flipkart discount sale search here.

Wednesday 5 December 2018

Life Story #22



_ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார்.._
_அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.._

_ஒரு நாள் வேட்டைக்கு சென்ற அரசன் காட்டிலேயே தூங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.._

_அன்று காலை கண் விழிக்கும் போது சூரியோதயத்துக்கு பதில் அவ்வழியே சென்ற பிச்சைகாரர்  முகத்தில் விழித்துவிட்டார்.._

_கோபத்தோடு ஊர் திரும்பிய அரசன்.._ _குதிரையிலிருந்து இறங்கும்போது தடுமாறி விழுந்தார்.._ _அவருக்கு தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது.._

*_அரசன் கடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்.._*

_பிச்சைகாரன் கலங்கவில்லை_ *கல கல* வென _சிரிக்க தொடங்கினான்.._

*_அரசருக்கு மேலும் கோபம்.._* *_மற்றவர்களுக்கு திகைப்பு.._*

_பிச்சைக்காரன் சொன்னான்.._ *என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே..*
*உங்கள் முகத்தில் நான்  முழித்ததால் என் உயிரே போக போகிறதே.. அதை எண்ணி சிரித்தேன்..*

_அரசன் தன தவறு உணர்ந்து தலை குனிந்தான்.._ _தண்டனையை ரத்து செய்யப்பட்டது.._


👇
*தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்..*

*அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்..*

No comments:

Post a Comment