flipkart discount sale search here.

Thursday 3 January 2019

Life story #34



_அவ்வூரில் தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையே பெய்யவில்லை.._ _அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது.._ _மக்கள் பசியால் வாடினர்.._

_நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர்.._
*ஐயா! பெரியவர்களாகிய நாங்கள் எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம்.. சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் ஒரு வேளை உணவுக்காவது நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்* என்று வேண்டினர்..

_இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,_ *இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம்.. தினமும் ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன்.. என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!* என்றார்..

_மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரரை அழைத்தார்.._ *இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக் கொள்.. ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும்.. கூடவும் கூடாது, குறையவும் கூடாது.. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே இருங்கள்..* என்றார்..

_மறுநாள், வேலைக்காரர் மோதகக் கூடையுடன் வெளியே வந்தார்.._ _அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவரைச் சூழ்ந்து கொண்டனர்.._ _கூடையை அவர்கள் முன் வைத்தார் அவர்.._

_பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.._ _ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள்.. எல்லோரும் எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள்.._

_இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது.. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர்.. ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது.. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி.. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள்.. அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய்.. அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது.._

_அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி.._ *ஐயா! இது உங்கள் தங்கக் காசு.. மோதகதுக்குள் இருந்தது.. பெற்றுக் கொள்ளுங்கள்!* _என்றாள் அவள்.._

*குழந்தாய்! உன் உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு.. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல்..*  _என்றார் செல்வந்தர்.._

_துள்ளிக் குதித்தபடி வீட்டிற்கு ஓடினாள் அச்சிறுமி.._


👇
_*எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் இறைவனின் ஆசியை பெறலாம்..*_


No comments:

Post a Comment