flipkart discount sale search here.

Thursday 3 January 2019

Life story #32



_பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.._

_மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும் , இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.._

_இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.._
_அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.._

_ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும்.._
_அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.._

_அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது.. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.._

*அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.. ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம்..  நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம்..* என்றார் மேஜர்..

_அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்.._ *சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும்..  நாம் பூட்டை உடைக்கலாமே..* என்றார்..

_இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு.._
_*தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா*_ _என்று குழம்பினார்.._

_சிறிது நேரம் கழித்து, அவர் மனதை விட அவரின் அறிவு ஜெயித்தது.._

_*வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்..*_

_அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.._

_அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக உண்டு புறப்பட தயாராகினார்கள்.._

_*நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம்.. நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல.. இது ஒரு சூழல்.. நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள்..*_
_இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க.._

_*அவர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து.. அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு.. கதவை மூடி விட்டு.. தன் குற்ற உணர்ச்சி துறந்து.. புறப்பட்டார்..*_

_அடுத்த மூன்று மாத காலத்தில்.. அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றிட, அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.._

_அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை.. ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.. அதன் முதலாளியும் இருந்தார்.._

_ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.._

_எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.._

_அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.._

_அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது.._
_மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.._

_ஒரு வீரர் கேட்டார்.._ *தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..* என்று..

*அப்படி சொல்லாதீர்கள் தம்பி.. கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது..*

*மூன்று மாதம் முன்பு.. சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான்..*

(தொடரும்...

No comments:

Post a Comment