flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #5

*தினம் ஒரு கதை..*

_ஒருவர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க எண்ணி, ஒரு சிற்பியை காண சென்றார்.._

_அவர் சென்றபொழுது அந்த சிற்பி ஒரு கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.._

_கொஞ்ச நேரம் சிற்பி சிலை செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,_
_*அதே மாதிரி செதுக்கிய இன்னொரு சிலை அங்கு கிடப்பதை கவனித்தார்..*_

உடனே அவர் சிற்பியிடம், *”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி இரு சிலைகள் வைப்பார்கள்?* *_இல்லை.. இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?”_* என்று சிற்பியிடம் கேட்டார்..

சிற்பி சிரித்துக்கொண்டே,
_*“இல்லை ஐயா.. கீழே கிடக்கும் சிலையில் பிழை உள்ளது..”*_ என்றார்..

அவர் ஆச்சரியத்துடன், _*"என்ன சொல்றீங்க.. மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை.. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!"*_ எனக் கேட்டார்..

_*"அந்த சிலையின் இடது காதில் சின்ன கீறல் இருக்கிறது.. பாருங்கள்"*_ என்றார் சிற்பி..

_*“ஆமாம்!. அது சரி.. இந்த சிலையை கோவிலில் எங்கே வைக்கப் போகிறார்கள்?”*_ என்று கேட்டார்..

_*“இது கோவில் கோபுரத்தில், இருபது அடி உயரத்தில் வரும் சிலை!”*_ என கையை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி..

அவர் வியப்புடன், _*”இருபது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் மடத்தனமாக இன்னொரு சிலை செய்கிறீர்கள்..!”*_ என்றார்..

_*“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்”*_ என்றார் சிற்பி..

_வந்தவர் சிற்பியின் தொழிற்பக்தியை எண்ணி தனக்கான சிலையை தாங்களே செய்யவேண்டும் என்று கூறி சென்றார்.._


👇
*_அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்வதை விட.._*

*_நம் மனத்திருப்திக்காக வேலை செய்வதே சிறந்ததாகும்.._*

No comments:

Post a Comment