flipkart discount sale search here.

Saturday 29 July 2017

அன்போடு பெற்றெடுத்த அன்னை...

ஆண் மயிலுக்கு

தோகை உண்டு

ஆதலால் அஃது

அழகோ அழகு

என்று ஆடினேன்!!!

தோகை மட்டுமல்ல

தோகையை சுமந்து

திரியும் தேகத்தையும்

நானே பெற்றெடுத்தேன்

என்கிறது அடக்கமாய் பெண்மை!!!

ஆண் சிங்கம்

கம்பீரம் என

உரக்க சொன்னேன்!!!

அதன் அப்பனுக்கு

தெரியாது,புல்புதரில்

பெற்றெடுத்து,மறைத்து

வளர்த்ததே நான்,

என்றது பணிவாய் பெண்மை!!!

இப்படி எல்லா

நிலைகளிலும்,எல்லாவற்றிலும்

பெண்மை மேலோங்கி நிற்க!!!

ஆறறிவு படைத்த

மனிதன் மட்டும்

ஆணுக்கு பெண்

சமம் என்பதையே

ஒத்துக்கொள்ள மறுக்கிறான்!!!

நன்கு உணர்ந்தவன்

வான்நிலவை பார்க்க

இரவுக்காய் பொறுத்திருந்து

வானை அண்ணார்ந்து

பார்ப்பதில்லை!!!

அன்போடு பெற்றெடுத்த அன்னை,

பாசம் பொழியும் தங்கை

காதலை அள்ளித்தரும் மனைவி

வரமாய் பிறந்த மகள்

உற்ற தோழி இவர்களின்

முகங்களிலேயே தேய்பிறை

இல்லா நிலவையும்

நிலவொளியையும் இரவுக்காய்

காத்திராமல் எப்பொழுது

வேண்டுமோ அப்பொழுதே

கண்குளிர கண்டுக்கொள்கிறான்!!!

No comments:

Post a Comment