நிறைய பிரச்சினைகள் வந்தது .எனது இடது புற மார்பில் தாங்க முடியால வலி ஏற்பட்டது .நானும் என் கணவருடன் என் தம்பி வேலை செய்யும்  கோயமுத்தூரில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில்  எல்லா டெஸ்டும் எடுத்தோம் .எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது .அதுவும் கடைசி நிலை.என் தம்பியும் கணவரும் துடிச்சு போய்ட்டாங்க .அஞ்சு லட்சத்துக்கு மேல செலவு ஆகும் என்றும் இருந்தாலும் இப்ப எதுவும் உறுதி சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க .என்ன என் தம்பி கூட விட்டுட்டு வந்து என் கணவர் எல்லா வகையிலும் பணத்த ரேடி பண்ணிட்டு வந்தார் .எங்க மூணு பேர தவிர யார்கிட்டயும் சொல்லல .எனக்கு சிகிச்சை ஆரம்பிச்சது .மிகப்பெரிய சோதனையே அப்புறம் தான் நடந்தது .

         மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் சாப்பிடுவதால் என் தலைமுடி கொட்டி  முகம் கருத்து விகாரமாய் மாறியது .என் முகம் எனக்கே மறக்க ஆரம்பித்தது .ஆபரேஷனுக்கு இரண்டு நாள் முன்பு  எனக்கு மிகவும் மனஅழுத்தம் ஆரம்பம் ஆனது .தொடர்ந்து அழ ஆரம்பித்தேன் .அன்னைக்கு நைட் என் மாமா என் கூட என் கைய புடுச்சுகிட்டு என் பேட்ல படுத்தார் .அவரது அணைப்பில் கொஞ்சம் அமைதியானேன்.அப்போது என் மாமாவிடம்"மாமா நான் உங்களுக்கு வேணாம் மாமா.இனி என்னால உங்களுக்கு எந்த சந்தோசத்தையும் தர முடியாது.என்ன எதாவது அனாதை இல்லத்தில் கொண்டு போய் விட்டுறுங்க"என்று முடிப்பதற்குள் கதறி அழ ஆரம்பித்தேன் .அவரு என்ன நெருக்கமா அணைச்சு"உன்ன தொலச்சுட்டு நான் எப்படி வாழ்றது ?செக்ஸ் மட்டுமா வாழ்க்கை.உன்ன பாத்துட்டே இருந்தா போதும் .உன்ன ரோம்ப லவ் பண்றேன் .உன் காதல அனுபவிச்சுட்டே இருக்கணும் சாகுற வரைக்கும் "என்று என் நெத்தியில் முத்தமிட்டார் .அடுத்த நாள் என்னை ஆபரேஷன்  தியேட்டருக்கு அழைத்து செல்லும் முன் எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தார்கள்.மயக்கத்தின் விளிம்பில் என் மாமாவ பாத்து "மாமா எனக்கு ரோம்ப ஆசையா இருக்கு ஒரு முத்தம் கொடுப்பீங்களா?"என்றதும் அறையில் இருந்த நர்ஸ் வெளியேற என் மாமா என் உதடோட உதடு வச்சு முத்தம் கொடுத்தப்ப அவரது கண்ணீர் என் கன்னத்தில் விழுவதை உணரமுடிந்தது .இந்த முத்தத்தில் அவரது காதலை முழுமையாக உள் வாங்கினேன் .அறுவைச்சிகிச்சை மூலம் இடது மார்பு அகற்றப்பட்டது.

          ஆறு மாத காலத்திற்கு பிறகு என் பழைய நிலைக்கு திரும்பினேன் .என்னை மரணத்தில் இருந்து மீட்டு வந்தது  என் மாமா தான்.நல்ல கணவன் மனைவியா அன்பு மட்டும் போதும்னு நீங்க எல்லோரும் புரிஞ்சுக்க தான் இந்த பதிவு .

(முழுசா படிச்சவங்க கமண்ட் போட்டுட்டு ஒரு ஷேர் செய்யுங்கள் )

அப்பா: "எனக்கும் எல்லாம் நல்லாவே புரிஞ்சிடுப்பா...

*"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.*

*நானும் விவரிக்க ஆரம்பிதேன்.*

*"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.*
*அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."*

*அப்பா: "அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".*

*"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.*
*எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.*

*அப்பா: "சரி"*

*இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".  இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.*

*காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?  அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.*

*அப்பா: "இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க"?*

*"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க."*

*அப்பா: "முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?"* *(அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.)*

*அப்பா: "சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"*

*"அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க.*
*500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.*
*இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"*

*அப்பா: "500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"*

*"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.*

*ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்  தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.* *இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.*
*அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.*

*அப்பா: "அப்புறம்?" - (அப்பா ஆர்வமானார்.)*

*"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.*

*அப்பா: "CR-னா?"*

*"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."*

*(அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.)*

*அப்பா: "இதுக்கு அவன் ஒத்துபானா?"*

*"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"*

*அப்பா: "சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"*

*"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."*

*அப்பா: "அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."*

*"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது."*

*அப்பா: "அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – (அப்பா குழம்பினார்.)*

*"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது மட்டும் தான் இவருடைய வேலையே."*

*அப்பா: "பாவம்மா"*

*"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."*

*அப்பா: "எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?"*

*"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும், தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."*

*அப்பா: "நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"*

*"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."*

*அப்பா: "இத்தனை பேரு இருந்தா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"*

*"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க.*

*அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."*

*அப்பா: "அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே அவங்களுக்கு என்னப்பா வேலை?"*

*"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.*

*பிடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி."*

*அப்பா: "ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?*
*புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்வாங்களா இல்லையா?*

*"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க".*

*அப்பா: கிளையன்ட் சும்ம விடுறானாம்மா, ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டானா?*

*"கேக்கத்தான் செய்வான். இதுவரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."*

*அப்பா: "எப்படி?"*

*♦நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.*
*♦அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின.*
*♦உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.*

*இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".*

*அப்பா: "சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தானே?"*

*"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."*

*அப்பா: "அப்புறம்?"*

*"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."*

*அப்பா: "அப்புறம்?"*

*"அவனே பயந்து போய், எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு". புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். "ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. ஓ நம்ம தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போதான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.*

*அப்பா: "எனக்கும் எல்லாம் நல்லாவே புரிஞ்சிடுப்பா"*

பாரம்பரிய உறவை தொலைத்து விட்டோம்..

