வாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்!
மத்திய அரசால், நாடு முழுவதற்குமான ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அந்த சட்டமானது இந்தியா முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். அதாவது அச்சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி நடக்காத குடிமக்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோக அரசு ஊழியர்கள், அச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை கையாண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகப்படியான முனைப்பை காட்ட வேண்டும்.
அப்படி முனைப்பு காட்டாமல் அல்லது கண்டும் காணாமல் இருந்த காரணத்தால், ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’.
ஆனாலும், குற்றம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கிற அரசு ஊழியர்கள் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய மக்களிடம் இருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே! கடமையுணர்வு இன்மையே!!
பொதுமக்களுக்கு தேவையான ஊழியங்களை செய்வதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நியமிக்கப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் தங்களின் சட்டப்படியான கடமைகளை செவ்வனே செய்து விட்டால், நாட்டில் எவருக்குமே பிரச்சினை இருக்காது.
ஆனால், தங்களுக்கு என்னென்ன சட்டக்கடமைகள் இருக்கின்றன என்பது அவ்வூழியர்களுக்கு தெரிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, தனக்காக ஊழியம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச சட்ட விழிப்பறிவுணர்வு கூட, அவர்களை வேலை வாக்க வேண்டிய முதலாளிகளான மக்களுக்கு இருப்பதில்லை. அதனாலேயே, அவர்கள் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும், அவர்கள் சொல்வதே, செய்வதே சரி என அவர்களின் நடைமுறையை, சட்டம் என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். நடைமுறை என்பது, ஒருவர் தனக்கு ஏற்றபடி தன்னிச்சையாக சட்ட விரோதமாக செயல்படுவதாகுமே தவிர, சட்டமல்ல.
அதனால், அந்நடைமுறைக்கு நாம் எவ்விதத்திலும் கடமைப்பட்டவர்கள் அல்ல. ஏனெனில், சட்டக் கடமை என்பது முற்றிலும் வேறு. அதற்குதான் நாம் கட்டுப்பட வேண்டும்.
சுருக்கமாக சொல்லப் போனால், மக்களுக்கு போதிய சட்ட விழிப்பணிவுணர்வு வந்து விட்டால், யாருமே அரசு ஊழியத்துக்கும், அரசை ஆளும் ஊழியத்திற்கும் வரமாட்டார்கள். இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.
ஆனாலும், இப்படியொரு நிலை, அரசு ஊழியத்திற்கு வந்து விட்ட, அதில் சொகுசாக வாழ்ந்து விட்ட, தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவேதாம், அரசை ஆள்பவர்களும், அதன் ஊழியர்களும் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியில் கொண்டுவர மறுக்கிறார்கள்.
இந்த முறையானது நம்மை அடிமையாக வைத்திருக்க நினைத்த ஆங்கிலேயர்களின் நியாயமற்ற கொள்ளை முறை என்பதாலும், இதற்கு நீதிபதிகளும் உடந்தையாக இருப்பதாலும் தாம், நீதிபதிகள் கொள்ளை கூட்டத்தின் தளபதிகள் என்று நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் குறிப்பிட்டு உள்ளேன்.
இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கும் கொடுத்துள்ளோம்.
பொதுவாக, எந்த காவல்துறையாக இருந்தாலும், அக்காவல்துறையின் கடமை, குற்றம் நடைபெறும் முன்பாகவே அதனை தடுத்து நிறுத்துவதுதானே தவிர மாறாக, குற்றம் நடந்தப்பின் நடவடிக்கை என்ற பெயரில் சமுதாயத்தை சீர்கேடு செய்து, தங்களின் பொருளாதாரத்தை சீர்த்தூக்கிக் கொள்வது அன்று.
ஆனால், இப்பொருளாதார சீர்கேட்டு கடைமையைத்தான் காவல்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ‘கடமை’ என்பது உயர்தரமான செயலை குறிக்கும் சொல். ‘கடைமை’ என்பது கீழ்தரமான செயலை குறிக்கும்.
ஆம்! சட்ட அறியாமையால் வாகன ஓட்டிகள் செய்கிற குற்றங்களே பரவாயில்லை என்கிற அளவில், சட்ட அறிவோடு போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் புரியப்படும் குற்றங்களே மிக, மிக அதிகம்.
