ஆட்குறைப்பின் போது "கடைசியில் (வேலைக்கு) சேர்நுதவரே முதலில் (வேலையைவிட்டு) செல்ல வேண்டும்" என்ற தொழிற் சட்ட விதியை (Last come must go first principle) கடைபிடிக்க வேண்டும். அதாவது பணிமூப்பு (seniority) அதிகமாக உள்ளவர்களை விட்டுவிட்டு பணிமூப்பு குறைந்தவர்களையை (Juniors in service) முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும். பணிமூப்பினை தொழிலாளர்களுக்கு நிர்ணயிக்கும் போது அவர்கள் சம்பந்தப்பட்ட, குறிப்பிட்டவகை தொழிலாளர்களுக்கிடையே தான் (among the particular category of workmen) நிர்ணயிக்க வேண்டுமேயொழிய அந்த தொழிற்சாலையிலுள்ள அனைத்து தொழிலாளர்களின் பொது பணிமூப்பினை (General seniority) கருத்தில் கொள்ளக்கூடாது (பிரிவு - 25G)
ஒரு குறிப்பிட்ட வகை தொழிலாளர்களிடையே, எல்லா அம்சங்களும் ஒன்றாயிருக்கும் பட்சத்தில், கடைசியில் பணிக்கு சேர்ந்தவர்களைத்தான் முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று பிரிவு 25G கூறுகிறது. இந்த விதியின் கீழ் ஒரு தொழிலாளி பணி பாதுகாப்பு பெற வேண்டுமெனில் அவர் கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
1. அவர் பிரிவு 2(s) ன்படி ஒரு தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.
2. அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். ( வெளிநாட்டு தொழிலாளிகள் இந்த விதியின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது)
3. அவர் வேலை செய்யும் இடமானது பிரிவு 2( j) ன்படி ஒரு தொழிலிடமாக (industry) இருத்தல் வேண்டும்.
4. அவர் அந்த தொழிற்சாலையில் உள்ள குறிப்பிட்ட வகை தொழிலாளர் பிரிவில் (particular category of workmen) பணி செய்து வருபவராக இருத்தல் வேண்டும்.
5. முதலாளிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்குமிடையே "கடைசியில் சேர்ந்தவர் முதலில் செல்ல வேண்டும்" என்ற விதிக்கு எதிராக எந்தவித ஒப்பந்தமும் (குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தொழிலாளியை முதலாளி வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற Agreement) ஏற்பட்டிருக்க கூடாது.
இந்த 5 நிபந்தனைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் சாதாரணமாக ( ordinarily) ஒரு முதலாளி இந்த விதிப்படிதான் (கடைசியில் வேலைக்கு சேர்ந்தவர் முதலில் வேலையிலிருந்து செல்ல வேண்டும்) ஆட்குறைப்பு செய்ய வேண்டும். ஆனால் நியாயமான மற்றும் தகுந்த காரணங்கள் இருப்பின் முதலாளி இந்த விதியை கடைபிடிக்க வேண்டியதில்லை. பிரிவு 25G யில் கூறப்பட்டுள்ள சாதாரணமாக (Ordinarily) என்ற வார்த்தையின் மூலம் இதை யூகிக்கலாம்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். தொழிற்சாலை ஈடுபட்டிருக்கின்ற தொழிலின் நலனை முன்னிட்டு அதற்கு அவசியமான சிறப்பு தகுதிகளை கொண்டுள்ள (Special qualifications) தொழிலாளிகள் நிறுவனத்திற்கு தேவை என நிர்வாகம் உண்மையாக கருதும் பட்சம் அவர்களை பணியில் வைத்துக் கொண்டு அவர்களை விட பணிமூப்பு கூடியவர்களை ஆட்குறைப்பு செய்யலாம் என உச்சநீதிமன்றம் "Om Oil and Oliseeds Exchange Ltd Vs Their Workmen (1969-2-LLJ-342)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த விதியை விட்டு விலகி ஒருவரை ஆட்குறைப்பு செய்ய நிர்வாகம் முடிவு செய்யுமானால் அதற்கான காரணங்களை எழுத்து மூலமாக பதிவு செய்ய வேண்டும். பிறகு அதனை பார்வையிட்டு நியாயமானதும், திருப்திகரமுமான எந்தவித காரணங்களுமின்றி நிர்வாகம் இந்த விதியை விட்டு விலகியுள்ளது என்று ஒரு தொழிலாளர் தீர்ப்பாயம் திருப்தி கொள்ளுமானால் அந்த ஆட்குறைப்பு கெட்ட எண்ணத்தோடு பழிவாங்க செய்யப்பட்டது என்றோ அல்லது முதலாளியின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கை (Unfair Labour practice) என்றோ அறிவிக்கலாம். எனினும் முதலாளி இந்த விதியை மீறி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் ஏதோ ஒரு கெட்ட நோக்கத்தோடு தான் ஆட்குறைப்பினை செய்து விட்டார் என்ற முடிவுக்கு உடனே யாரும் வரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வகை தொழிலாளர்களிடையே, எல்லா அம்சங்களும் ஒன்றாயிருக்கும் பட்சத்தில், கடைசியில் பணிக்கு சேர்ந்தவர்களைத்தான் முதலில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்று பிரிவு 25G கூறுகிறது. இந்த விதியின் கீழ் ஒரு தொழிலாளி பணி பாதுகாப்பு பெற வேண்டுமெனில் அவர் கீழ்க்கண்ட நிபந்தனைகளை நிறைவேற்றியிருக்க வேண்டும்.