பாரம்பரிய உறவை
தொலைத்து விட்டோம்..

வெற்றிலைக் கொடி
படற அகத்தியை நட்டோம்,

அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,

ஆடு போட்ட புலுக்கையை
அள்ளிகாடு வளர்த்தோம்,

காட்டுக்குள்ளே புழுப் புறட்டக் கோழியைவிட்டோம்,

வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,

நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,

திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,

உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.

பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.

இப்படியே
வஞ்சகம்,
சூதில்லாமல்
சுழன்ற எங்கள்
வாழ்க்கைமுறை,

இப்போ நஞ்சும் சூதுமா
நகருக்குள் நடக்கிது.

நம் பாரம்பரியத்தை
தொலைத்து விட்டோம்.

ஒரு துறவியிடன் ஒரு ஆழகான பெண் கேட்டாள் ...!

ஒரு துறவியிடன் ஒரு ஆழகான பெண் கேட்டாள் ...!!

" என் கணவர்கிட்ட நிறைய குறைகள் ...அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?".
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி..
.
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...
" அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி..

"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்..

புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

கீதையை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்.

படித்ததில் பிடித்தது

பகவத்கீதையின் பெருமை

ஸ்வாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றபோது, பல இடங்களில் அருமையான உபன்யாஸங்கள் மூலம், நம்முடைய ஸனாதன மதத்தின் பெருமையை நிலைநாட்டினார்.

ஒருமுறை ஒரு க்ரிஸ்டியன் மிஷனரியைச் சேர்ந்த சிலர், ஸ்வாமியை தங்களுடைய லைப்ரரிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். ஸ்வாமியும் சென்றார்.

அங்கு எக்கச்சக்கமான புஸ்தகங்கள் இருந்தன.

ஆனால் ஒரு இடத்தில் அவர்கள் வேண்டுமென்றே புஸ்தகங்களை அடுக்கியிருந்த விதம், ஸ்வாமிகள் பார்வையில் பட்டது.

எப்படி அடுக்கியிருந்தார்கள்?

உலகில் உள்ள ஏதேதோ மதங்களின் புஸ்தகங்களை எல்லாம் ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, எல்லாவற்றுக்கும் மேலாக பைபிளை வைத்திருந்தார்கள்.

ஆனால், நம்முடைய பகவத்கீதையை மட்டும் எல்லா புஸ்தகங்களுக்கும் அடியில் கடைஸியாக வைத்திருந்தார்கள்.

ஸ்வாமிகளை அழைத்ததே, இந்த ஏற்பாட்டை காட்டத்தான்! அவரையும் நம்ஹிந்து தர்மத்தையும்  மட்டப்படுத்தி காட்டத்தான்!

ஆனால் நம் ஸ்வாமிகள் கம்பீர புருஷர் இல்லையா!

நேராக அந்த புஸ்தகங்கள் அருகில் போய், அடியிலிருந்த பகவத் கீதையை தன் திருக்கரத்தால் ஒரு ஆட்டு ஆட்டி, வெளியே எடுத்தார்.

அடுத்த க்ஷணம், மேலே இருந்த பைபிள் உள்பட அத்தனை மதங்களின் புஸ்தகங்களும் "தபதப" வென்று கீழே சரிந்தன!

"பாருங்கள்! பகவத் கீதை எல்லாவற்றுக்கும் ஆதாரமாக, அஸ்திவாரமாக இருப்பதால்தான், மற்ற மதங்கள் பிழைக்க முடிகிறது. ஆனால், பகவத் கீதை இல்லாவிட்டால், எல்லாம் விழுந்துவிடும். இதுதான் எங்கள் கீதையின் சிறப்பு"

ஸ்வாமிகள் அழகாக சிரித்துக் கொண்டே படுஜோராக சொல்லிவிட்டு கீதையை தூக்கிக் கொண்டு வெளியே நடந்தார்.

மற்றவர்கள் அந்த கம்பீரமான ஞானஸிம்ஹத்தின் முன் என்ன செய்ய முடியும்?

ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.

Wednesday 23 May 2018

ஒரு வரி உண்மைகள்....

ஒரு வரி உண்மைகள்....

*சாவியை நான் தொலைத்துவிட்டு, தண்டனையை பூட்டுக்குக் கொடுத்தேன்…

*வாசிக்காமல் வைத்திருப்பது, ஒரு புத்தகத்துக்குச் செய்யப்படும் மிகப் பெரிய வன்முறை!!

*எல்லாரையும் நம்புங்க, துரோகம் பழகிடும்.
யாரையுமே கண்டுக்காதீங்க, தன்னம்பிக்கை தானா வந்துடும் !!

*விசா இல்லாம வியட்நாம் வரைக்கும் கூடப் போயிடலாம்.
ஆனா , வேலை இல்லாம சொந்தக்காரன் வூட்டுக்கு மட்டும் போக முடியாது !!!!

*உயர உயரத்தான் நமக்கு மேல் எத்தனை பேர் உள்ளனர் என்று புரிகிறது!!

*பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாகக்கூட இருக்க முடியாது !!

*ஒவ்வொரு கைபேசியிலும் இருக்கின்றன, தொடர்புகொள்ள முடியாத ,ஆனாலும் அழித்துவிட மனமில்லாத எண்கள்!