இவர்களின் அடிப்படை நோக்கம், வாகன ஓட்டிகளை குற்றம் புரிய வைத்து அல்லது குற்றம் புரிந்ததாக மாயையை உருவாக்கி பணம் பறிப்பதே!
ஓர் குறிப்பிட்ட இடம் ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் போய் விடுகிறார்.
உடனே, ஒருவழிப்பாதையின் உள்ளே ஒளிந்து நிற்கும் போக்குவரத்து காவலர், திருடர்களை வலைவீசி பிடித்தது போல, அந்த அப்பாவி வாகன ஓட்டியை பாய்ந்து பிடித்து, வழக்கு பதிவு செய்வேன் என பீலா விட்டு பணத்தை கறந்து விடுகிறார்.
ஆனால், உண்மையில் இவரின் கடமை என்ன?
ஒரு வழிப்பாதை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் தனது காவல்பணியை செய்து, தவறாக நுழைய முயல்வோருக்கு தக்க வழி காட்டுவதும், அதையும் மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, இனி சட்டத்தை மீறக்கூடாது என்கிற வகையில் படம் கற்ப்பிப்பதுதான்.
இதேபோல, பிரதாண சாலைகளில் தனது சிறிய அளவிலான சொகுசு கார்களை போக்குவரத்துக்கு சிறிது இடைஞ்சல் தரும் வகையில் அல்லது தராத வகையில் (அதுவும் அருகில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத போது) நிறுத்தி விடுச் சென்றால் கூட, அச்சொகுசு கார்களின் உரிமையாளர்கள், தங்களுக்கான கப்பத்தை கட்டாமல் எடுத்துச் சென்று விட முடியாத வண்ணம், அதற்காகவே பிரத்தியோகமாக தயாரித்து வைத்துள்ள கருவியைக் கொண்டு பூட்டுவதோடு, அவ்வாகனத்தை கண்காணிக்கும் விதமாக, முன்பாகவோ அல்லது பின்பாகவோ தங்களது பெரிய அளவிலான தங்களது கனரக வாகனத்தை நிறுத்தி வைத்து, உண்மையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற கேலிக்கூத்தான செயல்களில் போக்குவரத்து காவல் ஊழியர்கள் ஈடுபடுவது ஊரறிந்த ஒன்றுதான்.
இவைகள் குற்றத்தை தடுக்கும் பொறுப்பில் உள்ள தாங்கள் பொறுப்பின்றி குற்றங்களை புரிந்து விட்டு, பாவம் ஒரு பக்கம் பழியொரு பக்கம் என்பது போல, ஏமாளிகள் மீது குற்றம் சுமத்தி பணம் பறிக்கும் செயல் என்றால், குற்றம் புரிந்தது போன்ற மாயையை ஏற்படுத்தி பணத்தையும் பறிக்கிறார்கள். எப்படி தெரியுமா?
பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.
ஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.
இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.
இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.
அதேபோல, ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சாவியை எடுப்பதோ, ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.

ஒருவேளை பறிமுதல் செய்வதாக இருந்தால், அப்படி பறிமுதல் செய்ததற்கான காரண காரியத்தோடு கூடிய ஒப்புதலை, காவல் ஊழியர்கள் அவ்வாகனத்தை ஒட்டி வந்தவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
ஆஹா! என்ன அருமையான யோசனைகள். இப்படியெல்லாம் சட்ட விதிகள் இருக்க கூடாதா என ஏங்காதீர்கள். நான் மேலே சொன்னவை யாவும் யோசனைகள் அல்ல. உண்மையில், இது தான் சட்ட விதிகளின் அறிவுறுத்தல்.
நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், போக்குவரத்து காவலர்கள் தரும் காவல்துறை அறிவிப்பின் இரண்டு பக்கங்களையும் படித்து பாருங்கள். எனது கூற்றின் உண்மை நன்றாகவே விளங்கும்.
இதோ உங்களுக்காக அப்பக்கங்கள்...
மத்திய அரசால், நாடு முழுவதற்குமான ஒரு சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று விட்டால், அந்த சட்டமானது இந்தியா முழுவதும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளதாகவே கருத வேண்டும். அதாவது அச்சட்டத்தின்படி, இந்திய குடிமக்கள் நடந்து கொள்ள வேண்டும்.
அப்படி நடக்காத குடிமக்களை அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பிரத்தியோக அரசு ஊழியர்கள், அச்சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள வழிவகைகளை கையாண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் அதிகப்படியான முனைப்பை காட்ட வேண்டும்.
அப்படி முனைப்பு காட்டாமல் அல்லது கண்டும் காணாமல் இருந்த காரணத்தால், ‘‘குற்றம் எதுவும் நிகழ்ந்தால் அக்குற்றத்திற்கு என்ன தண்டனையோ, அதில் பாதி தண்டனையை அந்த அரசு ஊழியருக்கும் விதிக்க வேண்டுமென இந்திய தண்டனைச் சட்டம் 1860 இன் பிரிவு 119 அறிவுறுத்துகிறது’’.
ஆனாலும், குற்றம் நிகழ்வதற்கு அடிப்படை காரணமாக இருக்கிற அரசு ஊழியர்கள் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. காரணம், இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டிய மக்களிடம் இருக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே! கடமையுணர்வு இன்மையே!!
பொதுமக்களுக்கு தேவையான ஊழியங்களை செய்வதற்காக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் நியமிக்கப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்கள் தங்களின் சட்டப்படியான கடமைகளை செவ்வனே செய்து விட்டால், நாட்டில் எவருக்குமே பிரச்சினை இருக்காது.
ஆனால், தங்களுக்கு என்னென்ன சட்டக்கடமைகள் இருக்கின்றன என்பது அவ்வூழியர்களுக்கு தெரிவதில்லை என்பது ஒருபுறமிருக்க, தனக்காக ஊழியம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கொஞ்ச, நஞ்ச சட்ட விழிப்பறிவுணர்வு கூட, அவர்களை வேலை வாக்க வேண்டிய முதலாளிகளான மக்களுக்கு இருப்பதில்லை. அதனாலேயே, அவர்கள் நம்மை ஏய்த்துப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும், அவர்கள் சொல்வதே, செய்வதே சரி என அவர்களின் நடைமுறையை, சட்டம் என்றே நம்பிக் கொண்டு இருக்கிறோம். நடைமுறை என்பது, ஒருவர் தனக்கு ஏற்றபடி தன்னிச்சையாக சட்ட விரோதமாக செயல்படுவதாகுமே தவிர, சட்டமல்ல.
அதனால், அந்நடைமுறைக்கு நாம் எவ்விதத்திலும் கடமைப்பட்டவர்கள் அல்ல. ஏனெனில், சட்டக் கடமை என்பது முற்றிலும் வேறு. அதற்குதான் நாம் கட்டுப்பட வேண்டும்.
சுருக்கமாக சொல்லப் போனால், மக்களுக்கு போதிய சட்ட விழிப்பணிவுணர்வு வந்து விட்டால், யாருமே அரசு ஊழியத்துக்கும், அரசை ஆளும் ஊழியத்திற்கும் வரமாட்டார்கள். இதற்கு பதிலாக பிச்சை எடுத்து பிழைத்துக் கொள்ளலாம் என்பார்கள்.
ஆனாலும், இப்படியொரு நிலை, அரசு ஊழியத்திற்கு வந்து விட்ட, அதில் சொகுசாக வாழ்ந்து விட்ட, தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவேதாம், அரசை ஆள்பவர்களும், அதன் ஊழியர்களும் சட்டக் கல்வியை அடிப்படை கல்வியில் கொண்டுவர மறுக்கிறார்கள்.
இந்த முறையானது நம்மை அடிமையாக வைத்திருக்க நினைத்த ஆங்கிலேயர்களின் நியாயமற்ற கொள்ளை முறை என்பதாலும், இதற்கு நீதிபதிகளும் உடந்தையாக இருப்பதாலும் தாம், நீதிபதிகள் கொள்ளை கூட்டத்தின் தளபதிகள் என்று நீதியைத்தேடி... சாட்சியங்களை சேகரிப்பது எப்படி என்கிற ஐந்தாவது நூலில் குறிப்பிட்டு உள்ளேன்.
