flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #4

*தினம் ஒரு கதை..*🐝

ஒரு ஊரில் *அவன்-இவன்* என இரு நண்பர்கள் இருந்தார்கள்..

_அதில் அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தைக் கொண்டவன்.._

_அவனை இவன் மாற்ற எண்ணி.._
_அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையைக் கொடுத்தான் இவன்.._

*நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ..? அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும்* என்றான் இவன்..

அவனும் அப்படியே செய்தான்..
*முதல் நாள் அவன் 35 ஆணிகளை* அடித்தான்..

*மறு நாள் 30* _என்று இப்படியாக குறைந்துகொண்டே வந்தது.._

*_சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான்.._*

அதனால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை.

*_அதை நண்பன் பார்த்துப் பெருமைப்பட்டான்.._*

அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட இவன், *அவனிடம் அடித்த ஆணிகளை எல்லாம் பிடுங்கச் சொன்னான்..*

அவனும் அப்படியேச் செய்தான்..

_அதை பார்த்த இவன் அவனிடம் சொன்னான்.._
*நண்பனே.. நீ நான் சொன்னபடியே நீ அடித்த எல்லா ஆணிகளையும் பிடிங்கிவிட்டாய்..*

ஆனால் *ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளைப் பார்.. இந்த சுவர் முன் இருந்த மாதிரி இல்லை.. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன..*

*அது போலத் தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உண்டாக்கி விடும்..*

*_நீ என்ன தான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது.._*
*நீ வார்த்தைகளால் உண்டாக்கும் வடுவிற்கும்,* _*செயல்களால் உண்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை..*_ என்றான் நண்பன்..

அவன் *இனி எக்காலத்திலும் கோபப்படுவதில்லை என உறுதி எடுத்துக்கொண்டான்..*

No comments:

Post a Comment