*நேற்று வைத்த வாட்டர் பாட்டிலில் இருக்கும் தண்ணீர் மீது வரும் சந்தேகம், ஒரு வாரமாயிருக்கும் வாட்டர் கேன் தண்ணீர் மீது வருவது இல்லை!!

*சதுரங்கத்தில் கூட ‘மந்திரிகள்’ நேர் வழியில் பயணிப்பதில்லை!!

மறுக்கமுடியாத சில  உண்மைகள் !!!

மருமகள் நைட்டி போட்டதால்
சண்டை வந்த வீடுகளில் எல்லாம்,
பேத்திகள் லெக்கிங்ஸ் போடுகிறார்கள்!

👄👩👖👠👜

தான் செஞ்ச தவற்றைப்
பொண்டாட்டிகிட்ட மறைக்கிறவன்
சராசரி மனுஷன்;

தனக்கு ஒரு பொண்டாட்டி
இருக்கிறதையே மறைக்கிறவன்
பெரிய மனுஷன்!

😇🤡😇🤡

OMR -ல சம்பாதிக்கிறதை
ECR-ல செலவு பண்றாங்க!

🍿🥛🍻🥃

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதைக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் பொம்மைகளை அடிப்பது இல்லை !

😺😺😽👶

ஆண்களின் பெருங்குறைகளுள் ஒன்று...
'அன்பாக இருக்கத் தெரியும்;
ஆனால், யார் மீதெனத்
தேர்ந்தெடுக்கத் தெரியாது!’

😅😆🤠😆

ஒரு நடிகர் நாலு பொண்ணுங்களோடு ஆடினா, அது ‘ஓப்பனிங் சாங்’காம்.

அதே ஒரு நடிகை நாலு பசங்களோடு ஆடினா, அது ‘அயிட்டம் சாங்’காம்.

ஆணாதிக்கச் சமூகம் !

💃👯‍♂🕺👗

நம்மதான் விளம்பரம் போடுறப்பல்லாம் சேனலை மாத்திடுறோமே...
அப்புறம் ஏன் இவ்வளோ செலவு பண்ணி விளம்பரம் பண்றாங்க ?

💿📽📡📽

முன்னர் எல்லாம் மழைக்காலம்
என ஒன்று இருந்தது.

இப்போது மழை நாட்கள் மட்டுமே !

⛈☔💦☔🤷‍♀🏃‍♀👨‍👦🏃‍♀

ஆன்லைனால் மிச்சமான நம் நேரத்தை, ஆன்லைனிலேயே செலவழிக்கிறோம் !

💯🈁📶🔈

நம்ம வீட்ல 24 மணி நேரமும் டி.வி ஓடிட்டே இருந்தாலும் கண்டுக்காத நாமதான்,
சலூன்ல வாயைப் பிளந்துகொண்டு பார்த்துட்டு உட்கார்ந்திருக்கோம் !

💥🖥⚡💥

யாரும் இல்லாதபோதும்
குழந்தைகள் காதுக்குள் வந்தே
ரகசியங்கள் சொல்கிறார்கள் !

🤰🙎👨‍👩‍👦‍👦🙎

நம் வீட்டைச் சேர்ந்த ஒருவர்
வெளியில் சென்றிருக்கும்போது
அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை என்றால்,
அவர் ஏதோ ஆபத்தில் இருப்பது போன்ற பிரமை வருகிறது.

📞📲📱

‘ஏன் எங்கிட்ட பேசல?’னு ஆரம்பிச்சு,
பேசாம இருந்ததுக்காகச் சண்டைய போட்டு,
அதுக்குத் தண்டனையா நம்மகூடப் பேசாம இருக்கப் பெண்களால் மட்டும்தான் முடியும் !

⛄😥⛄😥

ஒருகாலத்தில் நல்லா ஆங்கிலம் பேசறவங்களை வியந்து பார்த்த நாம,
இப்ப நல்லா தமிழ் பேசறவங்களை வியந்து பார்க்கிற நிலைமைக்கு ஆளாகிட்டோம் !!

🕺🤹‍♂🕺🤹‍♂

"அப்பாக்கிட்ட காசு இல்லம்மா"
எனும் சொல் கேட்டு
அழகாகத் தலையாட்டும் மகளின் புரிதல்,
தந்தைக்குச் சோகமயமானது!

💃👫💃👫

காசு கொடுத்துக் கடவுளைப் பார்த்து,
கடவுளுக்கும் காசு கொடுத்து,
கடைசியில கடவுள்கிட்டயே
காசு வேணும்னு கேட்கிறவன்தான் மனிதன் !

🙏🙏🙏🙏

இந்த வாட்ஸ்அப் பதிவுக்குச் சொந்தக்காரர் எங்கிருந்தாலும் வாழ்க!

மிக சிறந்த தொகுப்பு. நன்றி

ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்...

*ஸ்டெர்லைட்_ஆலையும்_அதன்_பின்னனியும்*

1.உரிமையாளர் - அனில் அகர்வால்

2.தலைமையிடம் - இலண்டன்,இங்கிலாந்து

3.நிறுவனப் பெயர் - வேதாந்தா ரிசோர்ஸ்

4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி

5.முக்கிய உற்பத்தி - தாமிரம் (copper )

6.கழிவு உற்பத்தி - தங்கம், சல்ப்யூரிக் அமிலம், பாஸ்ஃபோரிக் அமிலம் 

7.முதலில் தேர்வுசெய்த இடம்- குஜராத்

8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத்,மகாராஷ்ரா, கோவா, கர்நாடகா, கேரளா

9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி

10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்

11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு

12.அடிக்கள் நாட்டியவர் -  முதல்வர் ஜெ.ஜெயலலிதா 1994

13.ஆலை இயங்க அனுமதியளித்தவர் - முதல்வர் மு.கருனாநிதி 1996

14.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்

15.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996

16.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை

17.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி

18.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7

19.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)

20.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)

21.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)

22.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -1)

23.ஐந்தாம் விபத்து - ஆயில் டேங்க் வெடிப்பு

24.ஆறாம் விபத்து - நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்

25.உற்பத்தி செய்தது - 2லட்சம் டன் (2005 கணக்கில்)

26.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28

27.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா

28.மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து -உச்சநீதிமன்றம்

29.தமிழ்நாடு பசுமை வாரிம்  - தடை

30.தேசிய பசுமை வாரியம் - அனுமதி

இதை  தயவு செயது அனைவருடைய  குரூப்க்கும் அனுப்பவும்.
அனுப்பியவர்க்கு கோடி நன்றி

Tuesday 22 May 2018

#280 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 544 குடிதழீஇக் கோலோச்சும் | Daily o...

