flipkart discount sale search here.

Monday 26 November 2018

Life Story #17



_ஒரு குருகுலத்தில் பல சீடர்கள் இருந்தனர்.. அனைவரும் ஆர்வமாக எல்லாவற்றையும் கற்றுவர, ஒரு சீடன் மட்டும் கவலையோடு இருந்தான்.. துறவி அவனை அழைத்து விசாரித்தார்.._
_*குருவே! எல்லோரும் என்னை கிண்டல், கேலி செய்கின்றனர்.. தாங்க முடியவில்லை.. கோபம் தலைக்கேறுகிறது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை!*_ என்றான்..

_*இந்தக் கிணற்றின் கைப்பிடி சுவர் மீது ஏறி பத்துமுறை சுற்றிவா!*_ என்றார் குரு.

_குரு எதற்காக அப்படிச் சொல்கிறார் எனத் தெரியாவிட்டாலும், குருவின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கவனமாக கிணற்றுச்சுவரில், ஏறி, சிரத்தையுடன் பத்துமுறை வலம் வந்தான் சீடன்.._

_*நீ கிணற்றுச் சுவரில் ஏறி நடந்தபோதுகூட உன்னை பலர் கிண்டல் செய்தார்களே, அதைக் கேட்டாயா?*_ என்றார் குரு..

_*இல்லை குருவே! கிணற்றிற்குள் விழுந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததால்.. யார் பேசியதும் எனக்கு கேட்கவில்லை*_ என்றான் சீடன்..

குரு சொன்னார், *_ஒரு செயலில் மிக கவனமாக, உண்மையாக நாம் ஈடுபட்டிருக்கும்போது, பிறர் சொல்லும் வார்த்தை நமக்கு கேட்காது, புரிகிறதா?_* என்றார்..

*சீடனுக்கு எல்லாம் புரிந்தது!*
🐝

👇
*இவன் என்ன சொல்கிறான், அவன் என்ன சொல்கிறான், என்பதை கவனித்துக்கொண்டு கவலைப்பட்டுக் கொண்டிருப்பவனால் பெரிதாக எதையும் சாதிக்க முடியாது*
-சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment