flipkart discount sale search here.

Thursday 3 January 2019

Life story #31



_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *கோவில்பட்டி-யை சேர்ந்த இன்கார்ப் இரவி* _அவர்களுக்கு_
*_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.._

_அக்கடையில் முதலாளியே தொழிலாளி.._

_ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்_ *முதலாளி மூளையிருக்கா..?* என்று கேட்பான்..

_அதற்கு முதலாளியோ_ *மூளை இல்லை* _என்றவுடன்,_
*என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா?* _என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.._

_இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.._

_நாட்கள் நகர்ந்தன.._

_ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பர் ஒருவர் அக்கடைக்கு வந்தார்.._
_அவரிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற,_

*அட இவ்வளவு தானே.. நான் பார்த்துக்கொள்கிறேன்..* _என்று நண்பரும் கூறினார்.._

_கடையை மூடப்போகும் சமயம்,_ _அத் திமிர்பிடித்தவன் வந்து.. முதலாளியிடம்,_ *முதலாளி மூளையிருக்கா..?* _என்று வழக்கம் போலக் கேட்டான்.._

_அதற்கு முதலாளியின் நண்பர் அவனைப் பார்த்து,_
*இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது.. ஆனால், துரதிஷ்டவசமாக உங்களுக்குத்தான் இல்லை..* என்றார்..

_திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த.. கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி.._


👇
*எத்தனுக்கு எத்தன்.. இந்த உலகத்தில்.. ஏதோ ஒரு மூலையில்.. யாரோ ஒருவர் இருந்து கொண்டுதான் இருப்பார்..*

*இந்த உலகில் நாம் தான் புத்திசாலி என்று இருப்பது தவறில்லை.. ஆனால் அதை வைத்து அடுத்தவரை முட்டாள் என கருதி காயப்படுத்தக் கூடாது..*


No comments:

Post a Comment