flipkart discount sale search here.

Sunday 25 November 2018

Life Story #16


_ஒரு ஊரில் ஒரு வணிக செல்வந்தன் இருந்தான்.. அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது.._

_அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான்.._

_அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர்.. ஆனால் இவன் விற்கவில்லை.._

_இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது.._
_ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.._

_தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை.._

_வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான்.._ *ஐயோ என் வீடு ! என் வீடு !* என்று அலறினான்..

_அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து.._ *தந்தையே ஏன் வருந்துகிறீர்கள் ?*

_*இந்த வீட்டை நாங்கள் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டோம்..*_

_*இதனால் நமக்கு நஷ்டம் இல்லை*_ என்று கூறினான்..

_இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி.._

_அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது.._

_இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

*"அதே வீடு தான்"..*

*"அதே நெருப்பு தான்"..*

_ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும், சோகமும் இப்போது அவனிடம் இல்லை.._

_சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து_ *தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்?*

_*நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம்..*_

*முழு தொகை இன்னும் வரவில்லை..*

*_வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே_* என்றான்..

_இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான்.._

_மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான்.._

_கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான்.._

_தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.._

_சில மணித்துளிகள்.. வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான்.._ *தந்தையே கவலை வேண்டாம்.. இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன்..*

*_இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது.. வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது.. எனக்கும் தெரியாது.._*

_*ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம்..*_ என்று *என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்* என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான்..

_இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம்.._
*கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான்..*

_கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது.._

_மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.._

_இங்கு எதுவுமே மாறவில்லை_
*அதே வீடு..*
*அதே நெருப்பு..*
*அதே இழப்பு..*
🐝

👇
 *இது என்னுடையது என்று நினைக்கும்போது அந்த இழப்பு நம்மை சோகத்தில் ஆழ்த்துகிறது..*

*இது என்னுடையது அல்ல என்று நினைக்கும்போது  சோகம் நம்மை தாக்குவது இல்லை..*

_*உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை..*_

இதைத்தான் அனைத்து மதமும்   போதிக்கிறது..

எதை நீ இழந்தாய்..
எதற்காக அழுகிறாய்..
இன்று எது உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையது..
மாற்றம் என்பது மட்டுமே மாறாதது..
கடமையை செய்..
பலனை எதிர்பாராதே..
ஏனெனில் கடமைக்கான பலனை  இறைவன் தர மறப்பதில்லை..

No comments:

Post a Comment