What is Nipah Virus ?

Q : What is Nipah Virus ?

A : Nipah virus was initially discovered when it caused an outbreak of brain fever among pig farmers in Malaysia.


Q : Should I be worried ?

A :  A little. As it is transmitted from person to person and there is no effective antiviral therapy for this infection .

Q : Who is at high risk ? How is it transmitted ?

A : 1. People working with pigs and consuming pigs.

2. Farmers who come in contact with bats.

3. Consuming Fruits which are already bitten by bat.

4. Contact with people who already have Nipah virus infection.


Q : What are the early symptoms  ?

A : The initial presentation is non-specific, characterized by the sudden onset of fever, headache, muscle pain , nausea and vomiting. Neck rigidity and photophobia are also  seen.
The disease rapidly progresses, with deterioration in consciousness *leading to coma within five to seven days.*

Q :How is it diagnosed ?

A : The rdiagnosis is by ELISA which is currently  done at National institute of Virology, Pune.

Q : How is it treated ?

A : Supportive care is the mainstay of treatment and infected patients may require intensive care monitoring.
 *THERE IS NO APPROVED  SPECIFIC THERAPY FOR THIS INFECTION* . So prevention is the only cure !

Q : How do i prevent it ?

A : 1. Avoid contact with pigs and pig handlers  .

2. Maintain personal hygeine and intensive hand washing practices

3. *Avoid consuming raw fruits,* Consume only well cooked, clean, home made food till the outbreak settles down.

4. Preferably use N95 mask while travelling or working in public places to avoid person to person transmission.

5. Be aware of the symptoms and report to the doctor immediately for early diagnosis and treatment.


Share this message with all your cared ones ,
 *Together, we can fight and win !* 

- Dr.Arjun.M.B, MD
Dr.R.M.L Hospital, New Delhi.
(National Nodal Centre for Control of yellow fever and other communicable diseases)

நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?

🌸 *_நமது உடலின் உள்ளுறுப்புகள் எதைக் கண்டு அஞ்சி நடுங்குகிறது தெரியுமா?_*

💁🏻‍♀ *Kidney :* நீண்ட நேரம் கண் விழித்தல், உறக்கமின்மை.

💁🏻‍♀ *Stomach :* குளிரூட்டப்பட்ட உணவுகள்.

💁🏻‍♀ *Lungs :* புகைப்பிடித்தல்.

💁🏻‍♀ *Liver :* கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள், மது அருந்துதல்.

💁🏻‍♀ *Heart :* உப்பு நிறைந்த உணவு வகைகள்.

💁🏻‍♀ *Pancreas :* அதிகப்படியான நொறுக்கு தீனி

💁🏻‍♀ *Intestines :* கடல்சார் உணவுகளை பாகுபாடின்றி மிகுதியாக உண்பது.

💁🏻‍♀ *Eyes :* Watching TV, Mobile & Computer screens

💁🏻‍♀ *Gall bladder :* காலை உணவு தவிர்ப்பது.

🙋🏻நம்மை பாதுகாத்துக் கொள்வது நமது கடமை.🙋🏻

ஏனெனில் பழுதடைந்து விட்டால் இந்த உதிரிபாகங்கள் விலையுயர்ந்து.

மாற்றிப் பொறுத்த மிகவும் செலவு பிடிக்கும்.

எளிதாக கிடைக்காது.

Original போல் இயங்காது.

உண்ணும் உணவில் கவனம் தேவை.

வாழ்க்கை முறையில் கவனம் தேவை.

💁🏻‍♀உங்கள் சுற்றத்திற்கும் பகிரவும்...💁🏻‍♀

நிபா வைரஸ் எச்சரிக்கையைத் தொடர்ந்து வவ்வால்...

நிபா வைரஸ் எச்சரிக்கையைத் தொடர்ந்து

வவ்வால் அல்லது மற்ற பறவைகள் கடித்த பழங்களை சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்த்திடவும்.

ரமலான் நேரமாதலால் மக்கள் அதிகமாக பழங்கள் சாப்பிடுவது வழக்கம். பழங்கள் வாங்கும் போது கவனமாக வாங்கவும்.

பொதுவாக, பறவைகள் கடித்திருந்தால் அந்த பகுதியை மட்டும் வெட்டி வீசிவிட்டு மற்றதை சாப்பிடுவதோ ஜூஸ் போடுவதோ வழக்கம். இதை முற்றிலுமாக தவிர்க்கவும்.

அப்படிப்பட்ட பழங்களை தூர வீசிவிடலாம்.

கடைகளில் ஜூஸ் போன்றவற்றை அருந்துவதையும் தவிர்க்கவும்.

கேரளாவில் வைரஸ் தாக்கி மரணமடைந்தவர்கள் வீட்டு கிணற்றுத் தண்ணீரில் வவ்வால் எச்சமிட்டதால் இது ஏற்பட்டுள்ளது என தெரியவந்திருக்கிறது. எனவே, திறந்திருக்கும் நீர்நிலைகள், கிணறுகளில் உள்ள நீரை குடிப்பதை தவிர்க்கவும். நீரை சூடாக்கிப் பருகவும்.

