flipkart discount sale search here.

Monday 30 October 2017

#சென்னையில் வசிக்கும் தோழமைகளின் #கவனத்திற்க்கு...

#சென்னையில் வசிக்கும்
தோழமைகளின் #கவனத்திற்க்கு...

சென்னையில் இன்னும் நாலைந்து நாட்களுக்கு மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
இதனால் உங்களால் முடிந்த அளவு இந்த கீழ்க்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்களை எடுத்து கொள்ளுங்கள்...

மழையினால் மின்தடை ஏற்படலாம், தண்ணீர் கிடைக்காமல் போகலாம். எனவே, வாய்ப்பு அல்லது நேரம் இருக்கும்போது கீழ்க்கண்டவற்றை செய்வது நல்லது.

 பிஸ்கட், பால் அல்லது பால் பவுடர், அவசர மாத்திரைகள், தண்ணீர் கேன், பேட்டரி செல்கள், மெழுகுவர்த்தி, ரெடிமிக்ஸ் உணவு வகைகள், காய்கறிகள் போன்ற பொருட்களை போதுமான அளவுக்கு (மட்டும்) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மின்சாரம் இருக்கும்போது செல்போன்களை முழு சார்ஜ் போட்டு வைத்துக்கொள்ளுங்கள்.

 செல்போனை அவசர உபயோகத்துக்கு மட்டும் பயன்படுத்துங்கள். பாட்டுக்கேட்பது, வீடியோ அல்லது பேஸ்புக் பார்ப்பது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுத்தாதீர்கள்.

மின்தடை இருக்கும்போது யுபிஎஸ் அல்லது இன்வர்ட்டரை சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்.
அத்தியாவசியமான பணி இருந்தாலொழிய மழைநீரில் நடக்காதீர்கள்.

தரைத்தளத்தில் வசிப்பவர்கள் மேடான இடத்திற்கு நகர வேண்டிய தேவை வரக்கூடும் என்பதால், முன்னரே அதற்கான இடங்களை அறிந்து வைத்திருங்கள்.

குடைகளையும் ரெயின்கோட்டையும் தயாராக வைத்திருங்கள்.

குழாய் தண்ணீரைப் பயன்படுத்துவோர் காய்ச்சிப் பயன்படுத்துங்கள்.

 ரயில், பஸ் என முக்கியப் போக்குவரத்து வசதிகள் தடைபடும் என்பதால் சென்னை தொடர்பற்ற தீவாகும் சாத்தியங்கள் உண்டு.
ஆடம்பரங்களைத் தவிர்த்திடுங்கள்.

உதவும் வாய்ப்பு உள்ளவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு இயன்ற அளவுக்கு உதவுங்கள்.

கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்வோர் கவனிக்கவும் - வேகமாக ஓடும் வெள்ள நீர் அரை அடி உயரம் இருந்தாலும் போதும், உங்கள் வாகனத்தை இழுத்துச்செல்லப் போதுமானது. எச்சரிக்கையாக இருங்கள்.

#சாதி_மதம்_இனம்_மொழிகளை கடந்து
உங்களிடம் இருப்பதை கொண்டு
#இருப்பவர்கள்_இல்லாதோர்க்கும்
#இயலாதோர்க்கும் உதவி செய்வோமாக...

No comments:

Post a Comment