flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #14

*தினம் ஒரு கதை..*

*மவுரியப் பேரரசை நிறுவிய சந்திரகுப்தனின் குரு சாணக்கியர். இவரது அர்த்த சாஸ்திரம் அரசியல் பொக்கிஷம்!*

அவர் ஒருநாள் அரசவையில், *மன்னா ஏழை மக்கள் கடும் குளிரால் வாடுகிறார்கள்.. அவர்களுக்கு இலவச கம்பளி கொடுத்து உதவ டேண்டும்!*  என்று வேண்டுகோள் விடுத்தார்..

அரசனும் அதை ஏற்று, கம்பளி வழங்கும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்தான்..

*அரசாங்கச் செலவில் வாங்கப்பட்ட கம்பளிகள், ஏழைகளுக்கு விநியோகிக்க வசதியாக, சாணக்கியரது வீட்டில் அடுக்கப்பட்டன..*

இந்த விஷயம், *ஊர் எல்லையிலிருந்த கொள்ளையர்களுக்குத் தெரிய வந்தது..*

_அன்று இரவு, சாணக்கியரின் வீட்டுக்குச் சென்று கம்பளிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்வது என்று அவர்கள் முடிவு செய்தனர்.._

_திட்டப்படி அன்று இரவு சாணக்கியரின் வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தனர்.._

அங்கு, *அரதல்பழசான கிழிந்த போர்வை ஒன்றைப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார் சாணக்கியர்.. அருகில், அவரின் தாயாரும் அப்படியே!*
 _கொள்ளையர்களுக்கு ஆச்சரியம். திருட வந்ததையும் மறந்து சாணக்கியரை எழுப்பினர்.._

_கண் விழித்த சாணக்கியர் ஆச்சர்யமுற்றார்.._

எதிரே நின்றிருந்த திருடர்களில் ஒருவன், *ஐயா.. நாங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் கம்பளிகளைத் திருடவே வந்தோம்.. இங்கு புதிய கம்பளிகள் இவ்வளவு இருந்தும், நீங்களும் உங்கள் தாயாரும் கிழிந்த போர்வையைப் போர்த்திக்கொண்டிருக்கிறீர்களே? புதிய கம்பளிகளில் இரண்டை உங்களது தேவைக்காக எடுத்திருக்கலாமே?* என்று கேட்டான்..

அதற்கு சாணக்கியர், *அவை, ஏழை-எளியோருக்கு வழங்கப்பட இருக்கும் அரசாங்கப் பொருட்கள்.. அதை எப்படி நான் உபயோகிக்க முடியும்? மன்னன் என் மீது கொண்டுள்ள நம்பிக்கை என்னாவது?* என்றார்.

_அதைக் கேட்டதும் சாணக்கியரின் கால்களில் விழுந்த திருடர்கள், தங்களை மன்னிக்க வேண்டினர்.._
*இனி, வாழ்நாளில் நாங்கள் திருடவே மாட்டோம்..* என்று அவர் முன் சத்தியமும் செய்தனர்..


👇
_சாணக்கியர், இன்றளவும் மக்கள் மனதில் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம்.. அவரது அரசியல் தந்திரங்கள் மட்டுமல்ல; தன்னலமற்ற அவரது தூய்மையான வாழ்வும்தான்!_

No comments:

Post a Comment