1. அவர் பிரிவு 2(s) ன்படி ஒரு தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.
2. அவர் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும். ( வெளிநாட்டு தொழிலாளிகள் இந்த விதியின் கீழ் பாதுகாப்பு பெற முடியாது)
3. அவர் வேலை செய்யும் இடமானது பிரிவு 2( j) ன்படி ஒரு தொழிலிடமாக (industry) இருத்தல் வேண்டும்.
4. அவர் அந்த தொழிற்சாலையில் உள்ள குறிப்பிட்ட வகை தொழிலாளர் பிரிவில் (particular category of workmen) பணி செய்து வருபவராக இருத்தல் வேண்டும்.
5. முதலாளிக்கும் சம்பந்தப்பட்ட தொழிலாளிக்குமிடையே "கடைசியில் சேர்ந்தவர் முதலில் செல்ல வேண்டும்" என்ற விதிக்கு எதிராக எந்தவித ஒப்பந்தமும் (குறிப்பிட்ட ஆண்டுகள் வரை தொழிலாளியை முதலாளி வேலைக்கு வைத்திருக்க வேண்டும் என்பது போன்ற Agreement) ஏற்பட்டிருக்க கூடாது.
இந்த 5 நிபந்தனைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் சாதாரணமாக ( ordinarily) ஒரு முதலாளி இந்த விதிப்படிதான் (கடைசியில் வேலைக்கு சேர்ந்தவர் முதலில் வேலையிலிருந்து செல்ல வேண்டும்) ஆட்குறைப்பு செய்ய வேண்டும். ஆனால் நியாயமான மற்றும் தகுந்த காரணங்கள் இருப்பின் முதலாளி இந்த விதியை கடைபிடிக்க வேண்டியதில்லை. பிரிவு 25G யில் கூறப்பட்டுள்ள சாதாரணமாக (Ordinarily) என்ற வார்த்தையின் மூலம் இதை யூகிக்கலாம்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் நிர்வாகம் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும். தொழிற்சாலை ஈடுபட்டிருக்கின்ற தொழிலின் நலனை முன்னிட்டு அதற்கு அவசியமான சிறப்பு தகுதிகளை கொண்டுள்ள (Special qualifications) தொழிலாளிகள் நிறுவனத்திற்கு தேவை என நிர்வாகம் உண்மையாக கருதும் பட்சம் அவர்களை பணியில் வைத்துக் கொண்டு அவர்களை விட பணிமூப்பு கூடியவர்களை ஆட்குறைப்பு செய்யலாம் என உச்சநீதிமன்றம் "Om Oil and Oliseeds Exchange Ltd Vs Their Workmen (1969-2-LLJ-342)" என்ற வழக்கில் தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த விதியை விட்டு விலகி ஒருவரை ஆட்குறைப்பு செய்ய நிர்வாகம் முடிவு செய்யுமானால் அதற்கான காரணங்களை எழுத்து மூலமாக பதிவு செய்ய வேண்டும். பிறகு அதனை பார்வையிட்டு நியாயமானதும், திருப்திகரமுமான எந்தவித காரணங்களுமின்றி நிர்வாகம் இந்த விதியை விட்டு விலகியுள்ளது என்று ஒரு தொழிலாளர் தீர்ப்பாயம் திருப்தி கொள்ளுமானால் அந்த ஆட்குறைப்பு கெட்ட எண்ணத்தோடு பழிவாங்க செய்யப்பட்டது என்றோ அல்லது முதலாளியின் நேர்மையற்ற தொழில் நடவடிக்கை (Unfair Labour practice) என்றோ அறிவிக்கலாம். எனினும் முதலாளி இந்த விதியை மீறி விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அவர் ஏதோ ஒரு கெட்ட நோக்கத்தோடு தான் ஆட்குறைப்பினை செய்து விட்டார் என்ற முடிவுக்கு உடனே யாரும் வரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment