சிறுநீரகக் கல்
பசலைக் கீரைச் சாற்றில் சிறுநெருஞ்சிமுள்ளை ஊற வைத்து உலர்த்தி, பிறகு பசும்பாலுடன் சேர்த்து வேக வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் என 20 நாட்களுக்கு சாப்பிட்டால்ச சிறுநீரகக் கற்கள் கரையும். சிறுநீரகம் தொடர்பான பிற நோய்களும் குணமாகும்.
முள்ளிங்கிக் கீரை சாறை 30 மிலி அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும்.
காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகக் கற்கள் குறையும்.
சாணாக்கிக் கீரைச் சாறை, அதிகாலையில் 30 மிலி அளவு குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
சிறுநீரகக் கோளாறு
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
வங்கார வள்ளைக் கீரையுடன் சிறிது சதகுப்பை, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
சாணாக்கிக் கீரையை கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல்l (சிறுநீர் ஒழுக்கு)
பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்னை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.
பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியாவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.
சிறுநீர் கடுப்பு
சுக்குக் கீரையுடன் சோம்பு, சீரகம், மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு சரியாகும்.
சிறுநீர் எரிச்சல்
கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் தீரும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சிறுநீர் பிரிய
முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.
வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.
முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.
சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.
சீதபேதி
பருப்புக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், சீதபேதி, இரத்த பேதி இரண்டும் உடனே நிற்கும்.
சுக்காங் கீரைச் சாறில் வெந்தயத்தை (அரை ஸ்பூன்) ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி, சீழ்மூலம் குணமாகும்.
பண்ணைக்கீரை சாறில் மாதுளம் பழத்தோலை அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி குணமாகும்.
சீதளம்
புளிச்சக்கீரைச் சாறில் மிளகை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.
சைனஸ்
மணலிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் சைனஸ் பிரச்னை குணமாகும்.
சொறி
முகத்தில் சொறியா? கண்ட சலூன்களில் சுத்தம் செய்யாத கத்தியினால் முகசவரம் செய்துகொண்டால் முகத்தில் சொறி ஏற்படுவதுண்டு. இதற்கு ஒரு வெற்றிலையை நன்கு அரைத்து அத்துடன் எலுமிச்சம் பழGopal Vinaayagam:
ச்சாற்றையும் கலந்து சொறியின்மீது தடவி வரவும். இவ்வண்ணம் சில நாட்கள் செய்து வந்தால் சொறி குணமாகும்.
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
தலைபாரம்
துயிலிக் கீரையுடன் பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தலைபாரம் குணமாகும்.
தலைவலி
சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிப்பொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம் தகதகவென்று எரியும். சிறிது நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.
கற்பூரவள்ளி இலையை எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றுப்பொட்டில் பத்து போட்டால் தலை வலி சரியாகும்.
நான்கு மிளகை தண்ணீர் விட்டு அரைத்து, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகும்.
சிலருக்கு சைனஸ் காரணமாக தலைவலி வரும். அவர்கள் இரவில் தூங்கும்பொழுது தலையணையில் நொச்சி இலையை வைத்து தூங்கினால் நாளடைவில் தலைவலி சரியாகும். நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்சி, சூடு ஆறியதும் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் வெந்நீரில் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இரண்டு மாதம் வரைக்கும் செய்தால் சைனஸ் சரியாகும். தலைவலியும் சரியாகும்.
பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.
வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைத்து, முன் நெற்றியில் பத்துப் போட்டு சூரியன் உதிக்கும்போது வரும் வெளிச்சத்தில் காட்டி வந்தால் ஒன்றைத் தலை வலி மூன்றே நாளில் சரியாகும்.
கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும். கொத்தமல்லிச் சாறை சந்தனப்பொடி குழைத்து பற்றுப் போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும். கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லி வற்றல் சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துக் குடித்தால் தலைசுற்றல் குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான தலை வலியும் தீரும்.
தூதுவளைக் கீரை (ஒரு கைப்பிடி) வெற்றிலை (ஒரு கைப்பிடி) சுக்குப்பொடி (25 கிராம்) மஞ்சள் (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இதில் ஒரு மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிட்டு, ஒரு மாத்திரையை வெந்நீரல் கரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதைத் தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக் கட்டினால், நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.
