flipkart discount sale search here.

Saturday 26 May 2018

மனைவிய உண்மையா நேசிக்குறவங்க நேசிக்கணும்னு நினைக்குறவங்க இந்த பதிவ படிக்காம கடந்து போயிராதிங்க...

மனைவிய உண்மையா நேசிக்குறவங்க நேசிக்கணும்னு நினைக்குறவங்க இந்த பதிவ படிக்காம கடந்து போயிராதிங்க .

        என் பேரு அனிதா .சொந்த ஊர் காரைக்குடி .ஊர பத்தி நிறைய சொல்ல வேண்டியது இல்ல.அடுக்கடுக்காய் அழகான வீடுகள் .நேர்மையான சடங்குமுறை திருமணங்கள் .அனைவரும் விரும்பும் உணவு முறைகள் .அன்பான உபசரிப்புகள் என காரைக்குடியின் அடையாளங்கள் தனித்துவம் வாய்ந்தவை .இந்த ஊர்ல எங்கப்பா ஒரு போஸ்ட் மேன்.அம்மா வீட்ட பாத்துக்குறாங்க .எனக்கு ஒரு அக்கா ,ஒரு தம்பி.அப்பா ரோம்ப கஷ்டப்பட்டு தான் படிக்க வச்சுட்டு இருந்தாரு.எங்க அப்பாவுக்கு ஒரு தங்கச்சி சின்ன வயசுலேயே கணவன இழந்தவங்க.எங்கப்பா நிழல்ல தான் இருக்காங்க .அவுங்களுக்கு ஒரே பையன் பேரு ராம்குமார்.எங்க பாட்டிக்கு என்ன மட்டும்  ரோம்ப புடிக்கும் .எனக்கும் எங்க மாமாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கனும்னு அதுக்கு ரோம்ப ஆசை.

           எங்க மாமா வீட்டுக்கு வந்தாளே "உன் புருஷன் வர்றான்டி"சொல்லும் எனக்கு கோபமா வரும் .ஆனால் நான் பெரிய பொண்ணு ஆனதும் எங்க மாமா மேல தனி பிரியம் வளர்ந்தது .மாமா வந்த ஓடி போய் ஒளிஞ்சுக்குவேன்.ஆனால் மறைஞ்சு மறைஞ்சு பாத்துட்டு இருப்பேன் .எங்க பாட்டி புருஷன்னு சொல்லி சொல்லி அதுவே மனசுல பதிஞ்சு போச்சு .புதுசா தாவணி கட்டுனா எங்க மாமா எதிர்க்க நடந்து வந்துட்டே இருப்பேன் .எங்க மாமா என்கிட்ட அதிகமா பேச மாட்டாங்க .பேசனும்னு ஆசைப்படுவேன்.மாமா வீட்டுக்கு வந்தா நிறைய சாப்பிட வச்சு தருவேன் மாமா சாப்பிட்ட மிச்சத்த மறைச்சு வச்சு சாப்டுவேன்.நான் +2 முடுச்சதும் கல்யாண பேச்சு ஆரம்பம் ஆச்சு .ஒரு நாள் என் தம்பி ஓடி வந்து மாமா ஒரு பொண்ணு கூட பேசிட்டு இருக்குறத பாத்ததா சொன்னான் .கோபத்துல ஓங்கி அறஞ்சுட்டேன்.அழுதுட்டே இருந்தான் .சமாதானபடுத்திட்டேன்.ஒரு நாள் நானே பாத்துட்டேன் மனசு நொறுங்கி போயிருச்சு .வீட்ல யாருக்கும் தெரியாம மறஞ்சு மறஞ்சு அழுதுட்டு இருந்தேன் .

          எங்க பாட்டி கல்யாண பேச்சு பேச எங்க அப்பாவ அனுப்பி வச்சாங்க .கொஞ்ச நேரத்தில் அப்பா வந்து கல்யாண ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கலாம்னு சொன்னாரு .எனக்கு ஒண்ணுமே புரியல .கல்யாணம் நல்லபடியா முடிஞ்சு முதலிரவு அறைக்குள் போனேன் .மாமா முன்னாடி போய்"என்ன ஏன் கட்டிகிட்டீங்க?நீங்க விரும்புன பொண்ண கட்டிக்க வேண்டியது தான ?எனக்கு எல்லாம் தெரியும் "என்று அழ தொடங்கினேன் .மாமா என் கைய புடுச்சு "உண்மை தான் அனிதா .என் மனசுல இன்னோரு பெண் இருந்தா.எங்கப்பா உன்ன கட்டிக்க சொல்லிருந்தா மறுத்திருப்பேன்.ஆனா உங்க அப்பா.ஒரு தாய்மாமானா இல்லாம தகப்பனா வளத்தவரு.என் முன்னாடி நம்பிக்கையா நின்னாரு.அவர ஏமாத்த விரும்பல."என்றதும் பதிலுக்கு "என்ன புடிக்கலையா மாமா?"என்று நான் சொல்ல பதிலுக்கு அவர் "இதுவரைக்கும் உன் கூட பழகினது இல்ல .இனி மேல் தான் பழகனும்.நிறைய லவ் பண்ணனும் சரியா?என்று சிரித்தபடியே "இரண்டு மனசும் சேரும் போது நாமும் சேரலாம் ok"என்றார் .ஆரம்பத்துல அவரிடம் நெருங்க தயக்கமாக இருந்தது .ஆனால் கொஞ்ச நாள்ல அவர் என் காதல புரிஞ்சுகிட்டார்.என்ன இறுக்கி கட்டி புடுச்சுகிட்டார்.அவரது கண்ணீர் துளிகள் என் முதுகில் படர்வதை உணர்ந்தேன் .

