flipkart discount sale search here.

Friday 23 November 2018

Life Story #13

 *தினம் ஒரு கதை..*
_ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி புனிதநூலை படித்துக்கொண்டே இருப்பார்.. இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக்கொண்டே இருந்தான்.._

ஒரு நாள் அவரிடம்
வந்து கேட்டான் , "தாத்தா! எப்பப்பாத்தாலும் இந்த புத்தகத்தையே
படிச்சிட்டு இருக்கீங்களே.. இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்றான்..

பெரியவர் சொன்னார்,
*_"ஒரு அம்பது.. அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும்.."_*

*_"அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே! அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க..?"_* என்றான்..

தாத்தா சிரித்தபடி கூறினார்,
*_"எனக்கு ஒரு உதவி செய்.. நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்.."_*

இளைஞன் கேட்டான்,
*_"என்ன உதவி தாத்தா..? "_*

_பெரியவர் ஒன்றும் பேசாமல் பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார்.. அதில் அடுப்புக் கரி இருந்தது.. அதை ஒரு மூலையில் கொட்டினார்.. பல நாட்களாகக் கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது.._

பெரியவர் சொன்னார்,
_*" தம்பி.. அதோ இருக்குற குழாயில இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன்.."*_

இளைஞனுக்கு சிரிப்பு வந்தது..
 *இருந்தாலும்.. பெரியவர் சொல்லி விட்டதால்.. எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான்.. அவன் வந்து சேருவதற்கு முன்பே, எல்லா நீரும் தரையில் ஒழுகிப்போனது..*

பெரியவர் சொன்னார்,
_*" இன்னும் ஒரு முறை.."*_

_இளைஞன் மீண்டும் முயன்றான்.._
_ஆனால் மூங்கில் கூடையில் தண்ணீர் எப்படி நிற்கும்?_
மீண்டும் சிந்திப் போனது..

_பெரியவர் கேட்டார்,_
_*" தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும்.."*_

இளைஞன் ஒரு
முடிவுக்கு வந்தான்..
_*"இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்து விட்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடிவிடுவோம்.. அவர் எந்தப் புத்தகத்தைப்படித்தால் எனக்கென்ன வந்தது..? "*_
_தண்ணீர் பிடித்தான்.. வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்.._
_*"தாத்தா, இந்தாங்க உங்க கூடை.. இதில் தண்ணி நிக்காதுன்னு உங்களுக்குத் தெரியுமா தெரியாதா? எதுக்கு என்னை இந்தப் பாடு படுத்தினிங்க"*_
என்றான்..

அவர் புன்னகையோடு சொன்னார்,
_*" இதுல தண்ணி நிக்காதுன்னு எனக்கும் தெரியும்.. நீ முதல்ல தண்ணீர் பிடிக்கப் போகும் போது இதோட உட்புறம் எப்படி இருந்தது? "*_ என்றார்..

இளைஞன் சொன்னான் ,
_*"ரொம்ப அழுக்குப் பிடிச்சு கருப்பா இருந்தது.."*_

_*"இப்போ பார் "*_ என்றார்..

*தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருந்தது..*

பெரியவர் சொன்னார்,
_*"தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்.. எத்தனை முறை தண்ணீர் பிடிச்சாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை.. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாயிடிச்சு..*_

_*அது போலத்தான் எத்தனை முறை படிச்சாலும் முழு புனிதநூலையும் மனப்பாடம் ஆயிடும்னு சொல்ல முடியாது.. ஆனா படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளுக்குள்ள இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கிட்டே இருக்கும்.."*_ என்றார்..

No comments:

Post a Comment