தலைமுடி
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலை முடி கறுமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
தாகம்
வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.
தாய்ப்பால் சுரக்க
கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, பசும்பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
முள்ளிக்கீரையுடன் பச்சைப் பயறு சேர்த்து அவித்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
பாற்சொரிக் கீரையை சிறிது பச்சைப் பயிறு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.
சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
தீப்புண் ஆற
பருப்புக் கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் விரைவில் புண்கள் ஆறும்.
தேள் கொட்டு
தேள் கொட்டினால் விஷம் ஏறும். கொட்டிய இடத்தில் கடுப்பு இருக்கும். வெற்றிலை இரண்டை எடுத்துப் பத்து மிளகை அதில் வைத்து மடித்து வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கினால் விஷம் இறங்கும். வலி நிற்கும் இது ஓர் உடனடி நிவாரணி.
தூக்கம் வர
நொச்சி இலைகளைக் கொண்டு வந்து கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வெங்காயத்தை நசுக்கி அடிக்கடி முகர்ந்தாலும் நல்ல தூக்கம் வரும்.
பசலைக் கீரைச் சாற்றில் சிறுநெருஞ்சிமுள்ளை ஊற வைத்து உலர்த்தி, பிறகு பசும்பாலுடன் சேர்த்து வேக வைத்து, உலர்த்திப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 2 கிராம் என 20 நாட்களுக்கு சாப்பிட்டால்ச சிறுநீரகக் கற்கள் கரையும். சிறுநீரகம் தொடர்பான பிற நோய்களும் குணமாகும்.
முள்ளிங்கிக் கீரை சாறை 30 மிலி அளவில் தொடர்ந்து 21 நாள்கள் குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரைந்து போகும். சிறுநீர்ப்பை வீக்கமும் குணமாகும்.
காசினிக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகக் கற்கள் குறையும்.
சாணாக்கிக் கீரைச் சாறை, அதிகாலையில் 30 மிலி அளவு குடித்தால் சிறுநீரகக் கற்கள் கரையும்.
சிறுநீரகக் கோளாறு
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.
வங்கார வள்ளைக் கீரையுடன் சிறிது சதகுப்பை, மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரக நோய்கள் குணமாகும்.
சாணாக்கிக் கீரையை கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீரகக் கோளாறுகள் குணமாகும்.
சிறுநீர் சொட்டு சொட்டாக வருதல்l (சிறுநீர் ஒழுக்கு)
பாலக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறும் பிரச்னை தீரும். சிறுநீர்ப்பையும் வலுப்படும்.
பண்ணைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால், சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியாவது (சிறுநீர் ஒழுக்கு) நிற்கும்.
சிறுநீர் கடுப்பு
சுக்குக் கீரையுடன் சோம்பு, சீரகம், மஞ்சள், வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு சரியாகும்.
சிறுநீர் எரிச்சல்
கானாம்வாழைக் கீரையை அரைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் எரிச்சல் தீரும்.
பொடுதலைக் கீரையுடன் சிறிது சீரகம், பார்லி சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர்க்கடுப்பு, எரிச்சல் நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
சிறுநீர் பிரிய
முருங்கைக்கீரை (ஒரு கைப்பிடி), பார்லி (20 கிராம்), சீரகம் (கால் ஸ்பூன்), மஞ்சள் (சிறிதளவு) ஆகியவற்றை ஒன்றாக்கி கஷாயமாக்கி வடிகட்டிச் சாப்பிட்டால், நீர்க்கட்டு உடைந்து, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
ஒரு கைப்பிடி அளவு மணத்தக்காளிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லி, நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு, நீர் எரிச்சல், சிறுநீர் பிரியாமை போன்ற குறைபாடுகள் சரியாகும்.
புதினா இலையை ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி உப்பு சேர்க்காமல் சாப்பிட்டால் நன்கு சிறுநீர் பிரியும்.
வெங்காயத்தாளுடன் ஒரு ஸ்பூன் பார்லியைப் பொடியாக்கி சேர்த்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், நீர் எரிச்சல், நீரடைப்பு நீங்கி, சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
வெந்தயக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்துக் கஷாயமாக்கி சாப்பிட்டால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் சரியாகும்.
