flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #1

*தினம் ஒரு கதை..*


_*எலி ஒன்று வைர வியாபாரி வீட்டிலிருந்து ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது..*_
_அதை கண்ட வியாபாரி.._
_மிகவும் கவலை கொண்டான்.._
*_மிக விலை உயர்ந்த வைரம்.._*
_*எப்படியாவது அதனை எடுத்து விடவேண்டும்..*_
என்று
_எலி பிடிப்பவனை நாடினார்.._

_வியாபாரி எலி பிடிப்பவனை பார்த்து_ _*எப்படியாவது அந்த எலியை பிடித்து வைரத்தை எடுக்க உதவ வேண்டும்*_ என கேட்டுக் கொண்டார்..

_எலி பிடிப்பவனும் தன் வலையுடன் வந்துவிட்டான்.._

_*எலி அங்கே இங்கே என்று ஓடி போக்கு காட்டியது..*_

*திடீரென்ற ஆயிரக்கணக்கான சக எலிகள் அங்கு ஒன்று கூடிவிட்டன..*

_*எலி பிடிப்பவன் சற்று நேரம் குழம்பிவிட்டான்..*_

சிறிது நேரத்தில்..
*_ஆயிரக்கணக்கான எலிகளுக்கிடையேயும்.. ஒரு எலி மட்டும் அந்த கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது.._*

_எலி பிடிப்பவன் சிந்தித்தான்.._ _அதுவே அவனுக்கு வசதியாக போய் விட்டது.._

*_சரியாக குறி பார்த்து அந்த ஒரு எலியை மட்டும் நோக்கி  வலையை வீசினான்.._*

எலி பிடிபட்டது..

_*வைர வியாபாரி அந்த எலியின் வயிற்றை சோதித்து பார்த்தார்..*_
*அதில் வைரம் இருப்பது உறுதியானது..* _பின்னர் அதன் வயிற்றை கிழித்து வைரத்தை எடுத்துக் கொண்டார்.._

_எலி பிடிப்பவனைப் பார்த்து வைர வியாபாரி_ *மகிழ்ச்சி.. ஆனால் ஒரு சந்தேகம்..*
_ஆமா..!_ _*நீ எப்படி அந்த எலிதான் வைரம் விழுங்கிய எலியென்று சரியாக அடையாளம் கண்டு அதை பிடித்தாய்..?*_ என்றார்..

அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்..
_*ஒரு எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனியே தனித்தே இருந்ததே!*_ அப்போதே புரிந்தது..
*வைரம் வயிற்றில் இருந்தால்..*
*கர்வம் தலைக்கு போய்விடும்..* என்று..
_இப்படித்தான்.._
*பலபேர், திடீர் பணக்காரர்கள் ஆனதும் மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னை சேர்க்காமல்,*
*தூரத்தில் வைத்துக் கொள்வார்கள்* அதுவே..
*ஆபத்து நேரத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது என்றான்..*


👇
*அப்படித்தான் சிலர் இடையில் வந்து அழிந்து போகும் செல்வத்தை நம்பி கடவுள் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிடுகிறார்கள்..*

_ஆயிரம் கோடி செல்வம் இருந்தாளும்_ *_சொந்த பந்தமும், நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.._*

No comments:

Post a Comment