flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #7

*தினம் ஒரு கதை..*
_ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் வாழ்ந்து வந்தனர்.._

*_நீண்ட நாட்களாக வைத்தியர் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.._*

_கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!_

_வைத்தியரும் சொன்னதில்லை!_

*_மனைவியின் வேலை அலைந்து திரிந்து வரும் கணவருக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!_*

_இப்படியே பல ஆண்டுகள் கழிந்து.. இருவருக்குமே வயதாகிவிட்டது.._

_*ஆனாலும் வைத்தியர் தேடுவதை நிறுத்தவில்லை!*_

_ஒருநாள் வைத்தியர் வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே மனைவியை காணவில்லை.._

_*மாறாக இளம்பெண் ஒருத்தி நின்று கொண்டிருந்தாள்..*_
*_வைத்தியரை  பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்._*

_வைத்தியருக்கு ஒன்றும் புரியவில்லை.._

*யாரம்மா நீ..?* என்று கேட்டார்..

அதற்கு அந்த இளம்பெண்.. *நான்தான் உங்கள் மனைவி* என்றாள்..

_வைத்தியருக்கு மிகவும் குழப்பம்.._

*என்ன நடந்தது..?* என்று கேட்க..

 _மனைவி நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.._
_*"உங்களுக்காக கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.. காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது.. அதனால், அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன்.. கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது.. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன்.. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.. குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளம் பெண் ஆகிவிட்டேன்"*_ என்றாள்

_வைத்தியர் பதறி அடித்துபோய்_ _*"எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் "*_ என்று கேட்க..

அதற்கு அந்த மனைவி _*"அந்த குச்சியை  நான், அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? "*_ என்றாள்..

*வைத்தியர் நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!..*

👇
*நம்பிக்கையானவர்களுக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..*

*அப்படி செஞ்சால் அது அவர்களுக்கு தான் லாபம்..*

*சொல்லாமல்.. மறைப்பவர்களுக்கு எப்பவுமே அல்வா தான்..*

No comments:

Post a Comment