flipkart discount sale search here.

Tuesday 14 November 2017

விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து...

*ஒரு குரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக,மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.*
*விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண்,*
*எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார்.*
*இப்போது குருவின் முறை வந்தது. அவரிடமும் பணிப்பெண் ஒரு மதுக் கோப்பயை நீட்டினார்.*
*அவர் வாங்க மறுத்து விட்டார்.*
*பணிப் பெண்,"ஐயா ,எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது.ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார்.*
*மதகுரு,"அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் " என்றார்.*
*பணிப்பெண் விடவில்லை.*
*உலகிலேயே விலை உயர்ந்த மது வகை இது.*
*கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள் " என்றார்.*
*அப்போதும் மதகுரு ஏற்றுக்கொள்ளவில்லை.பணிப் பெண் கடைசியாகச் சொன்னார்*
*''"இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன்.*
*குரு சொன்னார்,*
*" அம்மா , நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன்.*
*நீங்கள் ஒன்று செய்யுங்கள்.*
*இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள்".*
*அவர் அப்படிச்சொன்னதும் பணிப்பெண் ஆடிப்போனார்.*
*"ஐயோ,*
*பணியில் இருக்கிற விமானி எப்படி*
*மது அருந்த முடியும்...?*
*இதை,*
*அவர் குடித்தால் அவர் புத்தி*
*தடுமாறிவிமானம் விபத்துக்கு உள்ளாகுமே.*
*இத்தனை உயிர்கள் பறிபோகுமே "*
*என்று பதறினார்.*
*குரு சொன்னார்,*
*"''சகோதரி,*
*வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான்.*
*தகாத_காரியங்களை_செய்தால்*
*புத்தி_தடுமாறி_விபத்து_நேரிடும்.*
*'வாழ்க்கைத்தரம் என்பது மிகவும் உயர்ந்த விஷயம்.*
#நல்ல_குணங்களுடன்_இறைபக்தியுடன்_வாழ்கிற_வாழ்வே_தரமான_வாழ்வு.
*படித்ததில்ரசித்தது*

No comments:

Post a Comment