flipkart discount sale search here.

Friday 21 July 2017

நாம் கற்றுக்கொள்வதில்லை...!

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்....

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்...
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...!

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ...

# அறிவுரை கூறுபவர்களுக்கு எல்லாம்
நம் மீது அன்பிருக்க வேண்டிய அவசியமில்லை ....
ஆனால் ....
# அக்கறை காட்டுபவர்களுக்கு நிச்சயம்
நம் மீது அன்பு இருக்கும் ....

சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் அதிகம் தேடுங்கள் ...
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ...
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால்  நன்றாக இருக்கும்.

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்... அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்...

யாருமற்ற தனிமையில் இருக்கும் போது, யாரோ ஒருவர் நினைவு வந்து அது நம் மனதை பிசைந்தெடுத்தால், அது நிச்சயம் யாரோவாக இருக்க மட்டும் முடியாது...

மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்
...
அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் ...

எத்தனை காலம் கடந்தால் என்ன.... சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை.....

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ....
ஏனெனில் ...
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் ...

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை....
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

உனக்காக... தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
துணை  கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

# மன்னிப்பு
கேட்பவன்
நிராகரிக்கப்படுகிறான்,
கொடுப்பவன்
ஏமாளியாகிறான்...

அநாகரீகமாக பேசுபவரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது......

நீயா....நானா....
என்பது
"பிரிவின் ஆரம்பம் "
நீயும். ...நானும்...
என்பது
"புரிதலின் தொடக்கம்"

# புன்னகை பிரச்சினைகள் "வருவதை தள்ளி போடும்..!!
# மெளனம் "பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
# எல்லா "பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,, என்றும் அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது.....
இனிய காலை வணக்கம்

No comments:

Post a Comment