#NipahVirus

Friday 18 May 2018

கேவலமான ஒப்பீடுகள் ... ஆனால் விசித்தி ரமான உண்மைகள்...

*கேவலமான ஒப்பீடுகள் ... ஆனால் விசித்தி ரமான உண்மைகள்* !

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40
லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக்
கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின்
விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால்
பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5
சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12
சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு
வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும்,
தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக்
கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய
செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில்
பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச்
செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள்
மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட
கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும்
காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில்
விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc
இவையெல்லாம் செயற்கையான
ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகி
ன்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை
இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்)
தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும்
நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம்
விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று
கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து
வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரி என்பது இல்லை. ஏனெனில் கோதுமை விளை பொருள் என்பதால்.  கோதுமையை
மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே
மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து
விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
11.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு,
சிலருக்கு படிக்கட்டாகவும்,
சிலருக்கு எஸ்கலேட்டரா கவும், சிலருக்கு லிஃப்ட்டா கவும் அமைகிறது..

12.   பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும் ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13.  தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை வாரி மடி சாய்க்க ஒருவர் இருந் தால் போதும், நமது வாழ்க் கையை ஜெயித்துவிடலாம்.

 14. முதியோர் இல்லத் திற்கு பணம் கொடுங்கள்,
பொருள் கொடுங்கள்,
உணவு கொடுங்கள், உடை கொடுங்கள்  ..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு..
அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு.. 

16.  டாக்டரை மறந்து விட்டு
நர்சுகளை ஞாபகம் வைத்து இருக்கும் விசித்திரமான மாய உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,
ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான்
பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள்,
பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..
இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக ஒரு மூலை யில் அமர்ந்திருப்பதற்கு  கல்லாயிருந்தால் போதும்..
மனிதனாக உட்கார்ந்து வாழத்தான் அதிக விவேகம் வேண்டியிருக்கிறது.!               

21. மழையை நிறுத்த தமிழர் கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள். ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 21.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 22.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான், சாலை ஓரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க
சரிதான்..
ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

*நண்பர்களே ... !  இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை பிறருக்கு பகிர்ந்து கொள்வதில் தயக்கம் வேண்டாம்*.

#276 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 388 முறைசெய்து காப்பாற்றும் | Daily...

Wednesday 16 May 2018

கீதை உபதேசங்கள்...

கீதை உபதேசங்கள்
------------------------------
🎀01. தூங்கும் முன் மோசமான பேச்சு பேசக் கூடிய மக்களிடையே தூங்க வேண்டாம்.
---------------------------------
🎀02. உங்கள் இடது கையால் குடிக்க, சாப்பிடவோ வேண்டாம்.
------------------------------
🎀03. உங்கள் பற்களின் இடையே மாட்டிய உணவை எடுத்து சாப்பிட வேண்டாம்.
---------------------
🎀04. உங்கள் விரலில் நெட்டி முறிக்க வேண்டாம்.
------------------------------
🎀05. காலணிகளை அணியும் முன் சரிபார்க்கவும்.
------------------------------
🎀06. கழிவறை உள்ளே எச்சில் துப்பக் கூடாது.
------------------------------
🎀07. கரியைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யக்கூடாது.
------------------------------
🎀08. உங்கள் கால்சட்டையை உட்கார்ந்து அணியவும்.
------------------------------
🎀09. கடினமானதை பற்களைக் கொண்டு கடிக்கக் கூடாது.
------------------------------
🎀10.  சூடான உணவை ஊதி சாப்பிடக் கூடாது.
------------------------------
🎀11. மற்றவர்களின் தவறுகளை பார்க்க வேண்டாம்.
-----------------------------
🎀12.  உங்கள் நண்பர்கள் பற்றி கதைகள் பேச வேண்டாம்.
------------------------------
🎀13. உங்கள் நண்பர்களை விரோதம் கொள்ள வேண்டாம்.
------------------------------
🎀14. உங்கள் நண்பர்கள் பற்றி சந்தேகம் வேண்டாம்.
------------------------------
🎀15.  சாப்பிடும் போது உணவை நுகரக்கூடாது.
------------------------------
🎀16.  மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி தெளிவாக பேசுங்கள்.
------------------------------
🎀17.  தனியாக பயணம் செய்ய வேண்டாம் .
------------------------------
🎀18.  உங்கள் சொந்த முடிவு ஆயினும் மற்றவர்களிடம் ஆலோசனை கேளுங்கள்.
------------------------------
🎀19. உங்களை பற்றி பெருமை கொள்ள கூடாது.
------------------------------
🎀20. உணவை குறைக்கூற வேண்டாம்.
------------------------------
🎀21. பெருமை வேண்டாம்.
------------------------------
🎀22 வறுமையின் போது பொறுமை காக்கவும்.
------------------------------
🎀23. நல்ல விஷயத்திற்காக உதவி செய்யுங்கள்.
------------------------------
🎀24. செய்த தவறுகளை நினைத்து வருந்துங்கள்.
------------------------------
🎀25. உங்களுக்கு கெட்டது செய்தவர்களுக்கு நல்லது செய்யுங்கள்.
------------------------------
🎀26. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையுங்கள்.
------------------------------
🎀27. அதிகம் தூங்க கூடாது - அது மறதியை ஏற்படுத்தும்.
------------------------------
🎀28. ஒரு நாளைக்கு குறைந்தது 1 ஒரு  முறையாவது இறைவனை நினைவு கூறுங்கள். 
------------------------------
🎀29. இருட்டில் சாப்பிட கூடாது.
------------------------------
🎀30. வாய் முழுக்க சாப்பிட வேண்டாம் .

