flipkart discount sale search here.

Sunday 4 March 2018

பூண்டை வாயில் வைத்திருந்தால்...

பூண்டை வாயில் வைத்திருந்தால் 30 நிமிடத்தில் கிடைக்கும் பலன்கள்!

பூண்டு மருத்துவ குணம் உள்ளதோடு, உடலை சுத்தப்படுத்த உதவும் முக்கிய பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். சிலருக்கு இந்த பூண்டை சாப்பிடுவது பிடிக்காது. இருப்பினும் ஒரு பல் பூண்டை, வாயில் 30 நிமிடம் வைப்பதனால் உடலில் பல அதிசயம் நடக்கும் என்கிறார்கள். அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
* பூண்டை சாப்பிடாமலேயே அதன் மருத்துவ குணங்களை பெற முடியும். இதை காலையில் எழுந்ததும், முதல் வேலையாக செய்யுங்கள். ஒரு பல் பூண்டினை வாயில் போட்டுக்கொண்டு, கன்னப்பகுதியில் அடக்கிக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கன்னப்பகுதியிலிருந்து மற்றொரு கன்னப்பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள்.
இப்படி பூண்டை 30 நிமிடங்கள் வாயில் வைத்திருப்பது அவசியம். இந்த முறையை 10 – 15 நாட்கள் பின்பற்றினால் பூண்டின் மிகச்சிறந்த மருத்துவ பயனைப் பெறலாம்.
இப்படி செய்வதால் உடலின் நினநீர் மண்டலம், உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் சுத்தம் செய்து ஆரோக்கியமானதாக வைக்கிறது. வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்க உதவுகிறது. 30 நிமிடங்களுக்கு பின்னர், வாயில் உள்ள பூண்டை துப்பிவிடுங்கள்.
பற்களை நன்றாக கழுவிவிட்டு, சிறிது புதினா இலைகளை வாயில் போட்டுக் கொள்ளலாம். இதனால் வாயில் பூண்டின் வாசனை இல்லாமல் போக்கி விடலாம்.
இதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பசியின்மையை போக்குகிறது.
சுவாசப்பிரச்னை தீரும். ரத்த சோகை போக்கும்.
மேலும், சிறுநீரகத்தையும், சிறுநீரக பாதையும் பாதுகாத்து, சிறுநீரக கல் வராமல் பாதுகாக்கின்றது.
வரட்டு இருமலை குணப்படுத்தும்.
மழைக்காலங்களில் வரும் இருமல், பாக்டீரியா காய்ச்சல் வராமல் காக்கிறது என்கிறார்கள். இதனை நாம் வேலைப்பார்த்துக் கொண்டே கூட செய்யலாம

No comments:

Post a Comment