flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #3

*தினம் ஒரு கதை..*🐝
_ஒரு இளம் தம்பதி புதிதாக ஒரு வீட்டிற்கு குடி போனார்கள்.._

_அதிகாலை தேனீர் குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.._

_பக்கத்து வீட்டுப் அம்மா ஒருவர் துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.._

_பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,_
*“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது.. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்..”*

_கணவனும் பார்த்தான்.._

_ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை.._

_தினமும் அவர்கள் எழுந்து தேனீர் குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டு அம்மா துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.._

_திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டு அம்மா துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,_
*“அப்பாடா, இன்று தான் அந்தம்மாள் துணி துவைக்கக் கற்றுக் கொண்டாளோ..? இல்லை, நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா..? என்று தெரியவில்லை..*

*இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..!* என்றாள்

கணவன் அமைதியாகச் கூறினான்,
*“இன்றைக்கு அதிகாலையில் தான்.. நான், நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்..”* என்று..


👇
*நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன..*

*ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை..*

*ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் இருந்தாலும் அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...?..!*

பெரும்பாலும் இன்றைய சூழ்நிலையில்..?

*குற்றம்* என்பது
அடுத்தவர் செய்யும்போது மட்டும் தெரிவது..

*மனிதம்* என்பது
இன்னமும் கண்டுபிடிக்க
முடியாதது...!!   

👇
*பிறர் குறைகளை பூதக் கண்ணாடி வைத்து பார்க்காமல்,*
*நம் அகமறிந்து, நம்மிடம்  உள்ள குறைகளை, களைந்து வாழ்வோம் வளமாக..*

No comments:

Post a Comment