                             --பகவான் --கிருஷ்ணன்

Tuesday 15 May 2018

+2 results site...

🏇

*முக்கிய அறிவிப்பு!!!*


*தமிழகத்தில் நாளை வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை 3 இணையதளங்களில் அறியலாம். நாளை காலை 9.30 மணிக்கு www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in தளத்தில் முடிவை அறியலாம். பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.*

#273 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 895 யாண்டுச்சென்று யாண்டும் | Daily...

#272 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1155 ஓம்பின் அமைந்தார் | Daily one ...

Buy Videocon D2H – New SD Connection – 5 Year Basic Pack

Buy Videocon D2H – New SD Connection – 5 Year Basic Pack

Buy Videocon D2H – New SD Connection – 1 Year Basic Pack

Buy Videocon D2H – New SD Connection – 1 Year Basic Pack

Cash Against Credit Card

Cash Against Credit Card

Buy Videocon D2H – New HD Connection – 1 Year Special Pack2

Buy Videocon D2H – New HD Connection – 1 Year Special Pack2

Buy Videocon D2H – New HD Connection – 1 Year Special Pack

Buy Videocon D2H – New HD Connection – 1 Year Special Pack

Buy Videocon D2H – D2H Stream or Smart Set Top Box New Connection – 5 Years Basic Pack

Buy Videocon D2H – D2H Stream or Smart Set Top Box New Connection – 5 Years Basic Pack

Buy Videocon D2H – D2H Stream Set Top Box New Connection – 1 Year Basic Pack

Buy Videocon D2H – D2H Stream Set Top Box New Connection – 1 Year Basic Pack

Buy Videocon D2H – D2H Stream or Smart Set Top Box New Connection – 1 Month Basic Pack

Buy Videocon D2H – D2H Stream or Smart Set Top Box New Connection – 1 Month Basic Pack

Buy Videocon D2H – 4K Ultra HD Set Top Box New Connection – 1 Month Full Pack

Buy Videocon D2H – 4K Ultra HD Set Top Box New Connection – 1 Month Full Pack

Buy Tata Sky – New SD Connection – 1 Year Basic Pack

Buy Tata Sky – New SD Connection – 1 Year Basic Pack

Buy Tata Sky – New SD Connection – 1 Month Basic Pack

Buy Tata Sky – New SD Connection – 1 Month Basic Pack

Buy Tata Sky – New HD Connection – 1 Month Basic Pack

Buy Tata Sky – New HD Connection – 1 Month Basic Pack

Buy Tata Sky – HD PVR Transfer New Connection – 1 Year Basic Pack

Buy Tata Sky – HD PVR Transfer New Connection – 1 Year Basic Pack

Life Insurance Agent LIC

Life Insurance Agent LIC

Buy Tata Sky – 4K New Connection – 1 Year Basic Pack

Buy Tata Sky – 4K New Connection – 1 Year Basic Pack

Buy Sun Direct – New SD Connection – 1 Year Basic Pack

Buy Sun Direct – New SD Connection – 1 Year Basic Pack

Buy Sun Direct – New HD Connection – 1 Year Special Pack

Buy Sun Direct – New HD Connection – 1 Year Special Pack

Buy Sun Direct – New HD Connection – 1 Year Full Pack

Buy Sun Direct – New HD Connection – 1 Year Full Pack

Buy Dish TV – New SD Connection – 1 Year Special Pack

Buy Dish TV – New SD Connection – 1 Year Special Pack

Buy Dish TV – New SD Connection – 1 Month Basic Pack

Buy Dish TV – New SD Connection – 1 Month Basic Pack

Buy Dish TV – New HD Connection – 1 Month Basic Pack

Buy Dish TV – New HD Connection – 1 Month Basic Pack

Monday 14 May 2018

Multi Recharge Software Provider

Multi Recharge Software Provider

Buy Airtel Internet TV | Android TV – New Connection – 2 Month Full Pack

Buy Airtel Internet TV | Android TV – New Connection – 2 Month Full Pack

Buy Airtel Internet TV | Android TV – New Connection – 1 Year Full Pack

Buy Airtel Internet TV | Android TV – New Connection – 1 Year Full Pack

Buy Airtel Digital TV – New SD Connection – 1 Month Basic Pack

Buy Airtel Digital TV – New SD Connection – 1 Month Basic Pack

Buy Airtel Digital TV – New HD Connection – 1 Year Special Pack

Buy Airtel Digital TV – New HD Connection – 1 Year Special Pack

பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.

பெண் குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்

#பெற்றோர்கள் கவனத்திற்கு:

1. பெண் குழந்தைகளுக்கு, "Good touch", "bad touch" எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுங்கள்.

2. மேலாடையின்றியோ,ஆடையே இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாய் தெரியலாம், எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடாதீர்கள்.

3. குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை, நெடு நேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம் தேவை.

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால், அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்து கொள்ளுங்கள், அவர் வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள், மூட்டைகளை போல் குழந்தைகளை அடைத்து, மரியாதையின்றி பேசுவதும், தொடக் கூடாத இடங்களை தொடுவதும், சில இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும், யார் கொடுத்தால் வாங்க வேண்டும் என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி, பெற்றோரின் தொலைப்பேசி எண்கள் அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், ஒருபோதும் ஒருவருடன் மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள், வயது வித்தியாசம் எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள் விருப்பங்களை குழந்தையின் மேல் திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும் போது, வன்முறை, காதல், கொலை, களவுப் போன்றவை நிறைந்த திரைக்காட்சிக்களையோ, நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள் எப்போதும் சீரியல்களில் மூழ்கி இருக்காமல், குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ, அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும் வகையிலான நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம் செலவிடுங்கள், ஒரு தோழமையுடன் அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன் திருத்துங்கள், தண்டிக்க நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன், விதை மரமாகிவிடாது, நீங்கள் ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள் உங்கள் விருப்பபடி மாறிவிட மாட்டார்கள். உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும் குழந்தைகளை அன்புடன் அரவணைத்து, வேண்டியது செய்ய அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில் இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம் பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள் உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும் விதம், உங்கள் பிள்ளைகளால் கவனிக்க படுகிறது. நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை, அதையும் தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20. ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின் ஆரோக்யத்திற்கு அவசியம். விளையாட்டிற்கு தடை போடாதீர்கள். "All work and no play makes Jack a dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும், அவர்களின் வயதுக்கேற்ப புரியும்படி பதில் சொல்லுங்கள்! பொது அறிவு கேள்விகள் கேட்கப்படும் போது தெரிந்தால் சொல்லுங்கள், தெரியாவிட்டால் பிறகு சொல்லுகிறேன் என்று சொல்லுங்கள்.
சொன்னபடி கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு, மறக்காமல் அவர்களிடம் சொல்வது அவசியம்.

22. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு" "தொணதொண என்று கேள்வி கேட்காதே" என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி, அவர்களின் ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

23. பசி என்று குழந்தை சொன்னால், உடனே உணவு கொடுங்கள், அரட்டையிலோ, சோம்பலிலோ, வேறு வேலையிலோ குழந்தையின் குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!

24. ஒரு போதும், உங்கள் குழந்தைகளின் எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும் ஒரு வரம், அவர்கள், ஒருபோதும் உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள் அல்ல!

26. பாழாய்ப் போன லெக்கின்ஸை வாங்கிக் கொடுக்காதீர்கள்.  சிலவகை ஆடைகள் சிலருக்கு பொருந்துவது இல்லை. அதுவே ஆபாசமாகக் காட்சியளிக்கின்று.

#தவறாக இருந்தால் #மன்னிக்கவும்
#பிடித்து இருந்தால் அதிகம் #பகிருங்கள்

Saturday 12 May 2018

எவ்ளோ பெரிய கோழையும் வீரனாவான்...

எவ்ளோ பெரிய
கோழையும்
வீரனாவான்

தன்
தாயை யாரேனும்
தண்டித்தால்

எவ்ளோ பெரிய
வீரனும் கோழையாய்
மாறுவான்

தன் தாய்
தன்னை
தண்டிக்கும்போது...

அன்னையர் தின வாழ்த்துக்கள்

அன்னையர் தினம்* என்ற பெயரில் ...

அனுதினமும் அரவணைக்க வேண்டிய அன்னையை *அன்னையர் தினம்* என்ற பெயரில் இன்று மட்டும் அனைவரும் நடிப்பது வேதனைக்குரியது...
By Shankar SV

#270 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 1095 குறிக்கொண்டு நோக்காமை | Daily ...

#269 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 610 மடியிலா மன்னவன் | Daily one thi...

Friday 11 May 2018

பணத்தின் அருமையை உணர்வது , உணர்த்துவது எப்படி?

*பணத்தின் அருமையை உணர்வது ,  உணர்த்துவது எப்படி?*

*ஒவவொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று*

*ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம்.  சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்*.

*ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய்* *சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.*

*மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்*

*மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.*

*அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.*

*நீ உழைத்து* *சம்பாதிக்காத பணம்* *என்பதால் அது கரியானபோது நீ* *கவலைப் படவில்லை* *அதுவே உன் உழைப்பு* *என்கிறபோது நீ* *துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின்* *அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.*

*இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.*

*விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.*

*ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.*

*ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.*

*போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.*

*குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.*

*படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா* ?

*இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :*

*100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து* *நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.*

*கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்*.

*பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.*

*உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்*.

*காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.*

*உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள்* *செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.*

*மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.*

*தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே* *தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது*.

*தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.*

*எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.*

*எப்படித்தான் பணத்தின் அருமையை* *ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.*
*அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).*

*இதனால் என்ன என்ன பயன்? தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.*

மரங்களும் அதன் முக்கியத்துவமும்! 1.அரசமரம்

மரங்களும் அதன் முக்கியத்துவமும்!