இதனை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிபதிகளும் படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அவர்களுக்கும் கொடுத்துள்ளோம்.
பொதுவாக, எந்த காவல்துறையாக இருந்தாலும், அக்காவல்துறையின் கடமை, குற்றம் நடைபெறும் முன்பாகவே அதனை தடுத்து நிறுத்துவதுதானே தவிர மாறாக, குற்றம் நடந்தப்பின் நடவடிக்கை என்ற பெயரில் சமுதாயத்தை சீர்கேடு செய்து, தங்களின் பொருளாதாரத்தை சீர்த்தூக்கிக் கொள்வது அன்று.
ஆனால், இப்பொருளாதார சீர்கேட்டு கடைமையைத்தான் காவல்துறையைச் சேர்ந்த ஊழியர்கள் ஆற்றிக்கொண்டு இருக்கிறார்கள். ‘கடமை’ என்பது உயர்தரமான செயலை குறிக்கும் சொல். ‘கடைமை’ என்பது கீழ்தரமான செயலை குறிக்கும்.
ஆம்! சட்ட அறியாமையால் வாகன ஓட்டிகள் செய்கிற குற்றங்களே பரவாயில்லை என்கிற அளவில், சட்ட அறிவோடு போக்குவரத்து காவல்துறை ஊழியர்களால் புரியப்படும் குற்றங்களே மிக, மிக அதிகம்.
இவர்களின் அடிப்படை நோக்கம், வாகன ஓட்டிகளை குற்றம் புரிய வைத்து அல்லது குற்றம் புரிந்ததாக மாயையை உருவாக்கி பணம் பறிப்பதே!
ஓர் குறிப்பிட்ட இடம் ஒரு வழிப்பாதை என்பது, அவ்வழியாக தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும். அவ்வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இது குறித்து, போக்குவரத்து காவல்துறை நிர்ணயிக்கப்பட்ட குறிப்பிட்ட அளவில் வைத்திருக்கும் அறிவிப்பு பலகையை விட, பல நூறு மடங்கிலான தனியார் விளம்பர அறிவிப்பு பலகைகள் வானக ஓட்டிகளின் கண்களை ஆக்கிரமித்து விடவே, அவ்வாகன ஓட்டி, அவ்வொருவழிப் பாதையில் போய் விடுகிறார்.
உடனே, ஒருவழிப்பாதையின் உள்ளே ஒளிந்து நிற்கும் போக்குவரத்து காவலர், திருடர்களை வலைவீசி பிடித்தது போல, அந்த அப்பாவி வாகன ஓட்டியை பாய்ந்து பிடித்து, வழக்கு பதிவு செய்வேன் என பீலா விட்டு பணத்தை கறந்து விடுகிறார்.
ஆனால், உண்மையில் இவரின் கடமை என்ன?
ஒரு வழிப்பாதை எந்த இடத்தில் ஆரம்பிக்கிறதோ, அந்த இடத்தில் தனது காவல்பணியை செய்து, தவறாக நுழைய முயல்வோருக்கு தக்க வழி காட்டுவதும், அதையும் மீறி சென்றால் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி, இனி சட்டத்தை மீறக்கூடாது என்கிற வகையில் படம் கற்ப்பிப்பதுதான்.
இதேபோல, பிரதாண சாலைகளில் தனது சிறிய அளவிலான சொகுசு கார்களை போக்குவரத்துக்கு சிறிது இடைஞ்சல் தரும் வகையில் அல்லது தராத வகையில் (அதுவும் அருகில் போதுமான பார்க்கிங் வசதி இல்லாத போது) நிறுத்தி விடுச் சென்றால் கூட, அச்சொகுசு கார்களின் உரிமையாளர்கள், தங்களுக்கான கப்பத்தை கட்டாமல் எடுத்துச் சென்று விட முடியாத வண்ணம், அதற்காகவே பிரத்தியோகமாக தயாரித்து வைத்துள்ள கருவியைக் கொண்டு பூட்டுவதோடு, அவ்வாகனத்தை கண்காணிக்கும் விதமாக, முன்பாகவோ அல்லது பின்பாகவோ தங்களது பெரிய அளவிலான தங்களது கனரக வாகனத்தை நிறுத்தி வைத்து, உண்மையில் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவது போன்ற கேலிக்கூத்தான செயல்களில் போக்குவரத்து காவல் ஊழியர்கள் ஈடுபடுவது ஊரறிந்த ஒன்றுதான்.
