flipkart discount sale search here.

Friday, 4 August 2017

பெண்ணை பின்தொடர்வது குற்றமாக கருதப்படமாட்டாது.

குற்றவியல் திருத்த சட்டம்
2013, 354D பிரிவின்படி
ஒரு ஆண், ஒரு பெண்ணை தொடர்புகொள்ள முயற்சித்து அவரை பின்தொடர்தல், இவரின் இந்த செய்கையை அந்தப் பெண் எதிர்த்தும் தொடர்வது, மேலும் மின்னஞ்சல் போன்ற விஞ்ஞான
சாதனத்தின் மூலம் ஒரு
பெண்ணை தொடர்பு கொண்டு
தொந்தரவு செய்ய முயற்சி
செய்தல் தண்டனைக்குரிய
குற்றங்களாக கருதப்படுகின்றன.
முதன்முறையாக செய்யப்படும்
இந்தக் குற்றத்துக்கு 3 ஆண்டுகள் வரை அபராதத்துடன் கூடிய சிறைத்தண்டனையும்,
தொடர்ந்து இதே குற்றத்தை
செய்யும் பட்சத்தில் 5
ஆண்டுகள் அபராதத்துடன்
கூடிய சிறைத்தண்டனையும்
விதிக்கப்படும்.
இதற்கு விதிவிலக்காக எந்த ஒரு குற்றச்செயலை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் அல்லது சட்டத்தின்
உதவியுடன் ஒருவர் ஒரு
பெண்ணை பின்தொடர்வது
குற்றமாக கருதப்படமாட்டாது.

No comments:

Post a Comment