flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #2

*தினம் ஒரு கதை..*🐝

*பண்ணையார் ஒருவர் தன் பண்ணையில் விளைந்த வாழை மரத்திலிருந்து சுமார் 100 பழங்கள் உள்ள பெரிய வாழைத் தாற்றை அறுத்தார்..*

_தன் வேலைக்காரனை அழைத்து,_
*"இந்த வாழைத் தாற்றைக் கோவிலுக்கு கொண்டு போய் கொடுத்து விட்டு வா.."* என்றார்..

_வேலைக்காரனும் அவ்வாறே செய்தான்_

_அன்றிரவு_ பண்ணையாரின் கனவில் தோன்றிய இறைவன்,
*"நீ அனுப்பிய ஒரு வாழைப் பழம் கிடைத்தது.."* என்றார்..

_திடுக்கிட்ட பண்ணையார்,_
*"இறைவா நான் 100 பழங்களையல்லவா அனுப்பினேன்.."* என்றார்..

*"இல்லை ஒரு பழம் தான் எனக்கு வந்து சேர்ந்தது.."* என்றார் இறைவன்..

_விடிந்ததும் பண்ணையார் வேலைக்காரனை அழைத்து_
*"நான் கொடுத்த வாழைப் பழங்களை முழுமையாகக் கோவிலில் கொண்டு சேர்த்தாயா.."* என்றார்..

அவன் *"ஆம்"* என்றான்..

*_பண்ணையாருக்குக் கோபம் வந்து விட்டது.._*

_அவர் வேலைக்காரனை வேகமாக ஓங்கி ஒரு அறை அறைந்தார்.._
*"உண்மையைச் சொல், இல்லையென்றால் அடித்தேக் கொன்று விடுவேன்.."* எனறார்..

அவன், *"உண்மையைச் சொல்லி விடுகிறேன், வழியில் ஒருவன் பசியாய் இருக்கிறது என்றான்.. நான் பரிதாபப்பட்டு அவனுக்கு ஒரு பழத்தைக் கொடுத்தேன்.. மீதமுள்ள எல்லாப் பழத்தையும் கோவிலிலுக்குக் கொடுத்து விட்டேன்.."* என்றான்..

*பண்ணையாருக்குப் புரிந்து விட்டது..*

_*ஏழைக்குக் கொடுத்த பழமே இறைவனைக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.. கோவிலுக்குக் கொடுத்த பழம் சேரவில்லை..*_


👇
_*கோவிலில் இருக்கும் இறைவனுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது  ஏழைகளுக்கு போய்ச் சேராது..*_
ஆனால்
_*ஏழைகளுக்கு நீ ஏதாவது கொடுத்தால், அது இறைவனிடம் போய்ச் சேர்ந்து விடும்..*_

👇
_*கோவிலில் போய்க் கொடுப்பதும், ஏழைகளுக்குக் கொடுப்பதும் ஒன்றா என்று சிலர் கேட்கலாம்..*_
*_ஏழைகளின் வயிறு அஞ்சல்பெட்டி.. இறைவனுக்கு அனுப்ப வேண்டிய கடிதத்தை.. அதில் போட்டால் அது இறைவனுக்குப் போய்ச் சேர்ந்து விடும்.._*

*இதையே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார்கள்..*

No comments:

Post a Comment