flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #12

*தினம் ஒரு கதை..*

_இந்த அருமையான கதையை நமக்கு அனுப்பிய_ *சென்னையை சேர்ந்த சகோதரர் விக்னேஷ் குமார்* _அவர்களுக்கு_ *_நமது நன்றியினையும்.. அவரது குடும்பம் வாழ்வாங்கு வாழ இறைவனையும் அனைவரும் வேண்டுவோமாக.._*

இனி கதை..

_தற்போது நல்ல நிலையிலிருக்கும் சில மூத்த மாணவர்கள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் படித்தப் பல்கலைக் கழகத்தின் பேராசிரியரை சந்திக்க சென்றனர்.._

_சந்திப்பின் போது சுவாரஸ்யமாக சென்றுக்கொண்டிருந்த உரையாடல் திடீரென்று வேலை மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் மன அழுத்தம் பற்றிய விவாதமாக மாறியது.._

_வந்தவர்களுக்கு காபி கொடுக்க சமையலறைக்கு சென்ற பேராசிரியர் திரும்ப வரும்போது..
*_ஒரு பெரிய கூஜா நிறைய காப்பியையும் .. மற்றும் பீங்கான், பிளாஸ்டிக், வெள்ளி, எவர்சில்வர், கண்ணாடி என பலவிதமான கோப்பைகளையும் எடுத்து வந்தார்.. கோப்பைகளில் சிலவகை விலை உயர்ந்தவைகளாகவும், வேலைப்பாடுகளுடனும்.. சிலவகை சாதாரணமானதாகவும் என பலவிதங்களில் இருந்தன.._*

_பேரசிரியர் அவற்றை மேஜை மீது வைத்துவிட்டு, எல்லோரையும் சூடான காப்பியை கோப்பைகளில் தாங்களாகவே ஊற்றி குடிக்க சொன்னார்.._

_எல்லோரும் ஆளுக்கொரு கோப்பையில் காப்பியை ஊற்றி அருந்த தொடங்கும்போது பேராசிரியர் சொன்னார்.._
 *நண்பர்களே கவனியுங்கள்..*
_*"நீங்க எல்லோரும் விலை உயர்ந்த, அழகான கோப்பைகளில் காப்பியை எடுத்திருக்கிறீர்கள்..*_

_*உங்கள் கைகளில் இருக்கும் கோப்பைகள் போக மேஜையில் மீதி இருப்பது மிக சாதாரணமான, விலை மதிப்பற்ற கோப்பைகள்..*_ _*உங்கள் அனைவருக்கும் மிகச் சிறந்த பொருட்கள்தான் தேவைப்படுகின்றன..*_ _*அதைத்தான் எதிர்ப்பார்க்கிறீர்கள்.. அது தான் உங்கள் பிரச்சினைகளுக்கும் மன அழுத்தத்திற்கும் காரணம்.."*_
அனைவரும் புரிந்தும்புரியாமலும் பேராசிரியரை பார்த்துக்கொண்டிருந்தனர்..
தொடர்ந்து அவர்..
_*"உண்மையில் நம் அனைவருக்கும் வேண்டியது காப்பி மட்டுமே, கோப்பையல்ல.. ஆனால் நீங்கள் எல்லோரும் நல்ல விலையுயர்ந்த கோப்பையை தான் எடுக்க முயற்சித்தீர்கள், மேலும் அடுத்தவர் எப்படிப்பட்ட கோப்பையை எடுத்திருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டீர்கள்.."*_

_*"இப்பொழுது வாழ்க்கை என்பதை காப்பி என்று வைத்துக்கொண்டால் வேலை, பணம், சமூகத்தில் நமக்குள்ள பொறுப்பு, அந்தஸ்து ஆகியவை கோப்பைகள்.. இவையெல்லாம் வாழ்க்கையை வாழ்வதற்காக நம்மால் பயன்படுத்தப்படும் கருவிகள்.. இவற்றால் எல்லாம் வாழ்க்கையின் தரம் மாறாது.."*_

_*"பொதுவாக நாம் கோப்பையின் மீதே கவனம் வைத்து காப்பியின் சுவையை அனுபவிக்காமல் போய்விடுகிறோம்.."*_
அனைவரும் அவரின் கூற்றை உள்வாங்கி தங்களின் செயல்பாடு அவ்வாறு தான் உள்ளது என நன்கு உணர்ந்தனர்..


👇
_*"ஆகவே.. நண்பர்களே கோப்பையில் நமதூ கவனத்தை சிதறவிடாமல் காப்பியின் சுவையை மட்டும் அனுபவிப்போம்.."*_


No comments:

Post a Comment