முள்ளங்கிக் கீரையுடன் ஒரு ஸ்பூன் பார்லியை கலந்து வேகவைத்துச் சாப்பிட்டால் நீர்க்கட்டு உடையும். சிறுநீரும் தாராளமாகப் பிரியும்.
கல்யாண முருங்கை இலையுடன் சிறிது பார்லியைச் சேர்த்து அரைத்து கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், சிறுநீர் எரிச்சல் குறையும். சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
முடக்கத்தான் கீரையுடன் சிறிது சதகுப்பையைச் சேர்த்து கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும்.
பிண்ணாக்குக் கீரையுடன் சிறிது சீரகம், மஞ்சள் சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும். நீர்க்கட்டும் குணமாகும்.
சதகுப்பைக் கீரையைக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் சிறுநீர் நன்கு பிரியும். கால் வீக்கமும் குணமாகும்.
சீதபேதி
பருப்புக் கீரையுடன் ஊற வைத்த வெந்தயத்தை ஒரு ஸ்பூன் சேர்த்து அரைத்துக் கொடுத்தால், சீதபேதி, இரத்த பேதி இரண்டும் உடனே நிற்கும்.
சுக்காங் கீரைச் சாறில் வெந்தயத்தை (அரை ஸ்பூன்) ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி, சீழ்மூலம் குணமாகும்.
பண்ணைக்கீரை சாறில் மாதுளம் பழத்தோலை அரைத்துச் சாப்பிட்டால் சிதபேதி குணமாகும்.
சீதளம்
புளிச்சக்கீரைச் சாறில் மிளகை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் அரை ஸ்பூன் சாப்பிட்டால் ருசியின்மை பிரச்னை தீரும்.
சைனஸ்
மணலிக் கீரை சாறில் திப்பிலியை ஊற வைத்து, உலர்த்திப் பொடியாக்கிச் சாப்பிட்டால் சைனஸ் பிரச்னை குணமாகும்.
சொறி
முகத்தில் சொறியா? கண்ட சலூன்களில் சுத்தம் செய்யாத கத்தியினால் முகசவரம் செய்துகொண்டால் முகத்தில் சொறி ஏற்படுவதுண்டு. இதற்கு ஒரு வெற்றிலையை நன்கு அரைத்து அத்துடன் எலுமிச்சம் பழGopal Vinaayagam:
ச்சாற்றையும் கலந்து சொறியின்மீது தடவி வரவும். இவ்வண்ணம் சில நாட்கள் செய்து வந்தால் சொறி குணமாகும்.
சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.
தலைபாரம்
துயிலிக் கீரையுடன் பூண்டு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தலைபாரம் குணமாகும்.
தலைவலி
சுக்கை எடுத்து கொஞ்சம் தண்ணீர் விட்டு உரசி நெற்றிப்பொட்டில் கனமாக பத்துப் போட வேண்டும். கொஞ்சம் தகதகவென்று எரியும். சிறிது நேரத்தில் தலைவலி பறந்துபோகும்.
கற்பூரவள்ளி இலையை எடுத்து சாறு பிழிந்து, அதனுடன் கொஞ்சம் நல்லெண்ணெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கி நெற்றுப்பொட்டில் பத்து போட்டால் தலை வலி சரியாகும்.
நான்கு மிளகை தண்ணீர் விட்டு அரைத்து, கொஞ்சம் கற்பூரத்தூளை சேர்த்து நெற்றியில் பத்து போட்டால் தலைவலி சரியாகும்.
சிலருக்கு சைனஸ் காரணமாக தலைவலி வரும். அவர்கள் இரவில் தூங்கும்பொழுது தலையணையில் நொச்சி இலையை வைத்து தூங்கினால் நாளடைவில் தலைவலி சரியாகும். நொச்சி இலை சாறு எடுத்து, நல்லெண்ணெய் விட்டு நன்றாகக் காய்ச்சி, சூடு ஆறியதும் தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் வெந்நீரில் குளிக்க வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாள் என்று இரண்டு மாதம் வரைக்கும் செய்தால் சைனஸ் சரியாகும். தலைவலியும் சரியாகும்.
பருப்புக் கீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், உடல் சூட்டால் உண்டாகும் தலைவலி நீங்கும்.
