flipkart discount sale search here.

Saturday 26 May 2018

ஒரு துறவியிடன் ஒரு ஆழகான பெண் கேட்டாள் ...!

ஒரு துறவியிடன் ஒரு ஆழகான பெண் கேட்டாள் ...!!

" என் கணவர்கிட்ட நிறைய குறைகள் ...அவரோடு என்னால் இனி என்னால் வாழமுடியாது...எனவே நான் அவரைவிட்டு விலகி விடட்டுமா?".
அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி..
.
"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...எது வேண்டும் ...கேள்?" என்றார்.

அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...
" அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்..அதோடு அதில் நெறைய முட்கள் வேறு இருக்கிறதே? இதுவா வேண்டும்?" இது துறவி..

"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...அதனால் அதனிடம் உள்ள குறைகள் பெரிதாகத் தெரியாது.." என்றாள்..

புன்னகைத்த துறவி சொன்னார்:" வாழ்கையும் அப்படிதான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".

No comments:

Post a Comment