1.அரசமரம் – அறிவு தரும் அருள் தெய்வம்
2.ஆலமரம் – வணிகர்கள் கூடுமிடம்
3.நாவல் மரம் – பாரதவர்ஷே பரதக்கண்டே
4.பலா மரம் – கந்தனுக்கு வந்ததோ
5.இலுப்பை – பூக்கள் சர்க்கரையோ மதுவோ
6.வேம்பு – இந்தியாவின் பொக்கிஷம்
7.புளியமரம் – உணவில் சுவை – உடலுக்கும் மருந்து
8.புங்கன் – பசுமை விருந்து
9.வில்வம் – சித்தர்களின் கற்பகம்
10.இலந்தை – ஏழைகளின் கனி
11.நெல்லி – இந்தியாவின் எதிர்காலம்
12.மாவிலங்கம் – கல்லையும்
13.அத்தி – அதிசய மருந்து
14.தேனத்தி – தொன்மைச் சிறப்புள்ள முதல் மரம்
15.பேயத்தி – கருவுக்குக் காப்பகம்
16.மா – மாமருந்து
17.தில்லை – பாலுணர்வு மரம்
18.அலையாத்தி – சுனாமிக்கு எமன்
19.செஞ்சந்தனம் – அணுக்கதிர் எதிர்ப்பு
20.கடுக்காய் – வாழ்வு தரும் தரு
21.கமலா – குங்குமத்தின் சங்கமம்
22.அசோக மரம் – காதலோ? காதல் பிரிவோ?
23.மருதம் – இதயநோய் நீக்கும் மரம்
24.சந்தன மரம் – பட்டால்தான் வாசனை
25.குமிழ் மரம் – ஐந்தில் ஒன்று
26.பனை மரம் – பழங்குடித் தமிழ் வேந்தர்களின் சின்னம்
27.மகிழம் – பூர்வீக வயக்ராவோ?
28.சரக்கொன்றை – பொன்னிறத்துப் பூச்சரமே
29.பாரிஜாதம் – பாமா ருக்மணி இருவருக்காக
30.செம்மந்தாரை – (ஆத்தி) அழகிய மருத்துவச் செம்மலர்
31.சேராங்கொட்டை – மன்மத ரகசியமோ? ஆயுள் விருத்தியோ?
32.பலாசு மரம் – அக்கினிப் பூக்களின் ஆராதனை
33.தான்றி மரம் – ரத்தப்போக்கு நிவாரணி
34.வெப்பாலை – பல நோய் நிவாரணி
35.அகத்தி – அகத்திய முனிவரா? நோய்களை ஆற்றுபவரா?
36.ரப்பர் – தொழில்புரட்சி செய்த மரம்
37.சந்தனவேம்பு – பஞ்சவடியில் ஒன்று
38.வேங்கை – குறிஞ்சியின் அரசு
39.வன்னி மரம் – வறட்சியிலும் வளமை
40.உருத்திராட்சம் – சிவனின் மூன்றாவது கண்
41.சம்பகம் – நறுமணப் பொன்மலர்
42.முருங்கை – தாது புஷ்டி மருந்து
43.விளா – பித்தம் தெளிய மருந்தொன்று உண்டு
44.வாதநாராயணம் – வலி நிவாரணம்
45.நெட்டிலிங்கம் – போலி அசோகம்
46.தென்னை – கற்பகவிருட்சம்
47.வாழை – வாழையடி வாழையாக
48.கொய்யா – அமிர்தமா? ஏழைகளின் ஆப்பிளா?
49.கொடுக்காப்புளி – பறவைகளுக்கு விருந்து
50.வாதா மரம் – சூழலுக்கு நண்பன்
51.மாதுளம் – மாமருந்து
52.எலுமிச்சை – விஷமுறிவு மூலிகை
53.கடம்பு – தன்னை மறந்த லீலைகள்
54.மருதாணி – மணமகள் அலங்காரம்
55.நொச்சி – ஜலதோஷ நிவாரணி
56.புன்னை – பூச்சொரியும் மரம்
57.தாழை மரம் – தாயின் காப்பகம்
58.வேள்வேல் – மேக நிவாரணி
59.தழுதாழை – அற்புத சஞ்சீவி
60.கருவேப்பிலை – கறிவேப்பிலை
61.அகில் – அகர்பத்தி மரம்
62.பூவரசு – மரங்களிலும் அரசுதான்
63.ஆனைப்புள்ளி – மாயயையின் தோற்றமா 64.மாயா தத்துவமா?
65.சப்போட்டா – பாலோடு பழம்
66.ஆமணக்கு – அருமருந்து
67.எருக்கு – சூரிய மூலிகை
68.பதிமுகம் – சேப்பன் சிவப்புச் சாயமரம்
69.மகாகொனி – தேக்கின் மாற்று
70.மூங்கில் – ஒரு பசுமைத் தங்கம்
71.சிறுநாகப்பூ – சின்னப் பூ அல்ல
72.நாகலிங்கம் – புனிதச் செம்மலர்
73.தோதகத்தி – மதிப்பில் தங்கம்
74.கருங்காலி – கறுப்பு வைரம்
75.தேத்தாங்கொட்டை – இளைப்பு நிவாரணி
76.எட்டி – அளவுடன் மருந்து மீறினால் நஞ்சு
77.வாகை – வெற்றிக்குரிய மரம்
78.இயல்வாகை – தேக்கின் மாற்று
79.கோங்கு – மண்ணரிப்பின் மீட்பு.

கை ஙை சை Kai ngai sai in tamil | உயிர்மெய் எழுத்துக்கள் | Uyirmei eluthu...

Monday 7 May 2018

#265 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 17 நெடுங்கடலும் தன்நீர்மை | Daily o...

#264 | தினம் ஒரு திருக்குறள் | குறள் 358 பிறப்பென்னும் பேதைமை | Daily on...

நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

நம்பில் பலருக்கும்  தெரிந்த உயர் பதவிகள் *IAS*, *IPS* பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.

ஆனால், இதே அளவு  தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-

1. IAS - Indian Administrative Service

2. IPS - Indian Police Service

3. IFS - Indian Foreign Service

4. IFS - Indian Forest Service

5. IRS - Indian Revenue Service (Income Tax )

6. IRS - Indian Revenue Service ( Customs & Central Excise )

7. IAAS - Indian Audit and Accounts Service

8. ICAS - Indian Civil Accounts Service

9. ICLS - Indian Corporate Law Service

10. IDAS - Indian Defence Accounts Service

11. IDES - Indian Defence Estate Service

12. IIS - Indian Information Service

13. IPTAS - Indian Post & Telecom Accounts Service

14. IPS  - Indian Postal Service

15] IRAS - Indian Railway Accounts Service

16. IRPS - Indian Railway Personal Service

17. IRTS - Indian Railway Traffics Service

18. ITS - Indian Trade Service

19. IRPFS - Indian Railway Protection Force Service

இத்தனை பதவிகளும்  தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். 

இவை அனைத்துக்கும்  தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...

பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும்  முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும்  இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.

இத்தனை வாய்ப்புகள்  இருப்பது பெரும்பாலான  இளம் பட்டதாரிகளுக்கு  தெரிவதில்லை.

நம் தமிழக இளைஞர்களுக்கு  தெரிந்தது எல்லாம்,
*விஏஒ பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.*

இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.

எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி  ஒரே ஒரு  பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும்  முறையான பயிற்சி தான் முக்கியம்.

*💙இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். 3நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள். இதை பகிர்ந்து கொள்ளுங்கள்.💙*