இவைகள் குற்றத்தை தடுக்கும் பொறுப்பில் உள்ள தாங்கள் பொறுப்பின்றி குற்றங்களை புரிந்து விட்டு, பாவம் ஒரு பக்கம் பழியொரு பக்கம் என்பது போல, ஏமாளிகள் மீது குற்றம் சுமத்தி பணம் பறிக்கும் செயல் என்றால், குற்றம் புரிந்தது போன்ற மாயையை ஏற்படுத்தி பணத்தையும் பறிக்கிறார்கள். எப்படி தெரியுமா?
பொதுவாக, வாகன ஓட்டிகள் தனக்கான ஓட்டுனர் உரிமம் உட்பட, வாகனத்துக்கான ஆவணங்கள் அனைத்தையும் (பை, கை)யிலேயே வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என நினைக்கிறார்கள். இது தவறு. இந்த ஆவணங்களை வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ அல்லது வேறு பாதுகாப்பான இடத்திலோ கூட வைத்திருக்கலாம்.
ஒருவேளை, வாகனச் சோதனையின் போது இந்த ஆவணங்கள் இல்லையென்றால், சம்பந்தப்பட அந்த ஆவணங்களை, குறைந்தது பதினைந்து நாள் கால அளவில் எப்போது வேண்டுமானாலும் சரி பார்ப்பதற்காக, தனது மேல்நிலை ஊழியரிடம் காண்பிக்க கோரி சட்டப்பூர்வ அறிவிப்பைதான் தர முடியுமே தவிர, உடனே அபராதம் விதிக்க முடியாது.
இவ்வறிவிப்பின்படி, அதில் குறிப்பிட்ட அக்காலத்திற்குள் நமக்கு நேரம் இருக்கும் போது காண்பித்து விட்டால், அந்த அறிவிப்பை ரத்து செய்து கொள்வார்கள். அப்படி காண்பிக்கா விட்டால் மட்டுமே நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். வழக்கு தொடுத்தாலும் கூட, வழக்கில் காண்பித்துக் கொள்ளலாம். இதனால், ஒன்றும் குடிமுழுகி போய்விடாது.
இதெல்லாம், ஏதோ என் கற்பனையென்று நினைத்து விடாதீர்கள். சந்தேகம் இருந்தால், கீழேயுள்ள போக்குவரத்து காவலூழியர்கள் வழங்கிய அறிவிப்பை இருபுறமும் நன்றாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, நான் கட்டமிட்டு காட்டியுள்ள பகுதியைப் படியுங்கள்.
அதேபோல, ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான அடிப்படை முகாந்திரம் இல்லாமல், சாவியை எடுப்பதோ, ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.

ஒருவேளை பறிமுதல் செய்வதாக இருந்தால், அப்படி பறிமுதல் செய்ததற்கான காரண காரியத்தோடு கூடிய ஒப்புதலை, காவல் ஊழியர்கள் அவ்வாகனத்தை ஒட்டி வந்தவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
ஆஹா! என்ன அருமையான யோசனைகள். இப்படியெல்லாம் சட்ட விதிகள் இருக்க கூடாதா என ஏங்காதீர்கள். நான் மேலே சொன்னவை யாவும் யோசனைகள் அல்ல. உண்மையில், இது தான் சட்ட விதிகளின் அறிவுறுத்தல்.
நான் சொல்வதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், போக்குவரத்து காவலர்கள் தரும் காவல்துறை அறிவிப்பின் இரண்டு பக்கங்களையும் படித்து பாருங்கள். எனது கூற்றின் உண்மை நன்றாகவே விளங்கும்.
இதோ உங்களுக்காக அப்பக்கங்கள்...
No comments:
Post a Comment