           வாழ்க்கை அருமையா இருந்துச்சு .அந்த சமயத்துல என் அக்கா இறந்துவிட அவளது மூன்று பெண் குழந்தைகளை நாங்கள் வளர்க்க ஆரம்பித்தோம்.எங்களுக்கும் ஆறு வயசுல அருண் இருந்தான் .கலகலப்பான குடும்ப வாழ்க்கை.நானும் டீச்சர் வேலைக்கு போய்ட்டு இருந்தேன் .அந்த சமயத்துல என் உடம்புல நிறைய பிரச்சினைகள் வந்தது .எனது இடது புற மார்பில் தாங்க முடியால வலி ஏற்பட்டது .நானும் என் கணவருடன் என் தம்பி வேலை செய்யும்  கோயமுத்தூரில் உள்ள ஒரு பெரிய தனியார் மருத்துவமனையில்  எல்லா டெஸ்டும் எடுத்தோம் .எனக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது .அதுவும் கடைசி நிலை.என் தம்பியும் கணவரும் துடிச்சு போய்ட்டாங்க .அஞ்சு லட்சத்துக்கு மேல செலவு ஆகும் என்றும் இருந்தாலும் இப்ப எதுவும் உறுதி சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க .என்ன என் தம்பி கூட விட்டுட்டு வந்து என் கணவர் எல்லா வகையிலும் பணத்த ரேடி பண்ணிட்டு வந்தார் .எங்க மூணு பேர தவிர யார்கிட்டயும் சொல்லல .எனக்கு சிகிச்சை ஆரம்பிச்சது .மிகப்பெரிய சோதனையே அப்புறம் தான் நடந்தது .

         மிகவும் சக்தி வாய்ந்த மருந்துகள் சாப்பிடுவதால் என் தலைமுடி கொட்டி  முகம் கருத்து விகாரமாய் மாறியது .என் முகம் எனக்கே மறக்க ஆரம்பித்தது .ஆபரேஷனுக்கு இரண்டு நாள் முன்பு  எனக்கு மிகவும் மனஅழுத்தம் ஆரம்பம் ஆனது .தொடர்ந்து அழ ஆரம்பித்தேன் .அன்னைக்கு நைட் என் மாமா என் கூட என் கைய புடுச்சுகிட்டு என் பேட்ல படுத்தார் .அவரது அணைப்பில் கொஞ்சம் அமைதியானேன்.அப்போது என் மாமாவிடம்"மாமா நான் உங்களுக்கு வேணாம் மாமா.இனி என்னால உங்களுக்கு எந்த சந்தோசத்தையும் தர முடியாது.என்ன எதாவது அனாதை இல்லத்தில் கொண்டு போய் விட்டுறுங்க"என்று முடிப்பதற்குள் கதறி அழ ஆரம்பித்தேன் .அவரு என்ன நெருக்கமா அணைச்சு"உன்ன தொலச்சுட்டு நான் எப்படி வாழ்றது ?செக்ஸ் மட்டுமா வாழ்க்கை.உன்ன பாத்துட்டே இருந்தா போதும் .உன்ன ரோம்ப லவ் பண்றேன் .உன் காதல அனுபவிச்சுட்டே இருக்கணும் சாகுற வரைக்கும் "என்று என் நெத்தியில் முத்தமிட்டார் .அடுத்த நாள் என்னை ஆபரேஷன்  தியேட்டருக்கு அழைத்து செல்லும் முன் எனக்கு மயக்க மருந்து கொடுத்திருந்தார்கள்.மயக்கத்தின் விளிம்பில் என் மாமாவ பாத்து "மாமா எனக்கு ரோம்ப ஆசையா இருக்கு ஒரு முத்தம் கொடுப்பீங்களா?"என்றதும் அறையில் இருந்த நர்ஸ் வெளியேற என் மாமா என் உதடோட உதடு வச்சு முத்தம் கொடுத்தப்ப அவரது கண்ணீர் என் கன்னத்தில் விழுவதை உணரமுடிந்தது .இந்த முத்தத்தில் அவரது காதலை முழுமையாக உள் வாங்கினேன் .அறுவைச்சிகிச்சை மூலம் இடது மார்பு அகற்றப்பட்டது.

          ஆறு மாத காலத்திற்கு பிறகு என் பழைய நிலைக்கு திரும்பினேன் .என்னை மரணத்தில் இருந்து மீட்டு வந்தது  என் மாமா தான்.நல்ல கணவன் மனைவியா அன்பு மட்டும் போதும்னு நீங்க எல்லோரும் புரிஞ்சுக்க தான் இந்த பதிவு .

(முழுசா படிச்சவங்க கமண்ட் போட்டுட்டு ஒரு ஷேர் செய்யுங்கள் )

No comments:

Post a Comment