flipkart discount sale search here.

Tuesday 27 November 2018

Life Story #18

_தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.._

_அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.._

_தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.._
_அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால்.. பல துண்டுகளாக வெட்டினார்.._

_பின்னர் கத்திரிக்கோலை.. தன் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.._

_துணியை தைத்து முடிந்ததும், ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.._

_இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம்,_ *“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது.. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள்.. ஊசி சிறியது.. மலிவானது.. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே.. அது ஏன்..?”* என்று கேட்டான்..

*“ நீ சொல்வது உண்மைதான்”*

*கத்திரிகோல் அழகாகவும்.. மதிப்புள்ளதாகவும் இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது.. அதாவது பிரிப்பது!*

*ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது..*
என்றார் தையற்காரர்..


👇
_*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே, நிர்ணயிக்கப்படவேண்டும்..*_

_*அவர் உருவத்தை வைத்து அல்ல..*_

No comments:

Post a Comment