flipkart discount sale search here.

Tuesday 26 December 2017

அப்ப அவன் சொன்னான் ...

ஒருவன் தன் மனைவியை *விவாகரத்து* செய்த பிறகு தன் வீட்டிற்கு வந்தான்.
.
தன் அறையின் ஒரு மூலையில் ஒரு பெட்டியில் கொஞ்சம் *காலியான மது பாட்டில்கள்* இருப்பதை அவன் பார்த்தான் .
.
அதில் இருந்து ஒரு பாட்டில் எடுத்து கோபத்தில் தூர எறிந்து கொண்டு அவன் கூறினான் :
*என் மனைவி என்னை விட்டு போகக் காரணம் நீ தான்*
.
மீண்டும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்து விட்டு அவன் கூறினான் :
*எனக்கு குழந்தைகள் இல்லாததுக்கு காரணம் நீதான்*
.
மறுபடியும் அடுத்த பாட்டில் எடுத்து எறிந்துவிட்டு அவன் சொன்னான் :
*என் வேலை போகக் காரணம் நீ தான்*
.
மீண்டும் அவன் அடுத்த பாட்டில் எறிய எடுத்ததும் அவனுக்கு புரிந்தது, அது லேபிள்கூட கிழிக்காத சரக்கு உள்ள முழுப்பாட்டில் .
.
அப்ப அவன் சொன்னான் :
*நீ இந்த சைடு ஒதுங்கி நில்லு ..* எனக்குத்தெரியும், உனக்கு இந்த சம்பவத்துல ஒரு பங்கும் இல்லனு ....!"'🍾
.
*ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது* 😆😝🤣😂😅

No comments:

Post a Comment