வெள்ளை எள்ளை எருமைப்பால் விட்டு அரைத்து, முன் நெற்றியில் பத்துப் போட்டு சூரியன் உதிக்கும்போது வரும் வெளிச்சத்தில் காட்டி வந்தால் ஒன்றைத் தலை வலி மூன்றே நாளில் சரியாகும்.
கொத்தமல்லிச் சாறில் சுக்கை இழைத்து நெற்றில் பற்றுப்போட்டால் தலைபாரம், தலைவலி குணமாகும். கொத்தமல்லிச் சாறை சந்தனப்பொடி குழைத்து பற்றுப் போட்டால் பித்தத்தால் ஏற்படும் தலைவலி சரியாகும். கொத்தமல்லியோடு சந்தனம், நெல்லி வற்றல் சேர்த்து தண்ணீரில் ஊற வைத்துக் குடித்தால் தலைசுற்றல் குணமாகும்.
கரிசலாங்கண்ணி கீரையை மிளகு, சோம்பு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டால் அனைத்து விதமான தலை வலியும் தீரும்.
தூதுவளைக் கீரை (ஒரு கைப்பிடி) வெற்றிலை (ஒரு கைப்பிடி) சுக்குப்பொடி (25 கிராம்) மஞ்சள் (25 கிராம்) ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, பட்டாணி அளவு மாத்திரைகளாக செய்து நிழலில் உலர்த்திப் பத்திரப்படுத்தவும். இதில் ஒரு மாத்திரையை உள்ளுக்குச் சாப்பிட்டு, ஒரு மாத்திரையை வெந்நீரல் கரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால், தலைவலி, தலைபாரம், சைனஸ் போன்றவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும்.
கொடிப்பசலைக் கீரையை நீரில் போட்டு அலசினால் கொழகொழப்பான திரவம் கிடைக்கும். இதைத் தலை அல்லது நெற்றியில் தடவினால் தலைவலி குணமாகும். நல்ல தூக்கமும் வரும்.
நல்வேளைக் கீரையை அரைத்து தலையில் வைத்துக் கட்டினால், நெடுநாள் தொல்லைதரும் தலைவலி குணமாகும்.
தலைமுடி
கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடி செய்து, தினமும் காலை மாலை இரு வேளையும் 5 கிராம் அளவு (ஒரு ஸ்பூன்) சாப்பிட்டால் தலை முடி கறுமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
தாகம்
வெங்காயத் தாளுடன் சீரகம், சோம்பு சேர்த்து அரைத்து கஷாயமாகச் சாப்பிட்டால் தீராத தாகம் தீரும்.
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தீராத தாகமும் தீரும்.
தாய்ப்பால் சுரக்க
கல்யாண முருங்கை இலையுடன் சம அளவு அம்மான் பச்சரிசி இலையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பிரசவித்த பெண்கள் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அம்மான் பச்சரிசிக் கீரையின் பூக்களை ஒரு கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, பசும்பாலில் கலந்து 18 நாட்களுக்கு காலையில் மட்டும் சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
முள்ளிக்கீரையுடன் பச்சைப் பயறு சேர்த்து அவித்துச் சாப்பிட தாய்ப்பால் பெருகும்.
பாற்சொரிக் கீரையை சிறிது பச்சைப் பயிறு சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும்.
சதகுப்பைக் கீரையை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.
தீப்புண் ஆற
பருப்புக் கீரையை அரைத்து தீப்புண்கள் மீது தடவினால் விரைவில் புண்கள் ஆறும்.
தேள் கொட்டு
தேள் கொட்டினால் விஷம் ஏறும். கொட்டிய இடத்தில் கடுப்பு இருக்கும். வெற்றிலை இரண்டை எடுத்துப் பத்து மிளகை அதில் வைத்து மடித்து வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கினால் விஷம் இறங்கும். வலி நிற்கும் இது ஓர் உடனடி நிவாரணி.
தூக்கம் வர
நொச்சி இலைகளைக் கொண்டு வந்து கொதிக்கும் நீரில் போட்டு ஆவி பிடித்தால், இரவில் நல்ல தூக்கம் வரும். வெங்காயத்தை உணவில் நிறைய சேர்த்துக்கொள்ளுதல் நல்லது. வெங்காயத்தை நசுக்கி அடிக்கடி முகர்ந்தாலும் நல்ல தூக்கம் வரும்.
No comments:
Post a Comment